Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்! இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம…

  2. அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம். அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது. அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் …

    • 0 replies
    • 1.4k views
  3. தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது. விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.

  4. Started by ஊமை,

    கருக் கலைப்பு செய்ய கணவரிடம் "பர்மிஷன்" வாங்க வேண்டுமா? கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா? லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி இது குற்றம் என்றும், மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ், தன்னிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரெக்னன்சசி' சட்டத்தின் பிரிவு 3 (4)ல், "கருவுற்ற தாயின் ஒப்புதல் இன்றி, கருக்கலைப்பு செய்யக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது. இதில் கணவரின் கருத்து பெறப்ப…

    • 5 replies
    • 6.2k views
  5. ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா? பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அ…

  6. Started by ஊமை,

    இருப்பது தனித்தென்றால் இதயவியாதிகள் அதிகமா? ஏஜேஜி- 62 வயதை சராசரியாகக் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக 3267 பேரின் உடல் நிலை பற்றி ஆய்வொன்று நடாத்தியபோது, சில சுவாரஸ்ஸியமான, அதே சமயம் திடுக்கிட வைக்கும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், சமூகத்தோடு கலந்து பழக விரும்பாது, தனித்து வாழ்பவர்களுக்கு, இருதய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றார்கள். தனித்து இருப்பது அவ்வளவு சங்கடமான விடயமா? தனித்து வாழ்பவர்கள், உடல்ரீதியாகக் குறைவான அசைவுகளைக் கொண்டவர்களாகவும், அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பதுண்டு. இது இருதய வியாதிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். பலருடனும…

    • 3 replies
    • 1.7k views
  7. முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும். கண்ணில் கருவளையம் மறைய... சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முகத்தை பாதுகாக்…

    • 2 replies
    • 2.4k views
  8. கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...! "செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர். இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம். அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்…

    • 0 replies
    • 1.4k views
  9. நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்? குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும். நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும். கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, …

    • 0 replies
    • 4.1k views
  10. மூளையைத் தூங்க விடாதீர்கள்! ஜி.வி.ராவ்- பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3, புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குற…

    • 0 replies
    • 1.2k views
  11. மனிதனின் 6-வது அறிவு மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது. சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்ட…

    • 0 replies
    • 1.4k views
  12. தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான். சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிரிப்…

    • 0 replies
    • 1.7k views
  13. என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது...' என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல. கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு. நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற' வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம். சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்' வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நட…

    • 0 replies
    • 1.1k views
  14. குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம். குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன. பிறப்பு முதல் ஒரு வயது வரை: பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது.…

    • 0 replies
    • 1.6k views
  15. ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும். சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம். இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார். அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட…

    • 0 replies
    • 5.8k views
  16. Started by ஊமை,

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு வதும் தாய்ப்பால்தான். உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றhன மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று* எனவேதான் நாம் பாலுட்டி இனத்தைச் சார்ந்தவர்களாகப் பகுக்கப்படுகின்றோம். பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. எங்கா…

    • 0 replies
    • 1.3k views
  17. Started by starvijay,

    பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது. பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி…

  18. Started by starvijay,

    நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது. இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன. இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது. த…

    • 22 replies
    • 4.2k views
  19. Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..! குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்…

    • 3 replies
    • 2.1k views
  20. தமிழீழ மருத்துவ மாணவர்களின் தகவல் http://www.tamilkudil.com/tamilkudil/reala...icine_fever.ram தகவல்: தமிழ்க்குடில் புள்ளி கோம்

    • 0 replies
    • 1.7k views
  21. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது. இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நர…

  22. ஆப்பிள் எனும் அருமருந்து ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. பயன்கள் கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' (ளூரநசஉநவin) அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் த…

    • 10 replies
    • 2.4k views
  23. Started by Rasikai,

    மலரின் மகிமை சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு, தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது. முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வு அதிகமாக்கும். செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும். செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும். அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும். வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும். இலு…

  24. Íñ¼øñ½¡ ¬ñ¸ÙìÌ ÁðÎõ ±ýÚ "²§¾¡" ±Ø¾¢Â¢Õ츢ȡ÷...«¾ôÀ¡òÐðΠ¡Õõ ºÁ «ó¾ŠÐ §¸ðÎ §À¡÷¦¸¡Ê àì¸ Ó¾ø...... 8) þí§¸ ¦Àñ¸ÙìÌ ÁðÎÁ¡É Å¢ºÂí¸¨Ç à×í¸û... ºÃ¢ ¿¡ý ¬½¡Â¢ÕóÐõ ¾¨Äô¨À ÐÈóÐÅ¢ð¼ÀÊ¡ ¿¡Ûõ ´ñ¨¼ ¦º¡øÄ¢ðÎ §À¡Èý. "ÒÕºýÁ¡÷ Å£ðÎìÌ Åó¾¡ ¸¡ÖìÌ §ÁÄ ¸¡ø §À¡ðÎ ¦¸¡ñÎ tv serial À¡òÐ «ØÐ ¦¸¡ñÎ þÕ측Á, ¸¡Ä ¾¨ÄÄ ¨ÅîÍì ¦¸¡ñÎ Íξñ½¢¨Â ¦¸¡¾¢ì¸ ¨ÅîÍ «Å¢ýà ¾¨ÄÄ °ò¾×õ. ´Õ ¸¡À¢ ¸¢¨¼ìÌÁ¡ ±ñÎ §¸ð¼¡, Ó¨ÈîÍôÀ¡÷ì¸×õ...Á£ñÎõ §¸ð¼¡ "§¼ º¢Å¡, ±ýÉ Å¢Ç¡ÎȢ¡, §À¡ö °ò¾¢ìÌÊ §À¡"....Á£ñÎõ Á£ñÎõ ¼¡îº÷ Àñ½¢É¡ "¦À¡Ä¢Íì¸ÊôÀý, ¨Áñð þðððð"....¯Ð §À¡Ðõ, ¬û ¦ÅÚõ ¨Åò§¾¡¼ §À¡ö ÍÕñÎ ÀÎòÐÎõ.... 8) ±ýÉ same side goal §À¡ÎÈý ±ñÎ À¡ì¸¢È£í¸Ç¡...hahaha....¿ÁìÌ «îºõ, Á¼õ, ¿¡½õ, À¢÷ôÒ ±øÄ¡õ ¸ñȡŢÔõ ¦¸¡ñ¼ …

    • 9 replies
    • 2.9k views
  25. கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா? -------------------------------------------------------------------------------- பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது. கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்த…

    • 30 replies
    • 6.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.