Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுக்கோட்டையில் இன்று கலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ராமதாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவிடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியினருக்கும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தலித் அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13015:viduthalaisiruththai&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 480 views
  2. புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை‌ எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று …

  3. புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா செல்ல முயற்சி? அண்மையில் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில், இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் கணக்கில் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை கண்காணிக்க கடலோர மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…

  4. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இட…

  5. புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…

  6. புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை ஜெ.முருகன்அ.குரூஸ்தனம் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பத…

  7. புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள் 4 ஜூலை 2022, 01:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலரா புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது. நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

  8. புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்! மின்னம்பலம் தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டமன்றமும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலைச் சந்தித்து விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தில் அதிரடியாகப் பல மாற்றங்கள் அரங்கேறின. திமுக காங்கிரஸ் கூட்டணியாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திடீரென பொங்கியது திமுக. தற்போதைய அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் புதுச்சேரிக்கு வந்து திமுகவின் ஆட்சி அமைப்போம் என்று நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்திப் பேசினார். இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய…

  9. அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது! இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களையும் ஏனைய கட்சிகள் இரு இடங்களையும் கைப்பற்றுகின்றன. அத்துடன், புதுச்சே…

  10. புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். புதுச…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்தில் கழிவறைக்குச் சென்ற இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் மயங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் விஷ வாயு கசிவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேரில் ஆய்வு செய்த, முதல்வர் பாதாள சாக்கடைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். என்ன நடந்தது? புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் செவ்வாய்கிழமை காலை கழிவறைக்கு சென்றபோது, மயங்…

  12. 22 ஜனவரி 2024 புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந…

  13. புதுவை: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக 6 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் 6 பேரும் சபாநாயகரை சந்தித்தும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக முதல்வராக பதவி வகித்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே ரங்கசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக ஆளுநர் கட்டாரியாவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரசிலேயே ரங்கசாமிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 எம்.எல்.ஏக்கள் இன்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். …

  14. புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் - காவல்துறையுடன் தள்ளு முள்ளு. [படங்கள்] http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13322:puthchery&catid=36:tamilnadu&Itemid=102 இந்திய பூரான்கள் இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு, கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செந்தமிழர் இயக்கம், உயிர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு இயக்கம், ஆகியவைகள் இணைந்து இன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், தபால் நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. புதுச்சேரி அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரி…

    • 0 replies
    • 319 views
  15. புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார்…

  16. புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்? கட்டுரை தகவல் எழுதியவர்,எஸ். நடராஜன், புதுச்சேரி பதவி,பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ. 1000 கோடியை கடந்திருக்கிறது. அதே சமயம், மது விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்தாலும் மறுபுறம் அதை அருந்தும் மக்களின் போதைப்பழக்கம் மற்றும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு சர்ச்சை ஆகியிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்ச…

  17. புதுச்சேரியில், முதல்வராகிறார்... ரங்கசாமி! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ஏழு அல்லது ஒன்பதாம் திகதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் இதில், 81.70 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்று முடிவுகள் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்…

  18. புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்ப…

  19. புதுமைப் பெண் திட்டம் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்: வேறுபாடுகள் என்னென்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPR தமிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவை குறிப்பிடப்…

  20. புதுவை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய தமிழிசை உத்தரவு: தனிநபர் உரிமையில் தலையிடும் செயலா? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 27 ஜனவரி 2023, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் மாதத்தில் முதல் வேலை நாள் அன்று அனைத்து அரசு ஊழியர்களும் கதர், கைத்தறி பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் சார்பில் அரசு சார்பு செயலாளர் எம்.வி.ஹிரண் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார். ஒருபுற…

  21. ராஜ்நாத் சிங்குடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எங்கள் அரசாங்கத்தின் முக்கியமான கொள்கையாக இது தொடர்கிறது” என்றார். மாநில அந்தஸ்து வழங்கினால் மத்திய நிதி குறையும் என்று சந்தேகம் நிலவுவது குறித்து கேட்டபோது, அது உண்மையில்லை என்று ரங்கசாமி கூறினார். முன்னதாக நேற்று மோடியை சந்தித்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் கூடுதல் நிதி தொடர்பாக ர…

  22. புதுவையில் திமுகவின் தொய்வு எப்படித் தொடங்கியது? மீண்டும் அது முன்னிலை பெறுமா ? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / V. NARAYANASAMY FACEBOOK புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? …

  23. புதுவையில் பெய்ட்டி புயலால் 10 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் December 18, 2018 புதுவை மாநிலம் ஏனாமில் ‘பெய்ட்டி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் புயல் கரையை கடந்தபோது, 80 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதனால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள் நிலையில் அவர்களுக்கு கல்வித்துறையின் மத…

  24. புதைந்துபோன வரலாறு https://www.facebook.com/video/video.php?v=721854244552491 மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார…

    • 0 replies
    • 2.5k views
  25. சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.