உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ ம…
-
- 4 replies
- 992 views
-
-
பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், நேற்று (சனிக்கிழமை) தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எலோ வெஸ்ட் என்ற ஆர்ப்பாட்டக் குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அத்தோடு, மக்களாட்சியை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆர்ப்பாட்டங்களில் போது ஏற்பட்ட வன்முறைகளால் பிரான்ஸில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் சகல முயற்சிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் ஏற்…
-
- 0 replies
- 434 views
-
-
http://news.blogs.cn...-d-c/?hpt=us_c2 An earthquake with a preliminary magnitude of 5.8 struck near Washington, D.C., the U.S.Geological Survey said. The epicenter was in Mineral, Virginia. Did you feel it? Send CNN an iReport. The quake was felt in Philadelphia, Pennsylvania; New York City and on Martha's Vineyard where President Barack Obama is vacationing. Cell phone service has been disrupted in New York City part of which has been evacuated. Traders in the New York Stock Exchange felt the shaking and shouted to each other, "Keep trading!" CNN's business correspondent Alison Kosick reported from the floor at 2:20 p.m. E.T. "Everybody was told to…
-
- 4 replies
- 848 views
-
-
திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம் மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா - சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Tsunami இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது. அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனா…
-
- 7 replies
- 968 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஒரு டாலருடன் ஹாங்காங்கில் வாழ்க்கையைத் தொடங்கிய லாய் பின்னாளில் மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆனார். 21 டிசம்பர் 2023 சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பத் துணிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்படி குரல் எழுப்பியவர்களில் ஒருவர் தான் ஜிம்மி லாய். தனது 12வது வயதில் ஒரு டாலரை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சீனாவிலிருந்து ஹாங்காங் வந்தடைந்த ஜிம்மி, வெளிப்படையாகப் பேசும், அச்சமற்ற, ஒருபோதும் அடங்கிப்போகாத கிளர்ச்சியாளராக விளங்கினார். இது தவிர, செல்வாக்கு மிக்க ஹாங்காங் செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியின் உரிமையாளரான அவர் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆவார். உலகிலேயே பணக்காரர…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் மூன்று தமிழர்களின் உயிர்காக்க, ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதி, முல்லைப்பெரியாறு அணை, தமிழீழமே தீர்வு, கட்சத்தீவு மீட்பது, விலைவாசி கட்டுப்பாடு, கூடன்குளம் அணு உலையை மூடவேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.தாய்தமிழகத்தில் தரணி எங்கும் வாழுகின்ற தமிழர்க…
-
- 0 replies
- 748 views
-
-
கனேடிய கைதிகளிடம் ஜப்பான் மன்னிப்பு இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானில் சிறை வைக்கப்பட்டிருந்த கனேடிய கைதிகள் அடைந்த துன்பத்திற்கு ஜப்பானின் அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜப்பானின் வெளியுறவு பிரதி அமைச்சர்களில் ஒருவரான ரொஷியுகி காரோ ரோக்கியோவில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரினார். கனேடிய முன்னாள் படையினர் நல அமைச்சர் ஸ்ரீவன் பிளானி கனேடிய முன்னாள் படையினரின் குழுவோன்றுடன் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். 1941 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஹொங் கொங்கில் இருந்த நேச நாடுகளின் படையினர் ஜப்பானிடம் சரணடைந்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள், 1945 ஆம் ஆண்டு, ஜப்பான் சரணடையும்வரை ஜப்பானால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்…
-
- 0 replies
- 549 views
-
-
அலுவலகம் திறக்கிறது தலிபான் கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டிலோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த நகர்வு உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சமாதான நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நிலவியதாக முன்னர் நம்பப்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். http://www.bbc.co.uk...penoffice.shtml
-
- 0 replies
- 491 views
-
-
சீர்குலையும் சிரியா 1 சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின…
-
- 4 replies
- 5.5k views
-
-
ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?! அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன், அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். | படம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். இந்திய-அமெரிக்க வர்த்தக வியூகப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கியது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் உரையாற்றும்போது இந்தியாவின் சிறந்த நண்பன் அமெரிக்கா என்றார். வாஷிங்டனில் தொடங்கிய இந்த உரையாடலின் போது ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்ற, இரு நாடுகளையும் சேர்ந்த 400 தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர்…
-
- 0 replies
- 481 views
-
-
சேலம் மாவட்டம் தைலானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வசந்தா (வயது 35). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கும், அய்யனார் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு பூவரசன் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ள னர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண வரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை யும், குழந்தைகளையும் துன் புறுத்தி வந்தார். எனக்கு பெற்றோர் சீதன மாக கொடுத்த 15 பவுன் நகைகளை சமீபத்தில் பறித்துக் கொண்டு மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வா என்று என்னையும், குழந்தைகளையும் துரத்திவிட்டார். அதன்பின்னர் சில நாட்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரஸ்யாவின் இரகசிய நீர்மூழ்கியில் தீ விபத்து - 14 பேர் பலி ரஸ்யாவின் மிகவும் இரகசிய நீர்மூழ்கியொன்றில ஏற்பட்ட தீ விபத்தில் 14 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு வழமைக்கு மாறாக தனது இரகசிய நடவடிக்கை நீர்மூழ்கியில் ஏற்பட்ட தீ விபத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கியின் பெயர் விபரங்களை வெளியிடாத ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கப்பலிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன. எனினும் சுயாதீன ஊடகங்கள் லொசாரிக் என்ற நீர்மூழ்கியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன. மிகவும் உயர்தர தொழில்சார் தன்மை கொண்ட மாலுமிகளே தீ விபத்தில் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடி…
-
- 0 replies
- 413 views
-
-
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ஆறுமாதங்களுக்கு முன் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமாகி இந்தியா திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். 64 வயதான சோனியா காந்தியின் உடல் நலக்குறைவு குறித்து ஊடகங்கள் பல கேள்வி எழுப்பினாலும், இது சாதாரண மருத்துவ பரிசோதனைதான் என்றும் இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்ன்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்துள்ளார். http://kathiravan.ne...?mid=35&id=1119
-
- 4 replies
- 623 views
-
-
09 OCT, 2024 | 11:06 AM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஸ்யா திட்டமிட்டுள்ளது என பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 இன் தலைவர் எச்சரித்துள்ளார். பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கென் மக்கலம் ரஸ்யா நாசவேலைகள் உட்பட ஆபத்தான நடவடிக்கைகளை பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பிரிட்டன் ஆதரித்தமைக்காகவே ரஸ்யா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார். 2022 முதல் ஈரான் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடியத்துள்ளதாக தெரிவித்துள்ள கென் மக்கலம் இஸ்லாமிய தீவிரவாதிகளே அனேகமான இவ்வாறான நடவ…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
சவுதியில் சிறை, 1,000 கசையடி தண்டனை பெற்ற எழுத்தாளருக்கு ஐரோப்பிய யூனியன் விருது சவுதி எழுத்தாளர் ரைஃப் பதாவி தண்டனையை எதிர்த்து ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிப்.6, 2015-ல் நடைபெற்ற பேரணி. | ஏ.பி. தனது எழுத்துக்கள் மூலம் இணையதளத்தில் இஸ்லாம் மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறை, மற்றும் 1,000 கசையடித் தண்டனை பெற்ற ரைஃப் பதாவி என்ற எழுத்தாளர் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ரீ சவுதி லிபரல்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கி எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகளை வலியுறுத்திய செயல்பாட்டாளர் ரைஃப் பதாவி இஸ்லாமிய மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு …
-
- 0 replies
- 500 views
-
-
மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம். சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர். பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது. இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது. அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன் பெரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மறுபுறம், உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு. இங்கு…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரெம்ளின் மாளிகை மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரி…
-
- 1 reply
- 553 views
-
-
மேலை நாடுகளும் அல்கொய்தா போன்ற தீவிரவாதிகளின் பார்வையில் பட்ட நாடுகளும் இன்று மிகப்பெரிய ஒரு ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அதாவது அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த பிறகு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தபட்ட சமயம் 2004 - டிசம்பரில் தாலிபானின் கட்டுபாட்டில் இருந்த ஆப்கானை மீட்ட பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஒரு அல்கொய்தா தீவிர வாதியின் கைதை அடுத்து ஒரு திடுக்கிடும் செய்தி வெளியானது. ஆம் அல்கொய்தா தீவிரவாதிகள் சில விஞ்ஞானிகளின் உதவியால் அணுகுண்டுகளை தயார் செய்வது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர் என்ற அந்த செய்தி பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்…
-
- 1 reply
- 954 views
-
-
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.ஈராக் பாதுகாப்பு படைகளின் தகவலின் பேரில், அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு பலுஜா நகர் அருகே ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தின.ஆனால் இந்த வான்தாக்குதல் ஒன்றில் ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஈராக்கில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் படை வீரர்கள் சிக்கி பலியானதாக வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்படும். இதற்கு முன்பு கூட்டுப்படைகள் தாக்குதலில் இப்படி ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியா…
-
- 0 replies
- 385 views
-
-
தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது…
-
- 0 replies
- 208 views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “தீவிரவாதம் தொடர்பான புள்ளிவிவர எண்ணிக்கை (50,000) என்பது உளவுத்துறையின் மதிப்பீடுகள் தான். தற்போது ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பவர்களில் 1 சதவீதம் பேர் தீவிரவாதத்தில் இறங்கி, மலேசியாவில் தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டிற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 462 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "ராகுல் மக்கள் சேவகர் பேரவை' சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அதில், கோஷ்டித் தலைவர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையுண்டபோது, அவருடன் 16 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மூவருக்கு, சுப்ரீம் கோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விமர்சித்து, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை…
-
- 0 replies
- 381 views
-
-
டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப் பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும்கர்ப்பம்தரித்துள்ள
-
- 0 replies
- 1k views
-