சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
புலத்தில் தமிழ்ப்பெண்கள் தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதல…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............ உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு "புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்" அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம். வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகி…
-
- 11 replies
- 2.5k views
-
-
ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது. அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும். இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே தற்செயலாக இந்த ஆக்கத்தை படிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது..............இதில் இருக்கும் கருத்தோடு எனக்கு சில உடன்பாடுகள் இருந்தாலும் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை........ஏனெனில் எல்லாரும் அப்படிபட்டவர்கள் என்று சொல்ல முடியாது,ஆனாலும் சில பிரச்சினைகள் நடைபெறுவதை அறியபெற்றிருகிறேன்............உறவு
-
- 6 replies
- 2.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! காலங் காலமாக பெண்கள் புடவை கடைக்கு போய் புடவை வாங்குவது பற்றி சினிமா, கவிதை, கதை, நாடகம் என சகல துறைகளிலும் கிண்டல் அடிக்கப்பட்டு வந்துள்ளது. இது அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களிற்கு பொருத்தமான பகிடியாய் இருக்கலாம். ஆனால், இந்தக் காலப்பெண்கள் இப்போது இவ்வாறு உடுதுணிகள் வாங்குவதில் நேரத்தை மணித்தியாலக் கணக்கில் கடைகளில் செலவளிக்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விசயம் (அவர்கள் புடவை கட்டுவதில்லை என்பது வேறு விசயம்). ஆனால்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்... நான் உடுதுணி கடைகளிற்கு ஆண்களுடன் (நண்பர்கள், உறவினர்கள்) சென்று அறிந்ததில் இருந்து ஆண்கள் பெண்களை விட அதிக நேரம் உடுதுணி வாங்குவதில் நேரத்தை செலவளிக்கின்றார்கள் என சொல்லத் தோன…
-
- 29 replies
- 5k views
-
-
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறhர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிhpழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிhpழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக... சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா? கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்ப…
-
- 28 replies
- 12.1k views
-
-
எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்.. "படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.." "ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்த…
-
- 26 replies
- 4.8k views
-
-
இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள். இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இது தப்பு என்பதுதான் எனது கருத்து. நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? எ…
-
- 29 replies
- 6.3k views
-
-
மாங்கல்ய தாரணம் மாங்கல்யதாரணம் - தாலி கட்டுதல். மனித வருக்கம் நீங்கலாகமற்றப் பிராணி வருக்கங்க ளெல்லாவற்றிலும் கலியாணமில்லாமலே வருக்க விருத்தி நடந்துவருகிறது. மனித வருக்கத்தில் அப்படிப்பட்டவிருத்திகுறைவு. கலியாணம் என்பது மனித வருக்கத்திற்றானுண்டு. கலியாணஞ் செய்யும் விதம் தேசந் தோறும், சமுகந்தோறும், சமயந்தோறும் பேதப்பட்டிருக்கும். அப் பேதங்களில் சைவசமயத்தவரின் கலியாணம் ஒன்று. அது தனக்கென விதிமுறை யுடையது. அவ்விதிமுறை சிவாகம சார்பாயது. அது சிறப்புடைய புராண சரித்திரங்கள் பலவற்றில் அமைந்து கிடப்பதைக் காணலாம். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது ஒரு விதி. கிறிஸ்தவக் கலியாணங்கள் கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெறுகின்றன. ஆனால் இசுலாமியரின் கலியாணங்கள் அவர்கள…
-
- 1 reply
- 2k views
-
-
வாழ்க்கையில் முன்னேற..... -திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியிடு வாழ்க்கையிலும் ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் 1. உடல் நலம் காப்பது: அளவாக உண்ணுங்கள். இறைவனுக்குப் படைத்து அதைப் பிரசாதமாக உண்ணுங்கள். சாத்விகமான உணவை உட்கொள்ளுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடியுங்கள். அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள். 2. சக்தியைக் காப்பது: கூடியவரை பிரம்மசரியத்தைக் கடைப்பிடியுங்கள். விந்து சக்தியை காப்பாற்றுங்கள். மனப்பக்குவம் பெற்றபின் உடல் உறவைக் கடைப்பிடியுங்கள். தினமும் இரண்டு மணி நேரம் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு மணி நேரத்திற்குக் குறையாமல் மெளன விரதத்தைக் க…
-
- 15 replies
- 5.5k views
-
-
அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள் பிரேம்-ரமேஷ் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. அந்த "ஆண்மை" உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் "ஆண்மை" நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது "பெண்மை" விடுதலையில்லை என்பது உறுதி. "ஆண்மை"யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள். இவற்றை 1928 -ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல் நன்றி www.tamil.2.ag
-
- 6 replies
- 3.2k views
-
-
ஒவ்வொரு நாடும் அன்றும் சரி, இன்றும் சரி குற்றவாளிகளைத் கடுமையாகத் தண்டித்தே வந்திருக்கின்றன. இதன் மூலம் குற்றம் ஒழிக்கப்படும் என்று சொல்வது தப்பு என்று சிலர் வாதிட்டாலும், மறுபக்கம் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுவர்களும் உள்ளார்கள். தமிழ்மன்னர்களும் முன்பு கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். நிலவறையில் அடைத்து வைப்பது, கழு மரமேற்றுவது என்று விசித்திரமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. சிலர் அதை வழங்குவதன் மூலம் இன்பம் கண்டும் இருந்தார்கள். அரசியல் காரணங்களுக்காகவும் சிலர் தண்டிக்கப்பட்டிருந்தனர் இங்கே இணைக்கப்படுகின்ற படங்கள் சீனா வழங்கிய தண்டைனகள் பற்றியது. ஒரு மேசையில் ஒருவரைப் படுக்க வைத்து, அவரது தலை, கை, கால்களை மேசையோடு சேர்த்துப் பிணைத்துவி…
-
- 10 replies
- 2.7k views
-
-
உறவுகளுக்கு மதிப்பளிப்போம்... குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் சிதைவுகளே, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா.,சபையால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பம் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு. காலமாற்றத்துக்கு ஏற்ப குடும்ப அமைப்பும் மாறிக்கொண்டு வருகிறது.குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது. இந்த வருடம் "குடும்பத்தில் உள்ள ஊனமுற்றவர்கள்' என்பது விவாத தலைப்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊனமுற்றவர்களுக்கு குடும்பம் தான் பக்கபலமாக இருக்கிறது. சில இடங்களில் ஊனமுற்றவர…
-
- 7 replies
- 1.8k views
-
-
இதோ பத்து ஐடியாக்கள்! சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும். சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும். எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், …
-
- 9 replies
- 2.1k views
-
-
அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது. இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது. அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்…
-
- 21 replies
- 3.5k views
-
-
ஆப்பிரிக்காவில் சாதிமுறை இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட, தற்போது நடப்பில் உள்ள, மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும். இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பத…
-
- 3 replies
- 1.2k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio.html
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.thestar.com/article/204762 இதைப்பார்த்து அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரியலை சும்மா சொல்லக் கூடாது நாங்கள் எவ்வளவு முன்னேறிட்டம் :angry: :'(
-
- 10 replies
- 2.2k views
-
-
ஆவிகள் பற்றிக் கண்ணதாசன் உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம். திடீரெண்டுஅ…
-
- 10 replies
- 2.1k views
-
-
காமக் கட்டுப்பாடு 14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது. காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திர…
-
- 9 replies
- 2.6k views
-
-
இந்தப் பெண் பொய்யை விழுங்குகிறாள்.. ஏன் என்று தெரியும் தானே...??! ----------------------- பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ( பாலியல் வாழ்வு) தொடர்பில் அதிகம் பொய் தகவல் சொல்பவர்களாக இருப்பது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது..! பொய் சொல்வதைக் கண்டறியும் உபகரணங்கள் (lie-detectors) கொண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வழங்கிய தகவல்களில் அதிகம் பொய் சொல்லி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..! இதே ஆய்வு ஆண்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது..! "Women are more sensitive to social expectations for their sexual behaviour and may be less than honest when asked about their behaviour in some survey conditions," said Fisher…
-
- 52 replies
- 6.8k views
-
-
பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல் நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்? நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை? நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது. 1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல் 2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல் 3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல் இவற்றின் நோக்கங்கள் நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள…
-
- 18 replies
- 8.3k views
-
-
கற்பு என்னும் திண்மை பதிப்புரை உயிர்கள் பல. அவையனைத்திற்கும் பரமசிவன் பல உடல்களைக் கொடுத்தருளினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களில் மனிதன் ஒருவன் மட்டுமே குடும்பமென ஒன்றை அமைத்து ஒழுக்க நெறியில் வாழ்கிறான். நம் முன்னோர் காலத்தில் குடும்பவாழ்வுக்கெனச் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் "கற்பு" என்பது பெண்பாலாருக்கு மட்டில் விதிக்கப்பட்ட ஒன்று. பண்டைக்கால வழக்கில் மனைவியை "அனுசாரிணி" (பின்பற்றுபவள்) எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆசிரியர் திருவள்ளுவ தேவநாயனாரும் "கொழுநற்றொழுதெழுவாள்" என்று குறிப்பிட்டார். இருபாலாரும் ஒருவரையொருவர் தொழவேண்டுமெனக்கூறினாரில்லை. அவ்வாறு ஆணுக்கு முதன்மையும், பெண்ணுக்கு அடங்கிய நிலையுமே பண்டைக்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம்) அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அதே பகுதியை சேர்ந்தவன் ராஜா. இவன் அனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான். ராஜா மாணவி ரேகாவை ஒருதலையாக காதலித்து வந்தான். ஆனால் அவள் அவனது காதலை ஏற்க மறுத்தாள். இதனால் ரேகா எங்கு சென்றாலும் ராஜா பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து வந்தான். தொடக்கத்தில் அவன் என்ன சொன்னாலும் ரேகாதலை குனிந்தபடி அந்த இடத்தை விட்டு சென்று விடு வாள். அவளது மவுனத்தை பார்த்து அவர் தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் கடிதம் கொடுப்பது, சைகை காட்டுவது... என்று தொல்லை கொடுக்கத் …
-
- 9 replies
- 3.4k views
-