Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி! பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் காவல்துறையினர் கைது செய்து செய்தனர். இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்…

  2. 19 Mar, 2025 | 02:15 PM புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிந…

  3. உள்ளடக்கம்:- மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் , ஊழிய உயர்வு, தற்காலிக பணியிணங்களை நிரப்புதல் நீண்ட காலமாக போராடி வருகின்றனர், அடிமை உரிமைகளுக்கு அரசிடம் கையேந்தி நிற்பது கவலைக்குரியது தனியாரிடம் மின்உற்பத்தி நிலையங்களை ஒப்படைப்பது நடைபெறுகின்றது. பிகு - வசை மொழிகள் இல்லை, ஆபாச படங்களில்லை & அரசியல் பிரச்சாரமுமில்லை; வள்ளுவம் வலைக்காட்சி - அரசியல் சார்பற்றதா என தெரியாது தெரியவும் விரும்பவில்லை, அரசியல் சார்ந்த து தொலை காட்சி என்றால் அறிய த்தரவும்

  4. உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு கமல்ஹாசன் ஆதரவு இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ருவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலி…

  5. கினியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 25 வயது நபர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் தாக்கப்பட்டதான அறிகுறிகள் இருந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியைச் சேர்ந்த இந்த நபர் நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனியான அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து இந்த நபர் தனது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல சென்னை வந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எபோலா வைரஸ் நோய் தலைவிரித்தாடுவதால் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ நிபுணர்கள் அங்கிருந்து வரும் பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை…

  6. சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெ…

  7. தமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது. மேலும், அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல், நேற்று வெளியிடப்பட்ட, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு சுதந்திரம் அடையும் முன், 1931ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பின், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2011ல், இந்தக் கணக்கெடுப்பை, மத்திய அரசு, நாடு முழுவதும் நடத்தியது. காகிதம் பயன்படுத்தாமல், கையடக்க எலக்ட்ரானிக் கருவி மூலம், வீடு, வீடாகச் சென்று, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்தின் கல்வி அறிவு, வருவாய், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதி, வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஜாதி போன்ற விவரங்கள் சேகரிக்…

    • 0 replies
    • 332 views
  8. மிஸ்டர் கழுகு : விரக்தியில் ஜெ. பதவியை குறிவைக்கும் அப்பீல் மனு ! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் எல்லாம் இப்போது டெல்லியை நோக்கித்தான் இருக்கிறது” என்றபடியே லேண்ட் ஆன கழுகார் மேலும் தொடர்ந்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சுழல் மீண்டும் தொடங்கிவிட்டதுதான் ஜெயலலிதாவின் பயத்துக்குக் காரணம். ஆச்சார்யா தாக்கல் செய்த மனு, முதல்வர் பதவியைக் குறி பார்ப்பதாக அமைந்திருக்கிறது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகள் பற்றி உமது நிருபர் எழுதி இருப்பார். அப்பீல் மனுவின் மையப்புள்ளியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை நான் சொல்கிறேன்!” ‘‘ம்!” ‘‘நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் இருக்கின்றன. ‘நீதிபதி குமாரசாமி, வழக்கின் …

  9. சென்னையில் வாடகை தாய்மாரை வீடுகளில் அடைத்து வைத்து சிகிச்சை! நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சூளைமேடு பகுதியில் ம…

  10. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்திலிருந்து எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற 17 தமிழர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாகப் அவர்கள் பயணித்த கப்பலிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நைல் நதியில் மிதந்தவாறு எகிப்து நாட்டைச் சுற்றி பார்க்க 'ஏ சாரா' எனும் சொகுசு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாட்களோடு கடந்த வாரம் அஸ்வான் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, லக்சர் நகரத்தை அடைந்தபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன். …

    • 0 replies
    • 332 views
  11. கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 16 பிப்ரவரி 2025 "புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக என்ன சொல்கிறது? கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் கூறுவது என்ன? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு…

  12. செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை! செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு…

  13. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி. "பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி. சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். "சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர். ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில …

  14. விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த 50 லட்சம் ரூபாய்யை அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கினார் மதிப்பிற்குரிய.அண்ணன்.திரு.#விஜய்_சேதுபதி அவர்கள்

  15. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது ப…

  16. Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. வேர்களை வெறுக்கும் விழுதுகள்7: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம் 21 டிசம்பர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:16 ஜிஎம்டி தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர். பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல, வயதான, சுயமாக வாழ இயலாத முதியவர்களை, தலைக்கூத்தல் மூலமோ, விஷ ஊசியின் மூலமோ கொல்வது என்பது வாழ்வின் இயல்பானதொரு சடங்கான நிகழ்ச…

  17. 69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்- அன்புமணி ராமதாசிடம் மத்திய மந்திரி உறுதி. தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், வெகுவிரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் ராமேசுவரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர், அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள ச…

    • 0 replies
    • 331 views
  18. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மர…

  19. நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியத…

  20. செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பவுஞ்சூர் வெட்கடாபுரம் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சட்டதை அறிந்து எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் வந்து தீப்பற்றிய காரை அணைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அவர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜு கூறுகையில், நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கார் எரிந்து கொண்டிருந்தது. பின்னர் …

    • 0 replies
    • 331 views
  21. அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆ…

  22. சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ஜனவரி 28ம் தேதி தமிழகத்தில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழகத்தில் முஸ்லீம்க…

  23. சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர், முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார். சென்னையில் 80 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்தமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமு…

  24. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால …

  25. “வெடிகுண்டு லாரி... அ.தி.மு.க கொடியுடன் கார்! குடவாசலில் என்ன நடந்தது?” #NewsChat 58 டு 60 வயது... அரசு ஆணை ரெடி? தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 6,800 டாஸ்மாக் கடைகள் மூலம் வருடத்துக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துவந்தது. அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டு தற்போது 2,600 கடைகள்தான் இயங்குகின்றன. இதுதவிர, இலவசப் பொருட்களுக்கு ஆகும் செலவுகள் தனிக்கதை. இதுஒருபுறமிருக்க... மறுபுறம், தற்போது அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் கணிசமானவர்கள் விரைவில் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளைச் செட்டில் செய்ய அரசிடம் பணம் இல்லை. அதனால், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 6…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.