Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். கர்ப்பமாக உள்ள சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன? தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 17 வயது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அனை…

  2. படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காண…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 15 மே 2024, 09:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த…

  4. தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள் தமிழ்நாட்டில் அற்புதம் அம்மாள் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அவரது மகனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக 31 வருடங்கள் சட்டப் போராட்டத்தைச் சலிக்காமல் நடத்தியவர். எந்தக் கட்டத்திலும் சோர்ந்து போகாமல் இறுதிவரை உறுதியாக நின்று தனது மகனைச் சட்டத்தின் மூலம் விடுதலை பெற்றுத் தந்தவர். பேரறிவாளன் 1991 ஆம் ஆண்டு கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தனது மகன் ஒரு அப்பாவி. விசாரணை என்று அழைத்துப் போன காவல்துறை, அவனை ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டது என்று கூறி, இடைவிடாமல் போராடி வந்தார் அற்புதம். அதன்பின்னர் இவரது தூக்குத்தண்டனை 20…

  5. சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு …

  6. Published By: DIGITAL DESK 7 09 MAY, 2024 | 04:37 PM தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், '' இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று கு…

  7. 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன? ‘‘சபரிமலை போல் அல்லாமல் பாதை மிகக் கடினம் என்பதால், அவசர காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரம் கொண்டு வருவது மிகக் கடினம். உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,” என்கிறார், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று டோலியில் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள ரவி. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது என்கிறார் வெள்ளியங்கிரிக்க…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் கடற்பகுதிகளில் மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வானிலை மையம் ஆகியவை எச்சரித்திருந்தன. இது வழக்கமான கடல் சீற்றமாக இல்லாமல், எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் கொந்தளித்து, கரையோரம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் ‘கள்ளக்கடல்' சீற்றம் (Swell Surge) என்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி,…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மே 2024, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்துவரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்தச் சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன? பூங்காவில் என்ன நடந்தது? சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளிக்கூடச் சாலையில் இருக்கும் பூங்காவின் காவலாளியாக விழுப்புரம் …

  10. 05 MAY, 2024 | 06:19 PM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர். இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயற்பட்டுவரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த மகராஸ்ட்ரா மாநிலத்தின் 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரியிருந்தனர். இந்தியா / இலங்கை இரு நாட்டு அனுமதி…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்பு படம் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மே 2024, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த மே 3, 2024 வெள்ளிக்கிழமை அன்று, தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி (Face recognition software- எப்ஆர்எஸ்) ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்த தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்காக பதிவேற்றப்பட்டுள்ளன என்று பால்கன்ஃபீட்ஸ் (Falconfeeds) எனும் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது உண்மைதான் என சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்ட…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதி…

  13. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன? கலவரத்தில் நடந்தது என்ன? சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அம…

  14. சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர…

  15. சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில…

  16. மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன். மறைந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது. விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது. விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் ப…

  17. திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது. வடமாநிலத்…

  18. 28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமில…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது? கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும…

  21. தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி. இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார். திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வர…

  23. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024 வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2024 இந்திய சுற்றுலாத்துறை 2023-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்நி…

  25. தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.