Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை! செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு…

  2. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார். சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன? பெண் வ…

  3. 'தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்... ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்'! - கலகல பொன்னம்பலம் அ.தி.மு.கவில் இருந்து விலகி, பா.ஜ.கவின் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் பொன்னம்பலம். ' இரண்டு அணிகளும் இணையும் என்று இவ்வளவு நாள் காத்திருந்தேன். அவர்கள் இணைந்திருந்தால், நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்' என்கிறார் நடிகர் பொன்னம்பலம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மதில்மேல் பூனையாக உள்ளனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி, தீபா அணி என பிரிந்துள்ளனர் அ.தி.மு.க.வினர். 'கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை' எனத் தொண்டர்களே புலம்பி வருகின்றனர். இந்நிலையில், 2011 ஆம் ஆண…

  4. குடித்து விட்டு கூத்தடித்த பெண்ணால் பரபரப்பு…. தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவனுக்கு அவனது தாய் மாமனே மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற மேலும் ஒரு சிறுவன் மது குடிக்கும் காட்சியும் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் காதல் தோல்வியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதன் பரபரப்பு அடங்கு முன்பு தஞ்சையில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் 25 வயது மதிக்க…

    • 0 replies
    • 325 views
  5. ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்?: தீபா கேள்வி மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ஆன செலவினை வழங்கிய குடும்பத்தினர் யார் என்று தமக்கு தெரியவில்லை என்று தீபா கூறியுள்ளார். சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த…

  6. மருத்துவமனையில் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா? டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். வருமானத்திற்கு அதிகமாக ஓரளவுக்குதான், ஜெயலலிதா …

  7. ராமேஸ்வரம்: மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி…

  8. ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை! கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்று புதிய சாதனை(?) படைத்துள்ளது. 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான். இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ…

  9. தமிழகத்தில் மோடிக்கு துளியும் இடமில்லை – குஷ்பு தமிழகத்தில் பா.ஜா.க.வுக்கும் மோடிக்கும் துளியும் இடம் கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தாமரை மலராது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில், “எப்போதும் பிரதமர் மோடி தமிழகத்தில் கால்வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் எல்லோரும் சேர்ந்து ‘Go Back Modi’ என கூறுகிறார்கள். இதிலிருந்து ஒரு வி‌டயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் துளி கூட இடம்கிடையாது. தமிழகத்தில் தாமரை மலராது” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று மதுரையில் எய்ம்ஸ் மரு…

  10. அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை - தமிழக அரசியல் பிளவுகள்! #OPSvsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. பெர…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.விஜயானந்த் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டால் யாருக்கு பயன்? பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, வியாழன் (ஆகஸ்ட் 1) அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளத…

  12. முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தங்க தமிழ்ச்செல்வன் | கோப்புப் படம்: எம்.சாம்ராஜ் முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்…

  13. சசிக்கு சலுகைகள் உண்மைதான்: புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர். சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகிய…

  14. இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்… December 11, 2020 இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன. இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள…

  15. பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…

    • 1 reply
    • 325 views
  16. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்திலிருந்து எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற 17 தமிழர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாகப் அவர்கள் பயணித்த கப்பலிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நைல் நதியில் மிதந்தவாறு எகிப்து நாட்டைச் சுற்றி பார்க்க 'ஏ சாரா' எனும் சொகுசு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாட்களோடு கடந்த வாரம் அஸ்வான் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, லக்சர் நகரத்தை அடைந்தபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன். …

    • 0 replies
    • 325 views
  17. சசிகலா காலில் தவழ்ந்து முதல்வராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் ராஜினாமா செய்து விட்டு வரட்டும், ஒரே தொகுதியில் போட்டுயிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு சாவல் விடுத்துள்ளார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருதகுளத்தில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மத்தியில் நடக்கும் பாஜ ஆட்சிக்கு அடிமையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அடிமை ஆட்சி என கூறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்துள்ளது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல என பதில் கூறியுள்ளார். அதை…

  18. வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் கோரும் மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார். வீடியோ கா…

  19. பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், 'யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம…

  20. சண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்?! சசிகலாவின் மாஸ்டர் ப்ளான்! சிறையில் இருக்கும் சசிகலா, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை நினைத்து வேதனையில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் விரிசல் அதிகமாகிக் கொண்டு இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தாகிவிடும் என்று குடும்ப உறவுகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா. கசப்புகளை மறந்து ஒன்றுசேர்வதற்கான இணைப்பு வேலைகளில் மன்னார்குடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் கிலியில் இருக்கும்போதே... 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பணம் கொடுக்க முயன்றார்' என்ற வழக்கில் டி.டி.வி.தினகரனைச் சுற்றிவளைத…

  21. பட மூலாதாரம்,FACEBOOK/COMMUNIST PARTY OF INDIA (MARXIST) 21 அக்டோபர் 2023, 02:15 GMT சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித் தலைவரான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் மறுத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் மூத்த இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்…

  22. பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் சசிகுமார் 28.11.2013 அன்று முதுநகர் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சின்னவிளை கிராமத்தைச் சேர்ந்த பணியடிமை மகன் தார்த்தீஸ் 6.12.2013 அன்று கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டுமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமம், சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தவமணி 12.12.2013 அன்று கடல…

  23. சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…

  24. ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் வீதி ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர். கார் ஓ…

  25. பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்? 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.