நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும். செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும். ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும். செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 5…
-
- 7 replies
- 3.1k views
-
-
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்! தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மரு…
-
- 24 replies
- 5k views
-
-
தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல; மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை. இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்…
-
- 4 replies
- 8.3k views
-
-
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். இந்த முரடான …
-
- 14 replies
- 6.8k views
-
-
வயிற்றுவலி வந்தவுடன் சாப்பிட்டால் வலி உடனே நிற்கிறது என்ற விஷயம் சிந்தனைக்குரியது. உங்களுக்கு வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு ஜ“ரணமாகும் போது புண் சிறுகுடலின் முதல் பகுதியிலோ, நடுப்பகுதியிலோ இருந்தால் இரைப்பையிலிருந்து சிறுகுடலில் நுழையும் போது, இப்புண்ணில் படும்போது, சாப்பிட்ட உடன் நின்ற வலி மறுபடியும் வந்துவிடுகிறது. 18 வயதுக்குட்பட்டவருக்குப் பொதுவாக இந்த உபாதை ஏற்படுவதில்லை. உணவில் கட்டுப்பாடின்றி கண்டபடி தின்று கொண்டிருக்கும் வாலிப வயதினருக்கு அதிகமாய் இந்த உபாதை ஏற்படுகிறது. வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவைப்படுகிறது. எண்ணெய…
-
- 4 replies
- 4.1k views
-
-
நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்படியானால், இளைய வயதில் இருந்தே யோகா செய்யுங்கள், எதுவும் உங்களை அண்டாது என்பதை ஏற்காதவர்கள் இல்லை. நமக்கு எல்லாமே, உள்ளூரில் சொன்னால், கடவுள், பூதம் என்று ஒதுக்கி விடுகிறோம்; ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்வதை பார்த்து செய்யும் போது தான், அடடா! இது நம் பெரியவர்கள் கற்றுத்தந்த முறை தானே...' என்று புத்தி வருகிறது. அப்படித் தான் யோகா என்ற அற்புத உடற்பயிற்சி முறை, நம்மால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இப்போது தான் பலருக்கும் புரிகிறது. பதஞ்சலி என்ற மாமுனிவர், சிவனுக்கு கற்றுத்தந்தது தான் யோகக்கலை என்று தான் புராணங்கள் சொல்கின்றன. அந்த யோகா தான், இப்போது பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது. அந்த அளவுக்கு அது வியாபாரப் பொருளாகி விட்டது. பதஞ…
-
- 2 replies
- 2.3k views
-
-
உலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்žரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்žரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது. மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்žரக) எண்ணெய்க்கு உண்டு, பராகா எண்ணெய்யை உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்žரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்…
-
- 6 replies
- 4.5k views
-
-
உடல் கட்டுப்பாடு உடல் பருமனைக் குறைப்பது எப்படி? 1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும். 2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும். 3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. 4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். 5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவை…
-
- 36 replies
- 5.3k views
-
-
‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி! நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை −ருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! −ப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் −ளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால்…
-
- 18 replies
- 3.8k views
-
-
* புதிய ஆய்வு தகவல் :"காபி குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது; சில வகை புற்றுநோய்களும் வராமல் தடுக்க முடியும்' என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டனில், "எக்ஸ்பெரிமென்டல் பயாலஜி 2007' கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், "ஹார்வார்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்'தைச் சேர்ந்த டாக்டர்கள் உட்பட பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது, காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.காபி சாப்பிடுவது மற்றும் நீரிழிவு நோய் குறித்து நுõற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொண்ட வேன் டாம் கூறுகையில், "காபியை புதிய ஆரோக்கிய பானமாக நாங்கள் ஊக்குவிக்கவில்லை. எனினும், காபியை விரும்பாதவர்கள், அவர்கள் ஆரோக்கியத்திற்காக காபியை குடிக்குமாறு வலிய…
-
- 5 replies
- 2k views
-
-
நல வாழ்விற்கு உணவில் நார்சத்து போதுமான (Dietary fiber) இருப்பது முக்கியமாகும். நார் சத்து என்றால்? உள்ளெடுக்கப்படும் உணவில் சமிபாட்டு தொகுதியில் சமிபாடடையாது மலத்துடன் வெளியேறும் உணவு பகுதி என பொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிற
-
- 6 replies
- 3.1k views
-
-
நம் உடலில் உள்ள செல்கள் வேலை செய்வதற்கும், வளர்வதற்கும் தேவைப்படும் சத்தையும், பிராண வாயுவையும் எடுத்துச் சென்று வழங்கும் திரவமே ரத்தம். எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் உருவாகிறது. "ஹிமோகுளோபின்' என்ற பொருளின் காரணமாகவே ரத்தம் சிவப்பு நிறமாக உள்ளது. உடலின் மொத்த ரத்தம், உடல் எடையில் 8 சதவீதமே. வில்லியம் ஹார்வியால் 1616ல் மனித ரத்த ஓட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பின் ரத்த இழப்பை சரிசெய்யும் முயற்சியாக ஒரு நாயிடமிருந்து, மற்றொரு நாய்க்கு ரத்தம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். ஆனால், ரத்தம் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று 1678ல் தடை விதித்தார் போப் ஆண்டவர். அதன் பின் 150 ஆண்டுகள் யாரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வžகரமானதாகத் தெரியும். அரைதேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும். கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்த…
-
- 27 replies
- 6.9k views
-
-
இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷ’னில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல் கொடியிடை பெறலாம். அதற்கான சிறு சிறு பயிற்சிகள் இதோ... கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பிட்டங்கள் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் மைக்ரோ ஏரியாக்களில் (சிறிய தசைக…
-
- 8 replies
- 2.7k views
-
-
பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள். Beta-glucans எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல் சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும், நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு நார் சத்தாகும் (Dietary fibre). தற்போதைய நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும். பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும். பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள் …
-
- 2 replies
- 1.7k views
-
-
பழச் சாறுகள்(fruit juice).பழ ரசங்கள்(Cordial) இயற்கையானவை; வைற்றமின்கள் உள்ளவை; ஆரோக்கியமானவை என நம்ப வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால் அவற்றில் இருக்கும் உடற் கொழுப்பைக் கூட்டக் கூடிய அளவுக்கு அதிகமான சீனியை அதாவது இனிப்புத்தன்மையை யாரும் பெரிதுபடுத்துவதில்லை பழச்சாறு, இவற்றை அதிகளவு அருந்தும் பிள்ளைகளுக்கு பசி இன்மை, வயிற்றோட்டம், பற்சூத்தை, எடை அதிகரிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.(1) விக்டொரியா மாநிலத்திலுள்ள் டேக்கின் பல்கலைக் கழக(Deakin University) ஆய்வு (2)ஒன்று் குறிப்பிடுவது யாதெனில், பழச் சாறு உடற் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை இரணடு மடங்கு ஆக்குகிறது;தினமும் பழச் சாறும், மென் பானங்களும் அருந்தும் ஆரம்பப் பாடசாலை சி்றுவர்கள் எடை அதிகரிப்பு ஏற்படும் நிலையில…
-
- 0 replies
- 886 views
-
-
மனித மூளை குறுக்குவெட்டு முகம். மருத்துவ உலகம் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தது போல இரத்த அழுத்தம் (blood pressure - BP) இதயம் அல்லது சிறுநீரகம் அல்லது இரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளின் விளைவு என்பதற்கு மேலாக JAM-1 என்று குறியீட்டுப் பெயரளிக்கப்படுள்ள புரத மூலக்கூறு மூளையின் இரத்தக் குழாய்களில் இருந்து ஏற்படுத்தும் விளைவுகளால் ஒக்சிசன் அளவு மூளையில் குறைவடைவதாலும் இரத்த அழுத்தம் மாறுபடுவது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இது இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையில் புதிய அணுகுமுறைகளுக்கு வித்திட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..! Blood pressure 'is in the brain' The c…
-
- 0 replies
- 1k views
-
-
எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள் எய்ட்ஸ் என்றால் என்ன? பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக…
-
- 6 replies
- 55.7k views
-
-
தமிழர் மருத்துவம் நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன. கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் கு…
-
- 2 replies
- 16.3k views
-
-
உங்களுக்கு என்ன நோய்? கண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இம…
-
- 18 replies
- 3.3k views
-
-
கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி. இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட…
-
- 0 replies
- 887 views
-
-
தமிழ்நாட்டில் பெண்பாலியல் தொழிலாளர்களுக்கு பெண்ணுறையை விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையமும், வேறு சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றன. இதன்படி, மாநிலத்தில் இருக்கும் சுமார் மூவாயிரம் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு, அடுத்த நான்கு மாத காலத்தில் அறுபதாயிரம் பெண்ணுறைகள், மிகக்குறைந்த விலையில் விநியோகிக்கப்பட இருக்கின்றன. பெண் பாலியல் தொழிலாளர்கள் மூலம் எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்கள் ஆணுறையை அணிய மறுக்கும் சூழல்களில், இந்த பெண்ணுறை…
-
- 1 reply
- 1.4k views
-
-
முகம் பளபளக்கும் ஆண்- பெண் இருவருக்கும் சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசை போல நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத்தடவி நன்கு உரசித்தேய்த்து வந்தால் சுருக்கம் எல்லாம் நீங்கி பள்பளப்பாய் திகழும்.
-
- 40 replies
- 5.9k views
-
-
நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிர்களினை அறுவடை செய்ய வேண்டி இருக்கும். அந்த நாள் உணவு, ஆட்டபாட்டங்கள் எதிரொலிகள் இப்போது கேட்கத்தொடங்குகின்றன.இதற்கு முன்னால், உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் இப்போது இன் ஞாபக சக்தியினை மெது மெதுவாக மேகங்கள் மூடுவதை காணுவாய். இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகியிருக்கும், இனி அரிசியும் பருப்புபே உண்ணோடு சண்டை போடும். இதற்கு முன்னால் எதை சாப்பிடலாம் என்று என்று நீ டாக்டரை கேட்டிருக்கமாட்டாய், இனி கேட்க வேண்டிவரும். தொடரும்...
-
- 29 replies
- 6.6k views
-
-
பல்லுப்போணா சொல்லுப்போச்சு கன்னதில் குளிவிழும், கதைக்க சொக்கை ஆடும், நினைத்ததனை லபக் என்று சப்பி சப்பிடமுடியாமல் போகும். ஆகவே பற்கள் தான் முகத்துக்கு அழகு. இரவு சாப்பிடு விட்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை வாயில் விட்டு ஒரு பத்து நிமிடம் வாயினில் வைத்து இருக்கவேண்டும்.( பேசக்கூடாது ஆனா ரிவீ பார்க்கலாம் ) .பத்து நிமிடம் கழித்து கொப்பளித்து துப்பி விடலாம். பல்லும் பளிச்சென்று வந்துவிடும். வாயில் உள்ள புண்ணும் குண்மைந்துவிடும், பற்கள் உறுதியாக வேற இருக்குமாம். இது ஒரு பல் டாக்டரின் அறிவுரை.
-
- 14 replies
- 2.4k views
-