Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிவாரண உதவி செய்பவர்கள் மீது தாக்குதலா?: தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு! சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும்,வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும் தமிழக அரசு 3 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருமழை பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(திங்கள்) வழக்குத் தொடர்ந்தார். …

  2. பஞ்சாப்பிற்கும் தமிழகத்திற்கும் வைக்கும் இரட்டை நிலைப்பாடு அந்தப் பிரிவினையை வளர்க்காதா? ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தற்போது சிறையில் இருக்கிறார்கள் ஏழு பேர். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இவர்களில், மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், அவர்களின் விடுதலை குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்று, மே மாதம் அவர் ஆளுநருக்கு தன்னுடைய விடுதலை குறித்துக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அவர் எழுதிய கடிதத்தில், 8 சீக்கிய பிரிவினைவா…

    • 2 replies
    • 727 views
  3. டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? - 68 சுவாரஸ்ய தகவல்கள் மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் 'தலைவி' திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய…

  4. முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன். முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது. அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக…

  5. ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…

  6. 65 அகதிகள் மாயம் - அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமா? தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து மாயமான 65 அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் முகாமிட்டு இந்திய உளவுப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துவாய்பட்டி, தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஆகிய மூன்று இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 65 இலங்கை அகதிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளா அல்லது தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ச…

  7. 19 நிமிடம் 30 வினாடிகளில் ஆமைக்கறி, உடும்புக்கறி வருகின்றது😆

  8. தமிழ்நாட்டில் ஆன்- லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகிவரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் ஆன் லைன் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஆன்-லைனில் மாணவர்கள் கல்வி கற்கும்போது ஆபாச இணையதளங்களும் குறுக்கிடுகின்றன. இதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது போன்ற இணையதளங்கள் குறுக்கிடாத வகையில் சட்டங்களை வகுக்…

  9. சென்னையில் நடந்த கொரிய இசைவிழா! கொரிய தொடர்கள் உலகின் பல்வேறு இடங்களில் பிரபலமாகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தான். இப்போதெல்லாம் எந்த கல்லூரி மனைவியிடம் கேட்டாலும் குறைந்தது பத்து தொடர்களை பார்த்ததாக கூறுகிறார்கள். அந்த தொடர்களின் பின்னால் ஒலிக்கப்படும் பாடல்கள் பெண்களை கவர்ந்திழுக்கின்றன. அதைப் பற்றிய தேடல்களில் k-pop குறித்த அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது. மேற்கத்திய இசையையும் அவர்களின் (கொரிய மக்களின்) இசையையும் ஒன்று சேர்த்து வழங்குவதே K-pop ஸ்டைலாகும். இதில் பல்வேறு நபர்கள் சேர்ந்து ஒரு குழுவை (பெண்கள் குழு, ஆண்கள் குழு) அமைக்கிறார்கள். இந்த பாடகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடிக் கொண்டே ஆடும் இக்குழுவினர், தங்களுக்கான ஆல்பங…

  10. வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக…

    • 5 replies
    • 1.4k views
  11. சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…

  12. 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …

  13. தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது மரக்காணம் கலவரம் குறித்து விஜயகாந்துடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மரக்காணம் கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். கலவரப் பிரச்சனையில் பாமகவிற்கு எதிராக இதர கட்சிகளை அணி சேர்க்க திருமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14328:vijayakanth-suddenly-grow-with&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 473 views
  14. Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…

  15. கவர்னர் மாளிகை முன்பு கூடுதல் பாதுகாப்பு சென்னை : கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் எனக்கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு: சென்னை-கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையான ‛ராஜ்பவன்' முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பு: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் சென்னை பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில், கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதாக தகவல…

  16. தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பருவமழை பொய்த்து போவதால், பாசன திட்டங்களை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. மழைநீரை சேமிக்கும் குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காததாலும்; நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்காததால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி விவசாய பணிகளுக்கான தொழிலாளர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு சென்றடையாத வேளாண் பல்கலை., தொழில்நுட்பங்கள், பெரும் சவாலாக உள்ளன. மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, தொழில்நுட்ப பிரச்ன…

  17. கலக்கம்...! கண்ணீர் அஞ்சலி விளம்பரம்: அ.தி.மு.க.,வினர் தொகுதி மக்களின் கருத்துக்கு எதிராக, இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அமைச்சர்களுக்கு எதிராக, கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் வெளியாவதால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர். வேலுார் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து வீடு வீடாகச் சென்று, அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான துண்டு பிரசுரத்தை, சிலர் கொடுத்து சென்றனர். அதில் கூறியிருப்பது: கண்ணீர் அஞ்சலி... திருமதி நிலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அர…

  18. சசிகலாவின் கைப்பொம்மை முதல்வரா?' உயிரை விடுவேன்' என்கிறார் கட்ஜு புதுடில்லி, : 'சிறைப் பறவை சசிகலாவின் கைப் பொம்மையாக உள்ள,இடைப்பாடி பழனி சாமியை, தமிழக முதல்வராக ஏற்க முடியாது; அதற்கு பதில், நான் உயிரை மாய்த்துக் கொள் வேன்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:சிறைப்பறவை சசிகலா வின் கைப்பொம்மை, இடைப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப் பட்டுள்ளார். இதைப் பார்த்து, தமிழக மக்கள், எதுவும் செய்யாமல் மவுனம் சாதிக்கின்றனர். சோழர், பாண்டியர், சேரர் உள்ளிட்ட மாப…

  19. சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு! ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுச…

  20. தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! மின்னம்பலம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று(ஜூன் 13) தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பா…

  21. அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார். போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். முதல்வராக ஆசைப்பட்ட அவர், பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் …

  22. கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்! நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக. அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் …

  23. ' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன்…

  24. வேலூரில் மது குடித்த 5 வயது பேரன், தாத்தா மரணம் - என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதிர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார். பிறகு பாட்டிலில் மீதமிருந்த …

  25. யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்! அதிக பணக்காரர்களும் மிக அதிக ஏழைகளும் வாழும் நாடாக இந்தியா மாறும். ராக்கெட் விட்டாலும் வல்லரசாகாது சுயமா ராக்கெட் விடாதவரை. எவனோ செய்த ராக்கெட்டை விடுவதில் என்ன பெருமை? cryogenic engine நம்மளால செய்ய முடியுமா? cryogenic technology -ம் காசு கொடுத்து வாங்கனும். சுயமா என்ன கண்டுபிடிச்சு இருக்கோம்? சொல்லுங்கள் நண்பர்களே! எப்படி இதே இந்தியர்கள் மேலை நாடுகளுக்கு வந்தால் பிராகாசிக்கிறார்கள்? அதுவும் இங்கு பிறக்கும் [இந்தியருக்கு பிறந்த] குழந்தைகள் நிறைய கண்டு பிடிப்பார்கள் வரும் காலங்களில். இளம் விஞ்ஞானிகளில் நிறைய நம்ம குழந்தைகள் இருக்கிறார்கள். நமது கலவி முறை மாறாத வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்--உருப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.