உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பிரித்தானியாவின் ராணி- இளவரசர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருப்பார்கள்! பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரச உதவியாளர்கள் தடுப்பூசி பெறுவது ஒரு தனிப்பட்ட முடிவு மற்றும் தனிப்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரித்தானியா முழுவதும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா, டிசம்பர் 2ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல் சுற்று தடுப்பூசிகள் டிசம்பர் 8ஆம் திகதி முதல் போடப்படும் என்று புரிந்து கொள்ளப்பட…
-
- 0 replies
- 376 views
-
-
ஈரானின் அணு விஞ்ஞானி செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டார்: ஈரான்! ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே, செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, கடந்த மாதம் 27ஆம் திகதி தெஹ்ரான் அருகே ஒரு அருகிலுள்ள அப்சார்ட் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில் இந்த தாக்குதலை, ஈரானின் மதகுரு மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாமிய குடியரசின் நீண்டகால எதிரியான இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், இதற்க…
-
- 2 replies
- 532 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டும் சீனா! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/WireAP_90fa1484bd5745b181b5780609100e66_16x9_992-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் சீனா முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷ்யா, எகிப்து, மெக்ஸிகோ உட்பட 12க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக முன்பதிவுகளை பெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-1…
-
- 0 replies
- 564 views
-
-
கொரோனா – 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் – ஐ.நா எச்சரிக்கை 80 Views கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுளில் கொரோனா வைரஸின் பன்முக பாதிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது ஆகியவை குறித்து ஐ.நா மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா ம…
-
- 0 replies
- 500 views
-
-
கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் – உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் Rajeevan ArasaratnamDecember 6, 2020 கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவு காணமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் அதனோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகளின் சோதனை முடிவுகள் காரணமாக வைரஸ் ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் என என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் முதலாவது உயர்மட்ட அமர்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். பாதை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மனித குலத்தின் சிறந்த குணாதிசயங…
-
- 0 replies
- 541 views
-
-
மனிதர்கள் வாழ்ந்திராத தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் ரோஹிங்கியா அகதிகள்.! மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. முதல்கட்டமாக, இத்தீவுக்கு 1,600 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இத்தீவுக்கு சுமார் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்ற வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடல் மட்ட அதிகரிப்பால…
-
- 0 replies
- 689 views
-
-
அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்! அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவேண்டும் என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளார். நாளிதலொன்றுக்கு எழுத்திய கட்டுரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘சீனாவால் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த தற்போதைய சூழலில், உலகில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனாதான் திகழும். அமெரிக்காவையும் உலகின் பிற…
-
- 1 reply
- 733 views
-
-
இளையோர் ‘ஒன் லைன்’ ஊடகத்துக்கு தன் நேர்காணலை வழங்கிய பிரெஞ்சு அதிபர் மக்ரோன் பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் பிரதான ஊடகங்களை விட சமூக ஊடகங்களே இளைய தலைமுறையை ஈர்க்கிறது. அவர்களுக்குச் சேர வேண்டிய விடயங்களை அவற்றின் ஊடாக அணுகிச் சொல்ல வேண்டிய மாற்றத்துக்குரிய கால கட்டம் இது. முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் ‘ஒன் லைன்’ வீடியோ மீடியா ஒன்றுக்குத் தனது நீண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மக்ரோன். ருவீற்றர், முகநூல், ரிக்ரொக், யூரியூப் என முழுவதும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகின்ற ‘புறு மீடியா’ வில் (https://www.brut.media/fr) மக்ரோனின் செவ்வி நேற்று ஒளிபரப்பாகியது.. …
-
- 0 replies
- 496 views
-
-
அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 32 Views அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீத…
-
- 0 replies
- 364 views
-
-
100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்! December 5, 2020 100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அந் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதவியேற்றதும் இதனை அமுல்படுத்த இருப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றானது மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் முகக்கவசம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் என்று ஜோ பைடன் பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள் அடுத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் முகக்கவசம் அணிவது தேசியக் கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/953…
-
- 0 replies
- 434 views
-
-
அர்மீனியா உடனான மோதலில் 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவிப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/929816-azerbeijan-war-new-720x450.jpg அர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை எனவும், 100-க்கும் மேற்பட்ட வீரகள் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசத்திற்கான போரில் ஆர்மீனியாவிற்கு எதிராக, தங்களது வீரர்கள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டியதாக அசர்பைஜன் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த மோதல…
-
- 0 replies
- 843 views
-
-
பில் கிளின்டன், புஷ், ஒபாமா மூவரும் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்ற முடிவு கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், கிளின்டன், பராக் ஒபாமா ஆகிய மூவரும் நாட்டு மக்கள் பார்க்கும் வண்ணம் கமராக்களின் முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசியைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்ள முன்வந்துள்ளனர். வைரஸ் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பு மருந்து குறித்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனங்களைக் களைவதற்காகவும் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவுள்ளனர். அவர்களது இந்த முடிவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளன. சுமார் 50 வீதமான அமெரிக்கர்கள் மத்தியில் வைரஸ் தடுப்பு மருந்துகள…
-
- 2 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்து- வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை விதிக்கப்படும். சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளிலிருந்து பிரெக்சிட் பிந்தைய முறிவில் இந்த தடை அமுலில் இருக்கக்கூடும் என கூறினார். ஆர்எஸ்பிசிஏ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இது விலங்கு நலனுக்கான ஒரு முக்கிய சாதனை என்று கூறியது. ஆனால், பெரிய மாற்றங்கள் இங்கிலாந்தின் உணவு விநியோகச் சங்கிலியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்தது. இந்தத் திட்டம் குற…
-
- 0 replies
- 806 views
-
-
அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும்…
-
- 0 replies
- 414 views
-
-
புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/115778679_tv064072243-720x450.jpg ஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கவும் ஈரான் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் யுரேனியத்தை செறிவூட்டுவதை 20 சதவீதமாக மீண்டும் தொடங்க வேண்டும். இது 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 3.67 சதவீதத்துக்கும் மேலானது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே இலக்கு வைக்கப்பட்ட பின்னர் இது வருகிறது. இன்னும் மூன்று மா…
-
- 1 reply
- 614 views
-
-
பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்! December 3, 2020 பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் ப…
-
- 0 replies
- 345 views
-
-
மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை Rajeevan Arasaratnam December 2, 2020மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை2020-12-02T09:20:23+05:30 மலேசியாவின் பொலிஸின் தலைமை அதிகாரியை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல விடுத்துள்ள விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி தான் என தெரிவிக்கும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி என தெரிவித்துள்ள நபர் ஒருவர் மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் அப்த…
-
- 9 replies
- 1.4k views
-
-
பாதசாரிகள் மீது காரை மோதி தாக்குதல்: ஜேர்மனியில் கைக்குழந்தை உட்பட நால்வர் பலி! 30 பேர் காயம்!! ஜேர்மனியில் காரை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன. ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. நகரில் பாதசாரிகள் நடமாடும் …
-
- 0 replies
- 475 views
-
-
அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு அதிர்ச்சியானதாக அமையலாம்? நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 554 views
-
-
பைடனுக்கு எதிராக இஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப் ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு 0 அ.நிக்ஸன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சென்ற 11ஆம் திகதி புதன்கிழமை கூறியுள்ள நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி இளவரசர் முகமது பின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/
-
- 0 replies
- 511 views
-
-
புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர் கார்த்திகேசு குமாரதாஸன் மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்…
-
- 0 replies
- 769 views
-
-
எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது. பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன. ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய…
-
- 2 replies
- 758 views
-
-
ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என தேர்தல் கல்லூரியினால் முறையாக அறிவிப்பப்பட்டுள்ளதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்திவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வது கடினம் என்று கூறினார். அத்துடன் தேர்தல் மோசடி குறித்த ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும் இதன்போது மீண்டும் முன்வைத்தார். அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தேர்தல் கல்லூரி முறையின் கீழ் பைடனுக்கு 306 வாக்குகளும்…
-
- 1 reply
- 725 views
-
-
இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு ஆளான ஃபக்ரிஸாதேவின் கார் இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார். இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன…
-
- 32 replies
- 3.2k views
-