Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட…

    • 2 replies
    • 1.3k views
  2. Book Description Publication Date: February 22, 2013 The tropical island of Sri Lanka is a paradise for tourists, but in 2009 it became a hell for its Tamil minority, as decades of civil war between the Tamil Tiger guerrillas and the government reached its bloody climax. Caught in the crossfire were hundreds of thousands of schoolchildren, doctors, farmers, fishermen, nuns and other civilians. And the government ensured through a strict media blackout that the world was unaware of their suffering. Now, a UN enquiry has called for war-crimes investigations. Those crimes are recounted here to the wider world for the first time in sobering, shattering detail. http://www…

    • 0 replies
    • 686 views
  3. நான் மரணித்திருக்க வேண்டும் இயக்குனர் சேரன் வெள்ளி, 18 ஜனவரி 2013 04:56 "எம் இல்லங்கள் தீக்கிரையானது எம் குழந்தைகள் மடிந்தனர் எம் பெண்கள் கற்பிழந்தனர் எம் இளைஞர் சுடப்பட்டனர் எம் தேசம் அழிக்கப்பட்டது நாங்கள் எம் மொழியைப் பேசியிருக்கக் கூடாது'' ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத்தில் ஒரு பெரும் போர் நடந்து முடிந்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கானோர் அகதியாக்கப்பட்டு புலம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் பெரியோரும் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் செத்து மடிந்தனர். ஒரு போரினால், இவ்வளவு துயரங்கள் நடக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கின்ற படிப்பினை. ஆனால் எதற்காக இந்தப்போர் நடந்தது? உலகம் தோன்றிய காலந்தொட்…

    • 8 replies
    • 1.7k views
  4. 11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது. இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலு…

    • 15 replies
    • 1.8k views
  5. தமிழகத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டுவந்த புத்தகமான ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்” புத்தகம் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள 338 London Road, Mitcham, London CR4 3UD எனும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க பல புலம்பெயர் முக்கியஸ்தர்கள், ஊடகவியளாலர்கள்,ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு இப்புத்தகத்தைப் பற்றி உரையாற்ற உள்ளார்கள். புலம்பெயர் ஊடகவியலாளர்கள் புத்தகத்தை வெளியிட புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட இருந்த அப்பாவி தமிழர்களை தன்னுடைய அசுரத்தனமான துணிச்சலால் பல முறை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற காரணமாக இருந்த…

  6. நீண்ட நாட்களாக கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை படிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். ஒருவாராக இந்த வார விடுமுறையில் வாசித்து விட்டேன். சோழ வரலாற்றைப் படித்தவர்களுக்கு இரண்டு விடயம் ஒரு தெளிவில்லாமலேயே இருக்கும். ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை மற்றொன்று "காந்தளூர்ச் சாலை கலமறுத்த" என்ற வாக்கியத்தின் பொருள். இதைப் பற்றி யாரும் தெளிவாக இதுவரை வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதவில்லை. இந்த இரண்டையும் தேடி இணையத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். முதன் முதலாக கோகுல் சேஷாத்ரி காந்தளூர்ச் சாலை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார். காந்தளூர்ச் சாலை பற்றி சுஜாதா "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" என்ற நாவல் எழுதியிருந்தார். ஏனோ அதை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு செ…

  7. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் - எதற்கு ஈழம்? PRAY FOR MY LAND ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்றுபுத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுதுநடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன்எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்தமனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறுசந்தர்ப்பங்களில் அவர் எழு…

  8. நண்பர்களே... இன்று புத்தக கண்காட்சி ஆரம்பம்.. அங்கே எனது சேரன் நூலகம் வெளியிட்டிருக்கும் "போரும் வலியும்" நூல் விற்பனைக்கு வந்துள்ளது... இது பதிப்பாளராக எனது முதல் நூல்... இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த கொடுமைகளை, பொதுமக்களுக்கு நடந்த அக்கிரமங்களை, இனஅழிப்பை சிங்கள அரசாங்கம் எப்படி நிகழ்த்தியது என்பதை அந்த பகுதியில் போர்க்காலங்களில் வாழ்ந்த சாவித்திரி அத்விதானந்தன் என்ற 67 வயது தாய் பதிவு செய்திருக்கிறார்... அதைப்படித்ததும் நாமே வெளியிட்டு இதை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என என் மனதுக்கு தோன்றியது... அதை இன்று வெளியிட்டு என் பணியை துவங்கியிருக்கிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவு அவசியம்... இதை வாங்கி படித்து, நண்பர்களிடம் பகிர்ந்து இதை எல்லா நண்பர்களின் முகப்பகுதியி…

  9. ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம் திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா.ஏகலைவன் அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில்? சட்டத் தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் ஆட்சியாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் சொல்லக்கூடிய வழக் காக ராஜீவ் கொலைச் சதி அமைந்திருப்பதாகவே முடிவுக்கு வரத் தூண் டுகிறது இந்தப் புத்தகம்! ராஜீவ் கொலை சம்பந்தமாக இரண்டு முக்கியமான புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. ஒன்று, அதன் விசாரணையைத்…

    • 15 replies
    • 1.6k views
  10. ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பல புதிய தகவல்களைத் தரும் நூல் இது. ம.பொ.சி. எழுதிய “சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு” என்ற நூலையும் பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிலப்பதிகா…

  11. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…

  12. [size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…

  13. நேர்காணல் - என்.சரவணன் 1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல. ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அற…

  14. Started by akootha,

    [size=5]மின்வலையில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-711-5.html[/size] [size=5]Author: Dr.R.Niranjchanadevi[/size] [size=5]காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவர் மாமன்னன் கரிகாலன். இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டுவந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் ஈடுபடுத்தினான். காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளும் பிரியும் இடத்திலும், மீண்டும் சேரும் இடத்திலும் உள்ள கரை மட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்துகொண்ட ‘புனல் நாடன்’ கரிகாலன் தகுந்த இடத்தில் பொருத்தமான கல்லணையைக் கட்டியது இந்தக் கால அணை வல்லுனர்களுக்கும் வியப்பை …

    • 3 replies
    • 1.7k views
  15. [size=5]பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ.[/size] [size=4]ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். [/size] [size=4]தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக ஆனது தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான். பள்ளியில், கல்லூரியில், பட்டங்கள் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில், கோவிலில், நீதிமன்றங்களில் என அனைத்து இடங்களிலும் தமிழ் தள்ளி…

    • 0 replies
    • 2.3k views
  16. ௦௦௦௦ கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த …

    • 3 replies
    • 863 views
  17. [size=5]இலக்கியங்களும் வசீகர வரிகளும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா[/size] நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் …

  18. ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நியம் புத்தக வெளியீட்டுவிழா சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 21:42 மாவீரர் நாளுக்கு முன்பாக வரும் நவம்பர் 23-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா நடத்த உறதி செய்யப்பட்டிருக்கிறது. பழ. நெடுமாறன் வைகோ சீமான் திருமாவளவன் ஜவாகிருல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முக்கிய தலைவர்களின் விரிவான அனிந்துரையில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டிய விளம்பரம்தான் இந்த புத்தகம். விரிவான அனிந்துரைகள் புத்தகத்தில் இருக்கும். http://thaaitamil.com/?p=37665

  19. [size=2][/size] [size=2] [size=4]பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர்கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.[/size][/size] [size=2] [size=4]விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை மு…

  20. [size=5]இந்தி மொழிப்பதிப்பு வெளியீடு: [/size] [size=5]" ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் "[/size] [size=5][size=6]Date: 2012-11-26 at 00:00 pm[/size][/size] [size=5][size=6]Address: India Islamic Cultural Centre, 87-88, லோதி ரோடு, நியூடெல்லி - 110 003, New Delhi, Delhi India[/size][/size] [size=5] தலைமை: அ.கணேசமூர்த்தி எம்.பி.,[/size] [size=5]வரவேற்புரை: டாக்டர் சி.கிருஷ்ணன்[/size] [size=5] [/size] [size=5]வெளியிடுபவர்: நீதிபதி ராஜேந்திர சச்சார் (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)[/size] [size=5] [/size] [size=5]முதல் படியைப் பெறுபவர்: குல்தீப் நய்யார் - எழுத்தாளர்[/size] [size=5] [/size] [size=5]வாழத்துரை: யஷ்வந் சின்ஹா எ…

    • 2 replies
    • 555 views
  21. வாசிப்போம் வாருங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன், ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம். பின்நவீனத்துவம். என்று ஒ…

  22. [size=4][size=6]கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் [/size] [/size] [size=4]யமுனா ராஜேந்திரன் [/size] [size=4]“ஒரு யுத்தச் சூழல் மக்கள் வாழ்நிலையின் சகலதளங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பிரதிபலிப்புகள் எதிர்வினைகள் என்பன பற்றிய அச்சமில்லாத விசாரணைக்கான ஒரு வெளி தேவையாகிறது. விடுதலைப் போராட்டமும். வீரமும் பெருந்தியாகங்களும் திடசித்தமும் அரசியல் நிலைமைகளின் ஒரு பரிணாமமாய் அமைந்த நிலையில் ஈவிரக்கமற்ற கொலைகளும் வதைமுகாம்களும், சர்வாதிகார அகங்காரமும் மறுபுறம் செழிக்கலாயி…

  23. [size=5]கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...![/size] தமிழ்மகன் வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும்…

  24. கவிதைத் நூலைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை! ---------------------------------- உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை கருணாகரன் [size=4]நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றி…

    • 2 replies
    • 791 views
  25. [size=5]பாலைகள் மீது பறக்கும் துயரப்பறவைகள்[/size] [size=4] -இரவியின் 'பாலைகள்நூறு' கதைகள்மீதானவாசிப்பு-[/size] டிசே. தமிழன் 1. வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.