உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட…
-
- 1 reply
- 649 views
-
-
கொங்கோவில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி May 7, 2023 கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இர…
-
- 0 replies
- 552 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,யோகிதா லிமாயே பதவி,ஆப்கானிஸ்தான் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார். குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொரு…
-
- 10 replies
- 873 views
- 1 follower
-
-
துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு Published By: Sethu 05 May, 2023 | 11:04 AM துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார். …
-
- 34 replies
- 2.3k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 06 MAY, 2023 | 11:49 AM இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸின் முடிசூடும் நிகழ்விற்கு முன்னதாக அவருக்கு கடிதமொன்றைஅனுப்பிவைத்துள்ள விக்கிலீக்சின் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே தான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு சார்ள்ஸ் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலியன் அசஞ்சே தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் சிறைச்சாலையின் நிலைமையையும் எள்ளிநகையாடும் விதத்தில் இந்தகடிதத்தை எழுதியுள்ளார். லண்டனின் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் நான்கு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அசஞ்சே எழுதியுள்ள முதல் பகிரங்க கடிதம் இது. ஒரு இக்கட்டான வெளிநாட்டு இறையாண்மையின் சார்பாக இந்த கடிதத்த…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ! 05 May 2023, 8:34 IST நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை வடகிழக்கு ரயில்வே நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் (எஸ்.டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தத…
-
- 1 reply
- 941 views
-
-
உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி! ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவி…
-
- 8 replies
- 893 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 APR, 2023 | 10:47 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் ஜூலி சங் குறித்து இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஜூலி சங் 1977ம் ஆண்டு குடிபெயர்ந்தவேளை அவருக்கு 7 வயது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர் ஒரு ஆங்கிலவார்த்தை கூட தெரியாதவராக காணப்பட்டார். அவரது தந்தைக்கு பொறியல் நிறுவனத்தில் வேலை கி…
-
- 9 replies
- 603 views
- 1 follower
-
-
பொதுவாக பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க வைத்திய குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார். குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய வைத்தியர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தமை தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாடு இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இரத…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
Published By: SETHU 03 MAY, 2023 | 04:34 PM ருவாண்டாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் மேற்குப் பிராந்தியத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வட பிராந்தியத்தில் 14 பேர் உயிரழந்துள்ளனர். பல வீடுகளும் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக. சேபேயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதாகவும் மண்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் ருவாண்டாவின் மேற்கு மாகாண ஆளுநர் பிராங்சுவா ஹபிட்டேகெகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/154426
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்" - காதல் மனைவி ஜென்னியின் மறைவுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கடிதத்தில் இடம் பெற்ற உருக்கமான வாசகங்கள் இவை. ஆம், அது உண்மைதான். தன் வாழ்க்கையில் பூரணத்துவம் கண்ட, நிறை மனிதர்களால் மட்டும் தானே இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியும். மானுட சமூகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸுக்கு அத்தகைய முழுமையை தந்தவர் ஜென்னி. அள்ளஅள்ள குறையாத அன்பும், எத்தகைய நெருக்கடியிலும் விலகாத நேசமும் தந்து மார்க்சின் சிந்த…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 08:14 AM அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அற…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 04:43 PM தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், இதே வேகத்தில் சென்றால் தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 55 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தற்போதைய வேகத்தில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 300 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்காசியாவில் இதற்கு 55 ஆண்டுகள் செல்லும் எனவும் யுனிசெப்பின் தெற்காசிய பிரிவு தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் தெற்கு ஆசியப் பிரிவு இது தொடர்பாக நேற்று (03) விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: …
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 04 MAY, 2023 | 02:48 PM (ஏ.என்.ஐ) ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடத்தப்படுகின்ற 'அஜெய வாரியர் 2023' எனும் இந்திய - பிரிட்டிஷ் இராணுவ பயிற்சி, இம்முறை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடைபெற்று வருகிறது. இதன்போது இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஆகிய இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கான பல்வேறு தந்திரோபாய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் நோக்கம் நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் விசேட சூழல்களில் நிறுவன அளவி…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 04 MAY, 2023 | 01:17 PM காலனித்துவ நடவடிக்கைகளிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட்டர் லிடியா தோர்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா கனடா நியுசிலாந்து உட்பட 12 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியேற்றங்களிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என கோரும் கடும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்விற்கு முன்னதாக அவர்கள் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். புதிய மன்னர் இழப்பீட்டினை வழங்கவேண்டும்,அடிமைத்தனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் பழங்குடியினரின் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை …
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
Published By: SETHU 03 MAY, 2023 | 03:40 PM பனாமாவின் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலொன்றை ஈரான் நேற்று கைப்பற்றியுள்ளதாக அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. நியோவி எனும் இந்த எண்ணெய் தாங்கி கப்பல், துபாயிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றொரு நகரான ஃபுஜெய்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் வைத்து, ஈரானிய கடற் படையினால் நிறுத்தப்பட்டது என அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. ஒரு வார காலத்தில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும். மார்ஷல் தீவுகளின் கொடி தாங்கிய எண்ணெய் தாங்கி கப்பலெனர்றை ஓமான் வளைகுடாவில் வைத்து, 6 நாட்களுக்கு முனு;னர் ஈரானிய கடற்படை கைப்பற்றியமை கு…
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத…
-
- 1 reply
- 586 views
- 1 follower
-
-
கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு: மதபோதகர் கைது Published By: Sethu 24 Apr, 2023 | 10:40 AM கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'நற்செய்தி சர்வதேச தேவாலயம்' எனும் இயக்கத்தின் தலைவர் இவர். இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னை…
-
- 4 replies
- 838 views
- 1 follower
-
-
நியூயார்க்: உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் ராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷ்யா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ப்ஹ்மத் நகரின் ப…
-
- 0 replies
- 491 views
-
-
Published By: RAJEEBAN 02 MAY, 2023 | 12:31 PM வாத்துக்கள் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக்கொல்லப்பட்ட வாத்துக்களுடன் விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றம் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. வேட்டைகாலம் ஆரம்பமான வாரத்தில் வாத்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நீதிக்கட்சியின் சிட்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜியோர்ஜி பேர்செல் கொல்லப்பட்ட வாத்துக்களுடன் நாடாளுமன்றம் சென்றுள்ளார். இன்று என்னிடம் சிறுவாத்தொன்று உள்ளது இது நாட்டிலேயே மிகவும் அரிதான நீர்ப்பறவை இதனை சட்டவிரோதமாக சுட்ட நபர்கள் பின்னர் கைவிட்டுச்சென்றனர் விக்டோரியா வனவிலங்கு துறை அதிகாரிகள் …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
Published By: SETHU 02 MAY, 2023 | 03:28 PM இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். 45 வயதான காதேர் அட்னன் எனும் இவர், இஸ்லாமிய ஜிஹாத் எனும் ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 86 நாட்களாக இவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை காதேர் அட்னன் எ உணர்விழந்து காணப்பட்டார் என இஸ்ரேலிய சிறைச்சாலைகள் சேவை தெரிவித்துள்ளது. உண்ணாவிரதம் இருந்தன் நேரடி விளைவாக மரணித்த முதல் பலஸ்தீனியர் அட்னன் என பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
இந்துக்களை அவமதித்த உக்ரைன் : கலைப்படைப்பு பெயரில் அத்துமீறல்…! உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், கலைப்படைப்பு என்ற பெயரில், மர்லின் மன்றோ போஸ் கொடுப்பது போன்று காளி தேவி உருவத்தை ஒத்த உருவத்தை வரைந்த சம்பவம், இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ அமைப்பில் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்தாண்டு ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு கடந்த நிலையில்,உக்ரைனில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தற்போது ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு வெடித்ததில் இருந்து எழும் புகை, ஒரு பெரிய மேகத்தை முட…
-
- 8 replies
- 847 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தியாவில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடுக்கு சட்டவிரோத தடை உள்ளது) தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில், வெளிநாட்டினர் மிக அதிக அளவில் பயன்படுத்தும் சுகும்விட் சாலையில் காண்போரைக் கவரும் வகையில் இந்த கஞ்சா விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்த நிலையில், கஞ்சா இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் சாக்லேட் வடிவில் போதை தரும் கஞ்சா உணவுகள் என பலவித தயாரிப்புக்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. பாங்காக்கில் பிபிசி அலுவலகத்திலிருந்து கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்றால் 4…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் விருதுபெற்ற சமையல்கலை நிபுணர் ஜொக் சோன்ஃப்ரில்லோ, 46 வயதில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரபல சமையல்கலை நிபுணரான ஜொக் சோன்ஃப்ரில்லோ, உலகின் தலைசிறந்த உணவகங்களில் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற சமையல்கலை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியிலும் தோன்றியிருந்தார். ஜொக் சோன்ஃப்ரில்லோ,பிரித்தாயாவின் பிரபல சமையல்கலை நிபுணர் ஜேமி ஒலிவருடன் இணைந்து தோன்றும் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியின் பீரிமீயர் வெளியாகவிருந்த தருணத்தில் ஜக்சோன்;ப்ரிலின் மரணம் நிகழ்ந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலியாவின் நெட்வேர்க…
-
- 0 replies
- 656 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத் அல் அஹ்ம…
-
- 3 replies
- 801 views
- 1 follower
-