உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சிந்தி இனத்தவர் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களைக் கண்டித்து,ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கட்டடம் அருகே பலூசிஸ்தான் இயக்கத்தவர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிந்திக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர்.பலூசிஸ்தானில் சீனாவின் ஏகாதியபத்தியத்தையும் அவர்கள் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பினர். பலூசிஸ்தானில் ஏராளமான கிராமங்கள் ராணுவ அதிகாரிகளால் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.ராணுவ நடவடிக்கையால் சுமார் 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். https://www.polimer…
-
- 0 replies
- 474 views
-
-
பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..! முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார். ஜம்மு -காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா நாட்டாமை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா முன் வராததால் தற்போது பாகிஸ்தான் விரக்தியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று இம்ரான்கான் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பா…
-
- 1 reply
- 644 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பி…
-
- 2 replies
- 743 views
-
-
பசுபிக்கின் இராணுவசமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணையொன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பலொன்று பசுபிக்கில் நடமாடுகின்றது என ஆய்வார்கள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும் கடந்த மாதம் சான்டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை ராடர்களின் கண்களில் மண்ணை தூவக்கூடியது எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என அமெரிக்காவின் ஆயுததயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட புதிய ஏவுகணை 10…
-
- 6 replies
- 827 views
-
-
அமெரிக்க பொருட்கள் மீது, சீனா வரிவிலக்கு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. இந்த வரிவிலக்கானது வரும் 17ஆம் திகதி அமலுக்கு வரும் என்றும், இது ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 406 views
-
-
மியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக…
-
- 0 replies
- 438 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு கொள்கையில் சரியாக செய்யப்படவில்லை என நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525032
-
- 3 replies
- 670 views
-
-
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் செப்டம்பர் 9 தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது. யாரும் இதில் காயமடையவில்லை.ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது. இதற்கு அருகில்தான் நேட்டோ அலுவலகம் உள்ளது. அங்கும் யாருக்கும் பாதிப்பில்லை. அமெரிக்கா - தலிபான் இடையில் நட…
-
- 0 replies
- 360 views
-
-
தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வெளிநாட்டவர்கள் …
-
- 1 reply
- 658 views
-
-
ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம். ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்…
-
- 0 replies
- 430 views
-
-
பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்… September 9, 2019 பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யஸ் புசாங், தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனத் தெரிவித்த அமைச்சர் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா , பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் காலம் இல்லாத அளவுக்கு வ…
-
- 1 reply
- 423 views
-
-
4,000 கார்களை காவிச்சென்ற கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை! தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சுமார் 4,000 ஹூன்டாய் கோல்விஸ், கியா ரகக் கார்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது கப்பலில் 24 பேர் இருந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர…
-
- 1 reply
- 520 views
-
-
அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் தலிபான்கள் எச்சரிக்கை! தலிபான் போராளிகளுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையைில் தலிபான்கள் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் இயக்கம் விமர்சனம் செய்து வருகின்றது. அத்தோடு ட்ரம்பின் இம்முடிவிற்கு அமெரிக்கா அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் , அமைதி, சொத்து இழப்புகள் அதிகரிக்கும் என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான் பயங்கரவாத இயக்க…
-
- 1 reply
- 536 views
-
-
சீனாவின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹாங்காங் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது. ஆனால் போராட்டக் குழுவினர், தற்போது பெரும் ஜன…
-
- 2 replies
- 364 views
-
-
இந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள் லண்டனில் இந்திய தூதரகத்தின் முன் பாகிஸ்தானியர்கள் முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய நிலையில் அங்கு குவிந்த இந்தியர்கள் அதனை ஒற்றுமையை இணைந்து சுத்தம் செய்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி நீக்கியது. அத்துடன் அம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தேசிய கொடியை கிழித்து ஆவேச முழக்கம் எழுப்பினர். மேலும் இந்தியர்கள் மீது தாக…
-
- 1 reply
- 526 views
-
-
தலிபான்களுடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து – டிரம்ப்: September 8, 2019 தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை டிரம்ப் சந்திக்க இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதனையடுத்து இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ள நிலையில் தலிபான் அமைப்புடன் செய்துகொள்ளப்படவிருந்த ஒ…
-
- 0 replies
- 461 views
-
-
ENTERTAINMENT பொழுதுபோக்கு NEWS இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இ…
-
- 0 replies
- 621 views
-
-
படத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார். தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத…
-
- 17 replies
- 5.1k views
-
-
துருக்கியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு 10 வருட சிறைத்தண்டனை துருக்கியின் முன்னணி அரசியல் தலைவரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருமான 47 வயதான Canan Kaftancioglu இற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டமை மற்றும் நாட்டை அவமதித்தமை ஆகிய காரணங்களுக்காகவே இந்த தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ருவிட்டர் வலைத்தளம் மூலமாக பல்வேறு பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை தெரிவித்தார் என்றும் அரச எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், இதற்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கு…
-
- 0 replies
- 254 views
-
-
‘பிறெக்சிட்’ (Brexit) – ஒரு பார்வை September 5, 2019 marumoli 0 Comments இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 31, 2019, கிறீன்விச் நேரம் இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியவிருக்கிறது. இதனால் பிரித்தானிய மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பதை இக் கட்டுரை அலசுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டரசு. மக்களும், வர்த்தகமும் இன்நாடுகளின் எல்லைகளைக் கட்டுப்பாடுகளின்றி நகர்ந்து கொள்வதற்கு இக் கூட்டாட்சி அனுமதியளிக்கிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்க நாடுகளில் ஒன்று. பிறெக்சிட் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்…
-
- 3 replies
- 741 views
-
-
முன்னாள் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே காலமானார்! Published by J Anojan on 2019-09-06 11:45:57 மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபட் முகாமே தனது 95 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டிலிருந்து சிம்பாவ்வே தலைவராக இருந்த ரொபட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக் காரணமாக பதவி இறக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/64220
-
- 1 reply
- 656 views
-
-
ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் 450ற்கும் அதிகமானவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குபடுத்தியதாகவும் 32 பேரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அன்ரியாஸ் -மரியோ என்ற பெயர்களால் அழைக்கப்படும் இருவரி;ற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. ஜேர்மனியின் வடபகுதியில் உள்ள ஹமெலின் என்ற பகுதியில் விடுமுறை முகாமிற்கு சென்ற சிறுவர்களை இவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் இருவரில் ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமியை பார்க்கசென்றவ…
-
- 0 replies
- 402 views
-
-
காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல…
-
- 0 replies
- 662 views
-
-
மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட…
-
- 6 replies
- 955 views
-
-
அணுசக்தி ஒப்பந்தத்தை, மீறப் போவதாக.. வல்லரசு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தால்தான் வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ”கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமுலாக்கத்தை நிறுத்திவைத்துள்ளோம். அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு …
-
- 1 reply
- 665 views
-