Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது. உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன. இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மூன்று நாடுகளும…

    • 19 replies
    • 1.8k views
  2. அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது? 28 ஜூன் 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர். நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர் பிழைத்தவர்கள்…

  3. தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ள…

  4. ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி மின்னம்பலம்2022-06-27 கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர். இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு …

  5. பெலரஸூக்கு... குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக, ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு. ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 500 கிலோமீற்றர் வரம்பை கொண்ட குறித்த அணுசக்தி அமைப்புகள் எதிர்வரும் மாதங்களில் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து பெலரஸ் உத்தியோகப்பூர்வ போரில் ஈடுபடவில்லை. எனினும் ரஷ்யாவுக்கான உதவிகளை பெலரஸ் தொடர்ந்தும் வழங்கிவருகிற நிலையில் பெலரஸ் பகுதியிலிருந…

  6. ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவா, ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள் குறித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்துப் பேசிய பேரவைத் துணைத் தலைவர் நடா அல்-நஷிப், "2020ம் ஆண்டு 260 பேரும், கடந்த ஆண்டு ௧௪ பெண்கள் உள்பட 310 பேரும், இதேபோன்ற…

    • 0 replies
    • 218 views
  7. சௌதி அரேபியா: முர்தஜா குரைரிஸ் - போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட சிறுவன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செபாஷ்டியன் உஷேர் பிபிசி அரபு விவகாரங்களுக்கான ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESOHR படக்குறிப்பு, முர்தஜா குரைரிஸ் - கைது செய்யப்பட்டபோதும், இப்போதும். சௌதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகச் சந்தேகத்தின் பேரில் 13 வயதில் கைது செய்யப்பட்டவர் 8 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனி உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞராகிவிட்ட முர்தாஜா குரைரிஸ் ஒரு கட்டத்தில் மரண தண்டனையை எத…

  8. கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில் பிரவேசித்து கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேச…

    • 4 replies
    • 873 views
  9. நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி…

  10. சர்வதேச அளவில்... பொது சுகாதார அவசர நிலையாக, "குரங்கு அம்மை நோய்" பாதிப்பு அறிவிப்பு! குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிக…

  11. கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக…

  12. உக்ரேனில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு - யுனேஸ்கோ ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போரில் உக்ரேனில் உள்ள 150-க்கும் அதிகமான பாரம்பரிய தளங்கள் ரஷ்யாவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லுகாஷிவ்காவில் உள்ள அசென்ஷன் தேவாலயம் ; NURPHOTO VIA GETTY IMAGES ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். அதில், 150-க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சமூகக் கலை மையம் ; AFP VIA GETTY IMAGES அழிக்கப்பட்டுள்ள தளங்களில் அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் மற்றும் மதம் சார்ந்த கட்டடங்கள், நூலகங்கள் ரஷ…

  13. உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு.... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து? ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக அங்கீகரிக்கப்படவுள்ளன. நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தநிலையில் உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்…

  14. பொருளாதார தடைகள்... "பூமராங்" போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்! உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவில் காணொளி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, அவர் உரையாற்றுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத்…

  15. ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்றக்கோரி உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் மகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு திருநங்கை. மேலும், "தன் தந்தையுடன் இனி எவ்வித உறவையும் பேண விரும்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார். 18 வயதான அவர் தன்னை பெண் ஆக அங்கீகரிக்குமாறும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதி கோரியும் அம்மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, அவருடைய பெயர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஆக இருந்தது. பெயர் மாற்றம் மற்றும் புதிய பிறப்பு சான்ற…

  16. லிதுவேனியா... விதித்துள்ள தடையை, உடனடியாக மீள பெறாவிட்டால்... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை! லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை …

  17. சீன விமானங்களை... எச்சரிக்க, ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான். நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது. அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை …

  18. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் …

  19. "பாலிஸ்டிக்" ஏவுகணை எதிர்ப்பு... தொழில்நுட்ப சோதனையை, வெற்றிகரமாக சோதித்தது சீனா! பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனையை சீனா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6ஆவது சோதனையாகும். இதுதொடர்பாக சீன பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், ‘இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் …

  20. பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார். ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும் இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில், அ…

  21. உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம். கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 …

  22. எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்! எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக்…

    • 6 replies
    • 435 views
  23. உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்! மின்னம்பலம்2022-06-19 உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தியா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியீட்டுள்ள குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 பட்டியலின்படி, உலகின் மிக அமைதியான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து கடந்த இரண்டு வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூக பாதுகாப்பு அளவு உள்ளிட்ட 23 அளவுகோல்களைக் கொ…

  24. ரஷ்யாவிற்கு எதிரான... பொருளாதாரத் தடைகளால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு... 400 பில்லியன் டொலர்கள் இழப்பு: புடின் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியம் 400 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். வருடாந்திர செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போதே புடின் இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ‘முட்டாள்தனம் மற்றும் சிந்தனையற்றவை’ என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் கட்ட…

  25. 10,000 உக்ரைன் வீரர்களுக்கு... ஒவ்வொரு 120 நாட்களுக்கும், போர் பயிற்சியை... பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்! ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட உக்ரைன் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையை தொடங்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு சென்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அங்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உரையாடிய போது இந்த வாக்குறுதியை அளித்தார். இதன்போது பிரதமர் பொரிஸ் கூறுகையில், ‘இன்றைய எனது வருகை, இந்தப் போரின் ஆழத்தில், உக்ரைனிய மக்களுக்கு ஒரு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புவதாகும். பிரித்தானியா உங்களுடன் உள்ளது, இறுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.