Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ம…

  2. சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு இணையம் வழியாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பி.வி.சிந்து, ` பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.…

  3. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணற்றில் திண்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக உயிரிழந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யபட்டுள்ளார். இவர்களில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, அவரது வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…

  4. கோவையைப் போல கரூரிலும் ஒரு பிளஸ்டூ மாணவி மரணம்: பாலியல் தொல்லை என்று கூறும் கடிதம் 7 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "கடும் விரக்தி காரணமாகவே இப்படியொரு முடிவை மாணவி எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது" என்கின்றனர் காவல்துறையினர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், மாலை ஆறு மணியளவில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக வெங்கமேடு கா…

  5. தமிழகத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பேர்ணாம்பட்டு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேல…

  6. போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருட்டு குற்றச்சாட்டில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்டவிதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருவர் கைது செய்யப்படும்போது எப்படி நடத்தப்பட வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேரும் ஞாய…

  7. ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சூர்யாவுக்கு பாதுகாப்பு! நடிகர் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதன்மூலம் நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களும், தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பொலிஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக த…

  8. சென்னை :தமிழக மக்கள், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அ.தி.மு.க., ஆட்சியில் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இடம் பெற்றிருந்தன. மேலும், 2,500 ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக, 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின…

  9. சஞ்சீப் பானர்ஜி: "ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்" - ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார். கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அதே சமயம், அவர்…

  10. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், "இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 17, 18…

  11. கோயில்களில் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு சீமான் கண்டனம் இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் ஐந்தாம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சில கோயில்களில் மின்னணு திரை மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதில் பா.ஜ.கவின்மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் …

  12. திமிங்கல வாந்தி: ரூ. 2 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பதுக்கியதாக நாகை மீனவர்கள் இருவர் கைது 18 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அம்பர் கிரிஸ் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்கா…

  13. அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போரில் உடல் தகுதியை இழந்த…

  14. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்ததாகக் கூறி கோவையில் போராட்டம்: ஆசிரியர் கைதுக்குப் பிறகும் தொடர்கிறது 55 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போராட்டம் நடத்தும் மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள். கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, உடலை வாங்காமல் அவரது பெற்றோரும், மற்றவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி முதல்வரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்கிறார்கள் போராட்டம் நடத்தும் உறவினர்கள். கோவை மாவட்டம், …

  15. மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை மீட்ட அக்காவுக்கு குவியும் பாராட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவே…

  16. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமா வலுப்பெற்று இன்று மாலை கரையைக் கடக்கவிருப்பதால், பலத்த காற்று வீசிவருகிறது. இதனால், சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் பலத்த காற்று வீசிவருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்களின் வருகை இன்று மாலை 6 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 முதல் மாலை 6 மணி வரை விமானங்களின் வருகையை நிறுத்திவைத்துள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத…

  17. வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு! தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அணைக்கு வரும் உபரிநீரான ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் ஆறு வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2021/1249037

  18. ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். "முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்ப கிடைச்சிருக்கு" எனக் கண்கலங்குகிறார், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி அஸ்வினி. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீத…

  19. கலைஞருக்கு நினைவில்லம்: அரசாணை! மின்னம்பலம்2021-11-09 சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை நேற்று (நவம்பர் 😎 பிறப்பிக்கப்பட்டுள்ளது.2018 ஆகஸ்டு 7 ஆம் தேதி கலைஞர் காலமானார். அப்போது அவரது இறுதி விருப்பமான தனது உடல் அண்ணா உடலின் அருகே புதைக்கப்பட வேண்டும் என்பதை வலிய்றுத்தி அப்போதைய திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உருக்கமாக கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தார். பின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதில் வென்று கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழ் வ…

  20. முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்! மின்னம்பலம்2021-11-08 தமிழ்நாடு அரசின் முக்கியமான 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நவம்பர் 6ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வழக்கமாகவே ஆட்சி மாறியதும் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்படுவதும் தொடர்கதைதான். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் வரை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தீவிரமாக இருந்ததன் காரணமாக வழக்கமான மாற்றல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். …

  21. நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் ஏ எம் சுதாகர் பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந…

  22. மழையால் தத்தளிக்கும் தமிழ்நாடு: மூழ்கிய பயிர்கள் முதல் கரை புரண்டோடும் வைகை வரை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைகை கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து 569 …

  23. சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா? படக்குறிப்பு, மழை வெள்ளம் தேங்கியதைப் பார்வையிடும் அமைச்சர் சேகர்பாபு. வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக மழைபெய்துவருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவில் துவங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழ…

  24. தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால், மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவ…

  25. ‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லையே?’’ ‘‘வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. சில இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றும், ஆளும் தரப்பு வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை அதிகமாகப் பிடித்திருக்கிறோம்.’’ ‘‘முடிவுகளை மாற்றி அறிவித்தார்கள் எனில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கலாமே?’’ ‘‘காவல்துறை எங்கள் புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. மாவட்ட ஆட்சியரும் சரி, மாநில தேர்தல் ஆணையமும் சரி, எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.’’ ‘‘ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.