வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5822 topics in this forum
-
இருவர்களிற்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மேற்படி கட்சியின் தலைவரிற்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுனிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிரு…
-
- 0 replies
- 698 views
-
-
சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். இப்படியான சிறந்த முன்னெடுப்பை மேற்கொண்ட முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பில் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். http://lankaroad.net
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா - உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டியில் கனடிய தமிழர் அணி. [Thursday 2015-04-02 20:00] எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ,உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் ,இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் , உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள "The National Badminton Centre" Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் பிரமாண்டமான அரங்கில் நடைபபறவுள்ளது. …
-
- 0 replies
- 454 views
-
-
என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான். புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?
-
- 19 replies
- 2.3k views
-
-
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அன…
-
- 27 replies
- 2.8k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 8 replies
- 946 views
-
-
வணக்கம் எல்லாருக்கும். பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலத்தில் நான் அறிந்த என்னைக் கவர்ந்த சில சாதனைப் பெண்கள் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த சாதனை படைத்த பெண்களைப் பற்றிக் கூறுங்களேன். மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி1980ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில் எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் .இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி …
-
- 9 replies
- 28.3k views
-
-
பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு பல்லாயிரம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது . புலம்பெயர் தேசமெங்கும் தமிழ் மொழியும், கலையும், பண்பாடும், வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பி தனது இறுத்திக்காலம் வரை உழைத்த ஆசானுக்கு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வித்துடல் தாங்கி வர…
-
- 1 reply
- 790 views
-
-
பிரித்தானியாவில் தஞ்சமடைந்த அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் காவல்துறையின் முன்னாள் உறுப்பினராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் குடும்ப உறவுகளைப் பிரிந்த இவர் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு தப்பிச் செல்லும் முன்னர் கண்ணன் காளிமுத்து பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். மேலும் உயர் பாதுகாப்புடைய பிரித்தானிய குடிவரவு அகற்றுதல் மையத்தில் முன்னதாக இவர் இரண்டு முறைகள் தற்கொலை முயன்றதாகவும் தெ…
-
- 2 replies
- 933 views
-
-
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட நடராஜா சிவரூபன் என்ற இளைஞர் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் கடந்த 27ம் திகதி இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வாகன தரிப்பிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காலையில் தனது கடமைக்கு திரும்பும் போது வாகன தரிப்பிடத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையையும், அவசர சிகிச்சை பிரிவையும் சம்பவ இடத்திற்கு அழைத்தார். அவசர பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னராகவே அவர் இறந்து விட்டார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண மரணமாகவே பொலிசா…
-
- 0 replies
- 725 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்! நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, முக்கிய அறிவித்தல் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார். யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது. அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில் எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் . http://www.pathivu.com/news/38447/57//d,article_full.aspx
-
- 0 replies
- 621 views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html
-
- 0 replies
- 682 views
-
-
28ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்ச் திங்கள் 16ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். புலம்பெயர் நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப்பேரணியை நடாத்திக் கொட்டொலிகளை எழுப்பவுள்ளனர். பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பமாகிப் பல ஐரோப்பிய நாடுகளூடாக மேற்கொள்ளப்படும் விடுதலைச்சுடர் பயணமும் அந்நாளில் ஜெனீவாவில் நிறைவடையவுள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள இம்மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக பிரித்தானியாவிலிருந்து பேரூந்துகள் புறப்பட ஏற்பாடு…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 25 replies
- 3.2k views
-
-
இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன். வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்? ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?
-
- 50 replies
- 4k views
-
-
நான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஒன்ராறியோவின் முதல்வராகிவுடன் நிச்சயமாக தமிழினத்தை கனடாவில் ஏனைய இனங்கள் போல அது பெற வேண்டிய அந்தஸ்த்தைப் பெற வைப்பேன் என திரு. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மேற்படி கருத்தைத் தெரிவித்த திரு. பற்றிக் பிரவுன் அவர்கள், எனக்காகச் சேர்க்கப்பட்ட 41 ஆயிரம் அங்கத்துவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழர்கள். இன்று நீங்கள் செய்த ஒரு காரியத்தால் கனடாவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் உங்களின் மீது பார்வையைத் திருப்பியுள்ளார்கள். கனடிய மனிதவுரிமை மையம் மற்றைய எல்லா அமைப்புக்களும் ஒண்றினைத்து “பற்றிக்கிற்கான தமிழர்கள்” என செயலாற்ற வந்த போது இவ்வாறானதொரு வெற்றி சாத்தியம் என்பதை என்னால் நினைத்துக்…
-
- 0 replies
- 425 views
-
-
எம் உரிமைக்காக ஐ நா நோக்கிய பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல்! பாடலாசிரியர் ..ஈழப்பிரியன். குரல் ........... விஜயன், நாதன், சுலோஜன், ஈழப்பிரியன், அஸ்வினி. இசை ..............சேகர் இரா. படக்கலவை ..ஜனனம் . வெளியீடு .... கலை பண்பாட்டுக்கழகம். https://www.youtube.com/watch?v=8ieYETx13dM
-
- 0 replies
- 1k views
-
-
போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:- இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு த…
-
- 9 replies
- 2.4k views
-
-
ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் - இந்தியாவில் ஒளிபரப்ப தடை. கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது. டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக திகார் சிறையில் அடைக்…
-
- 0 replies
- 623 views
-
-
புலம்பெயர் மண்ணில் மீண்டும் ஒரு கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) மீதே இனம் தெரியாதோர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்துக்கள். http://seithy.com/breifNews.php?newsID=127766&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 964 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்…
-
- 8 replies
- 1.5k views
-
-
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர். தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு... Name Votes Jessica 1,03,53,440 Anushya 21,03,555 Spoorthi …
-
- 9 replies
- 3.4k views
-