Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஷி ஜின்பிங்: சீனாவின் வீழ்த்த முடியாத தலைவராக உருவாக இவரால் எப்படி முடிகிறது? கிரேஸ் சோய் மற்றும் சில்வியா சாங் பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சீனாவின் புரட்சிகர தலைவர் ஒருவரின் மகன் என்பதைத் தவிர அவர் கடந்த தசாப்தத்தில் பெரிய அளவில் அறியப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஓய்விற்குப் பிறகும் தலைவர்கள் ஆதிக்கம் கொ…

  2. நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கன மழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகரித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு நாட்டின் தெற்கின் சில பகுதிகளில் பரவியுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்…

  3. உக்ரேன் போரில் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்படுகிறது ; ஐ.நா. விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவிப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 11:29 AM உக்ரேனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினர், பாலியல் வல்லுறவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், அப்படையினருக்கு வயாகராவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலியில் வன்முறைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவித்துள்ளார். ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவிததுள்ளார். உக்ரேன் யுத்தத்தில் ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என இச்செவ்வியின்போது பிரமிளா பட்டேனிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு அவர் …

  4. மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது. எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர். ரஷ்ய …

  5. Jodie Comer : உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்! அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி? உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ் தொடங்கி சிறு பத்திரிகைகள், வலைதளங்கள், அழகுசாதனப் பொருள் நிறுவனங்கள் வரை நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்களின் பெயரை உலகின் அழகான பெண்மணி என்று பட்டியலிடுவர். சில வலைதளங்கள் இப்போது கூட ஜெனிஃபர் லோபஸை உலகின் அழகி என போற்றிப்பாடுகிறது. சிஎன்பிசிடிவி 18 போன்ற செய்தித் தளங்கள் பெல்லா ஹதித், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் பட்டியலிடுகிறது. சில வலைதளங்…

  6. காய்ச்சல், சளி, இருமல்: பாதுகாப்பு குறித்து கவலை உண்டாக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் …

  7. தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்! னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங், ஹொங்கொ…

  8. உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல்: இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு! உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கசாண்டாவில் உள்ள மதுபானக்கூடங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படும். அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், சரக்கு லொரிகள் மாவட்டத்திற்குள் நுழையவும், வெளியேறவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு தடை விதி…

  9. உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1305003

  10. இரான் நாட்டின் 'கொடூரமான' எவின் சிறையில் பெரும் தீ - வேண்டுமென்றே நிகழ்த்திய சம்பவமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, ஆன்லைனில் பதியப்பட்ட புகைப்படம் இரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் இரானின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ஆனால், பிபிசிக்கு நெருக்கமான சிறைத்துறை வட்டாரத்தினர், இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றனர். ஆன்லைனில் பகிரப்பட்ட காணொளிகளில் தீப்பிழம்புகள் மற்றும் புகையைப் பார்க்கமுடிகிறத…

  11. ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி? டேவிட் பிரௌன் பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளர்…

  12. யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா? சமீபத்தில் கிடைத்த முக்கிய தடயங்கள் உண்மை கண்டறியும் குழு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் கார்கள் மற்றும் கட்டடங்கள் அழிக்கப்பட்டன யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். என்னென்ன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது? சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்க…

  13. ‘கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்- ஸி ஜின்பிங் வெளியேற வேண்டும்’ சீனர்கள் போராட்டம்! ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன், ஸி ஜின்பிங் கொவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. …

    • 14 replies
    • 1.1k views
  14. ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும்: புடின் ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிராக இப்போதைக்கு இன்னும் பாரிய தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடவில்லை. ரஷ்யாவின் நோக்கம் நாட்டை அழிப்பது அல்ல. இப்போது பாரிய தாக்குதல்கள் தேவையில்லை. இப்போதைக்கு மற்ற பணிகள் உள்ளன. பின்னர் அது தெளிவாகத் தெரியும…

    • 2 replies
    • 258 views
  15. உலக உணவு தினம்: 69 கோடி பேர் பட்டினியில் வாழும் உலகில் நாம் எதிர்கொள்ளும் அபாயம் என்ன? சரோஜ் பதிராணா பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது. "எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில், ப…

  16. சிரியா அகதிகள்: ஆன்லைனில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்? பிபிசி புலனாய்வு ஹன்னா கெல்பார்ட், மம்து அக்பீக் மற்றும் ஜியாத் அல்-கத்தான் தவறான தகவல்கள் கண்டறியும் பிரிவு, பிபிசி அரபாபிக், பிபிசி ஐ புலனாய்வு 14 அக்டோபர் 2022 சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிக்டாக் சமூக வலைதளத்தின் மூலம் பண உதவி கோரி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவியாகக் கிடைக்கும் தொகையில் 70 சதவிகிதம் வரை டிக்டாக் நிறுவனம் எடுத்துக் கொள்வது பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் டிக்டாக் ந…

  17. உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி! ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்த ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் ரேடார்களும் அடங்கும். முன்னதாக அமெரிக்காவும் இதேபோன்ற உறுதிமொழியை வழங்கியது. ஜேர்மனியில் இருந்து ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே உக்ரைனில் உள்ளது. 50 நாடுகளைச் சேர்ந்த உக்ரைனின் நட்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சந்திக்கும் போது இந்த உறுதிமொழிகளை வழங்கின. திங்கள் மற்றும் செவ்வா…

    • 4 replies
    • 640 views
  18. உக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் படை தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. தினத்தந்தி கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீ…

  19. அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வெள்ளம் ; 3 மாநிலங்களை சேர்ந்த மக்களை வெளியேறுமாறு உத்தரவு By T. SARANYA 14 OCT, 2022 | 01:07 PM அவுஸ்திரேலியாவில் பெய்யும் கன மழையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று மாநிலங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மேனியா ஆகிய மாநிலங்களே இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மழைவீழ்ச்சியில் 4 மடங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதனால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை மற்றொருவர் காணா…

  20. உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்! ரஷ்யா 83 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 43க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வான் பாதுகாப்பு மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார். இதில், காஸ்பியன் மற்றும் கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட கலிப்ர், இஸ்கந்தர் மற்றும் கேஹெச்-101 ஏவுகணைகளில் அடங்கும். எட்டு வெவ்வேறு உக்ரைனிய பிராந்தியங்களில் உள்ள பதினொரு முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தலைநகரான கீவ் இன்று காலை ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார். 2019 இல் திறக்கப்பட்ட கிளிட்ச்கோ பாலம் என்று அழைக்கப்படும் கிய்வில் புதிதாக கட்டப்பட்ட பாத…

  21. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2,000 கிமீ (1,240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது. பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து, ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தப் போகிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்திய தொடர்ச்சியான ஆயுத ஏவுதல்களில் இது சமீ…

  22. . ஜேர்மனியில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே அந்நாட்டின் எதிர்கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் அதிகரித்து வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.…

  23. சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர் பிரான்சிஸ் மாவோ பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA தைவானின் தைபேயில் முடி நரைத்த, கண்ணாடி அணிந்த ஒரு வயோதிகத் தொழிலதிபர், தொழில்நுட்ப நிறுவனப் பெருமுதலாளி ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தான் மக்கள் ராணுவம் ஒன்றைக் கட்டமைக்க சுமார் 100 கோடி தைவான் டாலர்கள் அளிப்பதாக உறுதியளித்தார். குண்டு துளைக்காத உடை அணிந்திருந்த ராபர்ட் ட்சோ என்ற அவர், தன் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் சீனாவுக்கு எதிராக சண்டையிட தான் உத…

  24. ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை ம…

  25. உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன. ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும். உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.