உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஒளிப்படங்களுக்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி! தென்னாப்பிரிக்காவில் ஒரு சஃபாரி பூங்காவில் ஔிப்படம் எடுக்கச் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இரண்டு வளர்ந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த கனேடியத் தம்பதியினர் உயிரிழந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஔிப்படம் எடுத்துள்ளனர். டெரன் மற்றும் கரோலின் கார்டர் என்ற பெயர்களை கொண்ட குறித்த தம்பதி லெஜீலியா சஃபாரிஸ் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தச் செயலை செய்துள்ளனர். ஔிப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளதுடன், அந்த ஔிப்படங்களை பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.அவர்கள் கிழக்கு கனடாவின் அல்பேர்ட்…
-
- 1 reply
- 637 views
-
-
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர் என்று தகவல் தெரியவந்துள்ளது. 14 பேரையும் ஒருவாரத்துக்கு முன் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாக துபாய் அரசு தகவல் தெரிவித்துள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510356
-
- 1 reply
- 708 views
-
-
ட்ரம்ப் பெண்களுக்கு எதிரான இனவெறி பதிவுகளுக்கு எதிராக குற்றச்சாட்டு! ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்தினையடுத்து அவருக்கு எதிராக இனவெறி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட ருவிட்டர் பதிவில், “வெளி நாடுகளில் இருந்து வந்து ஜனநாயக கட்சியில் இணைந்து காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் அந்த பதிவில் நேரடியாக காங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர…
-
- 0 replies
- 397 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா. …
-
- 0 replies
- 346 views
-
-
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மே…
-
- 6 replies
- 847 views
-
-
சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு! சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்கும்போதே நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை. http://athavannews.com/சுவீடனில்-விமானம்-ஆற்றுக/
-
- 0 replies
- 288 views
-
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி! நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தத்தினால் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது. வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார். July 14, 2019 அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம்’ எனும் நிலை காணப்பட்ட போது அப்போது அர ச சட்டத்தரணாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
-
- 0 replies
- 832 views
-
-
பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்! பிரித்தானியாவில் நடைபெற்ற ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சரின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்துள்ளன. லண்டனில் ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கோஷம் எழுப்பினார். மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனா…
-
- 0 replies
- 510 views
-
-
சட்டவிரோதக் குடியேறிகளை அமெரிக்கா நாளை கைது செய்யஉள்ளது அதிபர் ட்ரம்ப் நாளை தனது கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக ட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிகளை கூறுவதுண்டு. அதின் ஒரு அம்சமாக நாளை நாடு தழுவிய கைதுகளும் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமாக உள்ளன. இதில் அமெரிக்காவில் பிறந்த பிள்ளைகள் பெற்றோர் இடமிருந்து பிரிக்கப்படவும் கூடும். இவ்வாறு திட்டமிட்டு பிள்ளைகளை பெறுகிறார்கள் என ட்ரம்ப் கூறுவதும் உண்டு. இந்த அரச நடவடிக்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன. பெரும்பாலும் மெக்சிகோ, மத்திய அமெரிக்க பகுதிகளிலிருந்து வந்துள்ள சுமார் 12 மில்லியன் கள்ளக் குடியேறிகள் அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வருகின…
-
- 0 replies
- 527 views
-
-
ஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை July 13, 2019 ஈரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா தனது இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் நிற்கும் எச்.எம்.எஸ் டன்கன் என்ற போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் என்ற போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரித்தானியாவின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் மெண்ட்ரோஸ் , மூன்று ஈரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டதனைத்…
-
- 1 reply
- 690 views
-
-
பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபா அபராதம் சட்டவிரோதமாக பேஸ் புக் பயனாளர்களின் இரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ் புக் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபா அபராதம் கோரப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் சர்வதேச ரீதியில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வலைத்தளமாக கருதப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக் பயனார்களின் இரகசிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு திருடிக் கொடுத்தாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் 500 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சமூகவளைத்தளங்களில், தொழிநுட்ப நிறுவனம் என்ற அடிப்படையில் பாரிய தொகை அபாரதம் செலுத்த இருப்பது …
-
- 0 replies
- 445 views
-
-
உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும். அதாவது 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் மிக …
-
- 4 replies
- 800 views
-
-
‘பிக் பென்’ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவு பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘பிக் பென்’ கோபுரம் முதன்முதலாக ஒலி எழுப்பி இன்றுடன்(ஜுலை 11) 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட ‘பிக் பென்’ கோபுரம் ஒலி எழுப்பாது. அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே அதற்கு காரணமாகும். 2017ஆம் ஆண்டு ஆரம்பமான சீரமைப்புப் பணிகள், 2021ஆம் ஆண்டே நிறைவடையும். 96 மீட்டர் உயரமுள்ள கோபுரம் நீண்ட காலம் நல்ல நிலையில் நீடிக்க சீரமைப்புப் பணிகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோப…
-
- 1 reply
- 487 views
-
-
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது. இந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச இராணுவ கூட்டமைப்பை ஸ்தாபிக்க அமெரிக்கா திட்டம் வளைகுடா கடல் பரப்பினூடான சுதந்திரமான கப்பல் பயணங்களை உறுதி செய்வதற்கு ஈரான் மற்றும் யேமனிய கடற்கரைகளுக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு சர்வதேச இராணுவக் கூட்டமைப்பொன்றை உருவாக்க அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க சிரேஷ்ட கடற்படை ஜெனரல் ஒருவர் தெரிவித்தார். முக்கிய வர்த்தகப் பாதைகளை உள்ளடக்கிய அந்தப் பிராந்தியத்திலான சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தத் தாம் விரும்புவதாக கடற்படை ஜெனரலான ஜோசப் டன்போர்ட் தெரிவித்தார். கடந்த மாதம் அந்தப் பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல்க…
-
- 0 replies
- 482 views
-
-
வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார். தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்சாலை ரஷ்யாவானது ஐரோப்பாவையும் சீனாவையும் இணைக்கும் வகையில் தனது பிராந்தியத்தினூடாக சீனாவுக்கு 1,250 மைல் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரமளித்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் நிதிவசதியளிக்கப்பட்ட இந்த மெரிடியன் நெடுஞ்சாலை பெலாரஸுடனான ரஷ்ய எல்லையிலிருந்து கஸகஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்தியத்திலிருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரிவுபடும் நெடுஞ்சாலை வலைப்பின்னலின் அங்கமாக அமையவுள்ளது. சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பட்டையொன்று பாதையொன்று திட்டத்தின் அங்கமான இந்த நெடுஞ்சாலையை ஸ்தாபிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 872 views
-
-
கனடாவில் உயர் விருது பெற்றவருக்கு நேபாளத்தில் 16 வருட சிறைத் தண்டனை! கனடா அரசாங்கத்தால் உயரிய விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் ஒருவருக்கு நேபாளத்தில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நேபாள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘Order of Canada’ விருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரான பீற்றர் டால்க்லிஷ் என்பவருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில், டால்க்லிஷ் குற்றமற்றவர் எனவும், அவருக்கு எதிராக இந்த வழக…
-
- 0 replies
- 603 views
-
-
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார். செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ’தோல்வியில் முடிந்தது’ என கூறினார். ஆனால் இந்த மசோதா முழுவதுமாக திரும்பப்பெறப்பட்டது என அவர் கூறவில்லை. போராட்டக்காரர்கள் மசோதாவைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர். ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்திய மசோதா ஏற்கனவே அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. "ஆனாலும் மறுபடியும் சட்டசபையில் இதற்கான முயற்சிகளை அரசு தொடருமோ என சிலர் அரசின் மேல் சந்தேகப்படுகின்றன…
-
- 0 replies
- 543 views
-
-
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம் தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆ…
-
- 0 replies
- 849 views
-
-
அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்ஸிகோ அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையே, அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்ஸிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெ…
-
- 0 replies
- 371 views
-
-
சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்…
-
- 0 replies
- 403 views
-
-
கொங்கோ கிளர்ச்சிதலைவர் இழைத்த யுத்த குற்றங்கள் என்ன? சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு கொங்கோவின் முன்னாள் கிளர்ச்சித்தலைவர் பொஸ்கோ என்டிஏகாண்டா யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டேர்மினேட்டர் என அழைக்கப்படும் பொஸ்கோ என்டிஏ காண்டா கொலைகள் பாலியல் வன்முறைகள் பாலியல் அடிமைத்தனம் மற்றும் சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ருவான்டாவிற்கும் கொங்கோ குடியரசிற்குமான பல…
-
- 2 replies
- 909 views
-
-
அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருடன் பணிபுரிய டிரம்ப் மறுத்ததை தொடர்ந்து தூதருக்கான முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரிட்டனின் பிரதமர் அலுவலகம். அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் டிரம்பின் நிர்வாகம் "திறமையற்ற ஒன்று" என்று விமர்சனம் செய்த இமெயில் கசிந்த பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளில் தெரீசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இமெயில் கசிந்த விஷயம் "துரதஷ்டமான" …
-
- 0 replies
- 440 views
-