தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
கடலுக்கு அடியில் உள்ள சுரங்க காட்சியகத்தை விளக்கும் மாதிரி படம். நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத் தில் கடல்சார் காட்சியகம் அமைப்ப தற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத்தில் கடல்சார் காட்சியகம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை சுற்றுலா துறை ஒத்துழைப்புடன் மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. தனியார் மற்றும் அரசு பங்களிப்பில் ரூ.253 கோடி செலவில் கடல்சார் காட்சியகம் அமைப்…
-
- 3 replies
- 895 views
-
-
சென்னை: போஸ்டர்கள்தான் இன்றைக்கு தமிழக மக்களுக்கு பொழுது போக்காக மாறிவிட்டது. ஜெயலலிதா குவித்த சொத்துக்களைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி தொடராக எழுதினார். அதை புத்தகமாக வெளியிட்டனர் திமுகவினர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், தேமுதிகவினரும் போகும் இடமெங்கும் பேசினர். பதவியிழந்த பின்னரும் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று கூறுவது ஏன் என்பது எதிர்கட்சியினரின் கேள்வி. இதனை போஸ்டராகவும் அடித்து ஒட்டிவருகின்றனர் எதிர்கட்சியினர். இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் அதிமுகவினர் பாமக, தேமுதிக, திமுகவிற்கு எதிராக ஒரே போஸ்டராக ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ராமதாஸ் - அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சிக்கு…
-
- 1 reply
- 610 views
-
-
தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடி அவர்களின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேர…
-
- 0 replies
- 355 views
-
-
புதுடில்லி : கலைஞர் டி.வி.,க்கு முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழிக்கு முக்கிய பங்கு இருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் டி.வி.,க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அவர் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ராசாவின் கூடு…
-
- 0 replies
- 540 views
-
-
சென்னை: தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்று விட்டார். "சட்டப்பேரவையில் தனக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இதனால் தனது சட்டமன்ற கடமையை ஆற்ற முடியவில்லை" என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில், தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். அவரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துட்டுவிட்டு உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்…
-
- 4 replies
- 585 views
-
-
எனது வயதை கருத்தில் கொண்டு கூட, தனி இருக்கை போடவில்லையே...: கருணாநிதி வருத்தம்! சென்னை: ஏற்கனவே கேட்டிருந்தும் கூட தமிழக சட்டசபையில் தனக்கென தனி இருக்கை அமைத்து தரப்படவில்லை என திமுக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது வயதைக் கருத்தில் கொண்டாவது தனி இருக்கை அமைத்து தந்திருக்கலாம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சட்டசபைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சட்டசபையில் தனக்கு தனி இருக்கை வசதி செய்து கொடுத்தால் பங்கேற்பேன் எனத் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்படி, இன்று சட்டசபைக்கு வந்த கருணாநி…
-
- 7 replies
- 807 views
-
-
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்யாயம்... வருகிறது டிசம்பர் 17 சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17ம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும். ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசைகட்டி நிற்பார்கள் வரவேற்…
-
- 0 replies
- 438 views
-
-
ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை திடீர் முடிவு ஏன்? பின்னணியில் பாஜக? சென்னை: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் ஜெயல…
-
- 3 replies
- 807 views
-
-
வேலைப் பளுவினிடையே இந்த செய்தியை தற்பொழுது பார்த்தேன்.. தமிழர் பிரச்சனையாயிற்றே என்ற வகையில் இங்கே பதிவிடுகிறேன்.. ஈழத்தில் நடந்த துயரங்களுக்கு தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லையென "குய்யோ..முறையோ" என குரலெழுப்புபவர்கள், தமிழகத்தில் அண்டை, மத்திய அரசுகளால் வஞ்சிக்கபட்டுவரும் செய்திகளை யாரேனும் அறிவீர்களா? குரலெழுப்பியுள்ளீர்களா? முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உ…
-
- 38 replies
- 1.8k views
-
-
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இன்று துவக்குகிறார். தமிழகம் முழுவதும் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்டமாக, மதுரை கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க, அவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில அதிகாரிகளை, விசாரணைக் குழுவில் இடம்பெற அனுமதிக்கும்படி, சகாயம் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.எனினும், அதுகுறித்து கவலைப்படாமல், சகாயம் விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளார். நேற்று சென்னையில், சம்பந்தப்பட…
-
- 0 replies
- 952 views
-
-
Exclusive: ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங் தடாலடி பெங்களூரு: நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார். மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்க…
-
- 0 replies
- 437 views
-
-
சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒருமையில் பேசியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரிந்து கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது. கடந்த வாரம் நேபாள நாட்டில் சார்க் மாநாடு ந…
-
- 3 replies
- 712 views
-
-
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ சவால் விடுத்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேச வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள். அவர்களிடம் தகுதியில்லாத ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன். ராஜாவின் மிரட்டலுக்கு தமிழகத்தில் உள்ள பல்…
-
- 0 replies
- 518 views
-
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''ப…
-
- 0 replies
- 511 views
-
-
"கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல; பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல. எனவே கூட்டணி இலக்கணம் குறித்த தமிழிசை பாடம் தேவையில்லை" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘‘ ராமதாசு, வைகோ போன்றோர் மோடியை விமர்சிக்கக்கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்கள் போல செயல்படக்கூடாது’’ என்று பேசியிருக்கிறார். இதற்கு முன் நடத்திய பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம் குறித்தும் அவர் பாடம் நடத்தியுள்ளார். கூட்டணிக்கான இலக்கணம் குறித்தெல்லாம் மற்றவர்கள் பாடம் நடத்தித் தெரிந்து கொ…
-
- 1 reply
- 539 views
-
-
தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்: பி.ஜோதி ராமலிங்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும் ராமதா ஸும் மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிபோல் செயல்படக்கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்தது உட்பட தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரு கிறது. அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் பள்ளிகளில் திரு வள்ளுவர் தினம் கொண்டாடப் படும் என மத்திய அரசு அறி வித்துள்ளது. அடுத்து பாரதியார் தினமும் கொண்டாடப்படும். காங்கிரஸ் அரசில் மு.க. அழகிரியை நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்கவில்லை. பாஜக ஆட்சியி…
-
- 0 replies
- 512 views
-
-
மோடி மீதான தமிழர்களின் நம்பிக்கை துடைத்து எறியப்பட்டுள்ளது’ என்று வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: கடந்த 27-ம் தேதி மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தேன். அது நியாயமான விமர்சனம். இன்னும் தொடர்ந்து செய்வேன். காத்மண்டில் சார்க் மாநாட்டுக்கு சென்ற நரேந்திர மோடி, தமிழ் இன அழிப்பை செய்யும் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறார். இது பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டது. நேரு காலத்தில் இருந்து பிரதமராக இருந்த யாரும் இப்படி சொன்னதில்லை. இன்னொரு நாட்டின் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என, ஒரு மாநாட்டில் சொல்வது தவறு. இதைத் தான் நான் பேசினேன். இப்போதும் அந்த கருத்தில் உறுதி…
-
- 0 replies
- 514 views
-
-
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க தீட்டிய சதித் திட்டத்தில் ‘திருமண மண்டபம்’, ‘சமையல்காரர்கள்’, ‘மசாலா பொடிகள்’ ஆகிய சங்கேத மொழிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் உளவாளியான இலங்கை கண்டியைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன் (37) என்பவர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சென்னை யில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதும் இதற்காக மாலத்தீவில் இருந்து 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதும் தெரியவந்தது. இந்த சதித்திட்டத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக செயல்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது. இவ்வழக்கை தேசிய பு…
-
- 1 reply
- 425 views
-
-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது, வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணி உருவாக வேண்டும். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற தமிழர்களின் மனங்களில் மிகப் பெரிய மதிப்பீடு கொண்டவராக இருக்கிற வைகோ அவர்கள், இந்த அளவுக்கு ஒரு ராஜாவும், ஒரு சுப்பிரமணிய சாமியும் தரக்குறைவாக பேசிவிட்ட பிறகும், இது பாஜகவின் கருத்து இல்லை, அதனால் தேசிய ஜனநாயக கூட்டணில் தொடர்ந்து நீடிக்கிறேன் என்பது போன்ற ஒரு நிலையை வைகோ அவர்கள் இனியும் எடுக்கலாகாது என்றார். http://www.pathivu.com/n…
-
- 3 replies
- 577 views
-
-
''மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவது போல இருப்பதாக, ஸ்டாலின் குறிப்பிட்டு, அது ஏழைகளை பாதிக்கும் என, கூறியுள்ளார்.அது குறித்தெல்லாம் சொல்வதற்கு, அவர் எந்த பல்கலைக் கழகத்தில், பொருளாதார பாடம் படித்தார் என, தெரிவிக்க வேண்டும். அவர் எதற்கு, திடீரென, இந்த வேண்டாத வேலையெல்லாம் பார்க்க வேண்டும்.…
-
- 0 replies
- 535 views
-
-
தலைவர் பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை வைகோ ஐயா 26 ஆம் திகதி காலை கேக் வெட்டி கொண்டாடியபோது... (facebook)
-
- 14 replies
- 2.7k views
-
-
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் என குஸ்பு கூறியிருப்பதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என நடிகர் குஷ்பு கூறியிருப்பது குறித்து தமிழர் முன்னேற்ற படை அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் பண்பாடு, நாகரீகம் ,வாழ்வியல் நெறி , வரலாற்று தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் நடிகை குஷ்பு பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வ…
-
- 0 replies
- 448 views
-
-
''விடுதலைப்புலிகள் பிரபாகரனுடனான ரகசிய சந்திப்பைத் தொடர்ந்து, வைகோ இறந்துவிட்டதாக கருணாநிதி அறிவித்தார்" - பொதுக்கூட்டத்தில் வைகோ
-
- 0 replies
- 807 views
-
-
ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா? என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராம…
-
- 0 replies
- 365 views
-
-
தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெ…
-
- 0 replies
- 513 views
-