Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. ஏன்... மூக்கில், உள்ள முடியை அகற்றக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக இருக்கிறது. அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம். சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது. அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக…

  2. கண்களுக்கான ஒரு பயிற்சி 20 - 20 - 20 Step I :- கண்ணியில் வேலை ஆற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கு அப்புறமும் கண்ணணித்திரையில் இருந்து கண்களை எடுத்து ஆகக்குறைந்தது இருபது அடி தூரத்தி அமைந்துள்ள ஏதாவது ஒரு பொருளை பாருங்கள்..இது உங்கள் கண்களின் குவியத்தூரத்தை மாற்றுகிறது..இது களைப்படைந்த கண்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று... Step II :- கண்களை ஈரலிப்பாக்குவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக இருபது தடவை கண்களை மூடிமூடி திறவுங்கள்(கண்ணடியுங்கள். அதற்காக பக்கத்து மேசையில் இருக்கும் பெண்ணைபார்த்து கண்ணடித்து களபரம் ஆனால் அதற்கு நான் பொறுப்பல..நிழலி அண்ணா இதைப்படித்தால் அடைப்புக்குள் உள்ளதை கவனத்தில் எடுக்கவும். .) Step III :- முழு உடலுக்குமான ரத்த சுற்றோட்டத…

  3. டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள். (முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவை நான் ஆரம்பித்த டெல்ரா தொடரில் இருந்து தனியாக இணைக்கிறேன். அவசியமெனின் அந்தத் தொடரோடு நிர்வாகம் இணைத்து விடலாம்!) உலகின் பிரதானமான கோவிட் 19 தோற்றுவிக்கும் வைரசாக டெல்ரா வகை வைரஸ் உருவாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் சிலவற்றில், முகக் கவசம் அணியும் அவசியம், மூடிய இடங்களில் ஒன்று கூடும் ஆட்களின் எண்ணிக்கை மீதான கட்டுப் பாடு என்பவற்றை மீள அமல் படுத்தும் தேவை ஆகியவை டெல்ரா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கின்றன. இது வரையில் டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவும் சக்தி கொண்டது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தாலும், அப்பரவலின் உயிரியல் ரீதியான பின்னணி சரியாக இனங்காணப் பட்டிருக்கவில்லை.…

    • 0 replies
    • 1k views
  4. காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா? வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளா…

  5. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது. ‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம். …

  6. கனடா- ஒன்ராறியோ குடும்பம் ஒன்று ஒரு இரண்டாவது கல்லீரல் இரத்த தானம் செய்பவரை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இந்த குடும்பம் ஒரு இதயத்தை நொருக்கும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளின் தந்தை சாத்தியமான நிலையில் இருக்கின்றார் ஆனால் அவரால் இரட்டையர்களில் ஒருவருக்கு தேவையான பகுதியை மட்டுமே வழங்க முடியும். மைக்கேல் வாக்னரின் 3-வயது தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான Binh, Phuoc ஆகிய இரு குழந்தைகளுக்கும் ஒர மரபணு குறைபாடு உள்ளது. இந்நோய் இவர்களது கல்லீரல் செயலிழக்கச் செய்யும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யாவிடில் இரு பெண்களும் இறந்து விடுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரண்டு பிள்ளைகளில் ஒருவருக்குத்தான் தனது கல்லீரல் பொருத்த முடியும் என்ற நிலையில்…

  7. சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்…

    • 0 replies
    • 399 views
  8. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் பேருக்குப் புதிதாக மாரடைப்பு ஏற்படுகிறது. அவர்களில் 10% பேர் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அடுத்த 10% பேர் 12 மணி நேரம் கழித்து வருகின்றனர். மீதிப் பேர் சிகிச்சைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமாகிறது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் பொன்னான நேரம் (Golden hour). அந்த நேரத்துக்குள் அவருக்குத் தேவையான முக்கிய சிகிச்சைகள் கிடைத்துவிட்டால், பிழைத்துக் கொள்வார். தவற விட்டால், மரணம் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இந்தியச் சூழலில் மாரடைப்பு வந்த ஒருவர் ஆட்டோ, பஸ், கார் போன்ற வாகனங்…

    • 0 replies
    • 359 views
  9. புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ ஒவ்வொரு செல்லிலும் புற்றுநோய் பரவுவதை துல்லியமாக விடியோவில் படம் பிடித்துள்ளனர் ஜப்பான் குழுவினர். இந்த வீடியோவில், இயல்பான உடல் திசுக்கள் பச்சை நிறமாகவும் புற்றுநோய் திசுக்கள் அடர் சிவப்பு நிறமாகவும் காட்டப்பட்டுள்ளது. அந்த ஆபத்தான முறையை விளக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும் என டோக்கியோ பல்கலைக்கழகத்தின் குழு மற்றும் ரிகென் க்வாண்டிடேடிவ் உயிரியல் மையத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். எலியின் மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உடல் முழுவதும் புற்றுநோய் பரவும் ஆபத்தான நிலையை `மெடாசிஸ…

  10. உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன், அழகு ச…

  11. நின்றுகொண்டே சாப்பிட்டால்... By DEVIKA 13 NOV, 2022 | 11:59 AM நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசை­யின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பி­டும்­போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்­தம் மேல் நோக்கி செல்வ­தற்கு சிரமப்படும். இரத்தத்தை மேல்­நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்­டும் ஹோர்மோனான கார்டி­சாலின் அளவை அதிகப்படுத்தும். தொடர்…

  12. நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு: [Friday 2016-07-08 07:00] நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற…

    • 0 replies
    • 377 views
  13. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. 9ஆம் பாகம் இது.) பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் இதுவரை எங்காவது படித்து யாராவது சொல்லிக் கேட்டு இருக்க வாய்ப்புண்டு. பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்…

  14. மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர்…

  15. உடல்நலம், மருத்துவம்: நீண்ட நாட்களாக பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்கிறீர்களா? ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை பிலிப்பா ராக்ஸ்பி சுகாதார செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பல மாதங்களாக தொடர்ந்து, இதை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி ம…

  16. உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை கட்டுரை தகவல் எழுதியவர்,மேத்யூ ஹில் பதவி,சுகாதார செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ ஸ்டெம் செல் சிகிச்சை தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார் குழந்தை பிறக்கும்போது இருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். …

  17. உணவே மருந்து! * நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். * ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். * பூண்டு சாப்பிட்டீர்களெ…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மே 2025, 04:42 GMT உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், 'நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க' என நீங்கள் கேட்டால், ஆம் போதாது. நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது பட மூலாதாரம், GETTY IMAGES சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல…

  19. அலர்ஜி என்றால் 'ஒவ்வாமை' என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக `இம்யூன் சிஸ்டம்� என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல், இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு …

  20. இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவா…

  21. அடிக்கடி எச்சில் துப்புபவரா? * பான், குட்கா விபரீதம் உஷார் * “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’ * “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ * “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’ இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க…

  22. பிஸ்கட் பிடிக்கிறதா? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்... 'ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு. ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது. இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ... ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி. பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தால…

  23. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி. ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது. அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின…

  24. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனைய…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லி ஜோன்ஸ், லாரா ஃபாஸ்டர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும். புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.