Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவிலும் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அமைதியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்கள் அல்-அஸாத் அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டன.இதையடுத்து, அந்தப் போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன. அதில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சில நாடுகளும், போராளிகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் களத்தில் இறங்கியதால் இடைநிற்றலின்றி போர் தொடர்ந்தது. இதற்கு நடுவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தன் பங்கிற்கு போர் தொடுக்க நாசமாகிப் போனது அந்த நாகரிகத் தொட்டில். இந்நிலையில்தான் சிரியாவில் நடந்து வரும் போரினால் 3 லட்சத்து 84…

    • 0 replies
    • 207 views
  2. நாட்டில் உள்ள எல்லா மக்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று செக் குடியரசின் பிரதமர் ஆன்ட்ரெஜ் பாபிஸ் தெரிவித்ததாக அந்நாட்டின் சிடிகே செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், நேற்றில் இருந்து புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் முன்னதாக செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள இருப்பதாக பிரிட்டன் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். பிரான்ஸ் மக்களில் பாதிப்பேருக்கு இந்த வைரஸ் தொற்றும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் ழீன்-மைக்கேல் பிளான்கர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல்…

    • 0 replies
    • 329 views
  3. பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொவிட்19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 93 வயதான ராணி தனது பாதுகா…

    • 0 replies
    • 765 views
  4. நாட்டு மக்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்த ஈரான் அரசு அதிரடி முடிவு உலகை அச்­சு­றுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கார­ண­மாக ஈரானில் வாழும் அனைத்து மக்­க­ளையும் கொரோனா வைரஸ் சோத­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்­ளது. ஈரானின் இரா­ணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முக­மது பகேரி தலை­மையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கிழமை நடை­பெற்ற ஆலோ­சனைக் கூட்­டத்திலேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், 600க்கும் மேற்பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே இந்­நோ­யினை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­துடன், ஈரானில் 08…

    • 1 reply
    • 339 views
  5. அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் – ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா March 15, 2020 உலகெங்கும்; அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதுடன் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையிலேயே அவுஸ்திரேலியா இவ்வாறு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று சனிக்கிழii நள்ளிரவு பிறப்பித்த பிரதமர் ஸ்கொட் மாரிசன், எமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்…

  6. ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, நோர்வே, டென்மார்க், சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் துருக்கிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்ததாக துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. அத்துடன் துருக்கியில் இருந்து அந்த நாடுகளுக்கான பயணமும் நிறுத்தப்படும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பயண கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 17ஆ…

  7. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்…

    • 1 reply
    • 505 views
  8. பிரித்தானியாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தும் அமெரிக்கா! பிரித்தானியாவிற்கு சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை குறைக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் கோ நேற்று (சனிக்கிழமை) தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்திற்கான பயணக் கட்டுப்பாடுகளை வொஷிங்டன் விதித்துள்ளது. இதேவேளை டெல்டா ஏர்லைன்ஸ் இன்க் விமான சேவை நிறுவனமும் பிரித்தானியாவிற்கான விமானங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இன்னும் முழு கால அட்டவணையை பறக்கும் சில அமெரிக்க விமான நிறுவனங்களில் ஒன்றான குறித்த விமான சேவை நிறுவனம் தென்மேற்கிற்க்கான விமானங்களை குறைப்பதை “தீவிரமாக பரிசீலித்து வருவதாக” கூறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து …

    • 1 reply
    • 366 views
  9. புடின் மேலும் இரண்டுமுறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு- புதிய அரசியலமைப்பில் கையொப்பமிட்டார்! ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டவரைபை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைபின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும். அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் தேர்தல…

  10. அடங்கா பிடாரி கொரோனா அடங்கியது சீனாவில்...!! 65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்து 541 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோன வைரஸ் சீனாவில் மிகப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது . அதுமட்டுமல்லாது சீனாவைத் தாண்டி சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது . உலகளவில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . சீனாவில் ஆரம்பத்தில் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் பலியான நிலையில் த…

    • 1 reply
    • 979 views
  11. கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேசிய கீதத்தையும் ஏனைய பாடல்களையும் பாடி தங்கள் மனோநிலையை உறுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தங்கள் பல்கனிகளில் நின்றவாறு இத்தாலிய மக்கள் பாடல்களை பாடியுள்ளனர். வீடுகளிற்குள் முடங்கியுள்ள மக்கள் தங்கள்மனோநிலைக்கு மறுபடி உயிரூட்டுவதற்காக தங்கள் வீடுகளில் உள்ள இசைக்கருவிகளை எடுத்து மாடிகளில் நின்று இசைத்துள்ளனர். கிட்டார் போன்ற இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு மக்கள் தங்கள் பல்கனிகளில் நின்று பாடல்களை பாடியுள்ளனர். இத்தாலியில் தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நேப்பிளெசில் விய…

    • 2 replies
    • 367 views
  12. ஐரோப்பா தற்போது கொரோனா தொற்று நோயின் மையமாக உள்ளது -உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் என்னும் இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸினால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார்.மேலும் ஐரோப்பாவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் 17,660 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,266 ஆக அதிகரித்துள்ளது.பிரான்சில் 2,876 பேரும் ஜேர்மனியில் 3,481 பேரும் பிரித்தானியாவில் 798 பேரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார். உயி…

    • 2 replies
    • 397 views
  13. உறக்கம் இல்லா உலகமாக இருக்கிறது உலகு. உலகப் போர் ஒன்று வந்ததுபோல் அங்கும் இங்குமாய் எங்கும் ஏக்கத்தோடு நிம்மதி இழந்த மனிதர்களாக கோரோனா என்ற கொடிய நோய் கொன்று தின்கிறது மனித வாழ்வை. கொடிய யுத்தங்களினாலும் கொடிய நோய்களினாலும் உலகம் நிம்மதி இழந்து சுழல்கிறது. மனித வாழ்வு இதில் இருந்து மீளவேண்டும். மனித அச்சுறுத்தலாக மாறும் இந்த கொடிய வைரசுகள் அன்று ஒரு காலம் ரோமன் ராச்சியத்துக்குள் வந்தது. பிளாக் அபேடாமிக்( plague epidemic)541 ம் ஆண்டுக் காலப்பகுதியில் ரோமன் ராச்சியத்தின் ஆத்மாவையே ஆட்டிப்படைத்தது. பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்தபடி கொன்ஸ்டான்நோபல்( Constantinople) நகரை கொலை செய்தபடி இருந்தது.இதே போலவே இக்கொடிய தொற்று நோய்கள் காலத்திற்கு காலம் தோண்றி மனித வாழ்வை அ…

    • 0 replies
    • 471 views
  14. வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2501058

    • 0 replies
    • 410 views
  15. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவ…

  16. இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங…

    • 0 replies
    • 347 views
  17. நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன கொரோனா வைரஸ் காரணமாக நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. அங்கு பாலர் பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் பதினைந்து நாட்கள் மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஏர்னா சூல்பேர் (Erna Solberg) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உலகநாடுகள் ஒரு கடினமான சூழலில் உள்ளநிலையில் நாம் இப்போது எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் வைரஸைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிகையலங்காரம், தோல் பராமர…

  18. கொரோனா அச்சம் – இன்று முதல் டென்மார்க்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். டென்மார்க்கில் இதுவரையில் 514 பேர் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். தனியார் துறையைப் பொறுத்தவரை எத்தனை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க முடியுமோ அத்தனை ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பை …

  19. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் – பிரித்தானிய பிரதமர்! பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அரசாங்க முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே இதன் காரணமாக பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் இதுவரையில் 596 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேர…

  20. அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை! அமெரிக்காவில் 70 இருந்து 150 மில்லியன் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் (டீசயைn இதுகுறித்த தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்ட எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மோசமான சூழலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சில வழிமுறைகளையும் அவர் நா…

  21. ஈரானில் பாரிய மனித புதைகுழி – கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்! ஈரானில் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோம் நகரில் பாரிய மனித புதைகுழிகளை காண்பிக்கும் செய்மதி படங்கள் வெளயாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நியுயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினால் குறித்த செய்திமதிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரானின் புனித நகரத்தில் உள்ள மயானமொன்றில் தோண்டப்பட்ட நீளமான புதைகுழிகளின் செய்மதி படங்களே வெளியாகியுள்ளன. மக்சார் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மார்ச் முதலாம் திகதி இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளது. செய்மதிப் புகைப்படங்கள் ஈரானில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகயிருக்கலாம் என்ற சந்தேகங்கள…

  22. சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian )வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுக்கூடத்தில் 60 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அந்தப் பெண் வூகானில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார…

    • 1 reply
    • 481 views
  23. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த  முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும்  பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார…

    • 3 replies
    • 1.2k views
  24. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்…

    • 2 replies
    • 985 views
  25. ந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதயுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் படமும் எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டஅந்த  அதிகாரி  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காணப்படும் படத்தை ரொய்ட்டர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட படத்தில் அந்த நபர் டிரம்பிற்கு அருகில் தொப்பியுடன் காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/77687

    • 2 replies
    • 670 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.