Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு! வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. உள்ந…

  2. அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திங்களன்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அண்மைய காலங்களில் எஸ்பருடன் பலவிதமான முரண்பாடுகளை கொண்டுள்ள டிரம்ப், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பார் என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் எந்தவொரு புதிய வேட்பாளரையும் செனட் உறுதிப்படுத்த வாய்ப்பில்லை. எனினும் இந்த அறிவிப்பு குறித்து பென்டகன் எதுவித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. எஸ்பரின் முன்னோடி ஜிம் மாட்டிஸ் ட்ர்ம்ப் தொடர…

  3. அமெரிக்க தேர்தல்: மீண்டும் பலத்தை நிரூபித்த இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தாரேந்திர கிஷோர் பிபிசி பட மூலாதாரம், GETTY IMAGES/TWITTER அமெரிக்கத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றுள்ளனர். டாக்டர் ஆமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெய்பால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அந்த நால்வர். மும்பையில் பிறந்த 52 வயதான மருத்துவர் ஹெரல் திபிர்னெனி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டெபி செல்கோ ஆகியோர் இடையே அரிசோனாவில் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை இங்கே இன்னும் தொடர்கிறது. …

  4. ரஷ்ய ஜனாதிபதி புடின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார்? by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/ap_russia_putin_01June20-720x450.jpg ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்கின்சன் (மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புடின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்’ என த…

  5. பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை! பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்…

  6. குவாத்தமாலாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி - 150 இற்கும் மேற்பட்டோர் மாயம் குவாத்தமாலாவை தாக்கிய ‘ஈட்டா’ சூறாவளி காரணமாக அங்கு பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு நகரமொன்றும் முற்றாக மண்சரிவில் புதையுண்டதால் 150 பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல்போயிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவின் வட மத்திய பகுதியில் உள்ள அல்டா வெர்பாஸ் பிராந்தியத்தை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. மணித்தியாலத்திற்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காற்றில் பிராந்தியத்திலுள்ள பல்வேறு உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதோடு, புயலைத் தொடர்ந்து பெய்த …

  7. துருக்கி மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்படும்: பிரான்ஸ் எச்சரிக்கை! சார்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வன்முறை உணர்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-வெஸ்லே டிரையன் வானொலியொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எர்டோகன், பிரான்ஸுக்கு எதிராக வன்முறைப் பிரகடனம் செய்து வருகிறார். அத்துடன், வெறுப்பைப் பரப்பும் வகையிலான கருத்துகளையும் …

  8. பூர்வீகக் குடிமக்கள் சார்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஉதாசீனம் செய்கிறது அமெரிக்கா November 6, 2020 Share 55 Views மக்கேட் – ஓக்லஹோமா (McGirt vs Oklahoma) விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில், மேற்கொண்ட மிக முக்கிய தீர்மானம், ஐக்கிய அமெரிக்காவில் வாழுகின்ற பூர்வீகக் குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக கீழ் நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த தீர்ப்பை மேற்குறிப்பிட்ட தீர்மானம் தலைகீழாக மாற்றியது. நீதிமன்றத்தின் பார்வையை வெளிப்படுத்திய ஆவணத்தின் முதற்பக்கத்தின் கடைசி இரண்டு வரிகள் அதனை இ…

  9. உருவாகட்டும் புதிய சீலே! பெருங்கவிஞர் பாப்லோ நெருதாவின் நாடான சீலே கடந்த ஆண்டு போராட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மரபியரான அதிபர் செபாஸ்தியன் பின்யெரா ஒப்புக்கொண்டார். அதன்படி, சட்டத்திருத்தம் மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதற்குக் கடந்த அக்டோபர் 25-ம் தேதியன்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் 78% சீலே மக்கள் புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்று வாக்களித்தார்கள். ஏற்கெனவே இருக்கும் அரசமைப்புச் சட்டம் அகஸ்தோ பீனஷேவின் ராணுவ ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 1990-ல் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்த அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. மரபுத்துவத் தாராளமய சந்தைக் க…

  10. சொர்ணம் சங்கரபாண்டி வாஷிங்டன் டி.சி. , பிபிசி தமிழுக்காக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார். பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில், இது குறித்து…

    • 3 replies
    • 1.4k views
  11. நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு Bharati November 5, 2020 நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு2020-11-05T10:42:44+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore கொரோனாவுக்கு எதிராக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார நிலைமைகள் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் ஆகியவற்றின் கூட்டு ஆய்வில், கிட்டத்தட்ட 300 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் மற்றும் கிட்டத்தட்ட முழு …

    • 4 replies
    • 1.9k views
  12. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த நிலைப்பாடு மாறாது- சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் Rajeevan Arasaratnam அமெரிக்க தேர்தல் முடிவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாற்றமடையப்போவதில்லை என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த கொள்கையும் அணுகுமுறையும் மாறப்போவதில்லை டிரம்பும் பைடனும் செயற்பட…

  13. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நி…

    • 6 replies
    • 1.1k views
  14. இங்கிலாந்தின் 2 ஆம் முடக்கல் நிலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் பிரிட்டன் அரசியல் பிரதிநிதிகள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, இங்கிலாந்தின் ஒரு மாத கால முடக்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மார்ச் மாதத்தில் இங்கிலாந்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது முடக்கல் நிலையானது வியாழக்கிழமை நடைமுறைக்கு வரவுள்ளது. இந் நிலையிலேயே முடக்கல் நிலைக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தின் கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளமையினாலும், கொவிட்-19 இரண்டாவது அலை ‍தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் போரிஸ் ஜோன்சன் தேசிய முடக்கல் நிலைக்கு உத்தரவிட்டுள்ளார். இங்…

  15. கமலா ஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடு- டிரம்பின் வெற்றிக்காக புதுடில்லியில் பிரார்த்தனை November 3, 2020 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புதுடில்லியில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி கமலாஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ளதுளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்தார் சுமார் 20 பேர் வழிபாடுகளி;ல் கலந்துகொண்டனர் என ஆலயத்திற்கு அருகில் கடைவைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் தெரிவித்…

  16. பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம் பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதிய மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வு…

  17. வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது? 3 நவம்பர் 2020, 04:34 GMT பட மூலாதாரம், GETTY IMAGES ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் மற்றொரு கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நகரில் பெரும்பாலான ப…

  18. பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான மயோரி பழங்குடியினத்தை சேர்ந்த நனையாஹ் மஹூட்டா எனும் பெண்மணிக்கே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸும் மயோரி இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குறித்த பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணிக்கு…

  19. பிரித்தானிய அரச குடும்பத்தில் கொரோனா – மறைக்கப்பட்ட தகவல்? பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகத்தினை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளவரசர் வில்லியம் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏப்ரல் 09ம் திகதி முதல் 16ம் திகதிவரையான காலப்பகுதியில் அவர் எவ்வித பணிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியிடப்படாத போதும், ஏப்ரல் மாதத்தின் ஏழு நாட்களில் இளவரசர் வில்லியம் …

  20. உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அறிகுறிகள் ஏதுமற்று உள்ள அதேவேளை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் அனைவரும் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசி…

  21. பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம். என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்க உய…

  22. நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் - ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம் வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார். கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தால…

  23. கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம் கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்‍தையோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிக்கையொன்றையும் பொலி…

  24. "அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி. பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், GETTY IMAGES இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும். பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. இனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசி…

  25. பிரான்ஸ் குறித்து இம்ரான் கான்: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இம்ரான் கான் "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்…

    • 2 replies
    • 669 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.