Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது. சுஜாதா என்றில்லை எந்த பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றி கவலைப்படாமல் இருந்து விடுவார்கள். நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்கு…

    • 10 replies
    • 784 views
  2. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது. வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் உடனுக்குடன் பதிலளித்த வைகோ, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில், என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று உறுதியாக பதிலளித்தார். மேலும் கேட்கப்பட்ட பல சூடான கேள்விகளும…

  3. வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்கலாம். சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேரா…

  4. பெரம்பலூர் அருகே உள்ள எசனையை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் அமுதா (8), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த அமுதா சிறுவாச்சூர் கோயில் திருவிழாவிற்காக தனது தாய்மாமன் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுவாச்சூர் கோயில் பகுதியில் கிடா வெட்டி பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் அதே ஊரைச்சேர்ந்த சோலைமுத்து (55). திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் போதையில் இருந்த சோலை முத்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை நைசாக கோயிலுக்கு வடக்கு புறமுள்ள ஏரியின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிரு…

    • 0 replies
    • 447 views
  5. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி. டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் இந…

  6. இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார். கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்க…

  7. திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திடீரென்று அறிவித்துள்ளார். மரக்காணம் கலவரத்தை அடுத்து திருமாவளவன் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகி அதிமுகவோடு கூட்டணி அமைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இக்கலவரத்தில் பாமகவுடன் திமுக சற்று நெருங்கிய தொடர்பினை மேற்கொண்டு வந்தது. மருத்துவமனையில் ராமதாசை நேரில் சென்று பார்த்து தங்களது தொடர்பினை திமுகவின் தீவிரமாக்கிக் கொண்டிருந்தனர். இதுபோன்ற சூழலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அன்புமணி ராமதாஸ் மிகத் தெளிவ…

  8. இசைஞானி இளையராஜா 70 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போதும் இன்றுதான் அவரது பிறந்த நாள் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். எனவே இன்று்ம் ராஜா புகழ் பாடலாம்... 1975-ல் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே, திரையிசைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர் இளையராஜா. தமிழ் சினிமா எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாகும் சினிமாக்களில் பரீட்சார்த்தமான பல இசை முயற்சிகளை மேற்கொண்டவர். Read more at: http://tamil.oneindia.in/movies/specials/2013/06/ilayarajaa-musician-mass-176467.html இசைப் பிரம்மா இளையராஜா பற்றிய சிறு குறிப்புகள் 1)எது நல்ல இசை என்று காலம் சொல்லும்.. நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?' என…

    • 2 replies
    • 2.8k views
  9. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைகிறது ; தா. பாண்டியன் வெளியேறுகிறார் ? ம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி எம்.பி.யாக இருப்பவர் டி.ராஜா. அவரது பதவிக்காலம் வரும் ஜுலை மாதத்தோடு முடிவடைகிறது. அந்த இடத்தில் புதியதாக யாரை நியமிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை டி.ராஜாவுக்கே மீண்டும் பதவி என்றது. அதற்கு தமிழக பிரிவின் செயலாளராக இருக்கும் தா. பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஒருவருக்கே பதவி கொடுக்கும் போக்கு சரியல்ல என்பது அவர் தரப்பு வாதம். இந்திய கம்யூனிஸ் கட்சியில் தற்போது எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிமுக ஆதரவில் ஒரு எம்.பி. சீட்டு கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான பேச்சு வார்…

  10. சென்னை: 90வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி்க்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, கருணாநிதியின் 90வது பிறந்தநாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட கருணாநிதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி. அங்கு தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் பெற்றுக் கொண்டு வருகிறார். முன்னதாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலை கருணாநி…

  11. தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் மறதி நோய்..: சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல். டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் எனும் மறதி நோய் உள்ளது. அவருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவர் சாதாரண நிலையில் இல்லை. அவரால் சரியாக பேசவோ செயல்படவோ முடியாது.. திடீரென எதிரில் இருப்பவரை தாக்கிவிடும் நிலையில் உள்ளார். அவரது அன்றாட வாழ்க்கையே பிறரது உதவியால் நடைபெற்று வருகிறது என்று அவரது வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநராக உள்ள தயாளு அம்மாளை சிபிஐ சாட்சிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. இதற்கான அவர் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆன…

  12. சென்னை: தமிழக மக்கள் தொகை எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணகெடுப்பு இன்று வெளியிடப்பட்டது அதன்படி , தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55.ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=15547

    • 11 replies
    • 13k views
  13. தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:- கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் உங்கள் துணைவியார், தயாளு அம்மாளை சாட்சியம் அளிக்க நேரில் வர விலக்கு அளிக்கக் கோரிய மனுவினை தள்ளுபடி செய்து, நேரில் வர வேண்டு மென்று சி.பி.ஐ. நீதி மன்றம் டெல்லியில் உத்தரவிட்டிருப்பதைப் பற்றி? பதில்:- பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிக்கு முன்னால் …

  14. நூறு நாள்' கூலி வேலையில் 'நாளைய டாக்டர்' காயத்ரி! Posted Date : 09:05 (30/05/2013)Last updated : 10:05 (30/05/2013) சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி அடைந்தவர்கள், அடுத்து என்னப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ச்சி அடையாதவர்கள் உடனடி மறு தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறுமைக்கோட்டின் விளிம்பில் வாழக்கூடிய ஒரு கிராமத்து ஏழை மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1,129 மதிப்பெண் பெற்று, 'மேல்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்களால் முடியாது' என்பதை உணர்ந்து, தன் தாயோடு 100 நாள் திட்டத்தின்கீழ் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருகிறார். அந்த ம…

    • 0 replies
    • 2.8k views
  15. ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும் தடைவிதிக்கப்படும். இந்நிலையில் 45 நாட்கள் தடை காலம் முடிந்து இன்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 800 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக நேற்று மீனவர் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் அமிதாபா நந்தி பேசியதாவது:- மீனவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீன்பிடிக்க செல…

    • 2 replies
    • 548 views
  16. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர். இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கை…

    • 0 replies
    • 459 views
  17. தமிழகம்- கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட தாமதித்து வந்தது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்ததால் கண்காணிப்பு குழு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்தி…

    • 0 replies
    • 318 views
  18. கனிமொழி எம்.பி.க்கு முஸ்லீம் அமைப்பு ஒன்றின் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. உங்களிடம்தான் நிறைய பணம் உள்ளதே எங்கள் அமைப்பை வலுப்படுத்துவதற்கு அதில் குறிப்பிட்ட தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது உயிருக்கு ஆபத்து என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எங்களது அமைப்பை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வலுப்படுத்த உள்ளோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறதை செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்…

    • 3 replies
    • 572 views
  19. தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா? ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், இதுவரை எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி வளர்ச்சி(?) பற்றி பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்ச…

  20. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலையாக இருக்கின்ற சூழ்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சுமத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மார்ச் 16 முதல் பெட்ரோல் விலையை குறைத்துக் கொண்டே வந்துள்ளதோடு மட்டுமல்லாமல், மாதா மாதம் உயர்த்தி வந்த டீசல் விலையையும் மார்ச் இறுதியிலிருந்து கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைத்த மத்திய அரசு, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் டீசல் விலையை இரண்டு முறையும், பெட்ர…

    • 0 replies
    • 421 views
  21. ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்த மலருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே நிறுவனத்தில் வேலை செய்த சேலத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆஷா தன் வலையில் மலரை சிக்க வைத்தார். பின்னர் அவளை சேலத்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஆஷாவுடன் தொடர்புடைய திருப்பூர் அங்கேரி பாளையம் கோகுலம் தெருவை சேர்ந்த பிரபு (31), சேலம் வலையப்பட்டி பெருமாள் பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரிடம் மலரை ஒப்படைத்துள்ளார். அவர்கள் திருச்சிக்கு மலரை அழைத்து வந்து கற்பழித்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து …

    • 0 replies
    • 496 views
  22. 30th May 2013 இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழகமும் கர்நாடகமும் காவிரி நீரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி நீர் பிரச்னையால் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பண பலம் காரணமாகவே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார். புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆறு மாதங்…

  23. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்…

    • 0 replies
    • 483 views
  24. நெல்லை மாவட்டம், கண்ணன்குளத்தை சேர்ந்தவர் சந்திரபால். நாகர் கோவிலில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது கியூ பிரிவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் இருந்து வந்த அவர் இன்று பணி ஓய்வு பெற இருந்தார். அவரை சஸ்பெண்ட் செய்ய உள்துறை செயலாளர் பரிந்துரையின் அடிப்படையில் காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்றிருந்த அவரிடம் இது தொடர்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகின்ற சந்திரபால் மீது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முகம்மது மசூது கொலைவழக்கு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்த…

    • 0 replies
    • 547 views
  25. 30th May 2013 புதுகோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறையில் இருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் பலர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோட்ட வேலைக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். ஆலங்குடி அருகே பணியாற்றிய அவர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், 43 பழங்குடியின மக்களை மீட்டனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.