நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள் ( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம். ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் …
-
- 0 replies
- 938 views
-
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
குங்குமப்பூ மகத்துவம் சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:- 1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். 2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். 3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். 4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை …
-
- 20 replies
- 6.7k views
-
-
மகளிர் உடல்நலமும் ஹோமியோ மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோ…
-
- 0 replies
- 2.9k views
-
-
நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள் முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன…
-
- 13 replies
- 8.2k views
-
-
பெண்களும், மன அழுத்தமும்................ Women, Tension, tamil, Relax ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் …
-
- 35 replies
- 10k views
-
-
நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும் இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 3.4k views
-
-
மூட்டுவலி (Arthritis) _ ஹெச் தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போத
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால்…
-
- 43 replies
- 8k views
-
-
பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா? உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் க…
-
- 8 replies
- 2.4k views
-
-
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…
-
- 10 replies
- 2.8k views
-
-
உடலுக்கு உகந்த பாகற்காய்! திங்கள், 30 ஜூன் 2008( 12:37 IST ) பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்…
-
- 39 replies
- 6.6k views
-
-
கருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. source: http://kuruvikal.blogspot.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செய்தி ஆதாரம்: http://kuruvikal.blogspot.com/
-
- 9 replies
- 2.9k views
-
-
முடி உதிர்வதால் தலையில் வழுக்கை தோன்றுவது என்பது ஆண்களில் நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 40% ஆண்களில் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு செயற்கையான காரணங்களும் உண்டு மரபணு சார்ந்த காரணங்களும் உண்டு. செயற்கைக் காரணங்களில் கதிரியக்க சிகிச்சை அளித்தல் (radiotherapy) அல்லது எரிதலுக்கு இலக்காதல் என்பனவும் முடி உதிர்வைத் தூண்டுகின்றன. இவ்வாறு தோன்றும் வழுக்கைக்கு தீர்வாக இன்று நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை என்பது, வழுக்கை உள்ள இடத்தில் பிறிதொரு இடத்தில் இருந்து சத்திர சிகிச்சை முறைகளின் கீழ் பத்திரமாக அகற்றிய மயிர்களை நாட்டுதல் என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இரு…
-
- 14 replies
- 2.7k views
-
-
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! வெள்ளிக்கிழமை, மே 9, 2008 சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியா…
-
- 13 replies
- 3.1k views
-
-
வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...? நன்றாக பல் துலக்காததும், அடிக்கடி காபி, டீ என எதையாவது குடித்துக் கொண்டும், தின்று கொண்டும் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் இதற்கு வாய்ப்பிருக்கிறது. வாய் துர்நாற்றம் காரணமாக, பிறரிடம் அருகில் சென்று பேசக் கூட தயக்கம் காட்டுகிறோம். வாய்நாற்றத்தை குறைப்பது எப்படி ? வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடித்து வர வேண்டும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்தும். மேலும் எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து அதில் தினமும் வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். முடிந்தவரை…
-
- 16 replies
- 9.1k views
-
-
ஹாய் நலமா? [06 - May - 2008] [Font Size - A - A - A] ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா? `நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன். `ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை' என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்' எண்டு ஈ.சி.ஜி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கையிலேயே இருக்கு மருந்து! - ஆர்.கே.தெரசா 1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும். 2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம். 3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும். 4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும். 5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியு…
-
- 11 replies
- 2.6k views
-
-
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் …
-
- 2 replies
- 1.7k views
-
-
தலை முடியுதிர்வு தலை முடியுதிர்வு பெரும்பாலான ஆண், பெண்களிடம் இருந்து தலைமுடி உதிரல் பற்றியே அதிகமான கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. தலை முடி உதிர்தலும் வழுக்கை விழுதலும் வேறுபாடானவை. முடி உதிரும் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றமை ஒரு பிரச்சினை தான். இங்கு என்ன நடக்கின்றது என்றால் காலம் செல்லச் செல்ல தலைமயிர் மெல்லியதாவதோடு மயிர்க்கணுக்கள் காலப்போக்கில் சிறிதாகின்றன. இதனால் புதிய மயிர் வளர்வதற்கான வாய்ப்பு குறைவதோடு மயிர்க்கணுக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குன்றி ஒட்டுமொத்தமாக மயிர் ஐதாகி தொடர்ந்து அது உதிர்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனவழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்கம், சாப்பாட்டில் விருப்பமின்மை, தைரொயிட் குறைபாடு மற்றும் ஓமோன்களில் மாற்றங…
-
- 0 replies
- 3.5k views
-
-
தோல் சம்மந்தமான > முகப்பரு (அக்னி) முகப்பரு (அக்னி).. முகப்பரு (அக்னி): வழகைமைக்கு மாறான தோலில் ஏற்படும் பரு, முகப்பரு எனப்படும். தோல் அழற்சியானது முகப்பருக்களாக, கறுப்பு அல்லது வெள்ளை முனைகளைக் கொண்ட தோல் முனைப்புக்களால் அறியப்பட்டுள்ளது. இது பன்னிரண்டு தொடக்கம் நாற்பத்து நான்கு வயதிற்கு இடைப்பட்ட, இருபாலினருக்கும் ஏற்ப்படக்கூடும். முகத்தில் தோன்றும் பருக்களின் வடுக்கள் அழகைக் கெடுப்பதோடு, அழகற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலையை எட்டுவதால், ஏற்படும் மன அழுத்தம், ஒருவர் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படும் நிலை ஏற்ப்படுகிள்றது. பூப்பெய்தல் காலத்தில்தான் பெண்களுக்கு முகப்பரு தொடங்குகின்றது. ஆண்களுக்கு, அன்ரஜென் எனப்படும் ஆண் பாலுக்குரிய ஓர்மோன் இதேகால…
-
- 7 replies
- 4.2k views
-
-
தீய கொலஸ்ரோல் டெச்ட்தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போது…
-
- 0 replies
- 2.7k views
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
எய்ட்ஸுக்கே உதவியா"? [1] அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு முத்தமிழ்ல ஒரு நூறு இழையில அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... ! நானும் ஒரு சில இழைகளில் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும்[!!##**] படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்! 'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?' 'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்! 'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வரல்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த இஸ்லாமிய இழை திசை திரும்பி ஹோமோஸெக்ஷுவாலிடி.. ஓ…
-
- 2 replies
- 1.8k views
-