உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
டோங்கா எரிமலை வெடிப்பு: துண்டான இணைய கேபிளை சரி செய்வதில் என்ன சிக்கல்? இணைக்கும் கப்பல் எங்கே? ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்பச் செய்தியாளர் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் - மாதிரிப் படம் டோங்காவை உலகின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் கடலுக்கடியில் உள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள் ஒன்று சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது துண்டானது. தெற்கு பசிபிக் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள 49,889 கிலோமீட்டர் நீளமுள்ள இணைய கேபிள்களில் ஏற்பட்டுள்ள துண்டிப்புகள், பிரச்சனைகளை சரி செய்ய, ஒரு மாத காலத்துக்…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா? நவீன்சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிக…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு! உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களும் வெளியேற பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரி…
-
- 7 replies
- 638 views
- 1 follower
-
-
டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ளூம் எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது. இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. வானிலை செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்யும் பிரிட்டன் விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 55 கிமீ உயரம் வரை இந்தச் சாம்பல் மேகம் சென்றிருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர். இது வளிமண்டலத்தில் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மீசோஸ்பியர் அ…
-
- 2 replies
- 443 views
- 1 follower
-
-
இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடு : தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர் ! புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளார். தொற்றுநோயால் மிகவும் அழிவுகரமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டவர்களை விட தான் வேறுபட்டவன் அல்ல என்றும் கூறியுள்ளார். கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அன்பானவருடன் இருக்க இயலாமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை அடுத்து முழு நாடும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நியூசில…
-
- 2 replies
- 396 views
-
-
அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 60 பேர் உயிரிழப்பு உலகம் சினி செய்திகள் ஐக்கிய அரபு அமீரகம் மீது இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹவுத்தி இராணுவ இலக்குகளை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துகின்றனர். ஐக்கிய அரபு …
-
- 3 replies
- 394 views
-
-
இயற்கை அதிசயம் A68 மெகா பனிப்பாறை: நாள்தோறும் 150 கோடி டன் நன்னீரை கடலில் கலந்த ராட்சத பனிப்பாறை ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, A68 பனிப்பாறை A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் அட்லாண்டிக் பெருங்கடலில் நாள் ஒன்றுக்கு 150 கோடி டன் தண்ணீர் கலந்தது. இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமானால், பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் ஒரே நாளில் கடலில் கலந்தது. A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக, குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அ…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
யுக்ரைன் பதற்றம்: அமெரிக்காவின் 'மரண' ஆயுதங்கள், ரஷ்யாவின் ஒரு லட்சம் வீரர்கள் - எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரைனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவானவரை யுக்ரைனின் அதிபராக நியமிக்க விளாதிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், யுக்ரைன் எம்.பி. யெவென் முரயேவ் என்பவரது பெயரைக…
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை டோங்கா நாட்டில் நீருக்கடியில் ராட்சத எரிமலை வெடித்ததை அடுத்து டோங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு தேவாலயம் மற்றும் பல வீடுகள் வழியாக அலைகள் செல்வது டோங்காவில் இருந்து வெளியாகிய சமூக ஊடகக் காட்சிகளில் இருந்து தெரியவருகிறது. இதனையடுத்து, அங்கு வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். எட்டு நிமிட வெடிப்பு மிகவும் வன்முறையாக இருந்தது என்றும் 800 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பிஜியில் "பலத்த இடி சத்தங்களை" என்று கேட்க முடிந்தது என்று தலைநகர் சுவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலையில் இருந்து கொட்டும் வா…
-
- 6 replies
- 690 views
- 1 follower
-
-
19 ஜனவரி 2022, 06:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரெயேசூஸ் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார். சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வ…
-
- 4 replies
- 381 views
- 1 follower
-
-
சீன குளிர்கால ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு My2022 செயலி கட்டாயம்: எச்சரிக்கும் சைபர் வல்லுநர்கள் சோஃபி வில்லியம்ஸ் & பிரான்செஸ் மாவ் பிபிசி நியூஸ் 20 ஜனவரி 2022 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, குளிர்கால ஒலிம்பிக் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சீனாவின் பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அது பயனர்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாக வழிவகுக்கலாம் என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். My2022 என்கிற அந்தச் செயலி…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
நேட்டோவை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுதை தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லை: ரஷ்யா முடிவு! நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீர்வையும் ஏற்கப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை மேற்கத்தி நாடுகள் கண்டித்து வருகின்றன. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்காகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு துளியும் கிடையாது. இருந்தாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன…
-
- 0 replies
- 335 views
-
-
19 ஜனவரி 2022, 08:55 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய சேனலில் ஒளிபரப்பாகும் செய்தி வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து திங்கட்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவம் கூறியது. ஜப்பானும் வடகொரியாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனையை உறுதிப்படுத்தியது. கடந்த இரு வார காலத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா! எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக ஒரு விமானம் புறப்பட்டது என நியூஸிலாந்து பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன், சுனாமி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெசிந்தா கூறியுள்ளார். டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்ற…
-
- 2 replies
- 539 views
-
-
பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கை, பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கியுள்ள உலகளாவிய அவசரநிலை நெருக்கடி, வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டுவரவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் ( Environmental Investigation Agency), பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேடுகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடிக்குச் சமமானது என்றும் அந்த நிறுவனம் வாதிடுகிறது. இப்போது நாம் சுவாசிக்கும் காற்…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது. மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. …
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: இதுவரை 26பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல், பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீட…
-
- 0 replies
- 221 views
-
-
அபுதாபியில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் – மூவா் பலி January 17, 2022 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். . மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 291 views
-
-
ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது. தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்தமையை அடுத்து நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெ…
-
- 0 replies
- 319 views
-
-
கொரோனா வைரஸ்: கோவிட் தொற்றுநோய் பேரிடர் அதன் இறுதி ஆட்டத்திற்குள் நுழைகிறதா? Getty Images "கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் முடிந்துவிட்டதா?", "நான் எப்போது என் வாழ்க்கையை இயல்பாகத் தொடர முடியும்?" கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மனப்போக்கு யாருக்குத்தான் ஏற்படவில்லை. எனக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கான பதில், மிக விரைவில்... பெருந்தொற்றுப் பேரிடரின் இறுதி ஆட்டத்தில், ஒமிக்ரான் அதிகமாகக் காயப்படுத்தக்கூடும் என்ற கணிப்பு வளர்ந்து வருகிறது. ஆனால், அடுத்ததாக என்ன வரும்? ஒரு விரல் சொடுக்கில் கொரோனா வைரஸை மறையச் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக, "எண்டெமிக் (ஆண…
-
- 0 replies
- 268 views
-
-
மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் : தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் - ஐ.நா.எச்சரிக்கை ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொ…
-
- 2 replies
- 288 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் Posted on January 14, 2022 by தென்னவள் 14 0 ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரும் எனறு ஈரான் ஆதரவு போராளிகள் குழு அறிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 2,500 வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க த…
-
- 0 replies
- 315 views
-
-
பிரித்தானிய முடக்கத்தில் விருந்து: மன்னிப்புக் கோரினார் பொரிஸ்! பதவியை இழப்பாரா? January 12, 2022 பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன்சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார். உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகள…
-
- 0 replies
- 397 views
-
-
ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா! வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக மாநில ஊடகமான கே.சி.என்.எ. குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணை 700 கிமீ (434 மைல்கள்) தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டுப்பாடு மற்றும் குளிர்காலத்தில் செயல்படும் திறன் போன்ற வசதிகளையும் இந்த ஏவுகணை சோதனை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட குறைந்த உயரத்தில் இலக்குகளை நோக்கி பறக்கும் மற்றும் ஒலி…
-
- 10 replies
- 969 views
-
-
தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதார வரி – கியூபெக் அரசாங்கம் முடிவு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டிலேயே தடுப்பூசி போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது இதுவே முதல்முறை என முதல்வர் அறிவித்தார். கியூபெக்கில் சுமார் 12.8% மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் 85% க்கும் அதிகமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன. எனவே முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என முதல்வர் …
-
- 1 reply
- 306 views
-