Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவராஜா சுகந்தன் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுகந்தன் நாடு கடத்தப்படவிருந்த போது கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தி அது தடுத்து நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் சுகந்தனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் லிபரல் கட்சியின் பாராளு…

  2. கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி கனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரு…

  3. நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை காப்பாற்றிய மெல்பேர்ன் மக்கள் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பேர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசனா என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார். பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது. சுலோசனா மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பி…

  4. மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ...

  5. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான். அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள். பின்னர் அதில் தெளிவுபெற்று இல்லை அது நல்ல வழிதான் எந்தக்கட்சிக்கு எப்போது காத்தடிக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எங்கு காற்றடித்தாலும் மூன்று முக்கி…

    • 1 reply
    • 632 views
  6. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி வரும் காலங்…

  7. தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…

  8. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர். தற்போது இராணுவத்தினர் போர்த் தளபாடங்களுடன் நிற்கின்றனர். பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்த…

  9. நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே? என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் போது நூலகத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்…

  10. இலங்கை மாணவனுக்கு பிரிட்டனில் சிறை குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மாணவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் நுழைவு விசா மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற குறித்த மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் இத்தாலிய நாட்டின் அடையாளத்துடன் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடமிருந்து போலி கடவுச் சீட்டு ஒன்றும்இ தொழில் வாய்ப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட போலி நுழைவு ஆவணமும் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த மா…

  11. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர். ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்…

  12. இலங்கை தமிழ் புகலிடதாரி நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு-ஆஸியில் ஆர்ப்பாட்டம் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தும் எனவே அவர் நாடு கடத்தப்படக்கூடாது …

  13. ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம். காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கை யாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது. அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின…

  14. ஒஸ்ரேலியாவிலுள்ள சிட்னி பெருநகரத்தில் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு சிறிலங்கா தூதுவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்படவிருப்பதனை அந்நாட்டின் பிரதான தமிழர் அமைப்புகள் கண்டித்துள்ளன. தற்போதைய தூதுவர் ஒரு தமிழராக இருக்கின்றபோதும் அவர் தொடர்ந்தும் தமிழர்கள் மேல் தொடர்ந்துவரும் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவராகவே செயற்பட்டுவருகின்றார் என்றும் தாயகமக்களுக்கான நிரந்தரமான சுமுகமான தீர்வு கிடைக்கும்வரை சமூகரீதியான உறவுகளை பேணவேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் கேட்டுள்ளன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: அன்பான உறவுகளே சிட்னியின் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள…

    • 2 replies
    • 1.3k views
  15. தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு பிரிட்டனின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அந்தக் கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் அந்தக் கடற்கர…

  16. இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…

    • 0 replies
    • 1.1k views
  17. உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது. நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம். 1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparisonஇணை…

    • 0 replies
    • 1.3k views
  18. யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்களின் கோடை கால ஒன்று கூடல் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் (கனடா) சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற இருக்கும் கோடை கால குதூகல ஒன்று கூடலுக்கு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரையும் சங்கம் அன்புடன் அழைக்கிறது. காலம்: 27- August -2016, சனிக்கிழமை 10:00 am - 8:00 pm இடம்: Morningside Park (Area #4), 390, Morningside Avenue, Toronto, Ontario

  19. நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா. வன்கூவர்- கனடாவிற்கு அதிக அளவிலான புதிய குடிவரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என கனடாவின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிவரவு அமைச்சர் அண்மையில் சீனா விஜயம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார்.அங்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனாவிற்கான விசா விண்ணப்பங்களை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்து அதிக அளவிலான சீன மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் உல்லாச பயணிகளிற்கு கனடாவின் கதவை திறக்க அதிகாரிகளின் ஆதரவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கனடா பூராகவும் பல ஆலோசனைகளை நடாத்தியுள்ளார்.வன்கூவரில் வர்த்தக தலைவர்களுடன் நடாத்திய வட்டமேசை மாநாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இளைய தலைமு…

    • 2 replies
    • 1k views
  20. பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID…

    • 0 replies
    • 519 views
  21. பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது. இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள்…

    • 0 replies
    • 673 views
  22. இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…

  23. லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த சிறப்பு பூஜை வரும் திங்கட்கிழமை 15ம் திகதி இடம்பெறுகிறது. இதன் போது 25,000 பேர் தேவாலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருட பூஜையின் போதும் தமிழர்கள் இங்கு அதிகளவில் கூடுவார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இவ்வேளையில் சிறப்பு பூஜைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன?! ‘பாதுகாப்பு உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாது!’ என உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலையில் லூர்துக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். பூஜையின் போது 269 காவல்துறை அதிகாரிகளும் 139 ஜோந்தாமினர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.