உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
[size=4]மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர், அங்கு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை சாந்தோம் தேவாலயம் பின்புறம் உள்ள கடல் மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், துரு பிடித்த நிலையில் இருந்த ஒரு இரும்பு பைப்பை மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.[/size] [size=4]இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அதை பரிசோதனை செய்தனர். அப்போது அது ராணுவத்தினர் பயன்படுத்தக் கூடிய ரொக்கெட்லோஞ்சர் என்பது தெரியவந்தது. அது ஒரு கிலோ எடை கொண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய இந்த லோஞ்சர் வெடிக்காத நிலையில் இருந்தது.[/size] …
-
- 2 replies
- 694 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா போரில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கான கொடையாளிகளின் மாநாடு லண்டனில் நடக்கிறது. - சிரியா மற்றும் இராக்கிலிருந்து தப்பித்த ஐ எஸ் தளபதிகள் தம் நாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர் லிபியாவின் உளவுத்துறை உயரதிகாரிகள். - நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் தஞ்சம்கோரிகளுக்கு அடைக்கலம் வழங்கப்போவதாக ஆஸ்திரேலிய திருச்சபைகள் கூறியுள்ளன.
-
- 0 replies
- 304 views
-
-
ஹரி பொட்டர் படத்தில் நடித்த இளம் நடிகர் Rob Knox குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் Kentல் உள்ள பார் ஒன்றிற்கு வெளியே நேற்று காலை (24.05.08) ஏற்பட்ட தகராறில் அவர் குத்தப்பட்டார். மற்றும் மூவர் பலமான குத்துக்காயங்களுக்கு ஆளானார்கள். Harry Potter film actor stabbed to death Lee Glendinning and agencies guardian.co.uk, Saturday May 24 2008 A teenager was stabbed to death in a fight outside a bar in Kent following an altercation in which three other men suffered serious stab wounds early today. Rob Knox, an 18-year-old who acted in Harry Potter and the Half-Blood Prince, was fatally wounded outside the Metro Bar in Sidcup, …
-
- 4 replies
- 1.9k views
-
-
வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை' வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவருடன் ஜெனரல் றி ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது. இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை. வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது. http:…
-
- 0 replies
- 512 views
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 11:48 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை என கார்டியன் தெரிவித்துள்ளது. தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS படக்குறிப்பு,இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகடா பதவி, பிபிசி நிருபர் 15 ஏப்ரல் 2025, 08:16 GMT பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது. எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் ல…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார். பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும். அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ப…
-
- 0 replies
- 664 views
-
-
துருக்கிக்கு விரட்டப்படும் அகதிகள் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்றதாக நூற்றுக்கணக்கான அகதிகள் மேற்கு துருக்கி பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். படம்: ஏஎப்பி கிரீஸ் நாட்டில் முகாமிட்டுள்ள அகதிகளை மீண்டும் துருக்கிக்கு அனுப்ப ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதற்கு துருக்கி அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சிரியா, ஈராக்கில் இருந்து கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரை யேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான அகதிகள் துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரீஸ், மாசிடோனியா வழியாக மேற்கு…
-
- 0 replies
- 287 views
-
-
ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…
-
- 1 reply
- 428 views
-
-
தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி ஜனாதிபதி ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச உடன்படிக்கைகளை புறக்கணித்து வடகொரியா 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. 3 முறை அணு குண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அதிரடியாக அணு குண்டை விட அதிபயங்கர சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதற்காக உலக நாடுகள், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பிப்ரவரி மாதம் 7-ந் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது ராக்கெட் சோதனை என்று கருதப்ப…
-
- 0 replies
- 398 views
-
-
இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து! புதுதில்லியில் 21.8.12 அன்று நடந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசும் போது, “1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன. நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அர…
-
- 3 replies
- 2.3k views
-
-
இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே – டோனி அப்போட் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இரண்டு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் அபோட் கட்டுரையொன்று அப்போட் வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் தாம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தவே முயற்சித்ததாகத் தெரி…
-
- 0 replies
- 368 views
-
-
அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்பின் அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்த நம்பகங்களை அதிபர் ஒபாமா கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுப்பாதுகாப்பு மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செ…
-
- 0 replies
- 406 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரான்ஸில் தண்டனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று ஆறு முதல் 15 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர் இவர்கள், 2011ஆம் ஆண்டு ஏடன் வளைகுடாவில் பிரான்ஸுக்கு சொந்தமான படகு ஒன்றை கடத்தி, அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படகு உரிமையாளரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் ஸ்பெயின் நாட்டுப் போர் கப்பலினால் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்துள்ள கொல்லப்பட்டவரின் உறவினர்கள், நீதிபதி ஆயுள் தண்டனை வழங…
-
- 0 replies
- 473 views
-
-
நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் அதிவேகபுகையிரதத்தை விட வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ஆளுநர் அன்றூ குயுமோ மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியுயோர்க் நிலங்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ள கனரி பறவை போல காணப்படுகின்றது,நியுயோர்க் வேகமாக பாதிக்கப்படுகின்றது நியுயோர்க்கில் தற்போது நடப்பது நாளை கலிபோர்னியா இலினொய்சில் நடக்கலாம்,எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட உச்சநிலையை விரைவில் அடைந்துவிட்டோம், அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் அனுப்புகின்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமானவையாகயில்லை எனவும் அவர் கு…
-
- 1 reply
- 290 views
-
-
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிக…
-
-
- 6 replies
- 344 views
- 1 follower
-
-
'கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக? Published: திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2012, 11:27 [iST] Posted by: Mathi சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவா…
-
- 3 replies
- 636 views
-
-
சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி! சவுதி அரேபியா, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி தள்ளிப்போவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இருபது டொலருக்கும் குறைவாகக் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்த நிலையில் எண்ணெய் வழங்கலில் சவூதி அரேபியா, ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விலை வீழ்ச்சியைத் தடுக்க வழங்கலைக் குறைப்பது தொடர்பாக சவூதி அரேபியா, ரஷ்யா இடையே இன்று (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஒ…
-
- 3 replies
- 524 views
-
-
இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா Published By: Digital Desk 3 19 Nov, 2025 | 03:55 PM இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பா…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
பீஜிங், ( சின்ஹுவா ) ; சிறுமைத்தனமான வழக்குகளை தாக்கல் செய்து சீனாவைப் பழிவாங்கவும் களங்கப்படுத்தவும் முயற்சிக்கும் சில அமெரிக்க அரசியல்வாதிகள் கொவிட் -- 19 தொற்றுநோயை அரசியல்மயப்படுத்துகிறார்கள் என்று சீனாவின் ' மக்கள் தினசரி' ஞாயிறன்று அரசியல் வர்ணனையொன்றில் சாடியிருக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகளின் அத்தகைய செயல்கள் சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் சவாலுக்குட்படுத்துவதாக ஷொங் ஷெங் என்ற பத்திரிகையாளர் அந்த வர்ணனையில் குறிப்பிட்டிருக்கிறார். " வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அக்கறைக்குரிய ஒரு பொதுச்சுகாதார அவசரகால நிலையாகும்.அது சட்டரீதியாகவும் கூட தவிர்க்கமுடியாத ஒரு வலுக்கட்டாய நிலையாகும்.அமெரிக்காவில் கொவிட் --19 பெருமளவில் பரவியதற்கு அந்த தொற்றுநோயை தோற்கடி…
-
- 0 replies
- 499 views
-
-
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 05:03 PM தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர் கொல்ல…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 301 views
-
-
சென்னை : அரசியலைப் பற்றி முழுமையாகத் தெரிந்த பிறகே அதில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளித்தார். தற்போது, எந்திரன், சுல்தான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், இந்த படங்கள் வெளிவந்த பிறகு மீண்டும் தனது ரசிகர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் பற்றி தனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், எனவே, தற்போது அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். எனினும், ஆண்டவன் ஆணையிட்டால், அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்…
-
- 1 reply
- 1.8k views
-
-
பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,73,53,285 ஒதுக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்று…
-
- 0 replies
- 323 views
-
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி பரிசீலனை வெள்ளிக்கிழமை, நவம்பர் 14, 2008 சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முயன்று தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன், பாரக் ஓபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் போட்டியில் பாரக் ஓபாமாவுடன் கடுமையாக மோதியவர் ஹில்லாரி. இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்து பாரக் ஓபாமா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஓபாமாவின் அமைச்சரவையில் ஹி்ல்லாரிக்கு இடம் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை பொறுப்பை ஹில்லாரியிடம் கொடுக்க ப…
-
- 1 reply
- 940 views
-