தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
980 topics in this forum
-
கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம். கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத…
-
- 4 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப் Future Publishing / getty images கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது. கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது. …
-
- 0 replies
- 490 views
-
-
இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் ஹேக்கிங்குகளைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பது தான். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளி…
-
- 0 replies
- 772 views
-
-
உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.
-
- 3 replies
- 982 views
-
-
வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்… கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு தினம் தோறும் நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோ…
-
- 0 replies
- 783 views
-
-
கொரோனாவின் போர்வையில் தனி நபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்.!! கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய் தொற்று குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரமே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இலங்கையிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களா…
-
- 0 replies
- 510 views
-
-
கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…
-
- 1 reply
- 936 views
-
-
கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அ…
-
- 0 replies
- 453 views
-
-
WHO - Tiktok தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக…
-
- 2 replies
- 949 views
-
-
நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் க…
-
- 0 replies
- 457 views
-
-
Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம் Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்... 1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா? ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) …
-
- 0 replies
- 521 views
-
-
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…
-
- 0 replies
- 491 views
-
-
கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍
-
- 1 reply
- 560 views
-
-
கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் தனக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும், அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் உலகநாடுகளுக்கு பயணிக்கும் பொழுது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார். Happy 15th Birthday @GoogleMaps! Reflecting today on some of the ways it’s been helpful to me, from getting around more easily to finding a good veggie burrito wherever I am:) Thanks to the support of our users, Maps keeps getting more he…
-
- 0 replies
- 458 views
-
-
மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…
-
- 0 replies
- 469 views
-
-
நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதி குறித்தும், எப்படி இதை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தற்போது காணலாம். புதிய வசதியின் அம்சங்கள்: பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேர பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்ப…
-
- 0 replies
- 663 views
-
-
550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள் டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் …
-
- 0 replies
- 747 views
-
-
மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 680 views
-
-
தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம். Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம். மனிதன் டு மெஷின்: சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது. ரோபோக்கள் இல்லை: Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் ம…
-
- 0 replies
- 361 views
-
-
பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் அடையாளங்களைச் சோதனை செய்யும் செக்கிங் பாய்ன்ட்களில் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 'Digi Yatra' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை 'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம். பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், செக் பாய்ன்ட்களை விரைவாகக் கடக்கவும், அதே நேரம் பாதுகாப்பு அம்சங்களில் எந்தத் தவறும் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், முதலில் ஆன்லைனில் Digi Yat…
-
- 0 replies
- 457 views
-
-
இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 …
-
- 18 replies
- 2.1k views
-
-
ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…
-
- 1 reply
- 688 views
-
-
அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் அலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன. இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது. எனினு…
-
- 1 reply
- 503 views
-
-
5G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 1 Tam Sivathasan B.Eng. (Hons) இன்ரெர்நெட், செல் ஃபோன், கணனி, செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்று வரும்போது கடந்த சில வருடங்களில் 5G என்ற சொற்பதம் அதிகம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இங்கு G எனப்படுவது தலைமுறை (generation). 1990களில் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபோது இது 1G எனப் பெயரிடப்படாவிட்டாலும் அதில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களின் படிகளின்படி நாம் இப்போது 5G க்குள் செல்லவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியான கம்பிகள் இல்லாமல் காற்றில் செய்திகளை அனுப்பும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்ப விளக்கம் இங்கே தரப்படுகிறது. ‘கூப்பிடு தூரம்’ ஒருவர் பேசும்போத…
-
- 3 replies
- 1k views
-
-
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…
-
- 1 reply
- 799 views
-