Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குப்பை அள்ள போட்டி போடும் பாஜக, ஆம் ஆத்மி டெல்லியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், தேங்கி கிடக்கும் குப்பையை ஆம் ஆத்மி கட்சியினரும், பாஜகவினரும் போட்டி போட்டுக் கொண்டு அகற்றியதால்பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் துப்புரவு பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரம் முழுவதும் ஏராளமாக குப்பைகள் தேங்கியதால் டெல்லி முழுவதும் நாற்றம் அடிக்க துவங்கியது. பாஜக அதிகாரத்தில் உள்ள டெல்லி மாநகராட்சி, துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததே வேலை நிறுத்தத்திற்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குபி…

  2. நெல்லை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று நெல்லையில் நடந்துள்ளது. பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.45 மணியளவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றது. ஆனால், ரயிலை பார்த்து சீட் பிடிக்க ஓட வேண்டிய பயணிகளோ, பேயறைந்ததை போல காணப்பட்டனர். காரணம், ரயில் இன்ஜின் முன்பு அகோரமாக தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலமாகும். ரொம்ப தூரத்துக்கு அந்த சடலம் ரயிலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்பது பார்த்த உடனேயே புரிந்தது. ஏனெனில், கால்கள் துண்டாகி ரத்தம் வழிந்து நின்று போயிருந்தது. பேண்ட் கிழிந்து உள்ளாடையுடன் அந்த ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது. …

    • 0 replies
    • 350 views
  3. அமலாக்கப்பிரிவால் தங்கள் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சன் டி.வியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் தனக்கு இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வெளிநாடு வாழ் இந்தியர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் 2011-ல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் சன் டிவி நிறுவனத்தின் ரூ. 742 கோடி சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்கத் துறை உத்தரவிட்டது. இந்த முடக்கத்துக்கு எதிராக சன் டி.வி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசா…

    • 0 replies
    • 300 views
  4. சென்னை: தியாகங்களால் வளர்ந்த திராவிட இயக்கத்தை எப்படிப்பட்ட புயல் வந்தாலும் சாய்க்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், " இந்த திருமணம் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நேரத்தில் எனது இதயத்தை நெகிழ வைக்கும் மலரும் நினைவுகள் என் நெஞ்சு சுவற்றில் வந்து மோதுகின்றன. 44 வருடங்களுக்கு முன்பு என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக, எனது கிராமமான கலிங்கபட்டிக்கு எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்தி, விருந்துண்டு, ஓய்வெடுத்து விடைப்பெற்று சென்றதை நினைத்து பார்க்கிறேன். அதே போல் 1978–ம…

  5. சிறுநீரக தொற்று: சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டுள்ளார். அவர் கடந்த 5 மாதத் துக்கு முன்னர் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இந்நிலையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும் எனவே சென்னை அரசு பொது மருத்துவ மன…

  6. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2006-ல் . ரூ.24.7 கோடியாகவும், 2011-ல் ரூ.51.40 கோடியாகவும் இருந்தது. இது தற்போது இரு மடங்காக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் தனது அசையும் - அசையா சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அதன் விவரம் வருமாறு: 2013–2014–ம் ஆண்டு வங்கிக் கணக்குப்படி மொத்த வருமானம்: ரூ.33,22,730 | கையிருப்பு - ரூ.39,000 | வங்கி கணக்கில் சேமிப்பு தொகை - 9 கோடியே 80 லட்சத்து 9,639 ரூபாய் | மைலாப்பூர் கரூர் வ…

  7. நாகர்கோவில்:'தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது' என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், 'பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்' என கூறியிருந்தார். மேலும், க…

    • 0 replies
    • 324 views
  8. யூடியூப் பகிர்வு: கருணாநிதி 92 | அரிய காட்சிகள் அடங்கிய சிறப்பு கருப்பு - வெள்ளை வீடியோ தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே | எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசிய…

  9. கப்டனும் அம்மாவும் 10ee9a3c3ca36855fb1f6e50f8d88103

    • 0 replies
    • 312 views
  10. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 40 டிகிரி வெயில்: மேலும் 2 நாட்களுக்கு தகிக்கும் தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 40 டிகிரி வெயில் பதிவானது.சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் அதிகபட்ச வெயில் சென்னையில்தான் பதிவாகிறது. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடல் காற்று தாமதமாக வீசுவதால், பகலில் அனல் காற்று வீசுகிறது. மாலை நேரங்களில் கடல் காற்று வீச ஆரம்பித்த பிறகு வெப்பம் தணிந்து காணப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ…

    • 6 replies
    • 683 views
  11. சென்னை: அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி. முன் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பேராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்…

    • 0 replies
    • 1.1k views
  12. செம்மரங்களை வெட்ட வந்ததாக, தமிழகத்தின் வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 74 தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் நேற்று கைது செய்தனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில அதிரடி போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர ஐ.ஜி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்தது. தவிர, ஆந்திர உயர் நீதிமன்ற மும், தேசிய மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்ன மாண்டியம் என்ற இடத்தில் நேற்று காலை போலீஸார் தீவிர வாக…

    • 0 replies
    • 236 views
  13. சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பாக தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பங்களைக் கடந்த சொத்துக் குவிப்பு வழக்கு, மே 11-ம் தேதி குமாரசாமியால் முடித்து வைக்கப் பட்டும், தீர்ப்பு குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத் திருக்கும் விடுதலை எளிதாய் கிடைத்தது அல்ல. விடுதலை தந்த 919 பக்க தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்திலும் முகம் தெரியாத பல வழக்கறிஞர்க‌ளின் உழைப்பு இழையோடிருக்கிறது. சட்டத்தில் இருந்த அத்தனை பிரிவுகளிலும் நுழைந்து வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிட்ட விருத்தால ரெட்டியாரில் தொடங்கி ஜோதி, கே…

  14. ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்: . சு.சுவாமி கிண்டல்! [Tuesday 2015-05-26 07:00] சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா விடு…

  15. மேலும் வரும்... படங்கள்: நாம் தமிழர் பாசறைப் பையன்கள் முகநூல்.

    • 21 replies
    • 1.3k views
  16. ஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்போர்ட்! நோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது மக்கள், கடவுளையும் கூட இரண்டாவதாகத்தான் நினைப்பார்கள். அவர்கள் நா தழுதழுதழுக்க முதலில் நன்றி சொல்வது மருத்துவர்களுக்குத்தான். கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் அவர்களிடையேயும் கருப்பு ஆடுகள் உலவுவது சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது. அப்படி கருப்பு ஆடு ஒன்றின் தரம்கெட்ட செயலால் நம் தேசம் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது இப்போது... சென்னையில் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இயங்கிவருகிறது பிரபலமான அந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமானம்தான் தேசம் தலைகுனிய காரணம். தென் கொரியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் ஹாவா( பெயர…

    • 0 replies
    • 510 views
  17. வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா...? மனம் உருகும் இயக்குநர் வ.கௌதமன் இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார். tamilwin.com

  18. மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயா அ.தி.மு.கவின் சட்டசபை கட்சித்தலைவர் ஜெயலலிதா ஜெயராம், 5ஆவது தடவையாகவும் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவைத் தொடர்ந்து,28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர். முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேன்முறைய…

    • 8 replies
    • 552 views
  19. ஆந்திர என்கவுன்ட்டர்: தமிழக தொழிலாளர்களை திட்டமிட்டு கொலை செய்த ஆந்திர போலீஸ் - செல்போன் பதிவுகள் மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழி லாளர்கள், ஆந்திர போலீஸாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து அழைத்துச் சென்று கொல்லப் பட்டிருப்பது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. இதுதொடர் பான அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக தொழி லாளர்களில் 11 பேர் செல்போன் வைத்துள்ளனர். செல்போன் கோபுரங்களின் உதவியுடன் அவர்களின் செல்போன் உரை யாடல்கள், ஊரிலிருந்து புறப்பட்ட நேரம், ஆந்திர எல்லைக்கு சென்ற நேரம், என்கவுன்ட்டர் …

    • 0 replies
    • 349 views
  20. கடலுக்குள் கான்கிரீட் ஸ்லாப்களை செயற்கை தளங்களாக வைத்து, அதன் மீது வளர்க்கப்பட்டுள்ள பவளப்பாறைகள். இந்தியாவில் பவளப்பாறை மறு உருவாக்க திட்டத்தின் வெற்றிக்கு முன்னோடியாக மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. பவளப்பாறை காலனி முற்றிலும் அழிந்துபோன 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இத்திட்டத்தால் மீண்டும் பவளப்பாறைகள் புதிதாக வளர்ச்சி அடைந்துள்ளன. பவளப்பாறைகள் இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் உள்ள 4 முக்கிய பகுதிகளில் மன்னார் வளை குடாவும் ஒன்று. இங்கு 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகம் அமைந்துள்ளன. கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. 32 சதுர க…

    • 0 replies
    • 617 views
  21. ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குத் தயாராகும் சென்னை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 23ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்பது உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, நாளை மறுதினம் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். இதுகுறித்த கடிதங்கள் ஆளுநர்…

    • 3 replies
    • 1.3k views
  22. திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஒனறில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர் தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அ…

  23. சென்னை: செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் தேதியன்று ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்துகிற சாட்…

    • 0 replies
    • 381 views
  24. சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான நிலையில், ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கும் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். 23-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா இழந்தார். தொடர்ந்து நிதியமைச் சர…

    • 0 replies
    • 313 views
  25. வைகோ உடன் ஸ்டாலின் சந்திப்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளதாக நம்பிககை தெரிவித்தார். மு.க.ஸ்டாலினின் தம்பி மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதிக்கு ஜூன் 8-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. தனது தம்பி மகனின் திருமணத்துக்காக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கினார். மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, திமுக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் வைகோ வீட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.