தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல்! பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ. மேல்முறையீட்டு …
-
- 0 replies
- 345 views
-
-
வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர். வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் …
-
- 5 replies
- 1.2k views
-
-
சென்னை: காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ கூறியதாவது: மத்தியில் நடைபெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அல்ல. பாரதிய ஜனதா அரசு. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு கூட்டத்தையும் பாரதிய ஜனதா கூட்டியது இல்லை. நரேந்திர மோடி அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுனால், தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படு…
-
- 0 replies
- 391 views
-
-
ஜெ.,வழக்கு நீதிபதி அறிவிப்பு பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச்சை அமைத்து , கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி குமாரசாமியை, ஜெயலலிதா வழக்கை விசாரிக்க நியமனம் செய்தும் தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1151413
-
- 1 reply
- 720 views
-
-
மகிந்த ராஜபக்சேவுடன் பேட்டி எடுத்து ஒளிபரப்பும் அவசியம் தந்தி தொலைக்காட்சி ஏன் வருகிறது?... மகிந்தாவிற்கு இந்த விளம்பரத்தினை ஏன் தந்தி தொலைக்காட்சியின் பார்ப்பன செய்தி தொகுப்பாளர் கும்பல் செய்ய வேண்டும்? கடந்த வருடம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் ராஜேஸ் சுந்தரம் அவர்களால் எடுத்து வெளியிடப்பட்ட “இலங்கையின் இனப்படுகொலை” எனும் ஆவ்ணப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து “தந்தித் தொலைக்காட்சியில்” ஒளி பரப்பிய பொழுது, “இனப்படுகொலை” என்பதை மறைத்து “ போர்க்குற்றம்” எனும் திரிபுபடுத்தி ஆவணப்படத்தின் அரசியலை நீக்கியதை ஏன் தந்தி தொலைக்காட்சி செய்தது? நியூஸ் எக்ஸ் எனும் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆங்கில இந்திய தொலைக்காட்சியே “இனப்படுகொலை” எனும் வாசகத்தோடு ஒளிபரப்பிய பொழுது…
-
- 10 replies
- 2.9k views
-
-
பதிவு செய்த நாள் 25 டிச 2014 08:16 சென்னை: இயக்குநர் சிகரம் பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஔிபரப்பின. பெசன்ட் நகர் மின் மயானத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்று மறைந்த திரைஉலக மேதைக்கு அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. பல இமாலய படைப்புக்களை படைத்த இயக்குநர் ஒருவருக்கு இறுதி சடங்கு நடந்த வேளையில் எங்கும் சோகம் நிலவியது. கண்ணீருடன் நடிகர், நடிகைகள் சடங்கில் கலந்து கொண்டனர். சிலர் கதறி அழுதனர். எங்கும் சோகம் கப்பிய நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து, நடிகர், நடிகைகள் அங்கிருந்து வௌியேறினர். அதுவரை சோகமாக இருந்த சூழ்நிலை திடீரென மாறியது. மின்மயானத்தில் திரண்டிருந்த கூட்டம், சோகத்தில் இருந்து விடுபட்டு, தங்களின் அபிமான நடி…
-
- 1 reply
- 592 views
-
-
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகள்… தமிழ்நாடு நம்பர் 1 சென்னை: திருமணமான பின்னர் பல்வேறு காரணங்களால் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் தம்பதியினரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி, கிட்டதட்ட 7.9 சதவீத தம்பதியினர் தனியாக பிரிந்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை கணக்கெடுப்பில் இது 5.2 சதவீதமாக இருந்தது. பிரம்மசாரியாக இருப்பவர்களை இணைத்து திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் வேலை நிமித்தம் தம்பதியர்கள் பிரிவதால் ஏராளமானோர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகளாவே இருக்கின்றனர். தமிழ்நாட்டில் திருமணமாகியும் பிரிந்து வாழும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் அவர்களுக்கு இடையே காணப்படும் வயது வித்திய…
-
- 1 reply
- 976 views
-
-
தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 2 நாட்களூக்கு முன் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிகைகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.கே.பாலசந்தரின் இறுதி சடங்கில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கில் பால சந்தருக்கு அரசு மரியாதை அளிக்கப்படாததற்கு குஷ்பு வருத்தம் தெரிவித்து உள்ளா…
-
- 2 replies
- 587 views
-
-
சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண் சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தர…
-
- 3 replies
- 609 views
-
-
சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார். இந்த 90 வருஷ வாழ்க்கையின் ஊடே பார்க்கும் போது, ஸ்ரீவைகுண்டம், ராமசாமி, கருப்பாயி இந்தப் பெயர்களெல்லாம் இன்றைக்கு உங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு என்ன? இந்தப் பேரெல்லாம் இல்லைன்னா, இன் னைக்கு நான் இங்கெ உட்கார்ந்துருப்பேனானு தெரியல. ஒரு மனுசன் உருவாக்கத்துல தாய் - தகப்பன், குடும்பம், ஊரு எல்லாத்துக்கும் பங்கிருக்கு. ஸ்ரீவைகுண்டம…
-
- 0 replies
- 437 views
-
-
மாநாட்டிற்கு வரும் இளைஞர்கள் தாங்கள் விரும்பினால் தங்களுடைய காதலியையும் அழைத்து வரலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சித் தொடணடர்களைக் கேட்டுக்கொண்டார். "நாம் தமிழர்" கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது பேசிய சீமான், “2016ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் "நாம் தமிழர் கட்சி" தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்தார். அது மட்டுமின்றி தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டு வைக்கப்போவதில்லை என்றும், தம் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என திட்…
-
- 0 replies
- 595 views
-
-
வா.மணிகண்டன் (எழுத்தாளர்) மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள். ‘அப்படினா, சட்டம் Anti conversion Law…
-
- 0 replies
- 377 views
-
-
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளியில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் வியாழக்கிழமை சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்தனர். மாணவர்களாகிய நாங்கள் எந்த நிலையிலும், எக்காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவோம். தீவிரவாதம் எந்த ரூபத்தில் எந்த மொழியில், எந்த இனத்தில் வந்தாலும் அதனை நாங்கள் முழு தைரியத்துடன் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம். போராடுவோம். மக்களையும் பொருட்களையும் அழிக்கின்ற தீவிரவாதம் இவ்வுலகில் எந்த மூலையுல…
-
- 31 replies
- 1.6k views
-
-
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்கு, கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள் என, அனைத்து கோஷ்டி தலைவர்களும் முட்டுக்கட்டை போடுவதாக, கூறப்படுகிறது. நடிகை குஷ்பு, காங்கிரசில் சேர்ந்த பின், அவரது வேகமான நடவடிக்கைகள், கட்சி மேலிடத்துக்கு பிடித்து விட்டதால், அவருக்கு, செய்தி தொடர்பாளர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் குஷ்புவுக்கு, மகாராஷ்டிர மாநிலம் மூலம் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, முகுல் வாஸ்னிக், கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைப்பதாக தகவல் பரவ, அதற்கு தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் பலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்தி…
-
- 0 replies
- 580 views
-
-
Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. வேர்களை வெறுக்கும் விழுதுகள்7: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம் 21 டிசம்பர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:16 ஜிஎம்டி தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர். பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல, வயதான, சுயமாக வாழ இயலாத முதியவர்களை, தலைக்கூத்தல் மூலமோ, விஷ ஊசியின் மூலமோ கொல்வது என்பது வாழ்வின் இயல்பானதொரு சடங்கான நிகழ்ச…
-
- 0 replies
- 332 views
-
-
எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்!- விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டி தமிழ் இதழியல் கண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர் எஸ்.எஸ்.பாலன் என்கிற எஸ்.பாலசுப்ரமணியன். பலரையும்போல சினிமா கனவோடு, பத்திரிகைக்கு வந்தவர் அல்ல அவர். பத்திரிகைக்காக சினிமாவை விட்டவர். 1969-ல் அவருடைய தந்தை எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு மட்டும் அவரிடம் வரவில்லை; திரையுலகின் உச்சத்திலிருந்த ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் வந்தது. வாசன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெளியான ஜெமினி ஸ்டுடியோவின் ‘மன்சுலு மராலி’ தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. பாலசுப்ரமணியன் தொடர்ந்து படங்கள் எடுத்தார், இயக்கினார். ஆனால், அவருக்குள் இருந்த பத்திரி…
-
- 0 replies
- 445 views
-
-
புதுடில்லி: ஜெயலலிதா, கறுப்பு பணத்திற்கு அடுத்து சிதம்பரம் தான் எனது அடுத்த இலக்கு என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரசால் எழுச்சி பெற முடியாது. ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது. மோடியின் சிறந்த நிர்வாகத்திறனே அவரை பிரதமர் வேட்பாளராக உயர்த்தியது. அரசியல் என்பது பல விபத்துக்கள் நிறைந்தது. தனிநபர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் காரணமாக சர்வதேச கொள்கைகள் மாறும். மக்கள் அனைவரும் நடுநிலை வகிக்கின்றனர். மோடிக்கு எதிராக இல்லை. மீடியாக்களை வரிவிதித்து நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் மிரட்டினார். குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் அந்த …
-
- 1 reply
- 644 views
-
-
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன், பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த நடிகர் நெப்போலியன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். திமுகவில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் கட்சியில் ஒதுக்கப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பாஜ கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், …
-
- 1 reply
- 589 views
-
-
ம.தி.மு.க., தலைவர் வைகோ, கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அதன் அடையாளமாக, கருப்பு துண்டை, தன் தோளில் எப்போதும், அவர் அணிந்திருப்பது வழக்கம். மத வழிபாடுகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. பல ஆண்டுகளாக இதை கடைபிடித்து வரும் வைகோ, கடந்த 18ம் தேதி, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றபோது மட்டும், கருப்பு துண்டை தோளில் இருந்து கழற்றி உள்ளார்.பய பக்தியுடன் அவர் அந்த கோவிலை அரை மணி நேரம் வலம் வந்ததுடன், துர்க்கையை வழிபட்டார். பின்னர், அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். வைகோவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அவரது கட்சியினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை அவர் களைய விரும்பியதன் அடையாளம் தான், இந்த வழிபாட…
-
- 0 replies
- 1k views
-
-
"வானளாவிய" விஸ்வரூபம் எடுத்த பி.எச்.பாண்டியன்.. அஞ்சாமல் சிறை சென்ற பாலசுப்ரமணியன்... ! சென்னை: பத்திரிகை உலகம் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளது. அதில் மறக்க முடியாத ஒன்று, "பாஸ்" எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பு தினம் எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்தது அது. எம்.ஜி.ஆர் கண் முன்பாகவே நடந்தது. யார் பெரியவர் சட்டசபையா, நீதிமன்றமா என்ற பெரும் சட்டப் போர் வெடித்துக் கிளம்பிய பரபரப்பு நாட்கள் அவை. 1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது. இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அ…
-
- 0 replies
- 536 views
-
-
சென்னை: அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது. இந்த கருத்தை தமிழகத்தில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருசில நாட்களில் மறந்துவிட்டனர். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மறக்க தயாராக இல்லையாம். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக ரகசியமாக அதிரடி வேலை ஒன்றை செய்து வருகின்றனராம். குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் 'ஆம்பள' படத்தை தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ரிலீஸ் செய்ய விடக்…
-
- 6 replies
- 664 views
-
-
ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கை விசாரிக்க ஜாமின் உத்தரவும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு ! புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பெற்றுள்ள ஜாமின் வரும் 4 மாதங்களுக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சொன்னது போல் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கை நாள் தவறாமல் நடத்தி குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச் இன்று ஆணை பிறப்பித்தது. கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜெ., …
-
- 1 reply
- 588 views
-
-
சென்னை: தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச் சேர்ந்த -லைக்கா- மொபைல் நிறுவனம். இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம்…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் நேற்று 11 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தச் சிறுமியின் ஊரைச் சேர்ந்த, 15 வயது சிறுவனைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. வேலூர் குடியாத்தத்திற்கு அருகில் உள்ள கல்யாண பெருங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவரது சடலம் நேற்று அந்தப் பகுதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி படித்த மச்சனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த 15 வயதுச் சிறுவனை காவல்துறையினர் இன்று ஒசூரில் கைதுசெய்ததாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பலாத்கார முயற்சியில் அந்த ம…
-
- 0 replies
- 548 views
-
-
விருத்தாசலம், விருத்தாசலம் அருகே, சென்னையைச் சேர்ந்த வங்கி காவலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் 3 சூட்கேஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கிடந்தது. சூட்கேஸ் பெட்டிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பாசிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வெள்ளை பாறை என்றழைக்கப்படும் ஒரு ஓடை உள்ளது. இங¢கு நேற்று மதியம் வழக்கம் போல் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாறையின் மீது செல்போன் ஒன்று கிடந்ததை பார்த்தனர். அந்த செல்போனை அவர்கள் ஆவலுடன் எடுக்க சென்ற போது, அங்கு 3 சூட்கேஸ் பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றின் அருகில் சென்று பார்த்த அவர்களுக்கு அந்த சூட்கேசுகளில் ஏதேனும் வெடிக…
-
- 0 replies
- 697 views
-