தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. இதில் தொடக்க நிகழ்வாக 26 காலை 9.30 மணிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதலுடன் நிகழ்வு ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்சியாக நடை பெற உள்ளது. http://www.pathivu.com/news/35448/57//d,article_full.aspx
-
- 0 replies
- 522 views
-
-
சென்னை ஐஐடி மாணவர்கள் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் காறி துப்பும் போராட்டம் நடைபெற்றது. கேரள மாநிலத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடந்தது. அதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பாஜகவினர் விரட்டி அடித்தனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனைல் கண்டித்து “கிஸ் ஆப் லவ்“ என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள், பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாக அறிவித்தனர். இதனால் கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
-
- 1 reply
- 519 views
-
-
திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://tamil.webdunia.com/article/regional-tamil-news/refugees-suicide-attempt-trichy-srilankan-refugees-protest-114111800037_1.html
-
- 0 replies
- 492 views
-
-
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ., தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவிலுள்ள பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள், தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன், அதிவிரைவு படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று சென்றார். அப்போது அங்கு அத்துமீறி அணை பகுதியில் நுழைந்த அவர்கள், வேகமாக மதகு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். மேலும், அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தினார்களாம். இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் அங்கு செல்லக்கூடாது எனவும், சில இடங்களை இடித்ததையும் தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பிஜிமோள் மற்றும் அவரது ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 447 views
-
-
சென்னை, பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், கடந்த 2008ம் ஆண்டு ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கூறி அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் ஏற்கனவே, கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரிடம் வைகோ தரப்பு வக்கீல் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார்…
-
- 0 replies
- 573 views
-
-
தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற விவசாய சமூகமாக இருந்தது. அதில் பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்களாக இருந்தன. இத்தகைய கூட்டுக்குடும்ப முறையில் ஒரே குடும்பத்தில் திருமணமான பல பெண்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் முதியோர் பராமரிப்பு என்பது இயல்பாக, எளிதாக இருந்தது என்கிறார் கோவையில் இருக்கும் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர் பராமரிப்புத்துற…
-
- 0 replies
- 441 views
-
-
அரங்கக் கூட்டம் மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் பேசப்படாத வரலாறும் பேச்சாளர்கள்: தோழர் சி.மகேந்திரன், இந்தியப் பொதுவுடமைக் கட்சி தோழர், தவமுதல்வன், திரைப்பட இயக்குநர் தோழர். செந்தில் இளந்தமிழகம் இயக்கம் நாள்: 23 நவம்பர் 2014 ஞாயிறு நேரம்: மாலை 5 மணி இடம்: இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம் தொடர்பு: +91 98844 68039 https://m.facebook.com/events/1546746185540308?ref=m_notif¬if_t=plan_user_invited&actorid=100000713581640
-
- 0 replies
- 484 views
-
-
பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அமராவதி பாசன பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது வைகோ அவர்கள் ஆற்றிய உரை நன்றி: இமயம் தொலைக்காட்சி https://www.facebook.com/video/video.php?v=783273478399267
-
- 0 replies
- 416 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 60 கவிஞர்கள் கூடி கவியரங்கம் நடைபெற உள்ளது. புலவர் புலமைப் பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் நடைபெற இருந்தது. தற்போது இடம் மாற்றப்பட்டு சென்னை RKV (RKV Studio ) அரங்கம் வடபழனியில் 25 ஆம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி 'பிரபாகரன் மாலைப் பொழுது' என்று கடைப்பிடிக்கும் வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
கலாச்சார காவலர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போபால் மாணவர்கள். | கோப்புப்படம்: ஏ.எம்.ஃபரூக்கி . சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 'அன்பு முத்தம்' போராட்டம் நடத்தி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது…
-
- 4 replies
- 1.3k views
-
-
உள்ளூர் தொழிலாளர்கள் வரத் தயங்குவதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர்' தமிழகம் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொழிலாளர்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும் அவர்கள் நாராயண்பூர் மாவட்ட நிர்வாகத்…
-
- 5 replies
- 698 views
-
-
ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம் மீது ஜெயலலிதா தரப்பு ஏன் கோபமாக இருந்து மிரட்டியது என்பது குறித்தும் பாரதிய ஜனதா எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்தும் முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது சுயசரிதை புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் பி…
-
- 1 reply
- 2.9k views
-
-
மேலதிக தகவல்களுக்கு : http://epaper.newindianexpress.com/375047/The-New-Indian-Express-Dharmapuri/15-11-2014?show=touch#page/2/1 Niyas Ahmed https://m.facebook.com/photo.php?fbid=4855658884826&id=1697724902&set=a.1471488722687.45083.1697724902&source=48
-
- 2 replies
- 569 views
-
-
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் தப்பி பூங்காவிற்குள் மறைந்து விட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிங்கம், கரடி, நரி உள்ளிட்ட மிருகங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக 5 புலிகளை அடைத்து வைத்திருந்த சுற்றுப்புற சுவரின் ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது என்றும், இதனால் 5 புலிகளும் தப்பி பூங்காவிற்குள் நுழைந்து விட்டன என்றும் தகவல் தெரிய வருகிறது. ஆனால், உயிரியல் பூங்கா ஊழியர்கள் சாமர்த்தியமாக மூன்று புலிகளை பிடித்து அடைத்து விட்டதாகவும், மீதம் இரண்டு புலிகள் பூங்காவிற்குள் புகுந்து மறைந்து விட்டதாகவும் தகவல் வெளியாக…
-
- 5 replies
- 632 views
-
-
சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ரெஷ்டாரென்ட்டில் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களது சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்தச் செயலை கண்டித்துக் கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனையடுத்து இதே போன்ற போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவிய…
-
- 0 replies
- 449 views
-
-
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதியிலிருந்து 25-ம் வரை கொண்டப்படுகிறது. நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த அக்கறையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நீண்ட பாரம்பரியமும் பண்பாட்டுப் பின்புலமும் கொண்ட நாடு இந்தியா. தமிழகமும் அத்தகைய சிறப்புகள் கொண்டது. தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கோயில், தாராசுரம் போன்றவை தமிழ்நாட்டில் யுனெஸ்கோ தேர்ந்தெடுத்த உலகப் பாரம்பரியச் சின்னங்கள். ஆனால் பண்டைய காலம் தொட்டு காலனி ஆதிக்கக் கால கட்டம் வரை நம் பண்பாட்டைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவற்றுள் பிரதானமானவை கட்டிடங்கள்தான். இந்தியாவைப் பொறுத்தவரை பாரம்பரியக் கட்டிடங்கள் கொல்கத்தாவில்தான் அதிகம். கொல்கத…
-
- 0 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பு ஆய விசாரணை, ஒக்டோபர் 26ம் ,27ம் திகதிகளில் குன்னூர் நகராட்சி அரங்கத்தில், தீர்ப்பு ஆய நீதிபதியான டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. மிட்டல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் விசாரணையில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 26ம் திகதி சாட்சியம் அளித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளையும், 27ம் திகதி சாட்சி அளித்த காவல்துறை அதிகாரியையும் குறுக்கு விசாரணை செய்தார். அடுத்து தமது வாதங்களை பின்வருமாறு முன்வைத்தார். வைகோவின் வாதம்.. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, 1992 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்த ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு…
-
- 11 replies
- 1k views
-
-
விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ, "மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12 ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை. விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்ட…
-
- 0 replies
- 453 views
-
-
அழுக்கேறிய காங்கிரஸ் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில்,அக்கால காங்கிரஸை எதித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது என்ன? எப்படி? என்பதை இங்கே கேளுங்கள். காங்கிரஸ் என்பது இன்றுமட்டுமல்ல,என்றைக்கும் அழுக்கேறியதுதான் என்பதை அண்ணா கூறுகிறார்.
-
- 2 replies
- 864 views
-
-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 'லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2…
-
- 0 replies
- 566 views
-
-
கபில ஆற்றில் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளை நொறுக்கும் இயந்திரம். | படம்: அனுராக் பசவராஜ். காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் மணலைச் சுமந்துகொண்டு பெங்களூரு நகருக்குள் தினசரி சுமார் 3,000 லாரிகள் வந்தவண்ணம் உள்ளன. பெங்களூரு, மைசூர் நகரங்களில் கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் தீராத பசிக்கு காவிரி ஆற்று மணல் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும் கட்டுமான நிறுவனங்கள் அடங்கிவிடவில்லை. இது குறித்து இந்திய விஞ்ஞானக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் டி.வி.ராமச்சந்திரா கூறும்போது, "நீர்வாழ் உயிரினங்கள் அழிவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் அளவும் கடுமையாக குறைந்து போகும் அபாயம் உள்ளது" என்றார். பெரிய …
-
- 0 replies
- 249 views
-
-
"நாங்கள் பேசும் பேச்சுக்களும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக்கூடாது. அதாவது, உணர்ச்சிப்பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது. ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்து இயம்பும்போது மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழக்கு ஏற்பச் சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்" என்று உணர்ச்சி மிகுந்…
-
- 0 replies
- 529 views
-
-
ஆண்களைப் போல “சுகவாசி”யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த “சுதந்திரம்” மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை. அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த “சுதந்திரமும்” வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது. ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது…
-
- 2 replies
- 824 views
-
-
பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள மதிமுக தொண்டர்கள், அந்தக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தே.ஜ. கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆர…
-
- 0 replies
- 394 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து விடுபட வேண்டி பள்ளி குழந்தைகள் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாந், வில்சன், லாங்லெட் ஆகியோர் மீது இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தண்டனையில் இருந்து 5 மீனவர்களை மீட்கவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திலும் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்நில…
-
- 0 replies
- 320 views
-