Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனேடிய மாகாணங்களுக்குள் பரவிய அமெரிக்க காட்டுத் தீ அமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நெருப்பிலிருந்து வரும் புகை இரண்டு பெரிய சதுப்பு நிலங்களில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவற்றில் ஒன்று மேற்கு அமெரிக்கா முழுவ…

  2. தாய்வானுக்கு அருகே நடைபெறும் இராணுவ பயிற்சிகள் ஒரு ‘தேவையான நடவடிக்கை’ – சீனா கடந்த வாரம் தாய்வானின் தென்மேற்கு கடற்கரையில் சீன இராணுவம் மேற்கொண்ட பயிற்சிகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒரு தேவையான நடவடிக்கை என பெய்ஜிங் நேற்று (புதன்கிழமை) கூறியுள்ளது. சீனாவின் பெரிய அளவிலான வான் மற்றும் கடற்படைப் பயிற்சிகள் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கை என தாய்வான் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது. ஜனநாயக தாய்வானை தனது சொந்தமாகக் கூறும் சீனா, தீவின் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, அத்தோடு சீன ஆட்சியை ஏற்பதை கட்டாயப்படுத்துவதற்கே இவ்வாறான மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாய்வான் கருதுகிறது. தாய்வானின் பிரதான நிலப்பரப்…

  3. உலக அமைதிக்கானத் தினத்தில், ஐ.நாவின் வலியுறுத்தல் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21ம் திகதி அன்று உலக அமைதிக்கான தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாளில் போர் நிறுத்தம் மற்றும் அகிம்சையினைப் பின் பற்றுமாறும் ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஐ.நா விடுத்துள்ள அறிவித்தலில், இந்த வருடம் நம்முடைய பொதுவான எதிரியாக உருவெடுத்திருப்பது கோவிட் 19 என்னும் வைரஸே. இது உலக அமைதி பாதுகாப்பு மக்கள் நலன்களைப் பாதித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு(António Guterres), உலக நாடுகளை தங்களுடைய பகைமையை மறந்து இந்த உலகளாவியத் தொற்றை எதிர்த்துப் போரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளா…

  4. சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நாவிற்கு அழுத்தம் கொடுக்குமா கனடா? சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உதவுமாறு புலம்பெயர் தமிழர்கள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். சிறீலங்காவில் 1983 முதல் 2009 வரை நடைபெற்ற உள் நாட்டுப் போரின் காரணமாக, குறைந்தபட்சம் 60,000ம் மேற்பட்ட மக்கள் காணாமல் போயிருப்பதாகச் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களின் நிலை பற்றி இன்று வரையில் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், கனடாவாழ் தமிழர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வெளிநாட்டு நீதி மன்றங்களில் நடத்தப்படும் வழக்கு…

  5. சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை உலகளவில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு, கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்க…

  6. இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்டி வரும் 20வது திருத்தம் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய சுயாதீன குழுக்களின் எதிர்காலம் 20வது திருத்தத்தில் தங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித உரிமைகள் பேரவையில் தனது இலங்கை மாற்றி வருவதாக தனது கவலைகளையும் பச்லெட் குறிப்பிட்டார். “இலங்கையில், புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தனது கடமைகளை விரைவாக மறுத்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அது 30/1 தீர்மானத்திற்கான …

  7. பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன் ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா ஒரு அரசு என்ற வகையில் பூர்வீகக் குடிகளின் இனவழிப்புக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நாடளாவிய விசாரணை மிகவும் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடு…

  8. ஓப்பந்தமில்லா பிரெக்ஸிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட அதிகம் பிரிட்டனை பாதிக்கும் – ஜேர்மனி நிதி அமைச்சர் ஒப்பந்தம் இல்லாத பிரெக்சிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்று ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். பேர்லினில் ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களுடனான கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஒரு கட்டுப்பாடற்ற நிலைமை பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே தனது மதிப்பீடு என ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். மேலும் ஐரோப்பாவால் அதைச் சமாளிக்க முடியும் என்றும் ஏற்கனவே தங்கள் செ…

  9. நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார். ‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார். இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும…

  10. ஐரோப்பாவின், மிகப்பெரிய அகதிகள் முகாமில்... பேரழிவு! ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13ஆயிரம் பேர் நிர்க்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, முகாமின் பெரும்பகுதியை தீ அழித்தது. இதனால் 13,000 குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். எனினும், இந்த தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் முகாமின் பரந்த பகுதிகளும், அருகிலுள்ள தளமும் தீயில் அழிந்தன. மருத்துவ வசதி மற்றும் கூடாரங்களின் சிறிய இடங்கள் மட்டுமே தீண்டப்படாமல் இருந்…

  11. தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுக்கு மேற்கே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள கமிட்டுகா நகரில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டிய தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுனர் தியோ காசி, அவர்களின் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நட…

  12. ஜேர்மனியிடமிருந்து... முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்தது சீனா! ஜேர்மனியில் இருந்து மற்றும் பன்றி தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த தடையை சீனாவின் சுங்க நிறுவனம் மற்றும் அதன் விவசாய அமைச்சகம் ஆகியன இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளன. கடந்த வாரம் காட்டுப் பன்றியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை ஐரோப்பிய நாடான ஜேர்மனி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது. கொடிய பன்றி நோய்க்கு எதிராக போராட வேண்டியுள்ள நிலையில், சீனாவுக்கான மூன்றாவது பெரிய பன்றி இறைச்சி வழங்குநரான ஜேர்மனியிமிருந்து பன்றி குறித்த இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது. இந்தத் தடை யை ஏ…

  13. சீனாவிலிருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு உத்தரவிட்டார் கிம் ஜொங் உன்! கொரோனா பரவலைத் தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகொரியா மட்டும் கொரோனா பாதிப்புக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடுவதில்லை. இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ரொபேர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலைத் தொடர்ந்து ஜனவரியில் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலையில் அவசர நிலை பிரகடனத்தை வடகொரியா அமுல்படுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து ச…

  14. ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்! ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை இன்று (சனிக்கிழமை) காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம் மௌசவியை மேற்கோள்காட்டி மாநில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சார்பில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று காலை அஃப்காரி தூக்கிலிடப்பட்டுள்ளார். தெற்கு நகரமான ஷிராஸில் நீர்வழங்கல் நிறுவன ஊழியரை அஃப்கரி (வயது-27) கத்தியால் குத்தியதாக கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்ட…

  15. தனது மாமாவை கொன்றது எப்படி? ட்ரம்பிடம் விளக்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங், தன் மாமாவிற்கு மரண தண்டனை விதித்து சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படையாக கூறிய தகவல், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் இடம்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நேரகாணல் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் முதலாக பரவ ஆரம்பித்த போதே, அதன் வீரியத்தையும், விபரீதத்தையும், ட்ரம்ப் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் என அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடி…

  16. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கனடா கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis, கனேடிய பிரதமர் Justin Trudeauவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கனேடிய அரசாங்கம் மெக்னிடிஸ்கி தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கனேடிய தமிழ் மக்கள் இலங்கையில் நடந்த காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நீதி விசாரணையை கோரி நடைப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் Garnett Genuis, கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி கனேடிய தமிழர்கள் டெரொன்டோ மற்றும் மொன்ட்றியலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி நட…

  17. போடுறா 100 தோப்புக்கரணம் மூன்று நாட்களாக காய்ச்சல். உடம்புக்கு முடியவில்லை. இரவில் வேறு சின்ன தம்பியை பார்க்கவேண்டும். தாய் தந்தையர் வேலையில். நான்காம் நாள் பாடசாலைக்கு போகிறான் சிறுவன், வீட்டுப்பாடம் செய்யாமல். ஆனாலும் மருத்துவரின் சான்றிதழுடன். அதனை வாங்கி பார்க்கிறார் ஆசிரியர். ஒரு பக்கமாக வைக்கிறார். எங்கடா வீட்டுப்பாடம். நாலு நாளுக்கு வராமல் இருந்தால், மறந்துவிடுவேன் என்று நினைத்தாயோ. உடம்புக்கு முடியாததால், செய்யவில்லை சேர்..... அப்படியா.... உனக்கு நல்ல தண்டனை தந்தாள் தான் சரிவரும். இவர்கள் வேறு அடிக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். போடுறா 100 தோப்புக்கரணம்.... ஆசிரியர் உத்தரவு போடுகிறார்.... முதலிலேயே பலவீனமாக இர…

  18. ஒக்ஸ்போர்ட் கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம் Rajeevan ArasaratnamSeptember 9, 2020 ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ்தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திய நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்டிராஜெனேகாவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகமும் இணைந்து உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திய நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள அஸ்டிரா ஜெனேகா சோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. ஓக்ஸ்போர்ட் மருந்தினை சர்வதேச அளவில் ப…

    • 2 replies
    • 681 views
  19. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்தது அமெரிக்கா! ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே-29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அபாயங்கள் எனக் கருதப்படுகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப் கூறுகையில், ‘சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவ…

  20. பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்! லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் …

  21. இம்முறை தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருக்கும் – கமலா ஹாரிஸ் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தலையிட்டால் ஜனநாயக கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால…

  22. ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின் ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் மட்டுமே, அமெரிக்காவை காப்பாற்ற முடியும். அவரை எதிர்த்து போட்டியிடும் பைடன், அ…

  23. கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம்; வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் - கமலா ஹாரிஸ் விமர்சனம் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என அமெரிக்காவில் இரு சட்டங்கள் உள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறும்போது, “அமெரிக்க நீதி துறையில் நிறவெறி இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்க்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க நீதி துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இருவேறு சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்”என்று தெரிவித்தார். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான காவல் துற…

  24. ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம் சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஐக்கிய நாடுகளின் நிபுணரால், இந்த தீர்ப்;பு கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் மூன்று பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…

  25. நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது. அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷ்யா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால், …

    • 4 replies
    • 616 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.