சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்தத்தின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ரீதியான பாதிப்பு இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு அல்லது கசப்பான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கும் போது நாம் அனைவரும் உளவியல் ரீதியான …
-
- 1 reply
- 623 views
-
-
போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக …
-
- 0 replies
- 622 views
-
-
நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர். வீடுகளில் பெரியவர்கள் ஒன்றுக்கூடிய ஏதாவது, நல்லவிடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கும் போது. பல்லிகள் சீச்சிட்டால், “பார்த்தாய்தான் பல்லியே சொல்லிவிட்டது” என்பர்; யாராவது தும்மிவிட்டாலும், அதனையே அனுமதிக்கான குறியீடாக எடுத்துக்கொள்வர். ஆனால், அதிர்ஷ்டலாபச் சீட்டில், ஒரு கோடி ரூபாய் பரிசு கொட்டப்போகிறது என, வீட்டுக்குள் ஒருவர் கூறும்போதுக்கூடக், தவறுதலாக யாராவது தும்மி…
-
- 0 replies
- 622 views
-
-
வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால்,…
-
- 0 replies
- 621 views
- 1 follower
-
-
பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத் எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின் வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும…
-
- 1 reply
- 620 views
-
-
பதினெட்டுக்குள்ளே 1 - மீறல்களும் உரிமைகளும்! | குழந்தைகள் மென்மையானவர்கள்... அவர்களை பூக்களைப் போல கையாள வேண்டும். | இணையத்தில் படித்ததாக நண்பர் ஒருவர் சொன்ன கதை இது. இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே உள்ளன. ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது. தூரத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்தால் யாரைக் காப்பாற்றுவீர்கள். இப்படி ஒரு கேள்வி ஒரு கூட்ட…
-
- 0 replies
- 619 views
-
-
பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல் சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான். மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர…
-
-
- 1 reply
- 619 views
-
-
கணவருடன் பள்ளி மாணவர்களுடன் படம்: குட்டி ரேவதி மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி. உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்... எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன். .சமூகப் பணியில…
-
- 0 replies
- 619 views
-
-
பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்…. இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார். சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற …
-
- 0 replies
- 618 views
-
-
நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும். நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர…
-
- 0 replies
- 617 views
-
-
'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். "உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர். அது எப்படி? உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், `The Breakup Shop' என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லைய…
-
- 0 replies
- 616 views
-
-
ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும் ப்ரதீப் குணரட்ணம் படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும். “Little deeds of kindness Little words of love Make our earth an eaden Like the heaven above” என்று அமையும் வரிகளை கடக்கும்போது ஒரு பெடியன் அண்ணை, ஏடன் தோட்டம் எண்டா என்ன? எண்டு கேட்டான். (இருந்த மாணவர்கள் அனைவரும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கிறிஸ்தவ படி கடவுளின் மூத்த சிருஷ்டிப்புகள் பற்றியும்…
-
- 0 replies
- 616 views
-
-
1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி…
-
- 0 replies
- 615 views
-
-
-சிலாபம் திண்ணனூரான்- தன் அதிநுட்ப உழைப்பால் எத்தனையோ மனிதர்ளை சந்தோஷப்படுத்தும் வகையில் சாவி தயாரிப்பவர் ஜே ஏ. எம். அன்சார். கொழும்பு, கொம்பனி வீதியைச் சேர்ந்த அன்சாரை சந்திப்பதற்காக பாமர மனிதர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினை இவர் சாவி தயாரிக்கும் ஸ்தானத்திற்கு வருவதை காண முடியும். சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தையில் இலங்கையின் பிரபல புகைப்பட நிறுவனம் ஒன்றின் முன்றலிலேயே இவரின் தொழில் நடைபெற்று வருகின்றது. உல்லாசப் பயணிகளுக்கான வழிகாட்டியாக ஆரம்பத்தில் தொழில்புரிந்த அன்சார், தனது இருபதாவது வயதில் தனது நண்பரோடு இணைந்து சாவி தயாரிப்புத் தொழிலை பழகியுள்ளார். பின்னர் 1991இல் சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கும் சில மாதங்கள் …
-
- 0 replies
- 614 views
-
-
ஒரு காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட்ட தேவதாசிகள் தற்போது அதே சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்வதற்கான சூழலை சித்தாவாஏற்படுத்தியுள்ளார். தனது ஏழாவது வயதிலேயே தேவதாசியாக்கப்பட்ட சித்தாவா, அந்த ஒடுக்குமுறையிலிருந்து தான் மீண்டு வந்ததுடன், தேவதாசிகள் பலருக்கு விடுதலை பெற்றுத்தந்து, மறுவாழ்வு அமைத்துக்கொடுத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றுள்ளார். சித்தாவாவின் வாழ்கை பயணத்தை அறிவதற்காக அவரது கிராமத்திற்கு சென்றோம். மகாராஷ்டிர-கர்நாடக எல்லையிலுள்ள பெல்காம் மாவட்டத்தின் காட்ப்ரபாவிலுள்ள சிறிய பங்களா போன்ற அவரது மாஸ் என்னும் அமைப்பின் அலுவலகதிற்கு சென்றோம். தேவதாசிகள் சமூகத்திற்கு இவர் ஆற்றிய பணிகளை பாராட…
-
- 0 replies
- 613 views
-
-
''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான். …
-
- 0 replies
- 613 views
-
-
-
“ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு முழு கிராமம் தேவை” என்ற புகழ்பெற்ற ஆங்கில முதுமொழியானது இன்றைய காலகட்டத்திற்கும் சிறந்தமுறையில் பொருந்துகின்றது. எனினும் கிராமங்களுக்கே உரிய பிணைப்புமிக்க வாழ்க்கை முறையானது தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னைய காலத்தில் புதிதாய் பெற்றோராக மாறிய தம்பதியினருக்கு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தை பராமரிப்பில் உதவியாகவிருந்து ஊக்கமளித்தனர். என பேபி ஷெரமிக்கின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தனுஷ்கா சில்வா உடனான நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். அவருடானன கேள்வி பதில் நேர்காணலின் முழு வடிவம் வருமாறு, 1. நிறைவான குழந்தை வளர்ப்பு ((Inclusive Parenting) ) என்றால் என்ன? மற்றும் தற்போதைய சூழ்நி…
-
- 0 replies
- 611 views
-
-
-
- 0 replies
- 610 views
-
-
ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவ…
-
- 1 reply
- 610 views
-
-
வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல் If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்த…
-
- 0 replies
- 609 views
- 1 follower
-
-
ஜெயலக்ஷ்மி ராமலிங்கம் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1…
-
- 0 replies
- 609 views
-
-
'மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல': தில்லி உயர் நீதிமன்றம்! 'திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 'தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித…
-
- 0 replies
- 609 views
-
-
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( " பாலுங்கசந்ததடி சகியோ படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உ…
-
- 1 reply
- 608 views
-
-
"சிந்து சம வெளியில் கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley" மார்ஷல் முத்திரை [Marshall seal] 338 என அழைக்கப்படும் சிந்து வெளி முத்திரையில், இரு சேவல் கோழிகளும் ஒரு திமிழுடன் கூடிய எருதுவும் காணப்படுகிறது. இங்கு சேவல் கோழியின் கழுத்தின் வடிவமும் அதன் நேராக உள்ள வால் இறக்கைகளும், அவை நன்றாக வளர்க்கப்பட்ட அல்லது பேணப்பட்ட கோழிகள் என்பதை காட்டுகிறது. இந்தக் கோழியைக் கூர்ந்து பார்த்தீர்களேயானால் இதனுடைய கழுத்து உயர்ந்தும், வால் தூக்கலாக செங்குத்தாக இருக்கும். மேலும்.கால்கள் நிலை கொள்ளாமலும் நிலத்தில் இருந்து சற்று உயர்ந்தும் தரையில் படாமலும் இருப்பது தெரியும். அதுவும் இரண்டு கோழி. ஆகவே இவை இரண்டும் ஒரு மொஹெஞ்சதாரோ சண்டைக் கோழியாகத்தான் இருக்க வேண்டும். அதே…
-
- 0 replies
- 608 views
-