உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல் [செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கு…
-
- 45 replies
- 7k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள். தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்ட…
-
- 12 replies
- 3k views
-
-
ஆர்த்தி 'சீரியஸ்!' மீண்டும் தற்கொலை முயற்சி? பிப்ரவரி 17, 2006 பிரபல தெலுங்கு, தமிழ் நடிகை ஆர்த்தி அகர்வால் தலையில் பலத்த அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்குபவர் ஆர்த்தி அகர்வால். தமிழிலும் ராஜா, வின்னர், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலத்திற்கு முன்பு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றப்பட்டார். இந் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் ரத்த காயத்துடன்…
-
- 0 replies
- 953 views
-
-
உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2
-
- 0 replies
- 1k views
-
-
நம்ம கிரிஜாவும் ஐ.நா.சபை சார்பில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார் ஐ.நா., சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார் பீகார் தலித் பெண் பாட்னா: மது ஒழிப்புக்காக போராடி வரும் பீகாரைச் சேர்ந்த கிரிஜா தேவி, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடக்கும் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார். என்ன தான் பெண்ணுரிமை கிடைத்து பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்றாலும் கூட ஆணாதிக்க சமுதாயத்தின் எஞ்சிய சில பகுதிகள் பெண்களை நசுக்கிய வண்ணம் உள்ளன. அதில் முக்கியமானது ஆண்களின் மதுப் பழக்கம். "குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறும் அரசாங்கமே அதனை விற்பனை செய்யும் கொடுமை நம் நாட்டில் உள்ளது. ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் …
-
- 0 replies
- 851 views
-
-
கற்பை காத்தாள்; கையை இழந்தாள்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை லக்னோ: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தலித் பெண், தன்னை கற்பழிக்க முயன்ற நான்கு பேரிடம் போராடி கற்பை காத்துக்கொண்டாள். ஆனால், அதற்கு விலையாக தன் வலது கையை இழந்தாள். வெட்டிய வலது கையையும் எடுத்துக் கொண்டு கும்பல் ஓடிவிட்டது. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிலோமீட்டர் துõரத்தில் உள்ள ஆரியா மாவட்டம். அங்குள்ள அசல்டா என்ற கிராமத்தில் பெரும்பாலோர் தலித் இனத்தவர். விவசாய கூலியாக வேலை செய்து பிழைத்து வருகின்றனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்களுக்கு, இங்கெல்லாம் அதிக கஷ்டங்களை தருவர் மேல்ஜாதியினர். அதனால் தான் மாயாவதி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்ததும் தலித் ஆதரவு பெருகியது. ஆனாலும், தலித்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பல் துலக்கினால்தான் அனுமதி... எத்தியோப்பிய பழங்குடி மக்களிடம் ஒரு வினோதமான பழக் கம் உள்ளது. ஒரு வீட்டில் புதுமணத்தம்பதிகளுக்கு முதன் முதலாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் அந்தக் குழந் தைக்கு பெயர் சூட்டுவதற்காக கண்டிப்பாக ஒரு சிறிய குச்சு வீடு கட்டியாகவேண்டும். அந்த வீட்டில்தான் பெயர் சூட்டு விழாவை நடத்தியாகவேண்டும். இந்த விழாவிற்கு வருகிறவர்கள் அன்றைய நாளில் கட்டாயமாக பல் துலக்கியாக வேண் டும் என்பது இன்னொரு நிபந்தனை. இல்லையென்றால் விழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். Thanks:Thanthi...
-
- 6 replies
- 1.8k views
-
-
அமெரிக்க நிறுவனம் விளம்பரம்: துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: இந்துக்கள் கடும் எதிர்ப்பு லண்டன், பிப். 14- அமெரிக்காவில் உள்ள மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' என்ற பெயரில் மதுவை தயா ரித்து வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறது. கிரீஸ் நாட்டிலும் இந்த மது விற்கப்படுகிறது. அங்கு இவற்றை விற்கும் கடை மற்றும் மது பார்களில் இந்து கடவுளான துர்க்கை தனது அனைத்து கைகளிலும் `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' பாட்டிலை வைத்து இருப்பது போல விளம்பரம் செய்யப் பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா- இங்கி லாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். `அந்த நிறுவனம் துர்க்கை விளம்பரங்களை வாபஸ் பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' எ…
-
- 0 replies
- 1k views
-
-
காதலர் தினம்: வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி பகுதிகளில் விளையும் கண்கவர் வண்ண ரோஜாக்களின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படுஜோராக நடைபெற்று வருகின்றன. காதலர்களின் கற்பனையிலும், கவிதைகளிலும் முதல் இடம் வகிப்பது ரோஜா மலர்கள் தான். காதலர்கள் தங்களின் அன்பையும், ஆசையையும் பரிமாறிக் கொள்ள பயன்படும் இந்த வகை வண்ண ரோஜாக்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் என்பதால் ரோஜா பூவின் தேவை உலக நாடுகளில் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஓசூர், தளி பகுதிகளில் இருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகள் மூ…
-
- 6 replies
- 1.5k views
-
-
பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி பாலியல் வல்லுறவு பிப்ரவரி 08, 2006 பாண்டிச்சேரி: பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள…
-
- 52 replies
- 8k views
-
-
சிறிலங்காவின் நிலைப்பாடு: ஈரான் கடும் அதிருப்தி [ஒஸ்ரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி சபையின் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பதில் ஈரான் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளது. தமது அதிருப்தியை கொழும்பில் உள்ள தூதரகத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளது. வியன்னா மாநாட்டில் இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்க அணியில் நின்று ஈரானுக்கு எதிராக வாக்களித்தன. கியூபா, சிரியா, வெனிசூலா ஆகிய நாடுகள் ஈரானை ஆதரித்தன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 5 ஆப்பிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! :idea: தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் பிப்ரவரி 11, 2006 திண்டுக்கல்: 28 வயதே ஆன போலீஸ்காரருடன் காதல் லீலையில் ஈடுபட்டார் 48 வயது பெண் சப்இன்ஸ்பெக்டர். இருவரும் காவல் நிலையத்தையே காம நிலையமாக மாற்றி குடும்பம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டராக இருந்த விஜயா (48)வுக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரனுக்கும் (28) காதல் பத்திக்கிச்சு. இந்த சந்திரசேகரன், வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் இருந்தவர் என்பதால் ரூ. 3 லட்சம் துட்டும், பதவி உயர்வும், வீட்டு மனையும் வழங்கப்பட்டவர். விஜயாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதோடு, க…
-
- 0 replies
- 2.1k views
-
-
வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை பிப்ரவரி 11, 2006 சென்னை: சென்னையில் ஒரு வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே துரைப்பாக்கம், சீவரம் என்ற இடத்தில் சென்னை மாநிநராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. தென் சென்னை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படும். கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் குப்பை மேட்டில் சேரும் பொருட்களை பிரித்து எடுப்பதற்காக ஏகப்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளன. குப்பையில் கிடைக்கும் பொருட்களை இவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். அப்போது பெரும்பாலன சமயங்களில் அவர்களுக்குள் மோதலும் ஏற்படுவதுண்டு. அவர்களில் குமார் (40) என்பவரும் அடங்குவார். கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒர…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறிய கதை சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார். அவர் பேசியதாவது:- நல்லாட்சியின் அடையாளம் அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை. இந்த இரண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்' தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும். இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயல…
-
- 0 replies
- 1.3k views
-
-
அகதிகள் தமிழகம் வருகை அதிகரிப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கட்டுப்பாடு திண்டுக்கல் : இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நடக்கும் கலவரத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அகதிகள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மறுவாழ்வு சிறப்பு ஆணையர் ராஜ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தினால் நிவாரணம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடம், பணிக்கொடை, மான்ய விலையில் அரிசி, 2 ஆண்டிற்கு ஒரு முறை பாத்திரங்கள், பிளஸ் 2 வரை இலவசக்கல்வி, கல்லுõரி படிக்க பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
எகிப்துக்குச் சொந்தமானதும் சவுதியரேபியாவின் Duba துறைமுத்தில் இருந்து கடந்த வியாழன் புறப்பட்டதுமான பயணிகள் கப்பல் செங்கடலில் 1400க்கும் மேலான பயணிகளுடன் மூழ்கிவிட்டது. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/4676916.stm
-
- 9 replies
- 2.4k views
-
-
ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு ப…
-
- 4 replies
- 2k views
-
-
வீட்டிலிருந்து உலகம் வரை சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து' சி. வையாபுரி ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளில் ஒன்றாய் நலிந்து கிடந்த இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது பற்றி நடந்த இங்கிலாந்து பாராளுமன்ற விவாதம் ஒன்றில் பேசிய வான்டர்டன் பிரபு காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். காந்தியத்தில் பற்றுக் கொண்டிருந்த அகதா ஆரிசன் என்பார், இங்கிலாந்திலிருந்து காந்திக்குக் கடிதம் மூலம் இதை விபரித்திருந்தார். `என் கருத்திலும் செயலிலும் அசைக்க இயலாத உறுதியுடன் நான் இருக்கின்றபோது, என்னைப்பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ யார் எங்கு பேசினால் என்ன?' என்று இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் அகதாவுக்கு எழுதிய பதிலில் தெரிவித்துள்ளார் காந்தியடிகள். பெரு…
-
- 4 replies
- 1.7k views
-