Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்த பிறகு, நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், முதலில் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கோரிவருகின்றன. மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தி.மு.க. தயங்குகிறதா? கடந்த ஏப்ரல் மாதத்தில் அகில இந்திய சம…

  2. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 29 டிசம்பர் 2023 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சாதி தீண்டாமை நடைபெறுவதாகப் புகார் கிடைத்ததால், கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் பட்டியலின மக்களை செருப்பு அணிய வைத்தும், கோயிலுக்குள் கூட்டியும் சென்றுள்ளனர். என்ன நடக்கிறது கிராம…

  3. சென்னை: தியாகங்களால் வளர்ந்த திராவிட இயக்கத்தை எப்படிப்பட்ட புயல் வந்தாலும் சாய்க்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், " இந்த திருமணம் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நேரத்தில் எனது இதயத்தை நெகிழ வைக்கும் மலரும் நினைவுகள் என் நெஞ்சு சுவற்றில் வந்து மோதுகின்றன. 44 வருடங்களுக்கு முன்பு என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக, எனது கிராமமான கலிங்கபட்டிக்கு எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்தி, விருந்துண்டு, ஓய்வெடுத்து விடைப்பெற்று சென்றதை நினைத்து பார்க்கிறேன். அதே போல் 1978–ம…

  4. 05 MAR, 2024 | 11:50 AM புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வர…

  5. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநரின் அங்கீகாரம் – நளினி மனு தாக்கல் 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையின்-தீர்மானத்/

  6. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவியுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட…

  7. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்? 'செம்பரம்பாக்கம் தண்ணீரை தாறுமாறாகத் திறந்துவிட்டதுதான், பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மூழ்கிபோகக் காரணம். இது அரசாங்கத்தின் தோல்வி' என்று சொல்லி தி.மு.க சார்பில் ஜனவரி 5-ம் தேதி மாபெரும் போராட்டத்துக்கு தீவிரமாகிவிட்டார் தமிழினத் தலைவர் கருணாநிதி. இவரை முந்திக்கொண்டு கறுப்பு எம்.ஜி.ஆர். போராட்டங்களை நடத்தி முடித்தேவிட்டார். இதேபோல... சிவப்பு காந்தி, பச்சை மண்டேலா, மஞ்சள் சே குவேரா, காவி படேல் என்று மற்ற மற்ற கட்சி தலைகளும் தங்களின் சக்திக்கேற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு, களத்தில் வீராவேசம் காட்டி வருகிறார்கள். ஆளுங்கட்சிக்கு வேறு வழியே இல்லை... இவர்களுக்கு எதிராக கண்டனக்…

  8. 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு… சிக்கிய செவிலியர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர் பகுதியில், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பின் போதே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது. இதன்போது குறித்த செவிலியருடன் தொடர்பை பேணி வந்த மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427438

  9. மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு! தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, ‘விஜயகாந்த் கூட்டணி’ ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி. தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால…

  10. மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வைகோ தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் தன் கருத்து குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். I வைகோவின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தே.மு.தி.கவின் கூட்டணி குறித்து அதிருப்தி வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளர் சந்திரகுமார் குறித்து கண்டனங்களை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சந்திரகுமார் இதுபோல செய்வதற்குப் பதிலாக, வேறு தொழிலைச் செய்யலாம் என்று பாலியல் தொழிலைக…

  11. நூலிழையில் தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜு.. புதிய ரவுண்டானா இடிந்து வாய்க்காலில் விழுந்த அதிமுகவினர் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடந்தத…

  12. தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தே…

  13. டென்மார்க்கை போன்று ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டுவர வேண்டும்: சீமான் விருப்பம் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் | கோப்புப் படம்: எல்.பாலச்சந்தர் டென்மார்க்கைப்போல் ஊழல் அற்ற நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபா ளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையத்தில் அக்கட்சி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து சீமான் பேசியதாவது: "சிறந்து விளங்கும் சமூகம் பின் தங்கியதற்கு காரணம் நீண்ட காலத் திட்டங்கள் எதுவும் இல்ல…

  14. தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப் Dec 19, 2025 - 08:13 PM இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (19) சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார். இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திர…

  15. சுவாதி கொலை வழக்கில் தொலைக்காட்சியில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம் கேட்டதாக அவரது தந்தை பொலிஸார் விசாரணையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி, நேற்று சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்த தனிப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு குழுவினர் தொடர்ந்து நெல்லையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன், தங்கை மதுபாலா …

    • 0 replies
    • 598 views
  16. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. பதிவு: மே 27, 2020 12:06 PM சென்னை, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத…

  17. பிரபல செருப்பு நிறுவனத்தின் செருப்பில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி புதுரோட்டை சேர்ந்தவர் ஏ.தெ.சுப்பையன். இவர் கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என கூறப்படுகிறது.இவர் அதே பகுதியை சேர்ந்த செருப்பு கடையில் செருப்பு ஒன்று வாங்க சென்றுள்ளார். கேரளாவில் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பிரபல செருப்பு நிறுவனமான வி.கே.சி நிறுவனத்தின் செருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.செருப்பை வாங்கி அதன் உள்பகுதியை கவனித்த போது, அதில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் ஒரு ஆங்கில கவிதை ஒன்று இடம் பெற்றிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், செருப்பை வாங்கிய கடையில் தி…

  18. ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு சென்னை: அதிமுகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் உள்ளதாகவும் அவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடையும் எனவும் சூசகமாக கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேள்வி: அ.தி.மு.க.வில் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் ஒரு இறுக்கமான சூழல் இருப்பதாகச் சொல்கிறார்களே? பதில்: கட்சிக்காக உழைச்சவங்களை ஓரங்கட்டிவிட்டு, "பேக்கேஜ் பேசிஸ்…

  19. மக்கள் கவிஞர் இன்குலாப் மரணம் 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் இன்று உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை. http://www.vikatan.com/news/tamilnadu/73898-legendary-tamil-poet-inqulab-passes-away.art

  20. 'ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' -கார்டன் கொந்தளிப்பின் பின்னணி ' பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் ஆவார்' என மன்னார்குடி உறவுகள் பேசி வந்தாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 'முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா என்பதைக் காட்டிலும் அவரது மௌனம்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அண்ணா தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதேநேரம், ' கட்சிக்கும் ஆட்சிக்கும் சின்னம்மாவே தலைமை தாங்க வேண்டும்' என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று மக்கள…

  21. ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் : “ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வ…

  22. ஜெ., ஆதரவு அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏன்? ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் விமர்சனம் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ.,வின் நம்…

  23. காவல்துறை சீருடை போதையின் அடையாளமா? 5ec6b69cb2850d593812b98ed52fae7d

    • 0 replies
    • 452 views
  24. எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். அப்போது தீபாவின் ஆதரவாளருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது. சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி இருந்த சசிகலா அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. தொகுதிக்குச் சென்ற சசிகலா அணி எம்.எல்.ஏ.களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் …

  25. முதுமலையில் பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி; மருத்துவப் பலன்கள் நிறைந்த அரிசியைச் சேகரிக்கும் பழங்குடி மக்கள் முதுமலை முதுமலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவுக்கு ரூ.800 வரை விற்பதால் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அரிசியைச் சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிகளில் மூங்கில் செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்குள்ள மூங்கில் செடிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு முக்கிய உணவாக இருந்து வருகின்றன. அதேபோல உள்ளூர் பழங்குடியின மக்கள் மூங்கிலை உணவாகவும், வீடுகளைக் கட்டுவதற்கும் பயன்படு…

    • 2 replies
    • 556 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.