Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்ளூரில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இ…

  2. சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த மாதம் 17 திகதி முதல் 31 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கு யுனைடெட் ஏயார்லைன்ஸ் நிறுவனம் 18 விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லி – நெவார்க் இடையே தினசரி சேவையும் டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே வாரம…

  3. பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை 67 Views இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழன் அன…

  4. தமிழகம் டாப், கேரளா பூஜ்யம்... கோவிட் தடுப்பூசிகள் வீணாவதை கேரளா எப்படி தடுக்கிறது? Guest Contributor கொரோனா தடுப்பூசி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயன்களை தெரியப்படுத்துவதன் மூலமும், தடுப்பூசி மேலாண்மை குறித்த…

  5. ஏழு மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு! சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுவரை 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று மட்டும் 50 இலட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239096

  6. இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை தவிர சிங்கம், புலி உள்ளிட்ட சில விலங்குகளுக்கும் கடந்த காலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மையம் ஒன்று விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியானது டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாவை அழிக்கும் திறன் படைத்த நோயெதிர்ப்பு ஆ…

  7. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை WWW.JAGATGURURAMPALJI.ORG தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ராம்பாலுக்கு 2014ஆம் ஆண்டு நான்கு பெண்களையும் 18 மாத குழந்தையும் கொன்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹரியானா நீதிமன்றம் ஒன்று ராம்பால் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவர் மீது மற்றொரு கொலை குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் வரும் புதன்கிழமை அன்று தீர்ப்பு வரவுள்ளது. ராம்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இடையே ஏற்பட்ட …

  8. 27 OCT, 2023 | 12:55 PM அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22 ஆம் திகதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வழங்கினர். நீண்டகால சட்ட போராட்டத்துக்குப்பின் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராமர் கோயில் கருவறையில் அடுத்தாண்டு ஜனவரி 22 ஆம் திகதி ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்ய, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர் முடிவு செய்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அவரது இல்…

  9. இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புப் படையினைச் சேர்ந்த 40 வீரர்கள் போராளுகளின் தாக்குதலுல் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்த்தானைக் குற்ற்ஞ்சாட்டி வந்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்லிவந்தது. அதன் அடிப்படையில் இன்று போராளிகளின் முகாம்கள் என்று தாம் கருதும் பகுதிகள் மீது குண்டுவீச இந்திய விமானப்படை பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் நுளைந்தபோது, எதிர்பார்த்திருந்த பாக்கிஸ்த்தான் விமானப்படை எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திய விமானங்கள் வீசச் சென்ற குண்டுகளை வெறும் நிலத்தில் வீசிவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இந்திய எல்லைக்குள் ஓடி வந்திருக்கின்றன.

  10. பாகிஸ்தான் தனது பொருளாதார தடுமாற்றங்களைச் சீர்த்திருத்த பலவகைகளிலும் போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுக்குப் புதிய பின்னடைவாக கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. கராச்சி நகரின் அரபிக்கடல் பகுதியில் எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை காலம் முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடத்தில் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான எண்ணெய் அங்கு உள்ளது அதனை எடுக்கலாம் என்று தொடங்கிய திட்டம் தோல்வியடைந்தது பாகிஸ்தானுக்கு பெர…

  11. தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நடைபெற்ற காரசார விவாதத்திற்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் இந்த சட்டத்திருத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களவையில் 278 பேர் ஆதரவு அளித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டத்திருத்தம் அதிகார முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்ற குற்றசாட்டை முன் வைத்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக ஆயுதங்களை க…

    • 0 replies
    • 303 views
  12. டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்! வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்…

  13. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட, ஏப்ரலில் அடிக்கல் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஏப்ரலில் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இராமஜென்ம பூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறுகையில், “இராமர் கோயிலுக்கான தூண்கள் செதுக்கு…

  14. பொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா பொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா Published by R. Kalaichelvan on 2019-12-06 15:57:31 (நா.தனுஜா) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிறைச்சாலைக் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் அடங்கிய …

    • 0 replies
    • 209 views
  15. நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரித்து தீர்ப்பை வழங்கியது. இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் தாங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது . இதைக் கேட்டு நிர்பயாவின்…

  16. பரணி தரன் பிபிசி தமிழ் Delhi Results ஆம் ஆத்மி -62 பாஜக-07 Cong: 0 யார் இந்த கேஜ்ரிவால்? ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகி…

  17. பட மூலாதாரம்,UGC 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் …

  18. புதுடில்லி: இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், பிளாஸ்மா சிகிச்சை முறையையும் மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒருவர் 400 மி.லி பிளாஸ…

  19. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை! கொரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிட…

  20. முக்கிய ஆயுதக் கொள்வனவு: பெரும் பலம்பெறும் இந்தியக் கடற்படை! போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோமீற்றர் வரை சென்று இலக்கைத் தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ஆயுதக் கொள்வனவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஆயுதமாகக் கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பல, ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்க் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், கடற்படைக்காக விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுவரும் போர்க் கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 கள…

  21. இந்தியாவில் வேகமாக பரவிவந்த டெல்டா வைரஸ் புதிய உருமாற்றம் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், தற்போது டெல்டா-பிளஸ் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா, தனது ருவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, “டெல்டா வகை வைரஸில் இருந்து இந்த புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது. எனினும் இந்தியாவில், இந்த டெல்டா-பிளஸ் வகை வைரஸ் அதிக அளவில் பரவவில்லை. ஆகையினால் தற்போது இதனால் ஆபதில்லை. இதேவேளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளிலும் இந்த வகை உருமாற்றம்…

  22. சுவிஸ் வங்கியில் உள்ள... இந்தியர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் உள்ளடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்வேறு சொத்துக்கள், வரி ஏய்ப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ath…

  23. ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு! ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக 11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து …

  24. நாளிதழ்களில் இன்று: 'காதலை மறுக்கும் பெண்களை கடத்தி வருவேன்' என பேசிய பாஜக எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்று வெள்ளிக்கிழமை முக்கிய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். தினத்தந்தி - சர்ச்சையில் சிக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionபாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ராம் கடம் உ…

  25. ‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியத்தால் எழுந்துள்ள சர்ச்சை இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ” பிரிக்கப்படாத இந்தியா”-வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தி வௌியிட்டுள்ளன. இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் “பிரிக்கப்படாத இந்தியாவை” காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்திய…

    • 8 replies
    • 846 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.