Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிறார்களை வீட்டுவேலைக்கு அமர்த்தும் அவலம் இனிமேலாவது ஒழியட்டும்! ஜூலை 23, 2021 –சி.அருள்நேசன் கல்வியியல் பட்டதாரி சிறுவர்கள் சமூகத்தின் செல்வங்களாவர். இன்றைய குழந்தைகள் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். அவ்வாறான சிறார்களை அவதானமாகவும், அன்பாகவும் வளர்க்கும் பொறுப்பு வளர்ந்தோருக்கு இருக்கின்றது. ஆனால் எமது சமூகம் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை பார்க்கின்ற போது வேதனை வருகின்றது. டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிசாலனியின் மரணம் மற்றும் கல்கிசை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமையும் விற்பனை செய்யப்பட்டமையும் போன்ற சம்பவங்கள் கவலையே தருகின்றன. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது என்பது மிகவும…

  2. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகமும் சிந்து வெளி நாகரிகமும் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது .அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்…

  3. "ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்" இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. …

  4. நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா? மின்னம்பலம்2021-09-30 முனைவர் சகுப்பன் கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இர…

  5. (கோப்புப் படம்) சமூகத் தொடர்புகளில் முழுமையான நேர்மையை எதிர்பார்ப்பவரா நீங்கள்? ஆம் எனில், நீங்கள் சமூகத் தொடர்புகளில் சுமுகமான முறையில் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகமும், மெக்சிகோ பல்கலைகழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், மிகவும் நேர்மையான சமூகத் தொடர்பு நமது நட்பு வட்டத்தைக் குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நேர்மையற்ற ஒரு சமூக வட்டத்தில் நாம் இருப்பின், அது மிக மோசமான வட்டாரத்தை உருவாக்கும் என்று கூறும் இந்த ஆய்வு, சமூகச் செயல்பாடுகளில் இடைநிலையாக இருப்பதுதான் உகந்தது என்று தெரிவிக்கின்றது. இதுகுறித்து சமூக உளவியலாளர்கள் கூறுகையில் நாம் பயன்படுத்தும் நான்கு விதமான பொய்கள் குறித்த…

  6. குறைந்த வருமானம் ஈட்டும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தகவல்! ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதமானோர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவதால் முறைப்பாடு அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்’ குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள பெண்களிடையே ஷாஹீன் மகளிர் நலச் சங்கத்தினால் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் …

    • 1 reply
    • 419 views
  7. ஜெசிகா க்ளெயின் பிபிசி ஒர்க் லைஃப் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல தம்பதி "இரவில் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்வது" போல வாழ்ந்ததாக டெக்சாஸின் ஹ்யூஸ்டன் நகரைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் எமிலி ஜெமியா கூறுகிறார். முன்னதாக வீட்டிற்கு வெளியே பல கடமைகளில் உழன்ற தம்பதி, தொற்றுநோய் காரணமான பொதுமுடக்கத்தின்போது தங்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக உணர்ந்தனர். வீட்டிலேயே இருப்பதால் மெத்தனமாக இருந்தபடி, நெருக்கமான தருணங்களுக்கு, அதிக நேரம் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் அவர்கள் கருதினர். "ஆரம்பத்தில், விடுமுறை நாட்களில் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்களைச் செய்ய அது அவர்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால், தொற்றுநோய் முடி…

  8. லண்டன்: உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோயில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய கோயில், அங்கு வசிக்கும் இந்து சமய மக்களை உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறது. அந்தக் கோயில், இந்து மத நூல்கள் எதுவும் உடல் உறுப்புகள் தானம் செய்வதை தடை செய்யவில்லை என்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இங்கிலாந்தில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் உடல் உற…

  9. பெண்ணுக்குள் ஆண்... புதிதாக தோன்றும் மனச்சிக்கல்கள்... நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ பெண்களுக்கு தைரியம் தேவை. அந்த தைரியத்தை அவர்கள் தங்கள் நடை, உடை, செயல்பாட்டில் காட்டவேண்டியது அவசியம்தான். ஆனால் அதில் இன்னொரு பக்கம் சற்று முரண்பாடு கொண்டதாக இருக்கிறது. சில பெண்கள் ஆண்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்துகொள்கிறார்கள். கூந்தலையும் ஆண்களை போன்று வெட்டிக் கொள்கிறார்கள். ஆண்களோடு தங்கள் நட்புவட்டத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆண்களைப்போலவே செயல்படவும் ஆசைப்படுகிறார்கள். இத்தகைய போக்கு ஒரு எல்லைவரை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் எல்லைமீறும்போது அவர்களுக்கு தாங்கள் பெண் என்பதே மறந்துபோய்விடுகிறது. அப்படி ஒரு சில பெண்கள…

  10. நண்பன் சொன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர். மனம் கொத்திப்பறவை சினிமாவில் நாயகனின் ஒரு தலை காதலுக்கு உதவி செய்ய போன கூட்டாளிகளை பெண்ணின் உறவினர்கள் நையப்புடைப்பார்கள்..! இதே பாணியிலான ஒரு சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது. நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்துவருகிறார். இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அந்த …

    • 0 replies
    • 415 views
  11. பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ன? -பவானி தம்பிராஜா ஓவியம்: டிஷாந்தினி நடராசா விழிவழியேகும் காதல் விரைந்து நிறைந்து மூட்டிய காதல்த்தீ எழுப்பிய விரகதாபம் காமசூத்திரத்தின் வழியேகி காமனையும் வென்று தணிக்கப்படலாம். அது இருவழிப் பயணமெனில் காதலுடன் காமமும் கலந்த மென்புணர்ச்சியாம். அஃதன்றி தன் உடலிச்சை தீர்க்கவென ஒருவழிப் பயணமாய் வன்புணர்வு செய்பவன் கணவனாய்க் காதலனாய் கண்ணாளனாய் இருந்தாலும் அவன் காமுகனே! கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொ…

  12. கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது? Dr. ஜெயஸ்ரீ ஷர்மா Representational Image கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை நாம் இன்னும் முழுவதுமாகக் கணிக்கவில்லை என்கிறது அறிவியல் உலகம். மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கான ஆலோசனை மையங்களின் தொலைபேசிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இமெயில்கள் வந்து குவிகின்றன. கோவிட்-19 இன்னும் என்னென்ன பிரச்னைகளையும் ஆச்சர்யங்களையும் வைத்துள்ளதோ என்று எண்ணும்படியாக மனநலமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிபரங்கள் அண்மையில் வந்துள்ளன. கோவிட்-19 பாதித்தவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு மன…

  13. “கடைசி விவசாயி” படத்தை அண்மையில் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போது அது எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக, போலி முற்போக்கு வியாபார உத்திகள் இல்லாமல் இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது. கடைசி விவசாயியான மாயாண்டி தாத்தா போலி வழக்கில் சிறையில் விசாரணைக் காவலில் இருப்பார். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரிந்தும் ஆவணத் தாக்கலில் நேரும் தாமதத்தால் அவரை சிறையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிக்கு வருவதை அழகாக காட்டியிருப்பார்கள். இதுதான் நீதிமன்றத்தின் நடைமுறை - அங்கு யாருக்கும் உண்மை, பொய் குறித்து அக்கறை இருப்பதில்லை. சிறையில் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இளைஞ…

  14. பெண்கள் - கொரோனா - சமூகம். 'பெண்களுக்கு கொரோனா" பெண்களை மேலும் பலவீனப்படுத்தியது! - அருள்கார்க்கி '4 வருசமா கொழும்பில காமென்ட் இலதான் வேலை செஞ்சேன். அம்மா, அப்பா தோட்டத்திலதான் வேலை செய்றாங்க. குடும்ப கஸ்ரத்தை போக்கதான் நான் கொழும்புக்கு வேலைக்கு போனன். இப்ப அங்க கொரோனா வந்ததால இங்க வந்தன். என்னோட யாரும் பேசுறாங்க இல்ல...என்னய கண்டாலே தள்ளிபோறாங்க. ஏண்ட 'பிறன்சும்' என்னோட கதைக்கிறாங்க இல்ல." என்கிறார். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24). கொழும்பில் கொரோனா காரணமாக காமென்ட் மூடியதால் மூன்று மாதங்கள் விடுதியில் தங்கியிருந்தவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினை அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. சாதா…

  15. சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்: *பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும். *பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள். *மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை. *அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலு…

  16. வாசிப்பதற்கான அவகாசம் ஹ்யூ மக்வயர்- தமிழில் :அ. சதானந்தன் ஆறு மாதங்களுக்கு முன் நான் தகவல் சமுத்திரத்தில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இணையமும் அதிலுள்ள அத்தனை அற்புதங்களும் ஒற்றைத் தொடுகையில் அளிக்கக்கூடிய வாசிப்பு இன்பங்களுக்கு அளவேயில்லை என்றிருந்தேன்- விக்கிப்பீடியா, டிவிட்டர், பாட்காஸ்டுகள், நியூ யார்க்கர், மின்அஞ்சல், டெட் உரைகள், பேஸ்புக், யூட்யூப், அவ்வப்போது பார்க்கக்கூடிய பஸ்ஃபீட், ஏன், ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூவும்கூட. சொல்லிக்கொண்டே போகலாம். இணையத்தின் ஆனந்தங்களுக்கு அளவில்லை, இப்போதும் தொடர்கின்றன. ஆனால் இது எப்போதும் நமக்கு ஆனந்த அனுபவத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன. வேலைநேரத்தில் கவனம…

  17. முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான். கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே, உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான். போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே, உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான். பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே, தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும், பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான். நன்றி; தென்றல்

  18. உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயற்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால…

    • 0 replies
    • 408 views
  19. சிறுவயதில் படும் கஷ்டம் வாழ்வில் நல்ல நிலையை அடைய வைக்கும்.

  20. IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை - வடக்கு கிழக்கில் முதலாவது கைத்தொழில் பேட்டை என்ற பெருமைக்கும் உரியது.

  21. வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பெரிய தோல்விகளை சந்தித்தவர்கள்

    • 0 replies
    • 404 views
  22. இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான பதிவு. நாமும் இதைச் செய்கிறோமா?

  23. `உண்மையான போராளி அவர்!' - ஐ.ஏ.எஸ் கனவுக்காக ஆக்ஸிஜன் உதவியுடன் போராடிய லத்தீஷா மரணம் குருபிரசாத் லத்தீஷா ``எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதல் தான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்” - இது லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள். ``ஒரு விஷயத்தைதான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நெருக்கடி சூழ்நிலைகளை தகர்த்து வெளியில் வருவதற்கு நாம் தயாராக வேண்டும். எதற்காகவும் பின்வாங்காமல், எப்போதும் பாசிட்டிவ்வாக சிந்திக்க வேண்டும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மனச்சோர்வு…

  24. கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை. இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.