உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26996 topics in this forum
-
ஆப்கானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 28 படையினரும் 2 பொது மக்களும் பலி [01 - October - 2007] [Font Size - A - A - A] ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 இராணுவத்தினரும், 2 பொதுமக்களும் பலியானதுடன் 21 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸின் மீது நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் பஸ் இரண்டாகத் துண்டாடப் பட்டிருப்பதுடன் தாக்குதல் இடம்பெற்ற இடத்தினைச் சுற்றி மனித உடல்கள் சிதறிக் காணப்படுகின்றன. 2001 இலிருந்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் வரிசைப்படுத்தலின்படி இத் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது. …
-
- 0 replies
- 921 views
-
-
'சன்'னை முந்திய 'கலைஞர்'! திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது. திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது. முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. கலைஞர் டிவிக்கு 10க்கு 9…
-
- 5 replies
- 2.6k views
-
-
சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம் ************************************************** தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது. இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப …
-
- 0 replies
- 837 views
-
-
மும்பை:சர்வதேச அளவில், 2025ம் ஆண்டில், இந்தியா, பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும். அப்போது, சராசரி இந்தியரின் சம்பளம், இப்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும்; அவர்கள் செலவு செய்வதும், மிக அதிகமாக இருக்கும்.சர்வதேச அளவில் நிதி, வர்த்தகம் தொடர்பாக, மெக்கன்சி நிறுவனம் எடுத்த சர்வேயில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச அளவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக முன்னேறி வருகிறது. அதில் தொய்வு காணப்படவில்லை. இதே வேகத்தில், அதன் பொருளாதார வளர்ச்சி இருக்குமானால், 2025ம் ஆண்டில், உலகில் அது, முன்னணி இடத்தை பெறும். இந்தியாவில் பல நாட்டு நிறுவனங்ளும் போட்டிபோட்டு, வர்த்தகம் செய்யக் காரணம், இந்தியர்கள் செலவு செய்வதை பார்த்துத்தான். மற்ற…
-
- 6 replies
- 2.5k views
-
-
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் நெடுநாளையக் கனவு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் திட்டம் செயலுக்கு வந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைச் சீர்குலைப்பதில் இந்துத்வா சக்திகளும் அ.தி.மு.கழகம் போன்ற அதன் துணை சக்திகளும் முனைந்து செயல்படுகின்றன. ‘இராமர் பாலத்தை இடித்தால் பூகம்பம் வரும்!’ என்றார் இராம கோபாலன். அரசியல் நடத்த அந்த இல்லாத பாலத்தை பி.ஜே.பி. ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அது என்னய்யா இராமர் பாலம்? பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றானாம். அந்த தேவியை மீட்க இலங்கைக்கு ராமன் பாலம் அமைத்தானாம். அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்த சக்திகள் போர்க்கோலம் ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
இந்துத்வ பண்பாடு என்ன என்பதனை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறன, தற்போதைய அரசியல் நிலவரங்கள். 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்சின் கூற்றுக்கு ஏற்ப மதத்தையே மூலதனமாக்கிக் கொண்டு அந்த அபினின் மூலம் வரும் போதையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் மதவெறி சக்திகள் தற்பொழுது அதனை செய்து கொண்டிருக்கின்றன. அன்பையும் பண்பையும் போதிக்க வந்தவை மதங்கள் என இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. மாற்றுக் கருத்து சொன்னவரின் தலையையும், நாக்கையும் துண்டு துண்டாக வெட்டுவதும், அவரது உறவினர் வீட்டைத் தாக்குவதும், பேருந்துக்களை எரிப்பதும் தான் அந்த மதம் சொல்லிக் கொடுத்த "பண்புகள்" போலும். குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் கொன்று குவித்த "இந்து"மத …
-
- 0 replies
- 805 views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லா…
-
- 0 replies
- 855 views
-
-
நிறைய தருணங்களில் நீதிமன்றங்கள்தான் இந்தியாவின் ஜனநாயக, மற்றும் தற்சார்பு ரீதியான தார்மீக அடிப்படைகளைக் காப்பாற்றும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றன. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பன்னாட்டு மருந்து நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு, உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவர்டிஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கிளீவெக் (Gleevec) என்ற பெயரில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை (இந்தியாவுக்குள்) செய்யும் உரிமையை காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறு…
-
- 0 replies
- 1.1k views
-
-
காங்கிரஸ் பொதுச் செயலராக ராகுல் நியமனம்
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா கோர்ட்டில்இ மாகாண சபை உறுப்பினர் எர்னி சாம்பர்ஸ்இ விநோதமான வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கடவுளுக்கு உத்தரவிடும் படி கோரியுள்ளார். காட்டு வெள்ளங்கள்இ பெரும் பூகம்பங்கள்இ நாசப்படுத்தும் எரிமலைகள்இ நகரையே சூறையாடும் சூறாவளிகள்இ இதர சூறாவளிகள்இ நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் கடவுள் தான் காரணம்’ இயற்கை சீரழிவுகள்இ செயற்கை பயங்கரவாத சம்பவங்கள் போன்றவற்றை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் அல்லதுஇ கடவுளுக்கு உரிய தண்டனையை அறிவிக்க வேண்டும்’ என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது சற்றுமுன்
-
- 9 replies
- 2.2k views
-
-
14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம் புதுடில்லி: டில்லியில்இ 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்இ 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார். டில்லியில்இ பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன்இ அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண்இ மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார். கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில்இ பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இ…
-
- 22 replies
- 9.4k views
-
-
சென்னையில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புக்கு 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை சென்னை, செப். 23: சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த சாலைகளின் பராமரிப்புப் பணிக்கான திட்டங்களை தமிழக அரசு அளிக்காததால் நிதி ஒதுக்கப்படவில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சென்னையில் உள்ள திட்ட இயக்குநர் வி. சென்னா ரெட்டி அளித்துள்ள பதில்கள் விவரம்: சென்னையில் ஜி.எஸ்.டி. சாலை, ஜி.என்.டி. சாலை, ஜி.டபிள்யு.டி. சாலை என 48.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. …
-
- 0 replies
- 779 views
-
-
Sunday September 23 2007 00:16 IST 725 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாத அவல நிலை உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! விழுப்புரம், செப். 23: தமிழகத்தில் 725 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்க முதுகலை தமிழாசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தமிழ் மொழி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆ.வ. அண்ணாமலை தெரிவித்தார். தினமணி செய்தியாளருக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 725 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் …
-
- 0 replies
- 771 views
-
-
தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது. முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது. பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான். இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது …
-
- 11 replies
- 5.3k views
-
-
முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக முன்னாள் எம்.பியும், வி.எச்.பியைச் சேர்ந்தவருமான சாமியார் வேதாந்தி மற்றும் பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. உடனடியாக வேதாந்தி தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். அபபோது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், முதல்வர் கருணாநிதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிர…
-
- 1 reply
- 840 views
-
-
கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும் மு. இராமனாதன்ன் ந. முருகேச பாண்டியன் அக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வாஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்…
-
- 0 replies
- 596 views
-
-
விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது மத நடவடிக்கை லக்னெü, செப். 21: மும்பையில் விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகரை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் விநாயகரை வழிபட்டு, நடனமாடியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பரேலியில் உள்ள இஃப்தா-மன்சார்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. "எந்த ஒரு முஸ்லிமும்ம் சிலைகளை வழிபடக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி "கல்மா'வை அவர் பட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் வழக்கொழிந்து வரும் உலக மொழிகள் [22 - September - 2007] [Font Size - A - A - A] உலகம் முழுவதிலும் வழக்கத்திலுள்ள 7000 மொழிகளில் இரு வாரங்களுக்கு ஒரு மொழிவீதம் அழிவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா, சேர்பியா மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநில கிராமங்களின் மொழிகள் அழிவடைந்துவரும் அதேவேளை, இதற்கு பாரம்பரியத்திற்கும் வரலாற்றிற்கும் உருக்கொடுக்கும் மக்கள் மரணமடைந்து வருவதே காரணமென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருகிவரும் மொழிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமொன்று அழிவடையும் ஆபத்தை நெருங்கியுள்ள மொழிகளில் மிகவும் முக்கியமான 5 மொழிகள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிகளை இ…
-
- 0 replies
- 874 views
-
-
100 கிராமங்கள் மூழ்கியது: சீனாவை தாக்கிய புயல் - 20 லட்சம் பேர் வீடு இழப்பு திகதி : வுரநளனயலஇ 18 ளுநி 2007இ ஜளுயசயலெயஸ சீனாவை வரலாறு காணாத வகையில் புயல் தாக்கியது. 1000 கிராம மங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர். சீனாவின் தெற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் கடு மையான புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது. இந்த புயலுக்கு ஹவிபா' என்று பெய ரிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. மணிக்கு 165 மைல் வேகத்தில் புயல் காற்று தாக்கியதில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தது. கடலில் 30 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந் தன. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிக…
-
- 8 replies
- 1.5k views
-
-
கடந்த வாரம் இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் மீது, இஸ்ரேலால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டதும் பலஸ்தீனத்தின் காசாப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பான கமாஸ் Qassam ஏவுகணைகள் கொண்டு தாக்கியதில் 70 இஸ்ரேல் படைவீரர்கள் காயமடைந்தனர். கமாஸ் அமெரிக்கா.. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிடப்பட்ட அமைப்பாகும். Qassam வகை ஏவுகணைகளுடன் கமாஸ் வீரர்கள். Qassam rockets (இலகுவாக ஏவக் கூடிய ஏவுகணைகள். தாக்குதல் வீச்சு எல்லை 6- 11 கிலோ மீற்றர்கள். எளிமையான தொழில்நுடம். ஆனால் மிகையான அச்சுறுத்தல்) இஸ்ரேலின் அதியுயர் தொழில்நுட்ப வளங்களையும் முறியடித்து கமாஸ் இந்தத் தாக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு செய்தியயை அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை. தகவல் உதவி: Press unit Trust of India. http://news.digitaltoday.in/news/india.jsp...ory&id=8671 Sethusamudram project: Centre denies existence of Rama Press Trust of India New Delhi, September 12 In the midst of a political controve…
-
- 85 replies
- 11.4k views
-
-
http://www.reuters.com/news/video/videoStory?videoId=66263 அணு குண்டுக்கு நிகரான அழிவு சக்தி படைத்த வாக்யூம் குண்டு எனப்படும் தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. குண்டுகளுக்கு தந்தை என்று கூறப்படும் இந்த பயங்கர குண்டினை ரஷ்யா சோதித்து பார்த்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புப் படை துணைத் தலைவர் அலெக்சாண்டர் ரக்ஷின் கூறுகையில், உலகின் முதலாவது தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு குண்டு அல்லாத குண்டுகளில் மிகவும் பயங்கரமானது, அழிவு சக்தி அதிகம் கொண்டது. அதேசமயம், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அணு குண்டு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்…
-
- 13 replies
- 2.9k views
-
-
லண்டனில் வங்கிக் கொள்ளை இருவர் சுட்டுக்கொலை என்றும் தகவல் கூறுகின்றது . ITN - 13.09.2007 18:03Two shot dead as police foil bank raidTwo robbers have been shot dead after armed police foiled a raid on a security van outside a bank.One died at the scene in Chandlers Ford, Hampshire, and a second was taken to hospital where he was later pronounced dead.The shooting, involving the Metropolitan Police Flying Squad, happened at a branch of the HSBC.Witnesses described one of the robbers holding a gun to the head of a security guard before he was shot by police.A Scotland Yard spokesman said: "The object of the operation was to prevent and apprehend those believed…
-
- 6 replies
- 1.9k views
-
-
சேது கால்வாய்: இலங்கையுடன் சேர்ந்து சதி செய்வோரை வெல்வோம் - கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007 ஈரோடு: இலங்கையுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுவோரின் சதிச் செயல்களை முறியடித்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஈரோட்டில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடைபெறுகின்ற முயற்சிகளில் ஒன்றாக நாம் நிறைவேற்ற இன்றைக்கு முனைந்திருக்கின்ற ஒரு பெரிய திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க சில குள்ளநரிகள், சில சூழ்ச்சிக்காரர்கள், சில குடிலர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதை நம்முடைய இ…
-
- 4 replies
- 1.5k views
-