Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா 76 Views சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். சிறீலங்கா அரசு…

  2. IS இயக்கத்துக்கு மணப்பெண்ணாக ஓடிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இளம் பெண் திரும்ப முடியாது - தீர்ப்பு IS இயக்கத்தினால் கவரப்பட்டு, சிரியாவுக்கு ஓடிப்போன, பதும வயது பிரித்தானியப் பெண் பேகம், பிரிட்டனுக்கு திருப்ப முடியாது என பிரித்தானியாவின் அதியுச்ச நீதிமன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பலர் வரவேற்றிருந்தாலும், ஒரு பதும வயது சிறுமியை, IS இயக்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து அரச புலனாய்வு அமைப்புக்கள் தவறி விட்டிருந்தனவே என்ற குரல்களும் வருகின்றன. அது நியாயமானதும் கூட.

  3. மனித உரிமை மீறல் -சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 17 Views பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற…

  4. லாச்சப்பலில் மீட்கப்பட்ட தங்கம் புலிகளுடையது திசை திருப்பும் சிங்கள பேரினவாதம் லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது. தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்…

  5. சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள் 20 Views சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன. தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர். குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத…

  6. அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு 279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ் 22 Views பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D’Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்கள். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட…

  7. அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் - சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் - அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றவர்கள். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகளுக்கு 6 வயதும், 2ஆவது ம…

  8. "தமிழன்" னா தமிழிலா பேசணும்? தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

  9. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தலையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 40 Views இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால், சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம்பெ ற்றது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே குறித்த பேரணியில் கலந்து கொண்ட…

    • 2 replies
    • 838 views
  10. தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம் 4 Views ஈழத் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது. கடந்த வியாழன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளை…

  11. இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை February 12, 2021 சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது. குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ…

  12. நாடாளுமன்ற விவாதத்தில் சிறீலங்கா தொடர்பாக உரத்துக் கேள்வி எழுப்புவேன் – Siobhain McDonagh 57 Views ஐ.நா அமர்வு தொடர்பாக, ‘இலக்கு’ தொடுத்த வினாக்களுக்கு பிரித்தானியாவின் தொழிற்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷிவோண் (Siobhain) அளித்த பதில்கள் வினா: கோட்டாபய தலைமையிலான தற்போதைய சிறீலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமர்வின் போது மேற்கொள்ளப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து தற்போது வெளியேறி விட்டது. அவ்வாறான ஒரு பின்புலத்தில் 2009 இல், சிறீலங்காவில் முடிவுக்கு வந்த இனவழிப்புப் போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை…

  13. P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி 44 Views தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். Video Player 00:00 00:17 http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604…

    • 10 replies
    • 1.4k views
  14. கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி 2 Views கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது. இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொர…

  15. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…

  16. ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான கனடிய தேசிய குற்றப்பிரிவின் தகவல்களை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இவை கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது சிறுவர் ஆபாச படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல இலத்திரனியல் கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர் 2020 இல் இருந்து Snapchat, TikTok, Omegle, Likee மற்றும் KIK Messenge போன்ற சமூக வலைத்தளங்களில் dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock ஆகிய மற்றும் இதையொத்த பய…

    • 18 replies
    • 2.3k views
  17. ஸ்ரீலங்காவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த இடர் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், தமிழர்களால் I’M SRILANKA, I’M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டன. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.meenagam.com/ஸ்ரீலங்காவிற்கு-எதிராக-ப/

  18. தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி 19 Views “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடை பயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான் இங்கு உரையாற்றுகிறேன்” என்றும் குறிப்பிட்டார். அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது; “இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காகநடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர்தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப்பயண…

  19. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் போலியான அறிவிப்பு! AdminFebruary 3, 2021 அண்மையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. அண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. இது விடயமாக சில சங்கத் தலைவர்கள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இப்படியான போலிகளை இனம்கண்டுகொண்டு விழிப்போடு எமது பணிகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். தற…

  20. பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன் 02/03/2021 இனியொரு... பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு (Census 2021 ) ஆனது வருகின்ற மார்ச் மாதக் காலப்பகுதி (21st March 2021 ) முதல் நடைபெறவுள்ளது. இந்தக் குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் தேவையினை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அடுத்து வரும் ஆண்டுகளில் பிரித்தானிய அரசும், உள்ளூராட்சி அமைப்புகளும், பிற நலத்துறை அமைப்புகளும் தமது வளங்களைப் பங்கீடு செய்யவுள்ளன. 1801 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பானது இறுத…

  21. இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உ…

    • 1 reply
    • 1.2k views
  22. கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் ப…

    • 2 replies
    • 807 views
  23. பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளிய…

  24. விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு சுவிஸ் நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் இடம்பெற்ற வழக்கானது 2018ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பு என்றும் அவர்கள் எதுவித நிதி மோசடியிலும், தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து சுவிஸ் அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்டு அதிலும் தமிழீழ விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.