Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பான் கோபேயில் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி. | படம்: பிடிஐ. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அரசின் நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஜப்பான் கோபேயில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: "கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்கள் மீது மேலும் நடவடிக்கை பாயும். டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகு கறுப்புப் பண பதுக்கல் மீது நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நேர்மையானவர்கள் எந்த வித பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டம் அறிமுகம் செய்யப…

  2. பீகாரில் பிரபல பத்திரிகையாளர் சுட்டுக்கொலை இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரபல ஹிந்தி நாளிதழ் ஒன்றில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றிவரும் தர்மேந்திரா சிங் என்பவர் இன்று காலை வழமை போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். http://globaltamilnews.net/ar…

  3. ‘ஒபாமாவே கடைசி அதிபர்?’ அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவே கடைசி அதிபர் என்று பெல்ஜிய மூதாட்டி ஒருவர் கணித்துள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்தவர் பாபா வன்கா. இவர் கடந்த 1996-ம் ஆண்டில் தனது 85-வது வயதில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், எதிர் காலம் குறித்து பல்வேறு கணிப்பு களை கூறியுள்ளார். அவை 85 சதவீதம் பலித்திருப்பதால் பிரான்ஸின் நோஸ்ட்ராடா மஸுக்கு இணையாக இந்த மூதாட்டி மதிக்கப்படுகிறார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அரபு நாடுகளில் மிகப் பெரிய போர்கள் நடைபெறும் என்று பாபா வன்கா கூறியிருந்தார். அதன்படியே தற்போது சிரியா, இராக், லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ல் பாபா வன்கா வெளியிட்ட க…

    • 3 replies
    • 847 views
  4. கறுப்பு தேசம்! மோடி மேஜிக்! கறுப்புப் பணம் (Black Money), என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணம். அப்படி இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்ற உறுதியான தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கறுப்புப் பணப் பதுக்கலுக்கு சொர்க்க புரியாகத் திகழும் ஸ்விஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப்பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 பில்லியன் அமெரிக்க டாலர் கறுப்புப் பணத்தை அங்…

  5. வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கை மாறும் அதிகாரம் அதிகார மாற்றம் தொடர்பாக, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கெளரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒபாமா, சிறப்பான, விரிவான பேச்சுவார்த்தை தனக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தார். இருவரும் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெற்றி பெறக்கூடிய வகையில், அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்குரிய அனைத்து நடவடி…

  6. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில், அவரது ஆட்சியின் முக்கிய செயற்திட்டங்கள் என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி. * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவாசிகளின் உணவு கையிருப்பு வேகமாக கரைவதாக ஐநா அச்சம்; இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை. * தைவானின் விண்வெளிக்கனவு விரிவடைகிறது; மலிவுவிலையில் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் தைவான் தீவிரம்.

  7. வெள்ளை மாளிகை மட்டுமல்ல, நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் எளிதாக செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, தற்போதைய நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற முடியாமல் இருந்த வருகிறது. இதனால், நிர்வாக ரீதியாக ஒபாமா நிர்வாகம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், பல முடிவுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கும் அவர்கள் கடுமையாகப் போராடும் நிலை இருந்தது. தற்போது, இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெற்றுள்ள வெற்றியை இந்த…

  8. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றியால், அமெரிக்காவுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் உள்ள உறவுகளில் சில முக்கியமான வழிகளில் சில மாற்றங்கள் நிகழலாம். அவ்வாறான ஐந்து விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. மாற்றத்தின் தூதுவர் ? -டிரம்ப் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வென்றார் டொனால்ட் டிரம்ப் தங்குதடையற்ற வணிகம் தான் வலியுறுத்தி வந்த வணிக கொள்கைகளை புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பின்பற்றத் தொடங்கினால், அது பல தசாப்தங்களாக உலகின் மற்ற நாடுகளுடன் அமெரிக்கா செய்யும் வணிக முறையில் பெரும் மாற்றத்தினை கொண்டு வருவதாக அமையும். அமெரிக்க மக்களின் பணி இழப்புக்கு காரணமாக அமைகிற…

  9. ஜேர்மன் தூதரகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் ஆப்கானிஸ்தானில்,மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த 80 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13391

  10. ஹிலரி ஏன் தோற்றார்? அமெரிக்க வரலாற்றில்,நிச்சயமாக மிக அசாதாரணமான இந்தத் தேர்தல், அரசியல் நிறுவன அமைப்பிற்கு எதிரான கிளர்ச்சியாக இருந்தது. ஹிலரி கிளின்டனை விட, இந்த அரசியல் நிறுவன அமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் யாரும் இருக்க முடியாது. மிகவும் கோபத்திலிருந்த பல மில்லியன் அமெரிக்க வாக்காளர்களுக்கு, இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலரி கிளின்டன் அமெரிக்காவின் உடைந்த அரசியலின் முகமாக காட்சியளித்தார். டொனால்ட் டிரம்ப் வாக்காளர்களை தான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குவதாக பல மாநிலங்களில் உள்ள போதுமான அளவு வாக்காளர்களை நம்பவைத்தார். வாஷிங்டன் அரசியலில் ஓர் அங்கமாக இருந்த ஹிலரிக்கு எதிராக, வெற்றிகரமாக அந்த அரசியல் வட்டாரத்திற்க…

  11. புதிய அமெரிக்க ஜனாதிபதி முன்னாள் நடிகரா? அமெரிகாவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜேம்ஸ் பொன்ட் ஒரு நடிகர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இலங்கை திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் என்ற தமிழர் தயாரித்த "GHOSTS CANT DO IT" திரைப்படத்தில் புகழ் போ டெரக் என்ற நடிகையுடன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 1989இல் ஜோண் டெரக் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது . இதில் டிரம்பிற்கு பிரத்தியேக பாத்திரமொன்றை ஒதுக்கி அதற்கேற்ப உரையாடல்கள் எழுதப்பட்டிருந்தன. டிரம்ப் சம்மந்தப்பட்ட காட்சிப் படப்பிடிப்பு ஒருநாளில் மாத்திரமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நல்ல நடிகர்களைக் கொண்டு இத் திரைப்படம் …

  12. இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது .. பிரதமர் மோடிமஸ்தான் அறிவிப்பு# #நாளை வங்கிகள் இயங்காது. #நவம்பர் 11 வரை ATM கள் இயங்காது. #டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளது .. வங்கிகளில் உங்களின்ட பெயரில் அக்கவுண்ட் இருந்தால் டெபாசிட் செய்யலாம் .. அக்கவுண்ட் இல்லையென்றால் அந்த 500 மற்றும் 1000 ரூபா தாள்களை கொண்டு நாக்கு வழிக்கலாம் .. #ஒருவர் ஒரு வாரத்திற்கு இந்திய ரூபா 20.000 மட்டுமே நேரடி பணபரிவர்த்தனை செய்ய இயலும்.. டிஸ்கி : அவசரத்திற்கு நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்பவர்கள் கவனத்திற்கு "பிணம்" என்றே .... உங்களின்ட 100 ரூபாய் தாள் அல்லது 50 அல்லது 10 ரூபாய் தாள் தேவையான அள…

  13. டிரம்ப் அதிபராவதற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டாவது நாளும் போராட்டம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிறகு இரண்டாவது இரவிலும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. ஒபாமா உருவாக்கி இருக்கும் பலவற்றை மாற்றுவதற்கு டிரம்ப் எண்ணம் லாஸ் ஏஞ்சலஸில் போக்குவரத்தை பாதிக்க செய்து, உடமைகளை சேதப்படுத்திய சிறிய அளவிலான மக்கள் கூட்டத்தை மேயர் எரிக் கிராசியேத்தி கண்டித்திருக்கிறார். ஆனால், ஜனநாயகத்தின் அழகான வெளிப்பாடு என்று அவர் கூறியிருப்பதற்கு பல போராட்டக்காரர்களை அவர் புகழ்திருக்கிறார், முன்னதாக, டிரம்ப் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தி…

  14. லண்டனில் உள்ள குரொய்டன் பகுதியில் இன்று காலை டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் உயரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. டிராமை வேகமாக ஓட்டி வந்தமைதான் விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என உள்ளு}ர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு பாரிய விபத்து என லண்டன் போக்குவரத்து பிரிவினர் விவரித்துள்ளனர். டிராம் தடம்புரண்டதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர் http://globaltam…

  15. டிரம்பின் வெற்றி உரை ; டிரம்பின் மகன் செய்த வேலையினால் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையின் போது அவரின் மகன் தூங்கிய காட்சியில் தற்போது இணையத்தளத்தில் பரவி வருகின்றது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் இளைய மகனான 10 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தந்தையின் வெற்றி உரையில் விழித்திருக்க இயலாமையால் அவதியுற்றதை சமூகவலைத்தளங்களில் பலர் விமர்ச்சித்து வருகின்றனர். அமெரிக்க நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மிக நீண்ட நேரம் டொனால்ட் டிரம்பினால் குறித்த வெற்றி உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://…

  16. அமெரிக்க தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல்வேறு மாகாண சட்டசபை மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் வாக்குபதிவு நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடத்துக்கு போட்டியிட்டார்கள். அதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. …

  17. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்: யாருக்குக் கவலை, யாருக்கு மகிழ்ச்சி? குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-வது அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் 45-வது அதிபராகும் டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள் பலருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், வேறு பல மில்லியன் மக்களைக் கவலையுறவும் செய்துள்ளது. டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கான ஐந்து காரணங்கள் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது பலனடைவது யார்? இழப்பது யார்? பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார உரைகளை வைத்து அவரின் கருத்துக்கள், கொள்கைகள் என்னவென்பதை நாம் …

  18. அகதிக் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சுவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளுர் அகதி முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமிலுள்ள 160 குழந்தைகள் தமது பிரதேசத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம் குறித்த பகுதியில் வந்ததன் பின்னர் கூச்சல் அதிகரித்து விட்டதாகவும் இதனால் தமது வீடுகளின் பெறுமதி குறைந்து விட்டதாகவும் தெரிவித்து தமது வசதிக்காக சுவர் கட்டப் போவதாக நீதிமன்றில் மியூனிச் நகர மக்கள் முறையிட்டனர். …

  19. டொனால்ட் டரம்பின் வெற்றியால் வெளிநாடுகளில் குடியேற விரும்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கனேடிய குடிவரவுத்துறை இணையத்தளம் திணறியது 2016-11-10 09:59:57 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வென்றதையடுத்து அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக, கனடாவில் குடியேறுவது குறித்து யோசித்துவருதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி குறித்து இம்மக்கள் கொண்டுள்ள அச்சமே இதற்குக் காரணம். கனடாவில் குடியேறுவது தொடர்பாக விபரங்களை இணையத்தளங்களில் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்ததாம். இந்நிலையில், இவ்வருட அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் பெறுபேறுகள…

  20. அமெரிக்காவில் ஜனாதிபதியாக போட்டியிடுவதென்றால் நினைத்த மாத்திரத்தில் நான் ஜனாதிபதியாக போட்டியிட போகிறேன் என்று அறிவிக்க முடியாது. நாடு முழுவதும் நான் என்ன என்ன செய்யப் போகிறேன் மற்றவர் சொல்வது சரியா பிழையா அமெரிக்க அரசியல் பொருளாதாரம் உலக அரசியல் உலக பொருளாதாரம் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.யார் அமெரிக்காவுக்கு நல்லதைச் செய்வார்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இன்று 2016 கார்த்திகையில் நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை தெரிவு செய்யலாம் என்ற தேர்தல் ஐயோவா என்ற மாநிலத்தில் தொடங்குகிறது.இரவு 8 மணிக்கு வாக்களிக்கும் நேரம் முடிவடைகிறது. 8 மணி ஒரு நிமிடத்திற்குள் முடிவை அறிவித்…

    • 33 replies
    • 1.9k views
  21. 2016 அமெரிக்க தேர்தல் முடிவு - டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர். ஆரம்ப கட்டங்களில் அவர் வெல்வது அபூர்வம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபர். குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய பிரசார பாணி ஆகியவை மட்டுமல்லாது, அவரது கடந்த கால பிரபல்யமும் அவர் குறித்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் மூத்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களையெல்லாம் ஓரங்கட்டி…

  22. மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு) தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் சற்றுமுன்னர் உருக்கமாக தெரிவித்தார். தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் …

  23. இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப். * பெரு வர்த்தகர், கோடீஸ்வரர் தற்போது அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபர்; இந்த இடத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் எப்படி வந்தார்? ஆராய்கிறது பிபிசி * டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும்?

  24. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்த குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரியை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்பாராத திருப்பமாக ஒஹியோ, ஃப்ளோரிடா, வடக்கு கரோலினா, ஐயோவா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றதுதான் அவரது முக்கிய வெற்றிக்கு அடிகோலி இருக்கிறது. 2004-க்கு பிறகு குடியரசுக் கட்சியின் வேட்பாளர் இத்தகைய வெற்றியைப் பெற்றிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் வல்லரசாக விளங்கும் அமெரிக்கா என்னவாகும்? அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் செய்துள்ள செலவுகளின்படி, அவரது தனிநபர் மதிப்பீடு நிச்சய…

  25. ஒரு பெண்ணை அதிபராக்க ஏன் தயங்குகிறது அமெரிக்கா? அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே மிகுந்த ஆவலோடு கவனித்தது. குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலரி கிளின்டன் இருவரும் போட்டியில் இருந்தனர். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிபராவார் என்று கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவித்து வந்தன. இது உலகம் முழுக்கவே பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. காரணம்... பெண்கள் சுதந்திரமாக பல பணிகளில் ஈடுபடுவது, பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக போட்டிப் போடுவது என்று பலவற்றிலும் அமெரிக்கா முன்னோடியாக இருந்தாலும்... ஒரு பெண் அந்நாட்டின் அதிபராக முடியாத சூழலே நிலவி வந்ததுதான். இத்தகைய சூழலில்தான், உலகம் முழுவதும் நன்கு பரிட்சயமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.