நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்! “ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு. “ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு. இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்…
-
- 1 reply
- 642 views
-
-
[size=2]சிறுநீரக நோயை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு சாப்பிடுங்க[/size] -14 [size=5]சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது. ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இ…
-
- 0 replies
- 556 views
-
-
தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி? நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான். உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
தீண்டத்தகாத உணவா சோறு? அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள். உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோ…
-
- 0 replies
- 689 views
-
-
[size=3][/size] [size=3][size=4]காதல் [/size][/size][size=3][size=4]இதயத்தில் இருந்து வருகிறதா? அது மூளை தொடர்புடையதா என்று ஒரு ஆராய்ச்சி நடந்து வரும் வேலையில் காதலித்தால் அது இதயத்தை பாதுகாக்கிறது. இதயநோய்கள் ஏற்படாமல் காதல் தடுக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.[/size][/size] [size=3][size=4]இதயநோய் வராது[/size][/size] [size=3][size=4]திருமணம் மூலம் ஏற்படும் குடும்ப உறவு, தம்பதியருக்கிடையே ஏற்படும் அந்நியோன்யமான தாம்பத்யம் இதயநோய்களை தடுக்கிறது என்று பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அன்பான உறவு மூலம் கிடைக்கும் நேசம் பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறதாம் இதனால் இதயநோய் ஏற்படுவது குறைகிறது என்கின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
நபர்1: "என்ன சுப்பண்ணை கண்டவுடனை விறுக்கு விறுக்கு என்டு நடையை காட்டுறியல் போல." நபர்2: "அட தம்பி சுந்தரம் அங்கேயா இருகியாய். சுந்தரம் சத்தியமாய் நான் உன்னை காணவில்லை. கொழும்பில் மகளை கொண்டுபோய் பயணம் அனுப்ப போய்விட்டாய் என்று கதைத்தார்கள். எப்போ திரும்பி வந்தாய் ?" ந1: "அது போன கிழமையெல்லோ. இப்பபோய் கேக்கிறியல் அதைபற்றி. அவளும் வந்து நின்டுட்டு, தான் ஊருகள் டூர் போய் பாக்க வேணும் என்டு உங்கை எல்லாம் சுத்தி திரிஞ்சு போட்டு என்னோடை இருந்து கதைக்க நேரம் இல்லை என்டு கொழும்பு போய் பயணம் போட்டாள். கொழும்பிலையும் சனங்கள் இருந்து கதைக்க நேரம் இல்லாமல் ஒரே பறப்பாய் பறந்து திரியுதுகள். இஞ்சவந்தால் இதுகளும் அப்படித்தானே குண்டியிலை காலடிக்க ஒடித்திரியுதுகள். என்ன அவதியில…
-
- 1 reply
- 904 views
-
-
ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி (அதீரோஸ்குளோரோசிஸ்) அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்து கொள்வது அவசியம். எண்ணெய், நெய், டால்டா, பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி -பால்- கோவா, முந்திரி, உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் ‘நான்-ஸ்டிக…
-
- 1 reply
- 2.3k views
-
-
[size=4]டைப் - 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.[/size] [size=4]ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.[/size] [size=4]நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இந்த ஆய்வு பற்றி கருத்து கூறியுள்ள கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின், "சாதாரணமாக ரத்தத்தில் இருக்கு…
-
- 4 replies
- 790 views
-
-
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். செயல்திறன் மிக்க சத்துக்கள்: பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டி ஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன. நன்மை தரும் நார்ச்சத்து: பேரிக்காயில் உள்ள…
-
- 0 replies
- 478 views
-
-
அதிமதுரம் ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே! அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரி…
-
- 0 replies
- 612 views
-
-
[size=2]ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.[/size] [size=2]ஆஸ்ட்ரேலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக 'ரிஸ்க்'உள்ளதே என்று கூறுகின்றனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=2]ஞாபகசக்தி மற்றும் அறிதிறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/size] …
-
- 0 replies
- 621 views
-
-
உடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த துடிப்பை கழுத்து, கால்களில் கூட உணர முடியும். இப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள். மேலும் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதையும் அந்த நாடித்துடிப்பை வைத்து தான் முடிவெடுப்பார்கள். ஒருவருக்கு சரியான துடிப்பு என்றால் எவ்வளவு? ஒரு ஆரோ…
-
- 6 replies
- 28.2k views
-
-
[size=4]உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உடல் பருமன் கூடியவர்கள், அதிகம் சோடா குடிப்பவர்கள், சோடாவில் அதிகம் இருக்கும் வெல்லம் / சீனி உடல் எடை கூட கரணம், உடல் எடை அதிகரிப்பதால் இணைந்து வரும் இதய நோய்கள், சல ரோகம்/ நீரிழிவு என்பவற்றுக்கு காரணம் என சொல்லப்படுவதால் சோடா தயாரிப்பு நிறுவனங்கள் சீனி அற்ற செயற்கையான இனிப்பூட்டிகளை கொண்ட சோடக்களை விற்கிறன. உடல் நிறையில்/ உடல் நலனில் அக்கறை கொண்டோர் பலரும் "டயட்" சோடக்களை குடிக்கிறனர். ஆனால் டயட் சோடா பாவனை உண்மையில் உடல் நிறை குறைவதில் பங்க்கேடுக்குமா? அல்லது "டயட்" சோடக்களில் உள்ள செயற்கை இனிபூட்டிகள் உடல் நலனை பாதிக்குமா? அதிகரித்த செயற்கை இனிபூட்டி பவனை "சட்டியில் இருந்து தப்பி நெருப்பினுள் விழுந்த கதை" போன்றதா? 1. அண்மையில் செயற்கை இனிபூட்டிய சோடா குடிக்கும் …
-
- 1 reply
- 1.7k views
-
-
[size=4]உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. ஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்ட…
-
- 6 replies
- 9.1k views
-
-
[size=2][size=4]மக்களின் கொழுப்பை குறைப்பதற்காக டேனிஸ் அரசு கொழுப்புப் பொருட்களுக்கு அதிக விற்பனை வரி விதித்தது போல அமெரிக்காவின் நியூயோர்க் சிற்றி மாநகரசபை புதியதோர் தீர்மானத்தை நேற்று வியாழன் அமல் செய்துள்ளது.[/size][/size] [size=2][size=4]மக்கள் நெருக்கடி கட்டு மீறிய நியூயோர்க் சிற்றி பகுதியில் உள்ள ரெஸ்ரூரன்ருகள், உணவு விடுதிகளில் கோலா விற்கலாம் ஆனால் அரை லீட்டருக்கு மேல் அதிக அளவு கொண்ட போத்தல்களில் விற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]அதுபோல மற்றய இனிப்பு குடிபானங்களினதும் அதி உச்ச அளவு அரைலீட்டர்கள் மட்டுமே என்ற நிபந்தனையை நியூயோர்க் சிற்றி மேயர் மிக்கேல் புளும்பியா அறிவித்துள்ளார்.[/size][/size] [si…
-
- 8 replies
- 1.1k views
-
-
உடனிருந்தே கொல்லும் வியாதி.. உங்களுக்கு கோபம் வருவதுண்டா?...' இது என்ன கேள்வி!!...மனுஷனாப்பொறந்தவனுக்கு கோபம் வர்றது சகஜமானதுதானே'ங்கிறீங்களா!!!. உண்மைதான்..நம்ம ஆழ்மனசுல அடக்கி வைக்கப்பட்ட உணர்வு மற்றும் மன அழுத்தங்களே எல்லை மீறும் போது கோபமாக வெளிப்படுகின்றன. கோபப்படறது சகஜம்ன்னாலும் , அது எல்லை மீறி, நம்மை அழிச்சிடாம இருக்கிறவரைக்கும் அதுவும் ஓர் உணர்வுதான்.(வேறொன்னுமில்லை.. பதிவு கொஞ்சம் நீளமா போச்சு.. டைம் எடுத்து படிச்சிடுங்க. ப்ளீஸ்..ஹி..ஹி..) நமக்கு அதிகமா கோபம் வருதுங்கிறதை நம்ம உடல்மொழிகளே(body language) காட்டிக்கொடுத்திடும். தாடை இறுகி, நறநறன்னு பல்லைக்கடிப்போம்,இதயத்துடிப்பு கூடுதலாகும், முகமெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேர்த்துக்கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா… ”எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று……
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=4]இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இருக்கும் போது, மேலும் மேலும் உப்பை சேர்த்தால், உடல் மற்றும் உயிருக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிலும் தற்போது உடலில் எல்லா நோய்களுமே அழையா விருந்தாளிகளைப் போல வந்துவிடுகிறது. அதில் முதலில் வருவது தான் இரத்த அழுத்தம்.[/size] [size=4][size=4]பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!![/size][/size] [size=4]1/6[/size] [size=4]எலுமிச்சை[/size][s…
-
- 0 replies
- 1.8k views
-
-
[size=4]ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.[/size] [size=4]முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக …
-
- 4 replies
- 1.8k views
-
-
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடு க்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளி…
-
- 0 replies
- 749 views
-
-
[size=4]மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சமூகத்துடன் அதிக ஈடுபாடு என்று இருந்தால் ஆயுளை 6 ஆண்டு நீட்டிக்கலாம் என்பது ஆய்வில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நடுத்தர வயதினர் பலர் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைகின்றனர்.[/size] [size=4]இதற்கு மது, புகை போன்ற பழக்கங்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.75 வயதை கடந்தவர்களையும் இதுபோன்ற பழக்கங்கள் பாதிக்கிறதா என்பது குறித்து ஸ்வீடனை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர்.[/size] [size=4]75 வயதை கடந்த 1800 பேரின் 18 ஆண்டு கால(1987- 2005) வாழ்க்கை முறை குறித்து தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். அவர்…
-
- 0 replies
- 929 views
-
-
[size=4]அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே…
-
- 1 reply
- 2.1k views
-
-
மணங்களின். ராணி.. ஏலம்.. ஏல டீ..வேண்டுமா? ஏலம் போட வேண்டுமா? ஏலக்காய் டீ!..இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ஆர்டர் பறக்கும். ஒனக்கு வேற வேலையே இல்லடா என்று சொல்லிக்கொண்டே அந்த அருமைத் தமக்கை தம்பிக்கு, சொன்ன வாய் மூடுமுன்னே, அவனுக்குப் பிடித்த ஏலம் கமகமக்கும் டீத்தண்ணி யுடன் நிற்பார். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்கள ? அட அட எப்படி இ…
-
- 0 replies
- 603 views
-
-
[size=4]கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும் .சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன் படுகிறது . பெருவாரியாக இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. நாம் பயன்படுத்தும் கிராம்பு என்பது செடியின் மொட்டுக்களாகும். அது பார்ப்பதற்கு நகம் போல் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்கள் நகம் என்ற பொருளில் Clove என்று பிரெஞ்சு மொழியில் அழைத்தார்கள்.[/size] [size=4]கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு ப…
-
- 0 replies
- 869 views
-