Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கி, அரசு செவிலியர் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆ…

  2. ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive தமிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? கால்நூற்றாண்…

  3. ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மா…

  4. சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564

  5. சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ம.ந.கூ., ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியதாவது: தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மக்களுக்கு பணம் வழங்கின. ம.ந.கூ., மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் அளிக்காமல் தேர்தலை சந்தித்தது. ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க ம.ந.கூ., தொடர்ந்து போராடும். http://election.dinamalar.com/detail.php?id=11674

    • 0 replies
    • 482 views
  6. ம.ந.கூட்டணியில் வைகோ, ஜி.ஆர். தேர்தல் போட்டியில் இல்லை! - யாருக்கு எத்தனை இடங்கள்? தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் போக, 110 தொகுதிகள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக தவிர மற்ற நால்வருக்கும் சம உரிமை என்றளவில் 110 தொகுதிகளை கணக்கிட்டு பிரித்துக் கொடுத்தால், மூன்று கட்சிக்கு தலா 27 தொகுதிகளும், ஏதாவது ஒரு கட்சிக்கு 29 தொகுதிகளும் கொடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியைப் பொறுத்தவரையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தேர்தலில் போட்டி…

  7. "நாம் தமிழர் கட்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரான ஒரு கட்சி. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்." தி.மு.கவும், நாம் தமிழர் கட்சியும் இணையான கட்சிகள் இல்லை என்றாலும் இணையத்தில் நடக்கும் மோதலில் உக்கிரம் உச்சமாகத்தான் இருக்கும். சீமான் கட்சியினர் மற்றும் தி.மு.கவினர் இடையே இலைமறைகாயாக இருந்த மோதல், இப்போது `முரசொலி' தலையங்கம் மூலமாக முச்சந்திக்கு வந்துள்ளது. தி.மு.க-வின் `முரசொலி’ ஏட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அவருடைய பெயரைக் குறிப்பிடாமலேயே கடுமையாக விமர்சித்து கடந்த வாரம் தலையங்கம் வெளியானது. ``நாம் தமிழர் என்பதற்காக உலக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொண்டு கர்ஜனை என்று …

  8. மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார். 24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிர…

  9. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கையாக வெளியாகியுள்ளது.. கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா ப: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன…

  10. மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…

  11. மகப்பேறு மருத்துவர் முதல் தெலுங்கானா ஆளுநர் வரை.. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசை! தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவர் முதல் ஆளுநர் வரை கடந்து வந்த பாதையில் உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை குமரி அனந்தன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தி…

  12. மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை சென்னை உயர்நீதிமன்றில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அவரது சட்டதரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார். : 26வயதான மகள் லண்டனில் உள்ள நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும் பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல…

  13. மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகள் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களமானது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பங்கேற்றார். அடுத்தநாள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அவர் டெல்லி சென்றுவிட்டார். இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நி…

  14. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தற்போது காணலாம்.... சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி.பி. ரோடு (CB road) பகுதியில் உள்ள “ஓஸ்வால் கார்டன்” (oswal garden) அடுக்குமாடி குடியிருப்பில் அனிதா சுரானா என்பவரும் அவரது மருமகள் பிரீத்தியும் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவு தட்டப்படவே,பிரீத்தி சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நெட்டித் தள்ளிவிட்டு 2…

  15. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின் விளக்கம் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 27 மார்ச் 2023, 11:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்டோர் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்ட…

  16. படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த வாகனங்களை நான்கு சக்கர வாகனங்கள் என அரசு கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசிக்காக 25 செப்டெம்பர் 2023 சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்…

  17. "...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை. காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி. இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழ…

    • 0 replies
    • 540 views
  18. மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை படக்குறிப்பு, சாதனைப் பெண் ரூபா. கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார். இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின…

  19. மகளிர் தினம்:முதல்வர் வாழ்த்து . . அறிவுக்கண் திறந்து ஆக்கப்பூர்வமாய் பணியாற்றி உலகை வாழ வைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். . இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்செய்திட வேண்டுமம்மா' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பெண்ணின் சிறப்பை பெருமையாக எடுத்துரைக் கிறார். பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாள…

    • 5 replies
    • 850 views
  20. மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நளினி, அந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரான நளினி கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் மகள் ஆரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஆரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது தூக்கு த…

  21. மகள் வருகை தராதமையினால் ஏமாற்றத்துடன் சிறைக்கு திரும்புகிறார் நளினி லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் சிறைக்கு செல்வதனால் நளினி மன வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஜூலை 25 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் வெ…

  22. மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. …

  23. மகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல். மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஷா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ராணாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண…

  24. மகாராஷ்டிர முதல்வரின் மனைவியை ரஜினி சந்தித்தது ஏன்? (படங்கள்) மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸை ரஜினி சமீபத்தில் சந்தித்தார். இதையடுத்து கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட முதல்வரின் மனைவியை ரஜினி சந்திக்கவேண்டிய காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியை சந்தித்தது குறித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அம்ருதா, ரஜினியை இன்று சந்தித்தேன். சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்தோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அம்ருதா ஒரு தேர்ந்த பாடகி என்பதால் காலா படத்தில் அவர் ஒரு பாடல் பாடவுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.