Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. “ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள்…

  2. 'நோ' சொல்ல வேண்டியதற்கு கண்டிப்பாக 'நோ' சொல்லுங்கள்! உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனஅழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது. மனஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது. மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் (Migrane)எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக் (Stroke), எஸீமா உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது. அழுத்தம் பலவிதம் மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வி…

  3. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி! கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது. இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப…

  4. ஜெ.கிருஷ்ண மூர்த்தியின் சிந்தனைகள் என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்கிறார்... வெளிப்படையாக, நாம் நாசூக்கானவர்களாக, கண்ணியமானவர்களாகத் தெரியலாம். ஆனால், உள் மனதில் வெறுப்பு, பொறாமை, துவேஷம், வன்முறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம். மிருகத்தைத் தட்டிக் கொடுத்து நல்லவிதமாக நடத்தும் வரை, அது நம்மிடம் நட்புறவோடு இருக்கும். அதை பகைத்துக் கொள்ளும் போது, அதன் உண்மையான வன்முறை ரூபம் நமக்கு புலப்படும். நாமும் அத்தகைய மிருக சுபாவம்தான் அடிப்படையில் பெற்றிருக்கிறோம். நம் விருப்பும், வெறுப்பும்தான் வன்முறையின் அடிப்படை. "நீ கிறிஸ்தவன் - நீ இந்து - நீ இஸ்லாமியன்' போன்ற பிரச்சாரங்கள், ஆழ்மனதில், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்ட…

  5. சளித்தொல்லைக்கு கருந்துளசி! டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை - சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிரும…

  6. சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல…

  7. தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள் எமது உடலில் தேமல் வந்தால்இபார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள் நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும். இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தா…

  8. நான் சொல்ல இருந்த செய்தியை , இந்தப் பதிவர் காரணகாரியங்களுடன் சொல்லியிருக்கிறார் . ஆனால் , எனக்கு இப்பிடிப்பட்டவையின்ர வேலையளால நான் முதல் தொடரூந்தில போகேக்கை பெரிய அரியண்டமாயிருக்கு . அவ்வளவு ரொக்ஸிக் :lol: . இனி நான் கையோட மாஸ்க் கொண்டு போகப்போறன் . சிலருக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது அதிக சத்தத்துடன் வாய்வு வெளியேறும்போது அதிக சங்கடமாக உணர்கிறார்கள். அதிகமாயும் அடிக்கடியும் வெளியேறுகிறது. பயிறு, பருப்பு சாப்பிட்டால் அதிகமாகிறது. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டு உடைக்கிறார்கள். இவர்களுக்காக இந்த மருத்துவரீதியான ஆலோசனை. முதலில் வாய்வு வெளியேறுவது என்பது ஒரு தொல்லையே ஒழிய அது ஒரு நோய் இல்லை என்பதை உணரவ…

  9. தலையில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வழுக்கை தலை உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே தலையில் உள்ள முடி கொட்டி வழுக்கை விழுந்துவிடும் மற்றவர்களுக்கு 35 முதல் 40 வயதில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இந்த தலையாய பிரச்சினைக்கு காரணம் என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டொக்டர் காலித் கூறியதாவது, சராசரியாக ஒருவரின் தலையில் இருந்து தினமும் 100 முடிகள் கொட்டினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தினமும் 100 முடிகள் ப…

  10. காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! மார்ச் 05, 2007 சென்னை: தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அண…

    • 10 replies
    • 6.5k views
  11. எலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்: ஆய்வில் தகவல்! வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் …

  12. கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர். இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து? பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிற…

  13. மைக்ரோ வேவ் சமையல்- உஷார் மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள். *** புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனி…

  14. நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு. நீர்த்தாவரங்களின் ஒன்றான தாமரை கொடி இனத்தைச் சேர்ந்தது. நீருக்குள்ளேயே படர்ந்து வளரக்கூடியது. இதில் எத்தனையோ வகை உள்ளன. அவற்றில் வெண்தாமரை, செந்தாமரை குறிப்பிடத்தக்கவை. இந்த தாமரையின் அடிப்பகுதியில் கிழங்குகள் காணப்படுகின்றன.தாமரை மலரைப்போல தாமரைக்கிழங்குகளுக்கும் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. கண்நோய், கண் எரிச்சல், போன்று கண்கள் தொடர்புடைய நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. கண்பார்வையும் தெளிவடையும். அடங்கியுள்ள சத்துக்கள் தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி – 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்பட…

  15. பலரையும் பாடாய்படுத்தி வரும் மனஅழுத்தத்தை தீர்ப்பதற்கான வழிகள் [Thursday, 2011-09-29 11:44:06] பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உட…

  16. 'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா? அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்…

  17. வணக்கம் அனைவருக்கும்... எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

    • 41 replies
    • 3.1k views
  18. இலங்கையில் 10 பேரில் ஒருவருக்கு மன நோய் இலங்கையில் வாழும் மக்களில் 10 பேரில் ஒருவர் சில வகையான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் தெரிவித்தது. இந்த கணிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் மன நோய் பரவுவதற்கு 30 வருட கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றனவே காரணம் என நிபுணர்கள் பலர் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 இலங்கையருக்கு இருவர் என்ற விகிதத்தில் தீவிர மன நோய்களுக்கு ஆளாவர் என இந்நிறுவகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என தேசிய மன ஆரோக்கிய நிறுவகத்தின் அதிகாரியொரு…

  19. Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment “நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போன…

    • 2 replies
    • 1.1k views
  20. காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான். விளக்கம் அடியில் இருக்கிறது. ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது. இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் …

  21. தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள். இதயநோய் தடுக்கப்படுகிறது: உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழ…

  22. உடல் பருமனை தவிர்ப்போம் வெள்ளி, 08 ஏப்ரல் 2011 10:31 உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும். உடல் பருமனின் காரணங்கள்: 1. பரம்பரை உடல் வாகு.2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.4. மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி …

  23. தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. தோற்றம் : அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும். அடங்கியுள்ள பொருட்கள் : ஈரப்பதம் _ 73 ச…

  24. அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....! அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம். உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம் கிச்சிலி கிழங்கு பொடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.