Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம் மேற்கொண்டுள்ளார். உக்ரேனிலிருந்து கருங்கடல் தீபகற்பம் இணைக்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி கிரிமியாவிற்குச் சென்ற ஒரு நாளுக்குப் பின்னர் இந்த விஜயம் அமைந்துள்ளது. கருங்கடல் துறைமுக நகரமான செவஸ்டோபோலுக்கு அவர் சென்றதாகவும் அவருடன் மொஸ்கோவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆளுநரும் பயணம் செய்திருந்ததாகவும் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மற்றும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப…

    • 118 replies
    • 7k views
  2. சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு இதன்போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது, ஒருவரையொருவர் அன்புள்ள நண்பர் என்று அழைத்து தங்களது அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், பேச்சுவார்த்தை செயல…

  3. போதை மருந்து கொடுத்து படம் பிடிக்கப்படும் வல்லுறவு சம்பவங்கள் - பாலியல் தொழிலின் நிழல் உலகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது கடோபி & லைலா மகமூத் பதவி,மொகடிஷு & லண்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவின் தலைநகரமான மொகடிஷுவில் உள்ள இரண்டு பெண்கள், உள்நாட்டுப் போர் காரணமாக வன்முறை அச்சுறுத்தலுக்கு நடுவிலுள்ள ஒரு நகரத்தில் பாலியல் தொழிலாளிகளாக நிழல் உலகுக்குள் எப்படி தள்ளப்பட்டார்கள் என்பதைப் பற்றி பிபிசியிடம் பேசினார்கள். அவர்களுடைய அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர்களை மாற்றியுள்ளோம். மொகடிஷு நகரத்தின் துடிப்ப…

  4. காலநிலை மாற்ற சவால்கள்: வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்க முடியுமா? பட மூலாதாரம்,ORJAN ELLINGVAG/ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பெர்லே பதவி,ஆசிரியர், பிபிசி குளோபல் நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பனை உறிஞ்சி வெளியே எடுக்க வேண்டியிருப்பதாக ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது. இந்த எதிர்மறை உமிழ்வுகள் எவ்வாறு செயல்படக் கூடும் என்பது ஜோஸ்லின் டிம்பெர்லே பார்வையில்... மனித குலமே ஒரு மெல்லிய பனிக்கட்டியின் மீது இருக்கிறது. புதைபடிம எரிபொருள் பயன்ப…

  5. புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்! அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு தலைவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பார்கள். இந்த ஒப்பந்தம் எல்லையின் இருபுறமும் உள்ள அதிகாரிகளை இரு திசைகளிலும் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அமெரிக்கத் தரப்பில் உயர்ந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்…

  6. தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை வெளியேற எச்சரித்ததாக சீனா தெரிவிப்பு Published By: SETHU 23 MAR, 2023 | 01:36 PM தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஏறத்தாழ முழுப்பகுதிக்கும் சீனா உரிமை கோருகிறது. சர்வதேச நீதிமன்றம் இதை நிராகரித்து தீர்ப்பு வழங்கியிருந்தது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேஷியா, புரூணை. இந்தோனேஷியா, தாய்வான் ஆகியனவும் தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. சர்வதேச கடற்பரப்பில் சுயாதீன கப்பல் போக்குவரத்தை உறுதி…

  7. புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்…

  8. உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம் உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து மாறியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாவது இடம் ஐஸ்லாந்துக்கும் கிடைத்துள்ளது. பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பேர்க் மற்றும் நியூசிலாந்து என்பன உள்ளன. சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி குறிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245542

  9. யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர்: எதிரெதிர் பயணங்களுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஷய்மா காலில் மற்றும் கரித் இவன்ஸ் பதவி,டோக்யோ மற்றும் லண்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போர் ஆசியாவில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஜப்பான் மற்றும் சீன தலைவர்களின் பயணம் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கக்கூடும். போரில் எதிரெதிர் பக்கங்களில் உள்ள நாடுகளுக்கான பயணத்தில் இந்த நாடுகளின் தலைவர்கள் உள்ளனர். யுக்ரேன் தலைநகர் கியவ் சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புனரமைப்பு, மனித…

  10. பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின / கலப்பினத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்: புதிய ஆணை வெளியீடு Published By: SETHU 22 MAR, 2023 | 12:24 PM பிரேஸிலின் மத்திய அரசாங்கத்தின் தொழில்களுக்கு நியமிக்கப்படுபவர்களில் குறைந்தபட்சம் 30 சதவீதமானோர் கறுப்பினத்தவர்களாக அல்லது கலப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நேற்று இந்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இடதுசாரியான லூலா டா சில்வா, 2003 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு தவணைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். 13 வருடங்களின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 3 ஆவது தடவையாக அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார். பிரேஸிலிய…

  11. சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் Published By: SETHU 07 MAR, 2023 | 06:20 PM சிரியாவின் அலேப்போ நகரில் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. சிரியாவின் 2 ஆவது பெரிய நகரான அலேப்போ கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினாலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்தியதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. லட்டேக்கியா பிராந்தியத்தின் மேற்கு பகுதியில், அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, அதிகாலை 2.07 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவ்…

  12. உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்: போரில் உள்ள நாடொன்றுக்கு முதல் தடவையாக ஐஎம்எவ் கடன் Published By: SETHU 22 MAR, 2023 | 11:01 AM உக்ரேனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதயம் தெரிவித்துள்ளது. போர் நடைபெறும் நாடொன்றுக்கு ஐஎம்எவ் கடன் வழங்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் வாரங்களில் இக்கடனுக்கு ஐஎம்எவ் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகமாக நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தனது வித…

  13. குடிநீரில் இத்தனை வகையா? உடல்நலத்திற்கு சிறந்தது எது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி,பிபிசி தெலுங்குக்காக 7 டிசம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர்…

  14. அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு! அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணி…

  15. எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா March 19, 2023 உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் எதிர்காலத்தில் சீனாவுடன் ஏற்படப்போகும் போர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் முகமாக அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனத்தை இந்த வருடம் 886 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் படையினருக்கான ஊதியத்தையும் 5.2 விகிதம் அதிகரித்துள்ளதுடன், புதிய ஆயுதங்களின் உற்பத்திக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 28 பில்லியன் அதிகமாகும். புதிய ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யவும் முதல் தடவையாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. உக்ரைன் சமரில் அமெரிக்கா த…

    • 29 replies
    • 2.3k views
  16. சவுதி அரேபியா உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஈரான் ஜனாதிபதிக்கு அழைப்பு? இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குள், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சவுதி அரேபியா அழைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பிதழ் மன்னர் சல்மானின் கடிதத்தில் வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் சவுதியால் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இரு நாடுகளும் வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் சந்திப்பை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், மூன்று சாத்தியமான இடங்கள் முன்மொழியப்பட்டதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். ஆனால், இச்சந்திப்பு எப்போது நடைபெறும் மற்றும் …

    • 1 reply
    • 597 views
  17. சதாம் ஹுசைனின் 'ரகசிய ஆயுத தேடல்' முழுமையடையாமல் போனது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கோர்டன் கொரேரா பதவி,பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் இராக் படையெடுப்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், "பேரழிவு ஆயுதங்கள்" (WMDs) இருந்தனவா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்த படையெடுப்பு தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்பை, “பேரழிவு ஆயுதங்களின் இருப்பு” என்பதை வைத்தே நியாயப்படுத்தினர். பேரழிவு ஆயுத தேடல் பற்றிய புதிய விவரங்கள் பிபிசி தொடரான 'ஷாக் அண்ட் வார்: இராக் 20 இயர்ஸ் ஆன்' என்ற தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்…

  18. ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம் உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி. 27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார். பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது. அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங…

  19. எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்! அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும் தன்னார்வத் தொண்டர்கள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் சேர்வதற்கு கையெழுத்திட்டனர். நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் 800,000…

  20. காணாமல் போன சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கிழக்கு லிபியாவில் கண்டுபிடிப்பு! சர்வதேச அணுசக்தி முகமையால் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டதாக கிழக்கு லிபியாவில் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. சாட் எல்லைக்கு அருகில் தாதுவைக் கொண்ட பத்து பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படைகளின் ஊடகப் பிரிவின் தலைவர் கூறினார். யுரேனியம் கொள்கலன்கள் தெற்கு லிபியாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆயுதப்படைகள்…

    • 0 replies
    • 303 views
  21. 'நான் திரும்ப வந்துவிட்டேன்' - சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி Published By: T. Saranya 18 Mar, 2023 | 12:12 PM டொனால்ட் ட்ரம்பின் முடக்கப்பட்ட பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். ஆனால், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசினார். இத…

  22. பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக சீனா ஜனாதிபதி ரஷ்யா பயணம்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, 22ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் பயணத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் ஸி ஜின்பிங், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுக…

  23. பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்! நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது. இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின. இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது. பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்…

    • 10 replies
    • 744 views
  24. அமெரிக்காவிடமிருந்து 220 சீர்வேக ஏவுகணை வாங்குகிறது அவுஸ்திரேலியா Published By: SETHU 17 MAR, 2023 | 11:34 AM அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை (cruise missiles) விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. அக்கஸ் (Aukus) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன. உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என …

  25. உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (15) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றதுடன், சிறந்த உணவு வசதிகள் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகள் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது. முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் டோஹா ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ ஹனேடா பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245157

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.