Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்பு…

  2. காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 600 பேர் பலி Published : 09 Apr 2019 11:45 IST Updated : 09 Apr 2019 11:45 IST மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவாகும். தவறவிடாதீர் ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பதுடன், அமெரிக்க அதி…

  4. டொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால் திரைநீக்கம் ஜனா­தி­பதி பெஞ்­ஜமின் நெட்­டன்­யாஹு தனது நாட்டால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கோலன் ஹைட்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள புதிய குடி­யி­ருப்பு பிர­தே­சத்­திற்கு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பெயரை சூட்டி அதனை வைப­வ­ரீ­தி­யாக நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை திறந்­து­வைத்­துள்ளார். அந்தப் பிராந்­தி­ய­மா­னது பொது­வாக சர்­வ­தேச ரீதியில் சிரி­யாவின் பிராந்­தி­ய­மாக கருப்­ப­டு­கின்ற நிலையில் அது தொடர்பில் இஸ்­ரேலின் இறை­மையை அங்­கீ­க­ரிக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்­மா­னத்­துக்கு கௌர­வ­ம­ளிக்கும் வகை­யி­லேயே அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள­தாக இஸ்­ரே­லிய ஜனா­தி…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும். ‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது. இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். …

  6. 12 SEP, 2024 | 06:46 AM காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன, கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்றவேளை அங்…

  7. 6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ள…

    • 1 reply
    • 573 views
  8. செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவ…

  9. [23 - May - 2008] [Font Size - A - A - A] மாலைதீவில் சொசம்வில்லா பகுதியில் வீடு ஒன்றில் விபசாரத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர் உட்பட பத்துப் பேரை மாலை தீவு பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டைக் கண்காணித்த பின்னர் வீட்டின் ஐந்து அறைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த போது சந்தேக நபர்கள் கூரையின் மீது ஏறித்தப்பிக்க முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அந்த வீட்டுக்கு வெளியே நின்று பலர் பார்த்தனர். விருந்தினர் விடுதி என்ற பெயரில் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விபசாரத்தொழில் இட…

    • 0 replies
    • 937 views
  10. செல்வந்த வர்த்தகர் ஒருவர் தனது ஆறாவது மனைவியிடம் அதிக ஈடுபாட்டைக் காட்டி வந்ததால் பொறாமை கொண்ட ஏனைய 5 மனைவிமாரும் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மரணத்தைத் தழுவச் செய்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. ஒக்படிபோ நகரைச் சேர்ந்த உரோகோ ஒனொஜா என்ற மேற்படி வர்த்தகர் தனது இளைய மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த வேளை அவரை கத்திகள் மற்றும் கம்புகளுடன் முற்றுகையிட்ட ஏனைய 5 மனைவிமாரும் தம்மையும் தனித்தனியே பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்நிலையில் உரோகோ தனது 4 மனைவிகளுடன் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது மனைவி அவரிடம் வந்த போது அவரது மூச்சு நின்று மரணத்தைத் தழுவியிருந்ததாக நை…

  11. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 12 சீனப் பயணிகளின் குடும்பத்தினர் பீஜிங் நகரில் வழக்கொன்றை பதிவு செய்திருக்கிறார்கள். காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த ஒரு பகுதி என கருதப்படும் ஒரு துண்டு தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ள நீதிமன்றங்கள் உதவ வேண்டும் என்று அந்தக் குடும்பங்கள் கூறுகின்றன. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, விமான விபத்துக்களில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க, விமான விபத்து நடந்த நாளிலிருந்து, இரண்டு ஆண்டுகள் அவகாசம் உண்டு. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்…

  12. லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் மகரீப்பை தனது தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. ௭திர்வரும் வருடம் அரசியலமைப்பு வரைபொன்று முன்னெடுக்கும் வரை நாட்டை செயற்படுத்துவதற்காக பிரதமரை நியமிக்கும் நடவடிக்கைக்கு மொஹமட் மகரீப் தலைமை தாங்கவுள்ளார். இடைக் கால தேசிய அதிகார மாற்று சபையானது 200 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்தைக் கையளித்திருந்தது. கடந்த வருடம் அந் நாட்டு முன்னாள் தலைவர் மும்மர் கடாபி படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த புரட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அதிகாரமாற்று சபை தற்போது…

  13. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் …

  14. கொரோனா வைரஸ் தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 105 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,765ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,048 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 70,548க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. எனினும் சீனாவில் ‘கொவைட…

  15. [size=6]இரண்டாம் உலகம் அனுஷ்கா- ஜெயமோகன்- இலட்சியவாதம்[/size] இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி. படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் …

  16. துருக்கிய பிரதமரை டுவிட்டரில் விமர்சித்த நெதர்லாந்து பெண் கைது துருக்கிப் பிரதமர் ரஸெப் தையிப் ஏர்துவானை சமூக வலைத்தளமான டுவிட்டரில் விமர்சித்த நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரை துருக்கியில் வைத்து அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. துருக்கி பிரதமரை விமர்சித்த டச்சு பத்திரிகையாளர் துருக்கியில் கைது துருக்கி வம்சாவளியான எப்ரு உமர் என்ற அந்தப் பெண் துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள குசாடாசி சுற்றுலா மையத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை நெதர்லாந்து வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. துருக்கிப் பிரதமரை அவமானப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு அறியத்தருமாறு …

  17. ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு சிலு­வையில் அறைந்த பின்னர் தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர். நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வெளியி­டப்­பட்ட இந்த புகைப்­ப­டங்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. சிரிய ரக்கா நகரில் பட­மாக்­கப்­பட்டு' உள­வா­ளி­களை அறு­வடை செய்தல்' என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்தப் புகைப்­ப­டங்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வில்­லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெய­ரி­லான ஊட­கத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­யொ­ருவர், செம…

  18. உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா” அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. எச்1பி (H-1B) விசா முறை மூலம் அமெரிக்க நிறுவனம், வெளிநாட்டிலிருந்து சிறப்பு திறமை வாய்ந்த ஊழியரை சட்டபூர்வமாக அமெரிக்காவில் வேலை செய்ய அழைத்து வர முடியும். எனினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி, வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார். எச்1பி விசா வைத்துள்ளவர்களில் இந்தியாவிற்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து, இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க…

  19. கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடைய…

  20. எகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம் எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து க…

  21. ஜம்மு: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவனின் காதை அறுத்துவிட்டார் மனைவி. இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே வசிப்பவர் மொஹிந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்விந்தர் கவுர். எல்லா குடும்பத்திலும் நடப்பது போல இவர்களின் குடும்பத்திலும் ஏதோ பிரச்சனை. கணவன் மனைவியிடையே வாக்குவாதம் வலுத்தது. இதில் ஆத்திரமடைந்த ஜஸ்விந்தர், கணவரின் காதை அறுத்து எடுத்து விட்டார். இதனால் வலி தாங்காமல் மொஹிந்தர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மொஹிந்தர் காது இல்லாமல் கதறிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு உடனே அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மொஹிந்தருக்…

  22. [size=4]சீனாவில், ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, அந்நாட்டின் மேம்பாட்டு ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஜனத்தொகையை கட்டுப்படுத்த, அந்நாட்டில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும், என்ற சட்டம் அமலில் உள்ளது.இது குறித்து, சீன மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: சீனாவில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் நாடு முன்னேற வேண்டும், என்ற நோக்கில் தான், ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குடும்பத்தினர், பல தியாகங்களை செய்துள்ளனர்.தற்போது நிலைமை வேறு. [/size] [size=4]பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். இனியும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டால், 2050ம்ஆண்டில், நம்நாட்டில் ம…

    • 2 replies
    • 566 views
  23. பிரிட்டனின் பவுண்ட் வீழ்ச்சி அடைகிறது; ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு குறித்த சஞ்சலங்கள் ------------------------------------------------------------------------------- இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்ற நிஜ சாத்தியக்கூறுகளை நிதி சந்தைகள் கருத்தில் கொண்டுள்ளதால், பிரிட்டனின் நாணயமான பவுண்ட், அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட மக்களின் சதவீதம் கடந்த வாரத்தில் மட்டும் 80 லிருந்து 69 ஆக குறைந்திருப்பதாக பெட்ஃபேர் என்ற புக்மேக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல மு…

  24. ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது: ஜேர்மனி அதிபர்! நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது என ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில ஆறாவது இடத்தில் உள்ள ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் கருத்து தெரிவிக்கையில், ‘நாம் இறுதியில் இல்லை. ஆரம்பத்தில் உள்ளோம். நாம் இந்த வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளோம். நாம் முடிந்த அளவு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக…

    • 1 reply
    • 465 views
  25. ரஷ்ய பிரதமர் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் ரஷ்யாவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.