உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
உக்ரைனின்... 20 சதவீத நிலப்பரப்பு, ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக... ஸெலென்ஸ்கி தகவல்! உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் நாங்கள் 30,000 வீரர்களை இழந்துள்ளோம்.…
-
- 0 replies
- 162 views
-
-
ரஷ்ய, எண்ணெய் இறக்குமதிக்கான தடை: சமரச ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் எண்ணெயை மட்டுமே பாதிக்கும். ஆனால் குழாய் எண்ணெய் அல்ல. ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்த ஒப்பந்தம் ரஷ்ய போர் இயந்திரத்திற்கான பெரும் நிதி ஆதாரத்தை துண்டித்துவிட்டது என கூறினார். இது பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும், இதில் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா தற்போது ஐரோப்பிய …
-
- 3 replies
- 297 views
-
-
"சிவெரோடோனெட்ஸ்க்" நகரின்... மையப் பகுதியை, நெருங்கிய ரஷ்ய படைகள் ! ரஷ்யப் படைகள் உக்ரைனின் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி விட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தீவிர மோதலை அடுத்து அவர்கள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரத்தின் பாதிக்கு மேல் இப்போது செச்சென் போராளிகள் உட்பட ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு பொருளாதார, மனிதாபிமான மற்றும் தற்காப்பு இராணுவ உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் பெலரஸ் மீது பிரி…
-
- 0 replies
- 204 views
-
-
அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி தினத்தந்தி உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளத…
-
- 10 replies
- 630 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில்... புதிதாக 71பேருக்கு, குரங்கு காய்ச்சல்: பிரித்தானியாவில் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்வு! இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல் வைரஸ் உள்ள எவரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்போது உடலுறவில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்துகிறது. முன்னெச்சரிக்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எட்டு வாரங்களுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கான ஆபத்து குறைவாக …
-
- 0 replies
- 171 views
-
-
உக்ரைனுக்கு... ஆயுதங்கள் வழங்குவதனை, நிறுத்த வேண்டும் என... பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட…
-
- 4 replies
- 401 views
-
-
ரஷ்ய ஜனாதிபதிக்கு... உடல்நிலை சரியில்லை என்ற கூற்று, உண்மைக்கு புறம்பானது! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுவார். மேலும் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயின் அறிகுறிகளைக் காண மாட்டார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இந்த செவ்வி வந்துள்ளது. கிழக்கு பிராந்தியத்…
-
- 0 replies
- 237 views
-
-
உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு... புதிய விசா வாய்ப்பு வழங்கும், பிரித்தானியா! உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும். இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களுக்கான கதவு திறக்கப்படுமெனவும், இது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரகாசமான மற்றும் சிறந்தவர்களை ஈர்க்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற பிரித்தானியா அல்லாத சிறந்த பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும். பட்டதாரிகள் எங்கு பிறந்தாலும் தகுதியுடையவர்கள், விண்ணப்பிக்க வேலை வாய்ப்பு தேவையில்லை. வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் இளங்கலை அல்லது மு…
-
- 0 replies
- 231 views
-
-
நைஜீரியாவில்.... தேவாலய நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழப்பு தெற்கு நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் தேவாலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர “ஷாப் ஃபார் ஃப்ரீ” நேற்று சனிக்கிழமை அதிகாலை இடமபெற்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1284358
-
- 0 replies
- 232 views
-
-
குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் பரவியது! பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு நோயாளிகளுக்கும் ஸ்பெயினுக்கு பயணம் செய்த வரலாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கு…
-
- 0 replies
- 140 views
-
-
கண்ணை கவரும் வண்ண பட்டாம்பூச்சிகள் - இனி இவற்றை நம்மால் காண முடியாது ஜார்ஜினா ரன்னார்ட் பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KEITH WARMINGTON சமீபத்தில், 58 பட்டாம்பூச்சி இனங்களில் 24 இனங்கள் விரைவில் அழிந்துவிடும் என்று பிரிட்டனின் பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை எச்சரித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அமைப்பு கடைசியாக ஒரு சிவப்புப் பட்டியலைத் தொகுத்தது. தற்போது அந்த பட்டியலில் மேலும் ஐந்து இனங்கள் சேர்ந்துள்ளன. வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பதன் மூலம் பட்டாம்பூச்சிகளின் அழிவுக்கு மனித…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
ரஷ்ய படைகள்... கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக... தகவல் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவிற்கமைய ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனில் இராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனில், ரஷ்யப் படையினர் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, …
-
- 2 replies
- 243 views
-
-
உக்ரைன் துருப்புக்கள்... "செவெரோடோனெட்ஸ்கை" விட்டு, வெளியேறலாம்! உக்ரைனின் பெரிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் வெளியேறலாம் என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் நகரத்தின் ஒரு பகுதி சுற்றியுள்ளதால், உக்ரைன் துருப்புக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளப்படாமல் இருக்க வெளியேற வேண்டியிருக்கும் என லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். கிழக்கு டோன்பாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா ஒரு முக்கிய போர் நோக்கமாகக் கொண்டுள்ளது ரஷ்யாவின் முன்னேற்றத்தை எதிர்க்க நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை அதை வழங்கவில்லை. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைனுக…
-
- 0 replies
- 337 views
-
-
கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம் கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்களை இரான் கைப்பற்றியது. பாரசீக வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்... Written by - Malathi Tamilselvan | Last Updated : May 28, 2022, 06:55 AM IST கிரீஸின் இரண்டு எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியது இரான் முன்னதாக இரானின் கப்பலை கைப்பற்றியது கிரீஸ் அமெரிக்காவின் தூண்டுதலில் கிரீஸ் இரானின் கப்பலை கைப்பறியதற்கு பதிலடி கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்கள் மற்றும் அதன் பணியாளர்களை இரான் கைப்பற்றியது. இரான் க…
-
- 2 replies
- 446 views
-
-
ஆஸ்திரேலிய அரசால் திட்டமிட்டுத் திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள் - மன்னிப்பு தினத்தின் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES/ IAN WALDIE எந்த ஒரு நாட்டுக்கும் அதன் குழந்தைகள்தான் எதிர்காலம். ஆனால், ஓர் இனத்தில் சில தலைமுறைகளுக்கு குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டால் என்ன நடக்கும்? அதைச் செய்ததன் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் பிப்ரவரி 26ஆம் தேதி தேசிய மன்னிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒர…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
20 நாடுகளில்... 200 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்! 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், ‘எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதி…
-
- 0 replies
- 194 views
-
-
ராணியின்... பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும், மில்லியன் கணக்கான மக்கள்! பிரித்தானியா முழுவதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன், நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை வார இறுதியில் மில்லியன் கணக்கான மக்கள் ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னரின் 70 ஆண்டுகால மைல்கல்லைக் கொண்டாட ஆர்வமுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து பெரிய எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை உள்ளூர் சபைகள் அங்கீகரித்த பிறகு, நாடு முழுவதும் 16,000 வீதி விருந்துகள் இடம்பெறுமென மதிப்பிடப்பட்டுள்ளது. சில நிகழ்வுகள் தனியார் வீதி விருந்துகள். மற்றவை பெரிய ஜூபிலி மதிய உணவு என்று செல்லப்பெயர். மற்றும் பெரிய மதிய உணவு பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஹெர் மெ…
-
- 0 replies
- 299 views
-
-
வட கொரியா மீது... கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு, ரஷ்யா- சீனா எதிர்ப்பு! வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட ஒன்பது முந்தைய தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரஷ்யாவும் சீனாவும், தற்போது பொருளாதாhரத் தடை தீர்மானத்தை எதிர்த்து முதல்முறையாக வாக்களித்துள்ளன. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 13-2 ஆக இருந்தது. ஆனால், ரஷ்யாவும் சீனாவும், தனது வீட்டோ அதிகாரத்…
-
- 0 replies
- 165 views
-
-
எதிர்வரும் 10 நாட்களில்... 200 க்கும் மேற்பட்ட விமானங்களை, இரத்து செய்யும் ஈஸிஜெட்! எதிர்வரும் 10 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ஈஸிஜெட் இரத்து செய்யவுள்ளது. இதனால் அரை கால விடுமுறையில் வெளிநாடு செல்லும் குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. லண்டனின் கேட்விக் விமான நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 24 விமானங்கள், மே 28ஆம் திகதி முதல் ஜூன் 6ஆம் திகதி வரை இரத்து செய்யப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மென்பொருள் செயலிழப்பு காரணமாக வியாழக்கிழமை, சுமார் 200 விமானங்களை இரத்து செய்ய ஈஸிஜெட் கட்டாயப்படுத்தியது. இந்த பிரச்சினை பிரித்தானியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதித்தது. வெள்ளிக்கிழமை காலை மேலும் 20 ஈஸிஜெட் விமானங்…
-
- 0 replies
- 288 views
-
-
கிழக்கு திமோர் கடற்கரையில்... நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு, சுனாமி எச்சரிக்கை! கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழப்பு…
-
- 0 replies
- 169 views
-
-
உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன உக்ரேனிலிருந்து ரஸ்ஸியாவினால் சுதந்திரப் பிராந்தியங்களாக அறிவித்துப் பிரிக்கப்பட்ட டொனெஸ்ட் பிராந்தியத்தினை உக்ரேனுடன் இணைக்கும் ஆற்றின் மீதான பாலத்தினைக் கடக்க எத்தனித்த ரஸ்ஸிய பட்டாலியன் ஒன்று மீது உக்ரேனிய விசேட படைகள் நடத்திய தாக்குதலில் பல ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கிழக்கு உக்ரேனில் இருக்கும் இந்த ஆற்றினை செயற்கையான மிதக்கும் பொன்டூன் பாலங்களைப் பாவித்து ரஸ்ஸிய ராணுவம் கடக்க எத்தனித்திருந்தது. இந்த பாலம் பூர்த்தியானதும் ஆற்றினைக் கடப்பதற்கென்று தாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்களின் அணியொன்று ஆற்றின் அருகே காத்திருந்த …
-
- 36 replies
- 1.9k views
-
-
போதைப்பொருள்- பண மோசடி குற்றச்சாட்டு: ஆறு இராணுவத்தினரும், ஒரு படைவீரரும்... ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது! போதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு ஐரிஷ் பாதுகாப்பு துருப்புக்கள் மற்றும் ஒரு கோல்ட்ஸ்ட்ரீம் பாதுகாப்பு படைவீரர் ஆகியோர் திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலிக்கான ட்ரூப்பிங் தி கலரில் 1ஆவது பட்டாலியன் ஐரிஷ் காவலர்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அற…
-
- 1 reply
- 253 views
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள் ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய வகையில் புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்து. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கி…
-
- 0 replies
- 188 views
-
-
உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு... ஐரோப்பிய ஒன்றியம் தான், முட்டுக்கட்டை போட்டுள்ளது: ரஷ்யா குற்றச்சாட்டு! உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், ‘உக்ரைனிலிருந்து தானியங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை ரஷ்யா தடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறோம். உண்மையில், எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம்தான் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது’ என கூறினார். தற்போதைய போர் காரணமாக, உக்ரைனில் உற்பத்தியாகியுள்ள 2 கோடி டன் தானியங்களை அந்த நாட்டு விவசாயிக…
-
- 0 replies
- 172 views
-
-
கனடாவில்... 16 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு! கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு முன் எச்சரிக்கை நடவடி…
-
- 0 replies
- 165 views
-