நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
803 topics in this forum
-
எனது பார்வை ------------------------- பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். அமெரிக்காவில் பிறந்த John Perkins ஒரு பொருளாதார அடியாளாக வேலை செய்து பின்னர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்த வேலையை விட்டு வெளியே வந்து இந்த புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ஒரு ஜெம்ஸ் பாண்ட் கதை போல் தோன்றினாலும் அடுத்து வந்த ஒவ்வொரு பகுதியும் நாமும் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க பேரரசின் அடியாள் வேலையை தான் செய்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வையே ஏற்படுத்துகின்றது. இதுவரை நாம் பார்த்து வந்த உலகை வேறொரு கண்களால் பார்க்க தூண்டியது. எம் கண்முன்னே…
-
- 4 replies
- 3.4k views
-
-
-
- 0 replies
- 669 views
-
-
http://kuppilanweb.com/program/sivamahalingambook2013.html
-
- 0 replies
- 3.4k views
-
-
கழுகு நிழல் -புதிய அரசியல் பத்தி எழுத்து பாரம்பரியத்தின் தொடக்கம் யோ.கர்ணன் தமிழில் புனைவெழுத்துக்கள் அச்சாகும் அளவிற்கு புனைவுசாரா எழுத்துக்கள் அச்சாகின்றனவா என்பது தெரியவில்லை. இதற்கான பதில் பெரும்பாலும் இல்லையென்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ் சூழலில் புனைவுசாரா எழுத்துக்களின் தொகுப்பென்பது கோடைமழையை ஒத்த நிகழ்வென்பதே என் அபிப்பிராயம். பொதுவாகவே ஈழத்தில் பதிப்பக முயற்சிகள் சிரமமான விடயமென்று ஆகி வருகின்றன. இந்திய சூழலுடன் ஒப்பிடுகையில் புத்தகங்களிற்கான சந்தை வாய்ப்பு, விநியோக வலையமைப்பு, அச்சு தரம் என்பனவற்றில் வெகுவாக பின்தங்கியிருப்பதும் இதற்கான குறிப்பிடத்தகுந்த காரணங்கள். இப்பொழுது சொல்லிக் கொள்ளும்படியான பதிப்பக முயற்சிகள் இ…
-
- 0 replies
- 1k views
-
-
வாலியின் தமிழ்க்கடவுள் ஒரு சிறிய பீடிகை மும்பை போன புதிதில் (நவம்பர் 2000) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. இந்தி தெரியாது. ஆங்கிலம் அரைகுறை. சாப்பாடு சரியில்லை. நண்பர்கள் கிடையாது. பைத்தியம் பிடிக்காத குறை. மிகவும் நொந்துபோய் ஒரு நாள் சென்னையில் இருக்கும் நண்பரிடம் தொலைபேசியில் உரையாடினேன். அவர் கடிந்து கொண்டார். ‘வாரக் கடைசியில் ட்ரெயின் பிடித்து மடுங்கா (Matunga) போ, அங்கே சாப்பாடு கிடைக்கும் அரோரா தியேட்டரில் தமிழ்ப்படம் ஓடும், போய்ப் பார். கிரி ட்ரேடிங் கம்பெனியில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும் வாங்கிப் படி. சும்மா ஊர் புடிக்கலைன்னு புலம்பாதே’ என்று அறிவுரை கொடுத்தார். என்ன புத்தகம் வாங்குவது என்று அவரிடமே கேட்டேன். வாலியின் அவதார புருஷன், பாண்ட…
-
- 1 reply
- 7.3k views
-
-
இருள் தின்ற ஈழம் தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து... 1. கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும…
-
- 0 replies
- 780 views
-
-
இலங்கையின் சிறுசஞ்சிகைகளின் எழுச்சியும்,வீழ்ச்சியும். இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன. உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய த…
-
- 4 replies
- 3.1k views
-
-
வடுக்களின் அடையாளமாக..... இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - -க. நவம் புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்…
-
- 0 replies
- 659 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு நவம்பர் 1992ல் மரணித்த மலரவன் என்கின்ற போராளியின் நாட்குறிப்பானது தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலரவன் போரில் மரணித்ததன் பின்னர் போர் பற்றிய நாட்குறிப்பானது அவரது சக போராளித் தோழர்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. விஜின்தன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட மலரவன், எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இதுவே பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் தனது நாட்குறிப்பில் நிச்சயமற்ற வாழ்க்கை தொடர்பாகவும் அதன் ஏற்ற இறக்கங்கள் தொடர்பாகவும் போர் …
-
- 0 replies
- 690 views
-
-
மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி Friday, 05 July 2013 20:42 - யமுனா ராஜேந்திரன் - நூல் அறிமுகம் வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது…
-
- 5 replies
- 2k views
-
-
1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் நூல் இந்த தொகுப்பின் தொடக்க கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. பின்னர் 1990களில் சரி நிகர் வார இதழில் நான் எழுதிய கட்டுரைகள் இந்த தொகுப்பின் மையமாகியுள்ளது. புதிய நிலவரங்களை உள்வாங்கி அண்மையில் எழுதிய இரண்டு கட்டுரைகள் இந்நூலின் இறுதிப் பகுதியாக இடம் பெற்றுள்ளது. முன்னனி ஆய்வாளர் எம்.பெளசரின் முன்னுரையோடு இந்த நூலை எழுநா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. . தோழமையுடன் ஒரு குரல் June 22, 2013 · by ezhuna · in first-announce, Non-Fiction வ.ஐ.ச ஜெயபாலன் எழுநா வெளியீடு 10 யூன் 2013 இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்…
-
- 33 replies
- 3.5k views
-
-
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1582:2013-06-26-01-40-41&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 0 replies
- 444 views
-
-
காவிரியின் பாதையில், மலைசார்ந்த பசிய கிராமம். வயல்கள், கோப்பி, காடு, மூங்கில் என பசுமையின் அனைத்து வகையறாக்களாலும் நிறைந்த கூர்க் என்ற பெயருடைய, மைசூரை அண்மித்த தென்னிந்தியக் கிராமம். 19ம் நூற்றாண்டின் இறுதி, ஆங்கில காலனித்துவ காலம். உள்ளுர் வெளியூர் என வந்த பல படையெடுப்புக்களை வென்று கூர்க் கிராமம் இன்னமும் சுதந்திரமாய் இருந்த காலம். ஏழு மாதக் கர்ப்பிணித் தாயொருத்தி வயலில் நிற்கிறாள். நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொக்குகள் படையணியென எங்கிருந்தோ வியூகமமைத்து வந்து, அக்கர்ப்பிணியைச் சுற்றி வட்டமடித்துத் திடீரெனக் குத்தியெழும்புகின்றன. அவற்றின் செட்டைகளில் ஒட்டிச்சென்று விழுந்த வயல்நீர் திடீர் மழையாகிய அதே கணத்தில், அந்தத் தாய் தனது கால்களினிடையே வெப்பமான நீரினை உணர்கிறாள். கொக…
-
- 7 replies
- 1k views
-
-
பயங்கரவாத்திற்கு எதிரான போர், இறுதி யுத்தம் என்றெல்லாம் இராசபக்சேக்களால் சித்தரிக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு முடிவடைந்துவிட, அதன் பின்நிகழ்வுகள் நீடித்துவரும் ஒன்றாக, நேற்றுவரை போராளிகளாகவும், மாவீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் இருந்து வந்தவர் மீதான போற்றிப்பாடல்கள் இன்று வசைகளாக மாறிவிட்டன. விடுதலையின் மீட்பர்களான தமிழ் ஆயுத தாரிகள் குறிப்பாக பெண் விடுதலைப் போராளிகள் களச்சாவடைந்தது பற்றியல்ல அவர்கள் சோதனை சாவடிகளில் வைத்து காட்டிக் கொடுத்தவர்களால் கைது செய்யப்பட்டதோ, சிங்களப்படையிடம் சரணடைந்த பின்னர் தடுப்பு முகாமுக்குள் வைக்கப்பட்டதன் பின்னரானவையே முக்கியத்துவம் பெறுவதாய் இருக்கின்றன. இவை ஒருபடித்தான அல்லது நிலைத்த பார்வை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தந்த…
-
- 0 replies
- 695 views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. இந்நூல் பற்றியதான அறிமுகம் Links International Journal of Socialist Renewal என்னும் தளத்தில் Chris Slee எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. « ஒரு நாடானது பௌதீக ரீதியான அழிவுகள், ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகள், மக்கள் ஒ…
-
- 0 replies
- 616 views
-
-
"எனவே உமது பாவங்கள் நிலைக்கின்றன" - பைபிள் - ஆமென் புத்தக மதிப்புரை – கவிதா முரளிதரன் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆமென் தன்வரலாறு நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டையொட்டி கடந்த ஜனவரி சென்னை வந்திருந்தார் புத்தகத்தை எழுதிய சிஸ்டர் ஜெஸ்மி. ஆங்கிலத்தில் அந்த நூலை ஏற்கனவே படித்திருந்ததால் அவரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. எளிமையான ஒரு சுடிதாரில், பார்த்தவுடன் பிடித்துப்போகும் இயல்புடையவராக இருந்தார். அவருடன் இருந்த பத்து நிமிடங்களும் பேச்சும், உற்சாகமும் சிரிப்புமாகவே கழிந்தது. “நேற்று ரயிலில் சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தேன், என்னைப் பார்த்து முணுமுணுப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள். அனேகமாக எனது புகைப்படத்தை எதாவது ஊடகத்தில் பார…
-
- 2 replies
- 936 views
-
-
நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை - கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ இருக்கிறது. வாழ்க்கை புதிய தளங்களில் அகலிக்கும்போதும் வேர்விடும்போதும் …
-
- 1 reply
- 834 views
-
-
-
- 0 replies
- 445 views
-
-
மலரவனின் போர் உலா என்ற பயனக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால் WAR JOURNEY என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.ஏற்கனவே போர் உலா என்ற நூல் ஐந்து தடவைகள் அச்சிடப்பட்டு வெளியாகியிருந்தது.போர் உலா இலங்கை இலக்கியப்பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றது.இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவம் கட்டைக்காட்டில் இருந்து ஆனையிறவு முகாம் நோக்கி இராணுவ நடவடிக்கையின் (பலவேகயா 2- 1992) இராணுவ ஆய்வை மலரவன் செய்யப்பணிக்கப்பட்டு அவன் அதை பூர்த்தி செய்திருந்தான். அந்த ஆய்வு மிக அழகாக செய்யப்பட்டிருந்ததாக தலைவர் அவர்களால் சொல்லப்பட்டது.இராணுவம்,புலி…
-
- 3 replies
- 1.9k views
-
-
கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன் அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன். நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும் அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய தோல்வியின் வரலாறல்ல. இருள்சூழ்ந்த அந்தகாரத்தில் ஒரு சிறிய மின்மினிப்பூச்சியின் வழித்துணைகூட இன்றி யுத்த பேரிகைகளி…
-
- 1 reply
- 922 views
-
-
சிறிலங்கா தேசியத்திற்காக இதையும் நாங்கள் செய்கிறோமல்ல.....நமோ நமோ மாதா நம்மட மாதா...................................................................................................... அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங…
-
- 2 replies
- 867 views
-
-
யாழை கொஞ்சம் சூடு பிடிக்க வைப்பம் என்று தான் இந்த தலைப்பு. (ஏதோ யாழுக்கு என்னாலான உதவி). வாசக பெருமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இனிமேலே இவருடைய எழுத்துக்களை படிப்பதில்லை. அல்லது இவரது எழுத்துக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்று நினைத்தால் அந்த எழுத்தாளரையும் உங்கள் விளக்கத்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டால் ஒரு சூடான விவாதம் ரெடி. முக்கியமா யாழ் கள உறுப்பினர் பெயர்களை குறிப்பிடாதீங்கள். (தனி மனித தாக்குதல் இந்த திரியில் தடை செய்யபட்டுள்ளது) சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிர…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஜனநாயக வரி - நிலாந்தன் 14 ஏப்ரல் 2013 அ .இரவியின் புதிய நூல் ஆயுதவரி காலச்சுவடு வெளியீடாக விரைவில் வருகிறது அதில் நிலாந்தன் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம் அவரைத் துரத்திக் கொண்டுவரும் அல்லது அவரைச் சுற்றி வளைக்கும். அல்லது அவரைத் தோற்கடிப்பதுமுண்டு. படைப்பாளியின் வாழ்க்கை படைப்பைத் தோற்கடிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதேசமயம் மாறக்கூடிய படைப்பாளி தனது மாறாப்படைப்பை கடந்து புதிய உச்சங்களை நோக்கிப் போவதும் உண்டு. ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான இரவியும் ஒ…
-
- 3 replies
- 729 views
-
-
-
- 0 replies
- 574 views
-
-
யாழ் உறவுகளை அன்புடன் அழைக்கின்றார்கள் .
-
- 0 replies
- 656 views
-