உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
நான்கு மாதத்துக்குப் பின்னர் சூரியனைக் கண்ட லாங்கியர்பைன் தீவு மக்கள் [08 - March - 2008] நான்கு மாத இருளுக்குப் பின் லாங்கியர்பைன் தீவு மக்கள் முதல் முறையாக சூரிய உதயத்தை அனுபவித்துள்ளனர். வடதுருவத்தில் இருந்து 1000. கி.மீ., தொலைவில் உள்ள தீவு லாங்கியர் பைன். வடபகுதியில் மனிதர்கள் வாழும் கடைசித் தீவு.இதற்கு அப்பால் மனிதர்கள் வசிக்க முடியாது. இந்தத் தீவை 100 ஆண்டுகளுக்கு முன் லாங்கியர் பைன் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில் பிரதான தொழில்சுரங்கம் தோண்டுவதுதான். இங்கு விமானநிலையம் இருக்கிறதுடன், இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 குழந்தைகள் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. சூரியன் பூமத்திய …
-
- 0 replies
- 1k views
-
-
சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு காதலிப்பது எப்படி, பெண்களைக் கவருவது எப்படி என்பது குறித்து கல்லூரி பாடத் திட்டத்தில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து கல்லூரி அளவில் காதலை ஒரு பாடமாக வைக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது காதல் பாடம் கல்லூரிகளில் அறிமுகமாகியுள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பின் கடைசி செமஸ்டரில் காதல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. காதல் பாடத்தில் தேறினால் இரண்டு கிரெடிட்டுகள் கூடுதலாக வழங்..!!!!!!! தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_25.html
-
- 6 replies
- 2.2k views
-
-
ஐரோப்பாவில் தமது பானங்களை திரும்பப் பெறும் கோக கோலா! குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா (Coca-Cola) ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் “குளோரேட்டு” எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ பிராண்டுகள் அடங்கும் என்று கோக கோலாவின் சர்வதேச பாட்டில் மற்றும் விநியோக நடவடிக்கையின் பெல்ஜியக் கிளை தெரிவித்துள்ளது. 2024 நவம்பர் முதல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் அதிக அளவு குளோரேட்டு கொண்ட கேன்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களில் கோகோ கோலா பானங்கள் விநியோ…
-
- 0 replies
- 299 views
-
-
அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி? அமெரிக்க துறைமுகங்களுக்குள் நுழையும் சீனக் கப்பல்கள் மற்றும் சீனத் தயாரிப்புக் கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய கப்பல் கட்டுதல், கடல்சார் மற்றும் தளவாடத் துறைகளில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா இதைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அறிக்கை, சர்வதேச அளவில் போட்டியிடும் அரசுக்கு சொந்தமான…
-
- 0 replies
- 199 views
-
-
அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு! அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது. அமெரிக்காவுடன் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது அண்மைய வாரங்களில் அறிவிக்கப்பட்ட முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு தொழில்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மக்ரோன் கூறினார். பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM, அமெரிக்காவில் கப்பல் தளவாடங்கள்…
-
- 1 reply
- 297 views
-
-
ட்ரம்ப், புஷ் கடும் மோதல் இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சிப் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், அதற்கான விவாதமொன்று, நேற்று இடம்பெற்றது. இதில், தேசியமட்டக் கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கும் டொனால்ட் ட்ரம்பும், மற்றொரு வேட்பாளரான ஜெப் புஷ்ஷும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதருமான ஜெப் புஷ் மீது, கடுமையான விமர்சனத்தை, ட்ரம்ப் முன்வைத்தார். 'ஜோர்ஜ் புஷ், தவறொன்றைச் செய்தார். நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம். ஆனால், அவரது தவறு, அழகானது. அவர்கள் பொ…
-
- 0 replies
- 432 views
-
-
சிரியாவின் அரசாங்கப் படைகளுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் உருவான கடுமையான மோதல்கள் தலைநகர் டமாஸ்கஸில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சிரியாவின் பல எல்லை நிலைகளை கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலரால் கூறப்படுவதுபோல எதிர்த்தரப்புப் படைகள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கின்ற போதிலும் அவர்களிடையே ஒரு ஒற்றுமையான முன்னெடுப்பை இன்னமும் காணமுடியவில்லை. அதிபர் அசாத்தின் நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள், இந்த வார குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதால், சிரியாவின் அரசாங்கம் பெருத்த பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. சிரியாவுக்கு வெளியே இருக்கும் அசாத்தின் எதிரிகளுக்கு இது நல்ல ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், வன்செயல்கள் தொடர்…
-
- 0 replies
- 418 views
-
-
கடந்த வாரம் சீனா தான் தென்சீனக் கடலில் அமைத்த தீவிற்கு விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நகர்த்தியதோடு, ராடர் கண்காணிப்புக் கருவியையும் பொருத்தியது. இந்த வாரம் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட சீனா வெளிவிவகார அமைச்சர் இராஜதந்திர ரீதியில் மிரட்டப்பட, அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் இராணுவ ரீதியாக வெளிப்படையாக மிரட்டியிருக்கின்றார்கள். இந்த நிலையில் டொணால்ட் றம்ப் அமெரிக்காவின் அதிபராக வந்தால் அவர் உலக அளவில் மேற்கொள்ளப்போகும் அதிகார நடவடிக்கைகள் அமெரிக்காவை தோல்வியடைய வைக்குமென இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmuyCRaSWeq4A.html
-
- 0 replies
- 313 views
-
-
முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - அனகோண்டா காட்டில் விமான விபத்தில் சிக்கியவர்களின் கதை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமேசானில் முதலைகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஐந்து பேர் 36 மணி நேரம் விமானத்தின் மேல் நிர்கதியாக இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில், 5 பேர் இருந்த சிறிய ரக விமானம் ஒன்று 48 மணி நேரத்திற்கு முன் காணாமல் போனது, தீவிரமாக மேற்கொண்ட தேடுதல்வேட்டையில் காணாமல் போனவர்களை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர். மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 29 வயது விமானி என மொத்தம் ஐந்து பேரும் நல்ல நிலையில் மீட்கப்பட்டதாக அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரடிலோவா ?: ட்விட்டர் காரசாரம்! பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா இந்தியாவையும் இந்திய அரசியல் சூழலையும் அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார் என அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார். ஜே.என்.யூ மற்றும் வேறு சில பல்கலைகழங்களில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்து ஆளும் அரசை சாடும் வகையில் எழுதப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இரண்டு கட்டுரைகளை பிப்ரவரி 22 ஆம் தேதி மார்டினா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதிலிருந்து இவர் கருத்துக்கு எதிரான காரசாரமான பதிவுகளை ட்விட்டரில் பலர் பதிவேற்றி இவரை வசைபாடி வருகின்றனர். ‘டென்னிஸ் பற்றி…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இன…
-
- 1 reply
- 379 views
-
-
டெஹ்ரான்: டில்லியின் வடக்குப் பகுதியில், கடந்த வாரம், சி.ஏ.ஏ., ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டில்லி வன்முறையில் அதிகப்படியான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இந்தியாவில் இனி, இவ்வாறான வன்முறை நிகழக்கூடாது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி…
-
- 0 replies
- 454 views
-
-
லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அரியணையில் அமர்ந்து, 60 ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, "பிக் பென்' கட்டிடத்துக்கு, ராணி எலிசபெத்தின் பெயர், நேற்று, சூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கோ, ராணி எலிசபெத் பெயர் பொறித்த பலகையை திறந்து வைத்தார். உலகப் புகழ் பெயர் பெற்ற, இந்த மணி கூண்டு கட்டிடம், கடந்த, 1858ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நான்கு புறமும், நேரத்தை காட்டும் வகையில் அமைந்தது. இதில் உள்ள மணி, 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு 13 Sep, 2025 | 12:06 PM பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. பிரான்ஸ…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
கோரத்தாண்டவமாடும் கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்! கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு சுமார் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்றைய தினத்தி…
-
- 0 replies
- 390 views
-
-
மெல்போர்ன்/புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாம் மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் உளவுத்துறைத் தலைவரும்,மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன் மறுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன்,தான் எழுதியுள்ள'Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files’ என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாகவும்,ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும்,அதனை அப்போது ஐபி( இன்டலிஜென்ஸ் பீரோ) தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ள நாரா…
-
- 1 reply
- 567 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஒரு நபர் எப்படி சுட்டுக்கொல்ல முடிந்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன; இதனால் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. துருக்கி சுற்றுலாத்துறையில் நாற்பத்தைந்து சதவீதம் வீழ்ச்சி; ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் விளைவு இன்னும் மோசமாகுமா? சீனாவின் ஐந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர் செலவிலான டிஸ்னி பூங்கா; சாதாரண மக்களால் பார்க்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்; ஆனால், ''நிஜ அனுபவத்தைத் தரும்'' என்கிறார் இதன் உரிமையாளர். உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 532 views
-
-
இந்திய இராணுவ இரகசியங்களை இலங்கை வழியே பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரியை கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி திருச்சியில் கியூ பொலிஸார் கைதுசெய்தனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாக இந்திய இராணுவ இரகசியங்களை கடத்தினார் என்பது தமீம் அன்சாரி மீதான குற்றச்சாட்டு. மேலும் தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கியூ பிரிவு போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய பொ…
-
- 0 replies
- 383 views
-
-
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து இரண்டு ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் 8,779பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 174பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,532ஆக உள்ளது. …
-
- 0 replies
- 516 views
-
-
அகமதாபாத்: காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் ஆசையை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கிண்டலாக கூறியுள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றது.முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று ஓய்ந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இந்த தொகுதிகளில் பேசிய ராகுல் காந்தி,"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு வியாபாரி;தவறான தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடையாத குஜராத்தை, வளர்ச்சி அடைந்த மாநிலமாகக் கூறி வருகிறார். குஜராத் முன்னேறிவிட்டது என மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையான தலைவர்கள் மக்களின் கனவைத் தங்களின் கனவாகக் கொள…
-
- 4 replies
- 944 views
-
-
முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார். 26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்…
-
- 0 replies
- 744 views
-
-
அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம் ; கடமைக்கு சமுகமளிக்காத 9 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! 2016-08-31 11:46:41 துபாயின் அமீரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபாயிலுள்ள அரச அலுவலகங்களுக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போது, உயர் அதிகாரிகள் பலர் அலுவலங்களில் இல்லாதிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து 9 சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரை பணியலிருந்து ஓய்வு பெறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 65 வயதான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உப ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிப்பதுடன்,…
-
- 0 replies
- 347 views
-
-
யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒஸ்திரிய அதிபர் கண்டனம் தெற்கு நகரமான கிராஸில் ஒரு யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மற்றும் பிற மூத்த அரசாங்க அரசியல்வாதிகள் தெரிவித்தனர். மேலும் ஒஸ்திரியாவைச் சுற்றியுள்ள யூத தலங்கள் கடுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் காழ்ப்புணர்ச்சியால் இரண்டு முறை குறிவைக்கப்பட்ட கிராஸ் யூத சமூகத்தின் தலைவர் எலி ரோசன் மீது ஜெப ஆலயத்தின் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது ரோசன் தனது காரில் தஞ்சமடைந்தார் என்றும் பின்னர் தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 346 views
-
-
"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத…
-
- 0 replies
- 307 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தில் கொரோனா – மறைக்கப்பட்ட தகவல்? பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகத்தினை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளவரசர் வில்லியம் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏப்ரல் 09ம் திகதி முதல் 16ம் திகதிவரையான காலப்பகுதியில் அவர் எவ்வித பணிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியிடப்படாத போதும், ஏப்ரல் மாதத்தின் ஏழு நாட்களில் இளவரசர் வில்லியம் …
-
- 0 replies
- 359 views
-