நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது கண்களுக்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்: 1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத…
-
- 4 replies
- 768 views
-
-
அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது! தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன. இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல. பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம். அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு. எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள். ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும். அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி. அடுத்த முறை வரும…
-
- 0 replies
- 570 views
-
-
நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…
-
- 0 replies
- 1k views
-
-
நடைப்பயிற்சி சில உதவிக் குறிப்புகள் இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள். உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது. ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது. சுலபமாகச் செய்யக் கூடியது. செலவில்லாதது. இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது. அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது. வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மா…
-
- 0 replies
- 969 views
-
-
ஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்துஉடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்: * தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும்குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்க…
-
- 0 replies
- 956 views
-
-
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? M.K முருகானந்தன் வண்ணங்கள் இல்லாத உலகில் வாழ்வது பற்றி கற்பனை பண்ணவே முடியவில்லை. நீல வானம், வெண் மேகங்கள், பசுமை போர்த்திய தாவரங்கள், மாலையில் சூரியன் தாழும்போது மஞ்சள் சிகப்பு எனப் பரவும் நிறக்கலவைகள். ஆகா! என்ன தவம் செய்தோம் இந்த வையகத்தில் மானிடராய் பிறப்பதற்கே! வானவில் காட்டும் வண்ண ஜாலத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழும் உள்ளத்தைக் களிகொண்டு ஆடச்செய்கிறது. ஆனால் சிவப்பு , நீலம், பச்சை ஆகிய மூன்று மட்டுமே அடிப்படை வண்ணங்கள் ஆகும். பாரதியின் உள்ளத்தையும் வண்ணஙகள் கிளந்தெறச் செய்தன. "என்னடி இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்!எத்தனை கலவை…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரத்தப் பரிசோதனையில் புதிய தொழில்நுட்பம் - சுவிட்சலர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை! [Wednesday, 2013-03-27 18:43:49] நம்முடைய தோலுக்கு அடியில் பொருத்தப்படுகின்ற ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத் தாம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின் தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர். நம் இரத்தத்திலிருந்து ஐந்து உட்கூறுகளின் அளவுகளை இந்தக் கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம். இந்தக் கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள் ரேடியோ அலைகள் மூலமாகவும், புளூடூத் கம்பியற்ற தகவல் பரிமாற்றம் மூலமாகவ…
-
- 0 replies
- 496 views
-
-
எதுக்கு தங்க நகை - secret of gold தங்க நகை அணிவதால் என்ன நன்மை தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன…
-
- 0 replies
- 3.2k views
-
-
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…
-
- 2 replies
- 11.6k views
-
-
நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்து ப்ளாட்களிலும் நாலு சுவத்துக்குள்ளும் அடைந்துகிடைக்கும் வாழ்க்கை வாழுபவர்கள்..வேலை விட்டு வந்தால் குளிர்,நேரமின்மை மற்றும் காரணங்களால் எங்களின் பெரும்பாலான பொழுதுகளை வீட்டுக்குள்ளேயே செலவழிக்கிறோம்..அந்தவீட்டைக்கூட பலர் குளிர்காலங்களில் திறப்பதில்லை..திறந்தால்போல் சுத்தமான் காற்று வரப்போவதும் இல்லை நகர்ப்புறங்களில்..அதனால் வீட்டுக்குள்ளே வளர்க்ககூடிய காற்றை சுத்தப்படுத்தும் ஆறுவகையான தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.. 1. Bamboo Palm: இது காற்றில் உள்ள நச்சுத்தன்மையான எரிவை உண்டாக்கும் மெதனல்(formaldehyde)வாயுவை நீக்குகிரது...அத்துடன் இது இயற்கையான காற்று ஈரப்பதமூட்டியாகும்.. 2. Snake Plant: இது காற்றில் உள்ள தீய வா…
-
- 10 replies
- 1.1k views
-
-
-
- 11 replies
- 3.2k views
-
-
கண்களுக்கான ஒரு பயிற்சி 20 - 20 - 20 Step I :- கண்ணியில் வேலை ஆற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கு அப்புறமும் கண்ணணித்திரையில் இருந்து கண்களை எடுத்து ஆகக்குறைந்தது இருபது அடி தூரத்தி அமைந்துள்ள ஏதாவது ஒரு பொருளை பாருங்கள்..இது உங்கள் கண்களின் குவியத்தூரத்தை மாற்றுகிறது..இது களைப்படைந்த கண்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று... Step II :- கண்களை ஈரலிப்பாக்குவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக இருபது தடவை கண்களை மூடிமூடி திறவுங்கள்(கண்ணடியுங்கள். அதற்காக பக்கத்து மேசையில் இருக்கும் பெண்ணைபார்த்து கண்ணடித்து களபரம் ஆனால் அதற்கு நான் பொறுப்பல..நிழலி அண்ணா இதைப்படித்தால் அடைப்புக்குள் உள்ளதை கவனத்தில் எடுக்கவும். .) Step III :- முழு உடலுக்குமான ரத்த சுற்றோட்டத…
-
- 0 replies
- 522 views
-
-
குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1. ---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. --…
-
- 1 reply
- 7.5k views
-
-
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால்,…
-
- 22 replies
- 4k views
-
-
ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, ந…
-
- 3 replies
- 882 views
-
-
இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணிணியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணிணி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான …
-
- 0 replies
- 465 views
-
-
உணவு தயாரிப்பின் போது உடலுக்கு பல பாதகமான பதார்த்தங்கள் உருவாகுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் French fry தயாரிக்கும் போது அக்கிரலமைட் எனும் பதார்த்தம் உருவாகிறது. அதைபற்றி சிறிது பார்ப்போம். Acrylamide அக்கிரலமைட் எனப்படுவது ஒரு மணமற்ற,வெண்மையான அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும் ஒரு பதார்த்தமாகும். இதன் மூலக்கூற்று சூத்திரம்- C3H5NO மூலக்கூற்று நிறை -71.08. இதன் பல்பகுதியமானது நீர் பரிகரிப்ப- Water treatment எண்ணெய் பிரித்தெடுப்பு- Enhanced oil recovery வீழ்படிவாக்கி- Flocullant கழிவுபொருட்களின் பரிகரிப்பு - Sewage and waste water treatment ;...... ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அண்மைய காலங்களில் இது உணவிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (Swe…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்களைப் பற்றி நன்கு தெரியும். இதுவரை அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவ மட்டும் தான் செய்வோம். சிலர் அந்த எண்ணெயை வைத்து தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். அதிலும் எண்ணெயை சூடேற்றி, காய வைத்து, பின் மசாஜ் செய்வார்கள். ஆனால் தற்போது கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, பட்டுப் போன்று மின்னுவதற்கு தேங்காய் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இப்போது அந்த தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!! தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிற…
-
- 1 reply
- 659 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுக…
-
- 5 replies
- 4.6k views
-
-
புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச் ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டாக்டர் நரசிம்மன்(C.O.P.D) க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதயநோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ளக் குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம். இந்தக் கூட்டத்தில் புகைப்பதைக் கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட் – ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் விஷத்தில் கலந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வோஷிங்டன் யூனிவர்சிட்டி ஸ்கூல் மருத்துவப் பிரிவு மாணவர் நடாத்திய ஆய்விலேயே எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் கொடுக்கில் உள்ள நஞ்சில் இருப்பது கண்டறியப்பட்டது. குளவி கொட்டும் விஷத்தோடு கலந்துள்ள மெலிற்றின் என்ற நச்சுப் பதார்த்தம் எச்.ஐ.வி வைரஸ்களை அழித்து அதனால் பாதிக்கப்பட்ட செல் கலங்களை மறுபடியும் புத்தெழுச்சியடையச் செய்கிறது. எச்.ஐ.வி வைரஸ்சில் உள்ள நாநோ என்ற துகள்கள் மீது மெலிற்றினை செலுத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எச்.ஐ.வி வைரஸ்களைவிட செல்கள் அளவில் பெரியவையாகும் எனவேதான் செல்களில் கலந்துள்ள எச்…
-
- 0 replies
- 826 views
-
-
-
இன்றைய அம்மாக்களுக்கு பொறுமை குறைவு. எல்லாம் அவசரம். ஏதோ கடமைக்கு பிள்ளை வளர்க்கிற மனப்பான்மை. ஆனால் அவை பிள்ளைகளுக்கு பல வழிகளில் ஆபத்தாக முடிகின்றன. முதலில் அம்மாக்களோ அப்பாக்களோ.. தாங்கள் சின்னனா இருக்கேக்க என்னென்னத்தை அசெளகரியமா அனுபவிச்சாங்களோ.. அதை உணர்ந்து கொள்ளனும். பிள்ளைகள் அதனை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக.. பிள்ளைகளை தூக்கும் முறைமையில் இருந்து அரவணைக்கும் பாங்கு.. கதை பேசும் இனிமை.. பொறுமை.. அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து குழந்தையாகவே ஆகிடும் மனநிலை.. என்று பல வழிகளில் தம்மை அவர்கள் முன்னேற்றிக் கொள்ளனும். அப்பாக்கள் அம்மாக்கள் குழந்தைகளின் முன்னால் குடிப்பது.. புகைப்பிடிப்பது.. சண்டை போடுவது.. கணணியில் அதிகம் மிணக்கடுவது.. குழந்தைகள…
-
- 2 replies
- 811 views
-
-
[சிவப்பில் காட்டப்பட்டவையே அந்த பொலிப்புகள் என்ற இழைய வளர்ச்சி அல்லது அளர்ச்சி] [மிகச் சுலபமான சத்திரசிகிச்சை. பெரிய வெட்டுக் கொத்து அவசியம் இல்லை] இது ஒன்றும் உயிர் ஆபத்து தரும் அளவுக்குப் பெரிய பிரச்சனை அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் சிறிய சத்திரசிகிச்சை அவசியம். ஆனால் இந்த பொலிப்புக்களில் சில ஆபத்தானவை. புற்றுநோய் வகைக்குரியவை. அவை தொடர்பில் வைத்தியர்கள் மிகக் கவனமாக இருந்து உங்களை வழிநடத்துவார்கள் என்பதால்.. எல்லா பொலிப்புக்களை புற்றுநோய்க்குரியவை என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. அதனால் வீண் பயம் கொள்ளல் அவசியமில்லை. எப்பவும் சிறிய மூக்கடமைப்பு.. மூக்கால் நீர் சிந்துதல்.. மண உணர்ச்சிக் குறைதல்.. அல்லது கண்ணில் பிரச்சனை இன்றி.. நீர்வடிதல்.. மூக்கு நோ.…
-
- 9 replies
- 3.6k views
-
-
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது …
-
- 3 replies
- 948 views
-