மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
கீதையில் இருந்து சில முத்துக்கள் கீதை 4:32 இப்படி பலவகைப்பட்ட செயல்பாடுகளில் கைக்கொள்ளப்படும் மனநிலை யோகங்களால் உண்டாகிற யாகங்கள் மட்டுமே வேதங்களால் அங்கீகரிக்கபட்டவை ! இதன் நுட்பத்தை சரியாக புரிந்துகொள்வதால் மட்டுமே மாயைகளிளிருந்து விடுதலை பெற்ற ஆத்துமாவாய் மாற முடியும் !! கீதை 4:33 எதிரிகளை நிர்மூலமாக்குகிற பார்த்தா ! யோகங்களின் வழியான யாகங்களே ; உலகத்தினர் பொருட்களால் செய்யும் யாகங்களை விட சரியானது ! செயல்பாடுகளின் வழியான யோகங்களே ஞானத்தையும் விளைவிக்க கூடியது !! ... கீதை 4:34 ஆன்மாவை உணர்ந்த குரு ஒருவரை அணுகி அவருக்கு பணிவிடைகள் செய்தும் தாழ்மையுடன் விசாரித்தும் அவரிடமிருந்து உண்மையை உள்வாங்குவாயாக !தன்னை உணர்ந்த ஆத்துமாக்கள் மட்டுமே தாங்கள் அறிந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
எதை இழந்தாய்...? இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா! இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்..! இழந்ததெவை? என இறைவன் கேட்டான்! பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை.. பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்..? கால மாற்றத்தில், இளமையை இழந்தேன்.. கோலம் மாறி, என் அழகையும் இழந்தேன்.. காதலித்து, அவளிடம் இதயமிழந்தேன்.. காணாமல் போனாளே, அவளை இழந்தேன்.. வயதாக ஆக, உடல் நலமிழந்தேன்.. எதை என்று சொல்வேன்..? நான்.. இறைவன் கேட்கையில்..! எதையெல்லாம் இழந்தேனோ.. அதையெல்லாம் மீண்டும்தா..! என்றேன். அழகாகச் சிரித்தான் பரமன்.. ”கல்வி கற்றதால், அறியாமை இழந்தாய்! உழைப்பின் பயனாய், வறுமையை இழந்தாய்…
-
- 4 replies
- 1.1k views
-
-
. திருச்சிற்றம்பலம் முன்னுரை நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே. உய்வார்கள் உய்யும் வகை: “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத…
-
- 11 replies
- 5k views
-
-
திருவடி தீட்சை (உபதேசம்) முதல் இரு நிமிடங்கள் மட்டும் ஒலிப்பதிவு தெளிவில்லாமல் உள்ளது!!!
-
- 0 replies
- 1.5k views
-
-
குண்டலினி சக்தி குண்டலினி சக்தி குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள். குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாத…
-
- 9 replies
- 18.7k views
-
-
ஜோதியின் இயற்கையானது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்காகவே இந்த மீள்செய்தி. கடவுள் நம்பிக்கை என்பது நம் எல்லோரிடமும் இருக்கின்ற ஒன்று. ஆனால் மனிதர்களிடத்தில் காணப்படும் இந்த கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு கடவுள் பெயரைச்சொல்லி தஞ்சம் பிழைப்பவர்கள்தான் இவ்வுலகில் ஏராளமானவர்களை காணலாம்.. இது எல்லா மதத்திலும் இருக்கின்ற வேதனைக்குரிய விடயமே. இவ்வாறு கடவுள் பெயரைச்சொல்லி பணம் கறந்து பிழைப்பு நடத்துபவர்களை நாம் என்ன சொல்வது? ஆம் இங்கே தரப்பட்டுள்ள காணொளியை தயவுசெய்து முழுமையாக பாருங்கள். கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த சபரிமலை ஐயப்பனின் மகரNஐhதி பற்றிய மர்களும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. நக்கீரன் பத்திரை மேற்கொண்ட பெரும் முயற்ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆறுமுக நாவலர் வரலாறு நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நி…
-
- 16 replies
- 38.3k views
-
-
வணக்கம் கள உறவுகளே , மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்ற குறுந்தொடர் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . இதனது நோக்கமும் வழமை போலவே இளையவர்களைத் தேடித் தொடுவதேயாகும் . இதில் ஏதாவது வரலாற்றுப் பிழைகள் இருப்பின் உரிமையுடன் திருத்தி இந்தப்பதிவை மேலும் மெருகேற்றுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் . மேலும் இது எனது சொந்த அறிவும் , விக்கியும் கலந்த கலவையாகும் . எனது அருமை அக்கையார் ரதி இந்தப்பகுதியில் ஓர் நீண்ட தொடரை எழுதும்பொழுது , எனது குறுந் தொடரும் தொடரப்போவதால் ஏற்படும் நியாயமான மன உறுத்தலுடனேயே தொடருகின்றேன் . இதற்காக ரதி என்னைத் தப்பாக எடுக்கமாட்டார் எனவும் நம்புகின்றேன் . வழமைபோலவே உங்கள் கருத்துக்களையும் , விமர்சனங்களையும் நாடிநிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் . …
-
- 117 replies
- 26.2k views
-
-
திராவிட மாயை(!?) டான் அசோக் ஞாயிறு, 22 ஏப்ரல் 2012 10:20 பயனாளர் தரப்படுத்தல்: / 9 குறைந்தஅதி சிறந்த ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன…
-
- 23 replies
- 5.7k views
-
-
... சில வருடங்களுக்கு முன் ..... ஒரு வெள்ளிக்கிழமை ... ஈலிங் அம்மன் கோயிலுக்கு .... மாலை நேர பூஜை காண, மகனையும் அழைத்து சென்றிருந்தேன். பூஜை நேரத்து முன் போனதால், அம்மனுக்கு முன் சப்பாணி கட்டியபடி அமர்ந்து இருக்க, மடியில் மகன். ... பூஜைக்கு முன் அம்மனுக்கு பாலாபிசேகம் - பல குடங்கள், தயிர் - அதுவும் பல, அதற்கு முன் தேன், பழங்கள், அது, இது என்று அள்ளி தோய வார்த்துக் கொண்டிருந்தார், கோயில் பிரதமகுரு! ... நானோ பக்தி பரவசத்தில் கைகளை கூப்பியபடி உருகி இருக்க ... என் மடியில் அமர்ந்திருந்த மகனோ ...... "அப்பா, ஏன் இவ்வளவற்றையும் அநியாயமாக ஊத்துகிறார்கள்/கொட்டுகிறார்கள்?" என்றான். ... உண்மை! .. ... ஆண்டவனா/ஆண்டவளா கேட்கிறார்கள், எம்மை இவ்வளவற்றையும் ஊற்றி அநியாயப்படுத்தச் சொல்…
-
- 21 replies
- 2k views
-
-
-
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.” அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார். பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான். “சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை …
-
- 5 replies
- 1.6k views
-
-
திருக்குறள் அதன் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன். http://www.thetamil.net/kural.html
-
- 0 replies
- 2.6k views
-
-
WWW... இதை ஒன்றும்.. வெப் சைட் முகவரி தாறத்துக்காக எழுதல்லைங்க. இதுக்குப் பின்னாடி ஒரு சமாச்சாரமே இருக்குதுங்க. அதாவது வந்துங்க.. இந்த மூன்று WWW களை நம்ப முடியாது என்று சொல்லுறாங்க பிரிட்டிஷ் வெள்ளைக்காரங்க. அவை தாங்க.. இவை. முதலாவது.. W வுக்கு சொந்தக்காரிகளான.. women.. இராண்டாவது weather.. மூன்றாவது work...! இவற்றை மட்டுமில்லைங்க.. இன்னொன்றையும் நம்ப முடியாதுங்க. அதுதாங்க தமிழ்நாட்டில இருந்து செய்மதிகளூடாக பரவி.. ஆழ் கடல் ஆழிகள் பல கடந்து.. தொலைதூரம் தாண்டி.. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எல்லாம்.. அவங்க பின்னாடி ஓடி வருகுதே... மானாட மயிலாட புகழ்.. நம்மட கலைஞர் கருணாநிதியின் சொந்தக்காரங்க நடத்திற.. கலைஞர் தொலைக்காட்சி தாங்க அது..! அப்படி என்ன அதில நம…
-
- 6 replies
- 995 views
-
-
மாயப் பொன்மான் மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது. இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது. சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். சீதை காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறாள்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறாள். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது (அது மனதில் தோன்றும் ஆசை). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும்.” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார். இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்…
-
- 1 reply
- 854 views
-
-
சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் ஆற்றிய உரை
-
- 0 replies
- 904 views
-
-
. http://www.youtube.com/watch?v=-YbUEZfJJaQ 12 வயதில் இஸ்ரேலில் இருந்து இந்தியா சென்றார். 18 வருடங்கள் இந்தியாவில் பௌத்தம் கற்றார். 30 வயதில் இஸ்ரேல் திரும்பினார். பௌத்த தர்மம் போதித்ததினால் ரோமர்களினால் சிலுவையேற்றப்பட்டார். சிலுவையில் உயிர் துறக்கவில்லை. சீடர்களினால் காப்பாற்றப்பட்டு காஷ்மீருக்குக் கொண்டுவரப்பட்டார். வயது முதிர்ந்து இறப்பு வரை காஷ்மீரில் போதனைகள் செய்தார். (இயேசுவின் வாழ்க்கையில் 12 இலிருந்து 30 வயது வரையான பகுதி பைபிளில் இல்லை.) .
-
- 2 replies
- 1.2k views
-
-
செல்வச்சந்நிதி செல்வச்சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான, சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது. சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்ட முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இங்கு இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். முருகனின் கையிலுள்ள வேலையே வைத்…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர். இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாரா…
-
- 2 replies
- 888 views
-
-
யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகு படுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற் கோயில்கள் செய்ய விரும்பி கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலையும், தெற்கில் கைலாசநாதர் கோவிலையும் (புனரமைத்தும்) மேற்கில் வீரமாகாளி அம்மன் கோவிலையும், வடக்கில் சட்டநாதர் கோவிலையும் 1470ம் ஆண்டளவில் அமைத்தான். காளி, கொற்றவை, துர்க்கை எனும் நாமங்களுடன் விளங்கும் அம்பிகை வடக்கு வாசலில் எழுந்தருளி…
-
- 0 replies
- 753 views
-
-
ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும். அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும். தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை யென்று அழைக்கப்படுகிறாள். அந்த நாகபூஷணியம்மை சண்டிலிப்பாய் பகுதியைச் சார்ந்த சீரணிப்பதியிற் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திருவருள் மகிமை மிகவும் பெரியது. அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை ச…
-
- 0 replies
- 752 views
-
-
ஈழ மணித் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனிச்சைவ கிராமம் குப்பிழான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,சிங்களவர் ஆகியோரால் ஈழநாடு அடிமை கொள்ளப்பட்ட போது பல ஊர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தது. ஆனாலும் குப்பிழான் கிராமம் தன் தனித்துவத்தை என்றும் இழக்கவில்லை. எமது கிராமம் ஆனது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்கு மிக அதிகமாகும். சின்னஞ் சிறிய எமது கிராமத்தில் பல சைவ ஆலயங்கள் உள்ளன. இது தான் எமது மக்களின் தனித்துவமான அடையாளத்திற்கு சாட்சி. இன்றும் புலம்பெயர்ந்தாலும் எமது ஆலயங்களை கை விடவில்லை பலர் நிதி உதவிகளை வாரி வழங்கி ஆலயங்களின் புனர்நிர்மானத்திற்கு செய்யும் பங்களிப்பு அளப்பரியது. எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து விடாமால் எமது புலம்பெயர் உறவுகள் கர்னனிடம் உள…
-
- 0 replies
- 687 views
-
-
குப்பிழான் அன்னை ஈன்று எடுத்த அற்புதம் தான் எங்கள் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார். அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 04-02-2012 சனிக்கிழமையன்று குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைவராக ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சீ.குணலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரிய பொது நிகழ்வாக இது கணிக்கப்படுகிறது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர், ஆலய குரு ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். வரவேற்புரையை திரு.செ.ரவிசாந் அவர்களும், த…
-
- 0 replies
- 894 views
-
-
இலங்கையில் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது. இவ்வூரின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் கோயிலாகும். இக்கோயில் திருமேனியார் மகன் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வெங்கடாசலப்பிள்ளை என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பெரியாருடைய கனவிலே சிவபெருமான் தோன்றித் தனக்கோரு கோயில் எடுக்கும் படி பணித்தார். இவர் பரம்பரையாக வந்த வயல் நிலங்களைப் பயிரிட்டுச் செல்வத்தைப் பெருக்கினார். 12 கப்பல்களை அமைத்து பட்டினத்துப் பிள்ளையார் போன்று கடல் வணிகஞ் செய்து பெரு வணிகனாகி இக்கோயிலை இந்தியாவிலிருந்து ஸ்தபதியார்களை வரவழைத்து பெரிய கோவிலாக அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு ராஐகோபுரம் அமைக்கப்பட்டது. கோய…
-
- 0 replies
- 840 views
-