சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்த…
-
- 0 replies
- 428 views
-
-
இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF சர்வதேச ரீதியாக 5 வயதுக்குக் குறைவான சுமார் 700 மில்லியன் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், போதிய ஊட்டச்சத்து இன்றியோ அல்லது அதிக உடல் பருமனுடனேயோ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனமான சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊட்டச்சத்து இன்றி உணவு உற்கொள்ளும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட முதல் குழந்தைகள் நல அறிக்கையில் இந்த தகவல் இடம்பெ…
-
- 0 replies
- 248 views
-
-
நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்’ மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை 41 Views கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். க…
-
- 0 replies
- 299 views
-
-
விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி? Spencer Platt உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்'. காதல் பல போர்களை தோற்றுவித்துள்ளது. பல போர்களை முடித்தும் வைத்துள்ளது. வரலாறும், புராணங்களும், நம் சினிமாக்களும் காதலை கொண்டாடாத விதமில்லை. சொல்லப்போனால் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடியிருக்கிறது. இன்னும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிடவும் நாம் தவறவில்லை. யார் பிறந்த தினமும், இறந்த தினமும் மறந்தாலும், உலகில் யாருக்கும் காதலர் தினம் மறந்து போவதில்லை. அப்படி கொண்டாடப்படும் காதல், தோல்வி அடைந்தால், அந்த நபரின் நிலை என்னவாகும். நிச்சயம் உங்கள் நண்பரோ, தோழியோ காதல் தோல்வியால் புலம்பி அழு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா? ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு துறைமுகநகர் தனிநாடாகும் ஆபத்து – அரசை எச்சரிக்கின்றார் விஜயதாச 21 Views அரசாங்கம் தயாரித்துள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாகக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். கொழும்பு நாராஹென்பிட்டி, அபயராமய விஹாரையில் உத்தேச சட்ட மூலம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையைவிடுத்தார். கொழும்பு துறைமுகநகர் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுகநகரம் நாட்டின் நிர்வாகவிதிமுறைகளில் இருந்து முற்றாக விடுபடும் என…
-
- 0 replies
- 325 views
-
-
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில், தமிழ்நாட்டு வாழ்க்கை, எவ்வாறு இருந்தது என்பதை,ஒரு வெள்ளையரால் எடுக்கப் பட்ட, இந்தக் காணொளி,தெளிவாகக் காட்டுகின்றது! https://www.facebook.com/photo.php?v=10151302536751608 மூலம்: முகநூல்
-
- 0 replies
- 1k views
-
-
குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள்…
-
- 0 replies
- 706 views
-
-
தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்! Wednesday, 03 December 2014 11:52 ‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம். பழைய கார்களின் அணிவகுப்பு போன்ற விசேட தினங்களில் ஆகப்பழைய கால ஃபுட் போர்ட் வைத்த கார்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் கலந்துகொள்வதைக் காணலாம். மற்றபடி இங்கே அன்றாடப் பாவனையிலுள்ள பிரபலமான பழைய கார்களில் அதிகளவானவை 'ஒஸ்டின் மினி கூப்பர்', 'மார்க்' போன்ற மினி கார்கள்தான். யாழ்ப்பாணத்துக் கார்களைக் காணக் கிடைப்பதில்லை. ஒருமுறை சிறி அல…
-
- 0 replies
- 836 views
-
-
பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும் பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறா…
-
- 0 replies
- 642 views
-
-
முன்குறிப்பு: இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது. ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா? இதற்காகப் பலரிடம் சண்டை போட்டதுண்டு. பலர் சொன்ன சமாதானங்கள் எதிலும் நான் உடன்பட்டதில்லை. பெயர் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளம்.; அவனது அந…
-
- 0 replies
- 3.6k views
-
-
[size=4]ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார்கள் . ஹெல்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கேட்டார்கள் . நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றனர்.. நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்[/size][size=3][size=4]தேன். இன்று....[/size][/size] [size=3][size=4].[/size] [size=4]வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மன…
-
- 0 replies
- 576 views
-
-
கொரோனா உருவாக்கும் குடும்ப முரண்பாடுகள் இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கும் கொரோனா வைரஸினால் எல்லோரும் போலவே நாங்களும் அச்சத்திலும் பயத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினை, அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான பிரச்சினை. அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை புத்தஜீவிகள், மருத்துவர்கள், துறைசார்ந்தவர்கள் மிக அருமையான வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் மற்றொரு மறைவான பிரச்சினை. இது வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு பிரச்சினை. அதுதான இன்றைய இக்கட்டான சூழலில் குடும்பங்களில் புதிதாகத் தோன்றியுள்ள பிரச்சினை அல்லது முரண்பாடு. …
-
- 0 replies
- 604 views
-
-
பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ன? -பவானி தம்பிராஜா ஓவியம்: டிஷாந்தினி நடராசா விழிவழியேகும் காதல் விரைந்து நிறைந்து மூட்டிய காதல்த்தீ எழுப்பிய விரகதாபம் காமசூத்திரத்தின் வழியேகி காமனையும் வென்று தணிக்கப்படலாம். அது இருவழிப் பயணமெனில் காதலுடன் காமமும் கலந்த மென்புணர்ச்சியாம். அஃதன்றி தன் உடலிச்சை தீர்க்கவென ஒருவழிப் பயணமாய் வன்புணர்வு செய்பவன் கணவனாய்க் காதலனாய் கண்ணாளனாய் இருந்தாலும் அவன் காமுகனே! கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொ…
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையின் ஹார்வி வைன்ஸ்டீன்கள் யார்? உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட…
-
- 0 replies
- 750 views
-
-
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்…
-
- 0 replies
- 727 views
-
-
உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயற்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால…
-
- 0 replies
- 410 views
-
-
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம். இந்த நூறு பேர் யார்? நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம். நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்கா…
-
- 0 replies
- 230 views
-
-
ஈழத்தில் உருவாகும் குறும்படங்கள், குறுந்திரைப்படங்கள் எதைக் குறி வைத்து வருகின்றன சகலரின் கருத்துக்களையும் பதியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி தோல் நிற வேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும் இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும் மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் நவீன யுகத்தில் ஒரு பகுதியாக தெரிந்த வரலாறாக ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்கள் எதிர் கொண்ட அவலமும் துயரமும் அவர்தம் விடுதலை போராட்டமும் மாறிய பொழுதும், உலகளாவிய ரீதியாக, தம்மை வெள்ளையர்கள் என சொல்லிக் கொண்ட மேற்கத்திய காலனியங்கள், தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்களை பின்காலனியச் சூழல் வரை வெள்ளையர் அல்லாத கறுப்பர்கள் என்று ஒதுக்கும் ம…
-
- 0 replies
- 933 views
-
-
உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்! செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல். இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்க…
-
- 0 replies
- 828 views
-
-
-
உண்மையான நண்பன் யார்? எந்த நேரத்திலும் உதவி செய்ய விருப்பம். நண்பனுக்கும் நண்பனுக்கும் உள்ள வேறுபாடு நம்பமுடியாத உண்மைகள் சிறந்த நண்பர்கள் கடன் வாங்குகிறார்கள் சிறப்பு இடம்எங்கள் வாழ்க்கையில். அவர்கள் புதிதாக "சிறந்தவர்" என்ற பட்டத்தைப் பெறவில்லை. இந்த பரிசை அவர்கள் வென்றனர் அதிக எண்ணிக்கையிலான மகிழ்ச்சி, முயற்சி, கஷ்டம், தொடர்பு மற்றும் அன்பு. மறுபுறம், உங்கள் சிறந்த நண்பர் உங்கள் மரியாதையை இறுதிவரை பாதுகாப்பார், ஏனென்றால் அவருக்கு விசுவாசத்தின் ம…
-
- 0 replies
- 2.3k views
-
-
வெற்றி பெற வேண்டுமா? -விவேகானந்தர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா... அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக…
-
- 0 replies
- 868 views
-