வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
கார் திருடர்களுக்கு உதவி செய்யும் Service Ontario ?!
-
- 0 replies
- 583 views
-
-
சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????
-
-
- 22 replies
- 1.5k views
- 3 followers
-
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்! கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது. இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஒவ்…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் தொழில்ரீதியாக விளையாடும் முதல் தமிழ் கால்பந்து வீரர் விமல் - முதல் நான்கு லீக்குகளில் பணிபுரிந்த தெற்காசிய பின்னணியில் இருந்து ஒரு சில வீரர்களில் ஒருவர். விமலின் குடும்பம் இலங்கையில் இருந்து வருகிறது மற்றும் மிட்ஃபீல்டர் வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு சிறிய கிராமமான ட்ரெலாவ்னிடில் வளர்ந்தார். 18 வயது இளைஞனின் வேகம், மனநிலை மற்றும் இரண்டு கால்களிலும் விளையாடும் திறன் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்படுகிறார் - ஆனால் அது மட்டும் அவருக்கு சிறப்பு இல்லை. ஒரு முன்மாதிரியாக இருப்பது ஒரு கால்பந்து வீரராக இருப்பதில் ஒரு பெரிய பகுதியாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார். "நான் அதைச் செய்ய முடியும் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறேன் - குறிப்பாக தமிழ் மக்கள…
-
- 0 replies
- 545 views
-
-
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் - கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல் நா.தனுஜா தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான…
-
-
- 15 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார்…
-
- 2 replies
- 452 views
-
-
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, "அகதிகளை வரவேற்கிறோம்", "வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்" என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்…
-
- 0 replies
- 509 views
-
-
கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார். தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வே…
-
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 699 views
-
-
19 OCT, 2024 | 03:52 PM (நா.தனுஜா) ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் தேர்தல் முறைமைகள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீதான வெளியகத் தலையீடுகள் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடத்தப்பட்ட பகிரங்க நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கை…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட அடையாளம் அதற்கமைய, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள் மற்றும் படங்கள் பெலாரஸ் புலனாய்வாளர்களா…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை இடம் பிடித்துள்ளார்.
-
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். புதிய குடியேற்றச் சட்டம் அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது. இத…
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்த…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills)…
-
- 0 replies
- 683 views
- 1 follower
-
-
"காதல் சடுகுடு" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், ஆலமரங்களுக்கு அடியிலும், போரிலாலான இடிபாடுகளுக்கு மத்தியிலும், தாரிணி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அழகு தேவதையாக இருண்ட நாட்களை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பிரகாசமான புன்னகையையும் மற்றும் அவளுடைய தாய்நாட்டின் அமைதியான குளங்கள் போல பிரகாசிக்கும் கண்ககளையும் கொண்டிருந்தாள். "பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!" இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும்…
-
- 0 replies
- 591 views
-
-
கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது gayanOctober 5, 2024 கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை கு…
-
-
- 1 reply
- 728 views
-
-
அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/…
-
- 0 replies
- 1.7k views
-
-
03 OCT, 2024 | 09:11 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ளார். கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையானது சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் மேலும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் ஜெனிவா ஊடக அமையத்தில் நடாத்திய கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்ட …
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா! பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிச…
-
- 0 replies
- 519 views
-
-
அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fa…
-
- 0 replies
- 576 views
-
-
"சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி
-
- 1 reply
- 674 views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் …
-
-
- 3 replies
- 837 views
- 1 follower
-