Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி! கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன. கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார். தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். 59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இத…

  2. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது ” ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்து விட்டார்” என ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அத்துடன் அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்…

  3. உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி! உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது அண்மையில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே உக்ரேனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். குறிப்பாக புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினு…

  4. ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது! ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம். இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது. பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது…

  5. தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று FT தெரிவித்துள்ளது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், இந்த கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெர்ரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார். ( புகைப்பட உரிமை : REUTERS/TYRONE SIU ) ஜெருசலேம் போஸ்ட் ஸ்டாஃப் எழுதியது ஜூலை 12, 2025…

    • 0 replies
    • 143 views
  6. 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார…

    • 7 replies
    • 613 views
  7. பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரிட்டனில் கைது பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரை பிரிட்டிஷ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். I 26, 40, 59 வயதுடைய மூன்று ஆண்களும் 29 வயதுடைய பெண் ஒருவரும் வியாழக்கிழமையன்று பிர்மிங்கமிலும் 26 வயதுடைய மற்றொரு நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கேட்விக் விமான நிலையத்திலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருமே பிர்மிங்கமில் வசித்துவந்தவர்கள். இந்தக் கைது சம்பவங்கள், மிக முக்கியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்…

  8. இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகினை அச்சுறுத்துகின்றன – அதிர்ச்சி தகவலினை வெளியிட்ட விஞ்ஞானிகள்! இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வருவதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்க்கமான எல்வகை புதிய வைரசே 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மற்றைய எஸ் வகை வைரஸ் 30 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது என, தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வகையா…

  9. தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லுகிறது? 2012 செப், நடக்க இருக்கும் கிழக்கு மாகாணத்துக்கான, மாகாணசபை தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஸ்ரீலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு ஆறுதல் கிடைக்க வழி ஏற்படுத்தி மீண்டுமொரு விரும்பத்தகாத வரலாற்று பிழைக்கு தேசியக்கூட்டமைப்பு பிள்ளையார் சுழி போட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது. இதன்மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தியாகங்களும், முப்பது வருட உயிர் ஆயுத போராட்ட வரலாற்றின் ஒப்பற்ற அர்த்தமும், ஈழ தேசிய அரசியல் நீரோட்டத்தின் அடிப்படை தத்துவமும் திக்கற்று திசைமாறிப்போவதுட…

  10. உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதற்கமைய இந்த வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேசத்தின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 800க்கும்…

    • 3 replies
    • 424 views
  11. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போ…

  12. மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியல் யாப்பை மீறுகிறது'- உச்ச நீதிமன்றம் அகதிகளையும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பாப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. `ஆஸி. தடுப்பு முகாம் சட்டவிரோதமானது' சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக்…

  13. நாட்டு மக்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்த ஈரான் அரசு அதிரடி முடிவு உலகை அச்­சு­றுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கார­ண­மாக ஈரானில் வாழும் அனைத்து மக்­க­ளையும் கொரோனா வைரஸ் சோத­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்­ளது. ஈரானின் இரா­ணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முக­மது பகேரி தலை­மையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கிழமை நடை­பெற்ற ஆலோ­சனைக் கூட்­டத்திலேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், 600க்கும் மேற்பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே இந்­நோ­யினை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­துடன், ஈரானில் 08…

    • 1 reply
    • 340 views
  14. லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி 18 Oct, 2025 | 11:16 AM லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர் முகமது ஷாஹீன் கொல்லப்பட்டார். இருதரப்பு யுத்த நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் லெபனான் செயல்பாட்டுத்துறைத் தலைவராக (Chief of Operations in Lebanon) முகமது ஷாஹீன் செயல்பட்டு வந்தார். அவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது. ஈரானின் நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் மக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காகவே ஷாஹீன் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித…

  15. 'வாய்ஸ்' தான் ரஜினிகாந்த் 'சாய்ஸ்' : வரிந்துகட்டி காத்திருக்கும் ரசிகர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் ரசிகர்களை நேரில் சந்திப்பதாக உறுதியளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட மாட்டார். அதற்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சிக்கு தனது ஆதரவு "வாய்ஸ்'சை மட்டுமே கொடுப்பார் என, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்திற்கு கண்டிப்பா வருவேன்' என்று நடிகர் ரஜினிகாந்த், ஒரு படத்தில் பேசும் வசனம் தான் இன்றுவரை அவரது ரசிகர்களின், அரசியல் ஆசை என்ற "பல்ஸ்'சை குறையவிடாமல் செய்துவருகிறது. ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் அமர்க்களமான கட்சி துவக்கம், ரஜினி ரசிகர்களையும் அதிகமாகவே உசுப்ப…

  16. ஜெயலலிதா-சசிகலா நட்பு : ஒரு பார்வை அரசியல் என்பது சமூக சேவை என்பதையும் தாண்டி, நல்ல ஒரு பிஸினஸாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எல்லாத் தொழிலையும் போலவே அரசியலிலும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அதை வெற்றிகரமாக நடத்த, சில நம்பகமான ஆட்களும் தேவைப்படுகிறார்கள். ஒரு பிஸினஸ்மேன் பொதுவாக குடும்ப உறுப்பினர்களை வைத்தே, தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்திவிட முடியும். உடன்பிறந்தோர், மச்சினர்கள், பிள்ளைகள் என ஒரு பிஸினஸ்மேனுக்கு தோள் கொடுக்க நல்ல உறவுக்கூட்டம் அவசியம் ஆகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு ஓட்டுக்கு 300 முதல் 2000 வரை காசு வாங்கிவிட்டே போடும் மனநிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் தான் மக்களை அப்படிக் கெடுத்துவிட்டார்கள…

    • 0 replies
    • 1.5k views
  17. [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன். அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. [/size] [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த…

  18. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரதத்தில், நடிகர், நடிகைகள் சட்டத்துக்கு புறம்பாக பேச நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. நடிகர், நடிகைகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில், இந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்த வேண்டும் என்று நடிகர் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சங்கம், நவம்பர் 1ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தது. இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர்…

  19. மீனவர் மாநாடு, மிரளும் அரசியல் வட்டாரங்கள் நாடாளுமன்றத் தேர்தல் அதோ இதோ என்று நெருங்கிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் நடைபெறப்போகும் ஒரு மாநாடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த மாநாட்டின் பெயர் `மீனவர் வாழ்வுரிமை மாநில மாநாடு.' ஓட்டு வங்கியை எதிர்பார்த்துத்தான் இந்த மாநாடோ? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களை இப்போது உலுக்கத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் வரும் 21-ம்தேதி நடக்க இருக்கும் இந்த மாநாட்டை `மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' என்ற அமைப்பு நடத்துகிறது. இது மீனவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்முறையாக ஒன்றிணைக்கும் மாநாடு. இதில் பங்கேற்கப்போகும் தலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், கோ.க.மணி, திருமாவளவன் உள்பட இன்னும் பலர். …

  20. நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளது: பிரதமர் ஜஸ்டின்! கனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மை கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வேண்டுமென்றே அல்லது ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அமைப்புவடிவ இனவெறி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுட்பமாக உள்ளது. அமைப்புவடிவ இனவெறி என்பது நாடு…

  21. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த கறுப்பின இளைஞன் லண்டனில் கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த தீவிர வலதுசாரி ஆதரவாளரான வெள்ளையரை கறுப்பின இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தூக்கி செல்லும் காட்சி பதிவான புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின் உண்மையான காரணம் எதுவென இந்த ஒற்றைப் புகைப்படம் உணர்த்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திடகாத்திரமான ஒரு கறுப்பின இளைஞன், முகக்கவசம் அணிந்து கொண்டு, காயத்துடன் ரத்தம் சொட்டும் ஒரு வெள்ளையரை தனது தோளில் சுமந்தபடி, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் காட்சியே புகைப்படமாக வெளியானது. கறுப்பின ஆதரவு ஆர்ப்பாட்டமானது தற்போது லண்டனில் இனவெறியை தூண்டிய தலைவர்கள…

    • 1 reply
    • 756 views
  22. ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/9660

  23. ஒரு பாகிஸ்தான் இராணுவத்தை சுட்டு கொண்டதற்கு பதிலடியாக இரண்டு இந்திய இராணுவத்தை பாகிஸ்தான் சுட்டு கொன்று இருக்கின்றது PAKISTANI troops have killed two Indian soldiers near the tense disputed border in Kashmir, two Indian military sources say, two days after Islamabad said one of its soldiers was killed there. "There was an exchange of fire and two of our troops were killed and one injured," a senior Indian military commander in Kashmir told AFP, asking not to be named. Thanks to news. com

  24. ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 7ல் உள்ள 24 மற்றும் 26 குறுக்கு சாலைகள் பயங்கர தீவிபத்து காரணமாக மூடப்பட்டது என காவல்துறை அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் Brock Road பகுதியின் மேற்கு பகுதியும் மூடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை இதுவரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அறிவிக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த தீவிபத்தினால், எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்பது மட்டும் ஒரு ஆறுதல் செய்தி. தீயணைப்பு துறை அதிகாரி Steve Fowlds அவர்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்தபோ…

    • 0 replies
    • 435 views
  25. உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிய பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை, புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் மற்றும் இதர அரசியல் சாசன அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக்கோரி பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்புகள் தவறாக வழி நடத்தப்படுவதை…

    • 0 replies
    • 409 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.